
தமிழ்த்தேசிய வாதத்தின் ஆயுதப் போராட்டதின் வீழ்ச்சிக்கு இந்திய உளவுத்தகவல் பேருதவி புரிந்ததை பாக்குநீரிணைக்கு இரு புறமும் உள்ளவர்கள் நன்கறிவர். இலங்கையில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சமாதன உடன்படிக்கை கைச்சாத்தானதிலிருந்தே இலங்கையின் தமிழ்ப்பகுதிகளின் இந்திய புடைவை வியாபாரிகள் நடமாடத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இந்திய உளவாளிகள் எனப் பலரும் பேசிக் கொண்டனர். இப்போது வந்துள்ள செய்தி:
கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது.
இதுவரை இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு இப்போது ஏன் எடுக்கிறது?
இவர்களை இலங்கை அரசு உடனடியாக வெளியேற்றாமல் கடவுச் சீட்டை பறிமுதல் செய்தது ஏன்?
உல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது! இவர்கள் மேல் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
இவர்கள் சாதாரண வியாபாரிகளாக இருந்தால் இப்படி நடந்திருக்காது! இவர்கள் இந்திய உளவாளிகளா?