Monday 24 January 2022

13என்னும் முடமான திருநங்கைதான் மணமகளா?


 ஈழத்தமிழன் என்னும் இளைஞன் தமிழீழம் என்னும் பெண்ணைக் காதலித்தான் அவர்களின் காதல் திருமணம் நோக்கி முன்னேறுவதைப் பொறுக்காத வில்லன் சிங்களவன் இந்தியா என்னும் அடியாளைத் தன் கைக்கூலியாக்கினான். ஈழத்தமிழன் காதல் திருமணம் செய்தால் தனது மகன்களும் காதல் திருமணம் செய்வார்கள். அதனால் வரதட்சணை கிடைக்காமல் தனது பிழைப்பு நாறிப்போகும் என உணர்ந்த இந்தியா எனும் அடியாள் ஈழத்தமிழனே உனக்கு மணமகள் தமிழீழம் அல்ல பதின்மூன்றே உனக்குரியவள் அவளையே நீ திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டினான். பதின்மூன்று ஒரு முடமான திருநங்கை என்பதால் அவளைத் திருமணம் செய்ய மாட்டேன் என ஈழத்தமிழன் மறுத்து விட்டான். ஆனாலும் இந்தியா என்ற அடியாளும் சிங்களவன் என்ற வில்லனும் மணமக்கள் சம்மதம் இல்லாமலே தட்டுக்களை மாற்றி திருமண நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால் ஈழத்தமிழன் தமிழீழம் என்னும் காதலியை உறுதியாக காதலித்தான் அவனது காதல் கைக்கூடும் வேளையிலே இந்தியா என்னும் கூலி அடியாள் ஈழத்தமிழனை மறைந்திருந்து தாக்கி அவனது சொத்துக்களை எல்லாம் அழித்து அவனை ஒரு பிச்சைக்காரன் என்ற நிலைக்கு தள்ளினான். பின்னர் பிச்சைக்காரனான உனக்கு இனி எவனும் பெண் கொடுக்க மாட்டான் நீ பதின்மூன்றையே திருமணம் செய் என்றான். எல்லாம் இழந்த ஈழத் தமிழன் தன் காதலை மட்டும் இழக்கவில்லை. 

தமிழீழத்தின் மீதான காதலில் ஈழத்தமிழன் உறுதியாக இருப்பதால் சினமடைந்த இந்தியா என்னும் கூலி அடியாள் ஈழத்தமிழனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு Quarterஉம் Side dishஉம் கொடுத்து தன் பக்கம் இழுத்து நீங்கள் எல்லோரும் ஈழத்தமிழனை நிர்ப்பந்தித்து அவனை பதின்மூன்றைத் திருமணம் செய்து வைக்கும்படி என்னை மன்றாடும்படி செய்யுங்கள் என்றான். அது முடியாமல் போனதால் Quarterஇற்கும் Side dishஇற்கும் விலை போனவர்கள் எல்லோரும் கூடி இந்தியா என்னும் அடியாளிற்கு ஈழத்தமிழனை பதின்மூன்று என்னும் முடமான திருநங்கையை திருமணம் செய்து வைக்கும் படி கடிதம் எழுதினார்கள். 

சிங்களத்தின் அடியாளாகிய இந்தியா ஊரில் உள்ள எல்லாக் திருமணத்தரகர்களிடமும் ஈழத்தமிழனுக்கு பதின்மூன்று தான் நிச்சயிக்கப்பட்ட மணமகள் அதை விட அவனுக்கு வேறு பெண் இல்லை என நம்ப வைத்துள்ளான். சிங்களவன் என்னும் வில்லனின் நிலத்தில் எப்போதும் கண் வைத்திருந்த அமெரிக்கா என்னும் கட்டப் பஞ்சாயத்துக்காரன் இந்தியா என்னும் அடியாளுடன் இணைந்து செயற்படுகின்றான். தமிழீழத்தை ஈழத்தமிழனுக்கு திருமணம் செய்து வைத்தால் சிங்களவன் என்னும் வில்லன் கதை முடிந்து விடும் என இருவரும் மிரண்ட்டி அவன் காணிகளை அபகரிக்கின்றார்கள்.

இத்தால் சகலரும் அறிய வேண்டியது:

1. இந்தியாதான் ஈழத்தமிழனின் முதலாம் எதிரி

2. Quarterஇற்கும் Side dishஇற்கும் விலை போனவர்கள் ஈழத்தமிழனின் இரண்டாம் எதிரிகள்

3. சிங்களவன் ஈழத்தமிழனின் மூன்றாம் எதிரி

4. அடியாள் இந்தியாவின் அசிங்க முகத்தை எல்லா திருமணத் தரகர்கள் மத்தியிலும் ஈழத்தமிழன் அம்பலப்படுத்த வேண்டும்.

5. சிங்களவனின் அடியாள் இந்தியாவின் எதிரிகளை ஈழத்தமிழன் தேடிச்சென்று நண்பர்களாக்கி அவர்களை தனக்கும் தமிழீழத்திற்கும் திருமணம் செய்ய உதவ வைக்க வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் என்னை மன்னிப்பார்களாக

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...