Monday 6 July 2009

ஆனாலும் அவன் நடக்கிறான்.



இருளே வழியானது

துயரே துணையானது

எங்கும் அவலங்கள்

ஓலங்களே இசையானது

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

துணைக்கென வந்தோர்

துரோகிகளாயினர்

தீர்க்கவென வந்தோர்

தீர்த்துக் கட்டினர்

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

பாரா முகங்களே

பழக்கங்கள் ஆயின

அள்ளி வைப்போரே

அருகில் நின்றனர்

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

அடுத்துக் கெடுப்போரே

அயலவர் ஆகினர்.

தடுக்க வேண்டியோரே

தண்டம் கொடுத்தனர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

பொய்களை பலவற்றை

திரும்ப திரும்பச் சொல்லி

உண்மைகளாக்கினர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

உண்மைகளை எல்லாம்

திரும்ப திரும்பத் தாக்கிப்

பொய்களாக்கினர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

எல்லாமே இழந்தாலும்

நம்பிக்கை இழக்காததால்

கீழ்த்திசையில் ஒரு ஒளிக்கீற்றை

நோக்கி அவன் நடக்கின்றான்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...