Friday 12 March 2021

ஸ்டாலின் - பழனிச்சாமி ஓர் ஒப்பீடு

  


மு. க. ஸ்டாலின் (1953) எடப்பாடி பழனிச்சாமியிலும் (1954) ஒரு வயது மூத்தவர். ஸ்டாலின் 14 வயதில் கட்சிப் பரப்புரை ஆரம்பித்து விட்டார். 1967 தேர்தலில் 14 வயதுச் சிறுவனாக பரப்புரையில் ஈடுபட்டவர். அப்போது மோடியோ அமித் ஷாவோ அல்லது எடப்பாடியாரோ அரசியலுக்கு வரவில்லை. அன்றில் இருந்தே ஸ்டாலின் தீவிர அரசியலில் இருப்பவர். எடப்பாடியாரை யாரும் தமிழரல்லர் எனச் சொல்வதில்லை. ஆனால் ஸ்டாலினைச் சொல்வதுண்டு.

ஸ்டாலின் தன் தந்தையின் வாரிசாக அரசியலுக்கு வந்தார். எடப்பாடியார் அப்படியல்ல. ஸ்டாலினை சுற்றிவர அவரது சகோதரி கனிமொழி மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் திமுகவில் முக்கிய பதவிகளை வகிப்பதாலும் ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர் தயாநிதி மாறன் நாடாளமன்ற உறுப்பினராக இருப்பதாலும் திமுக ஒரு குடும்பக் கட்சி என்ற குற்றச்சாட்டை எதிர் கொள்கின்றார். கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கை வைத்து எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. வி கே சசிகலா சுட்டிக்காடிய படியால் தான் அவர் முதல்வரானார் என்ற குற்றச் சாட்டு உண்டு

ஸ்டாலின் 1983இல் திமுக பொதுக்குழுவில் இடம்பெற்றார். 2001 சென்னை நகர பிதா. 2006-ம் ஆண்டு மீண்டும் நகர பிதா. ஜெ ஆட்சியில் வளர்ச்சித்துறை அமைச்சர். 2009இல் துணை முதலமைச்சர் பதவி. 2016இல் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை வகித்தார். அரச முகாமைத்துவத்தில் ஸ்டாலினின் அனுபவம் எடப்பாடியாரின் அனுபவத்திலும் சிறந்தது. நகர பிதாவாகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்க முடியாது என அரசால் சட்டம் இயற்றப்பட்ட போது நகர பிதா பதவியை ஸ்டாலின் துறந்தார். ஆனால் அவர் சட்டப்படி பதவியில் இருந்திருக்கலாம் எனதீர்ப்பு வந்தது.

ஸ்டாலின் தன் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு செல்வந்தர். எடப்பாடியார் அந்த அளவு செல்வந்தரல்லர். எடப்பாடி சொத்து எட்டுக்கோடிக்கு மேல் இருக்கலாம். ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை வீடு 50 கோடி பெறுமதியானது. அவரது கார்களின் பெறுமதி 10கோடி. திமுகவின் முரசொலி அறக்கட்டளையிடம் இருக்கும் சொத்து பல நூறு கோடி. முரசொலி அறக்கட்டளை மு க ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மகளின் கணவர் சபரீசன் ஆகியோரின் பெயரில் உள்ளன.

அபிராமி…..அபிராமி....

இவரது இளவயதில் முதல்வரின் மகனாக பல அடாவாடித்தனங்களில் ஈடுபட்டதா குற்றம் சாட்டப்படுவதுண்டு. அவர் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையின் தலைமைக் காவலாளியின் மருமகள் ஸ்டாலினால் பாதிக்கப்பட்டவர். அவர் ஸ்டாலினை சித்திரவதை செய்தார். அவர் ஸ்டாலினைத் தாக்கும் போது குறுக்கே பாய்ந்து தடுத்த சிட்டிபாபு என்ற இன்னும் ஒரு கழக உறுப்பினர் கொல்லப்பட்டார். ஸ்டாலின் தப்பித்துக் கொண்டார். சிறையிலேயே தனது பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை எழுதினார்.

கணக்கு விடும் ஸ்டாலின்

தனித்தமிழில் சமஸ்கிருத எழுத்துக்களைத் தவிர்த்து எழுத வேண்டும் என்ற அடிப்படையில் அவரது பெயர் சுடாலின் என்று எழுதப்பட்டது. அதை அவரது எதிரிகள் திரித்து சுடலை என அழைக்கின்றார்கள். மீம்ஸ்களில் அவரை சுடலை என குறிப்பிடுவார்கள்.

தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி உடையலாம் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தொடர் பேச்சு வார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்பட்டது ஸ்டாலின் வெற்றி.

இதே மாதிரியான வெற்றியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பெற்றுள்ளார். உட்கட்சிப் பூசல், அமித்-மோடி அழுத்தம் ஆகிய இரண்டும் எடப்பாடியாருக்கு கடுமையான சவால். அவர் அதை சமாளித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இருவரும் நாவன்மை மிக்கவர்களல்லர். இருவரும் எழுத்தாளர்களுமல்லர். இருவரும் மேடைகளில் எழுதி வாசிக்கும் போதே தடுமாறுபவர்கள்.

எடப்பாடியார் 1974இல் அரசியலுக்கு வந்தவர். அது ஸ்டாலின் வந்து 7 ஆண்டுகளின் பின்னர் நடந்தது.

எடபாடியார் தனது விஞ்ஞானப் பட்டப்படிப்பில் தேறவில்லை. ஸ்டாலின் சிறையில் இருக்கும் போது தனது அரசியில் இளங்கலைமானி பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை எழுதி சித்தியடைந்தார்.

1984இல் ஸ்டாலின் தனதுமுதல் தேர்தல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.

1989 சட்ட சபைத் தேர்தல் ஸ்டாலினுக்கு இரண்டாவது தேர்தலாகவும் எடப்பாடியாருக்கு முதல் தேர்தலாகவும் அமைந்தது.

திருச்செங்கோடு தொகுதியில் எடப்பாடியார் வெற்றி ச்பெற்றார். அதே தேர்தலில் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.

2011இல் அமைச்சர் பதவி: நெடுஞ்சாலை சிறுதுறைமுகங்கள்.

ஸ்டாலின் இரண்டு திரைப்படங்களிலும் இரண்டு தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்டாலின் போட்டியிட்ட சட்ட மன்றத் தேர்தல்களில் ஆறில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளார்.

1984இலும் 1991இலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டர். 1996இல் இருந்து கொளத்தூர் தொகுதியில் தொடச்சியாக வெற்றி பெற்று வருகின்றார். தந்தையைப் போலவே இவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டுவதில் எடப்பாடியார் ஸ்டாலினிலும் பார்க்க அதிக சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஈழத்தமிழர்கள் இத்தாலிச் சனியன் என அழைக்க விரும்பும் சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணி தொடருவதை விரும்புகின்றார். அமித் ஷா எப்படி கூட்டணி அமைத்துக் கழுத்தறுப்பது என்பதை மனதில் வைத்தே செயற்படுகின்றார். திமுகவை அழிக்கும் நோக்கமோ வலிமையோ காங்கிரசிடம் இல்லை.

ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியால் ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

அடுத்து எடப்பாடியார் எதிர் கொள்ளவிருக்கும் பிரச்சனை அண்ணா திமுக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் தேர்வு ஆகும். பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளர்கள் அதிகம் போட்டியிடுவதை விரும்புவார். எடப்பாடியார் அந்தப் பிரச்சனையை தவிர்க்க சென்ற ஆண்டு போட்டியிட்ட வேட்பாளர்களையே அதிமுக சார்பில் களமிறக்க முனைகின்றார்.

திமுகவில் தற்போது உள்ள பழம் பெரும் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைக்க அதிக முனைப்பு காட்டுகின்றார்கள். அதைச் சமாளிக்க தனது மகன் உதயநிதியை தேர்தலில் போட்டியிடாமல் நிற்பாட்ட ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அதற்கு அவரது குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எடப்பாடியாரும் ஸ்டாலினும் தங்கள் கட்சிகளின் சார்பில் 170இற்கு மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்கள். அறுதிப் பெரும்பான்மையிலும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் அல்லது யார் வெற்றி பெற்றாலும் அவர்களது ஆட்சியை அமித் ஷா முழுங்கி விடுவார் என்ற அச்சம் இருவருக்கும் உண்டு. அமித் ஷா திமுக பெருவெற்றியடையாமல் தடுப்பதற்காகவே அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட அமித் ஷா சம்மதித்தார்.

இருவருக்கும் ஈழத்தமிழர் பற்றி அக்கறை இல்லை.

இந்தியாவை ஒரு சிலமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு Oligarchy ஆக மாற்ற நடந்து கொண்டிருக்கும் முயற்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும அறிவு இல்லை. 

தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவில் இருந்து 45 சட்ட மன்ற உறுப்பினர்களையும் திமுகவில் இருந்து 45 சட்ட மன்ற உறுப்பினர்களையும் பாஜவிற்கு கட்சி தாவச் செய்து பாஜக் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமனை முதல்வர் பதவியில் அமர்த்துவார் அமித் ஷா என்ற அச்சம் ஸ்டாலினையும் எடப்பாடியாரையும் நிச்சயம் ஆட்டிப்படைக்கும்.


Monday 8 March 2021

அமெரிக்காவின் புதிய லேசர் படைக்கலன்கள்


தற்போதுள்ள லேசர் படைக்கலன்களிலும் பார்க்க ஒரு மில்லியன் மடங்கு வலிமையுள்ள லேசர் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.

லேசர் என்பது என்ன?

லேசர் என்பது செறிவாக்கப்பட்ட ஒளிக்கதிர்கள். Light Amplification by Stimulated Emission of Radiation என்பதை அதன் முதலெழுத்துக்களைக் கொண்டு ஆக்கப்பட்ட சொல் LASER ஆகும். அவ்வகையில் லேசர் என்பது ஒளியை மிகையாக்கி தூண்டப்பட்ட கதிர்வீச்சு செய்யும் கருவியாகும். லேசர் ஓரியல்பான, ஒற்றை நிறமுடைய, திசைப்படுத்தப்பட்ட, மிகச்செறிவான ஒளிக்கதிராகு, பொதுவாக ஒளியில் ஏழு நிறங்கள் கலந்துள்ளன. ஆனால் லேசரில் ஒரு நிறம் மட்டுமே இருக்கும். எரியும் தீயில் அல்லது ஒளிரும் மின் குமிழில் இருந்து பல திசைகளிலும் ஒளி வீசப்படும். ஆனால் லேசர் கருவியில் இருந்து வரும் ஒளி ஒரு திசையில் மட்டும் செல்லும். மற்ற ஒளி மூலங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் பல் வேறுபட்ட அலைநீளங்களைக் (Wavelengths) கொண்டிருக்கும். ஆனால் லேசரில் இருந்து வரும் ஒளி ஒரே அலைநீளத்தைக் கொண்டது. மருத்துவம் உட்படப் பல பயந்தரு துறைகளின் லேசர் கதிர்கள் பாவிக்கப்படுகின்றன.


பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.



விமானம் தாங்கி கப்பல்களை எதிர்க்க ஹைப்பர் சோனிக்

அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள  hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது.  ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கிய பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் ஏவுக் ஆயிரம் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் பெறுமதியான ஏவுகணையை வீச வேண்டியுள்ளது.

விமானங்களில் லேசர் படைக்கலன்கள்

விமானங்களில் பொருத்தக் கூடிய அளவிற்கு சிறிய லேசர் கதிர் பிறப்பாக்கிகளை அமெரிக்கா பல வழிகளில் முயற்ச்சி செய்வதாக 2015-ம் ஆண்டளவில் செய்திகள் வெளிவந்திருந்தன. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் இருந்து அமெரிக்க போர் விமாங்களைப் பாதுகாக்க அவை அவசியமாகும். அமெரிக்கா இரகசியமாக உருவாக்கி வைத்திருக்கும் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளும் நுண்ணலைப் பிறப்பாக்கிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும் எனவும் கருதப்படுகின்றது. 2021 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவின் விமானப் படையினர் விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளை பொருத்திப் பரிசோதித்தன. The Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அவை அழைக்கப்படுகின்றன.


ஆளில்லா விமானங்க்ளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா போர் விமானங்களை வலிமை மிக்க ஒரு படை நிலைமீது அல்லது விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது தாக்குதல் செய்யும் பாது அவற்றின் மீதுள்ள விமான எதிர்ப்பு படைக்கலன்களால் எல்லாவற்றையும் அழிக்க முடியாத நிலை ஏற்படும். அதில் ஒரு சில ஆளில்லா விமானம் தன் இலக்கை தாக்கும். இத்தகையக குளவித் தாக்குதல் முறைமையை எதிர் கொள்ள லேசர் கதிர்களும் நுண்ணலை கதிர்களும் பாவிக்கப்படுகின்றன. தற்போது ஆளில்லா விமானங்களை இரு நூறு டொலர் செலவு செய்து உருவாக்க முடியும். ஒரு தீவிரவாத அமைப்பால் பல நூறு ஆளில்லா விமானங்களை தாக்குதலுக்கு அனுப்பும் போது அவை ஒவ்வொன்றையும் ஒரு இலட்சம் பெறுமதியான ஏவுகணைகளால் தாக்கி அழிப்பது செலவு மிக்கதாகும். அவற்றை லேசர் கதிர்களால் அழிப்பது செலவு குறைந்ததாகும்.

உத்திசார் லேசர் படைக்கலன்கள் (Tactical Laser Weapons)

பொதுவாக லேசர் கதிர்களும் நுண்ணலைக் கதிர்களும் எதிரி இலக்குகளை கருக்கி சாம்பலாக்கும் அல்லது ஆவியாக்கும். ஆனால் அமெரிக்கா உருவாக்கியுள்ள Tactical Ultrashort Pulsed Laser (UPSL) எதிரியின் ஏவுகணைகள் உட்பட பல படைக்கலன்கள் மீது வீசப்படும் போது அவற்றின் மின்காந்த மற்றும் மின்னணு போன்றவற்றால் செயற்படும் கருவிகளை செயற்படாமல் செய்துவிடும்.

அமெரிக்கா மட்டுமல்ல சீனாவும் இரசியாவும் லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சில வகைப்படைக்கலன்களை உருவாக்கியும் விட்டன.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...