
இது ஒரு பெரிய கம்பனி.
இதன் பங்குதாரர்கள் பல கோடி. ஆனாலும் பங்கிலாபம் பெறுவதில்லை.
இந்த வியாபாரத்தில் இது உலகின் மிகப் பெரிய கம்பனி.
இது அன்னியர் ஒருவரின் ஆதிக்கத்தில் இயங்கும் கம்பனி.
இங்கு வேலை பெறுவது இலகுவான காரியமல்ல.
இங்கு வேலை பெறுமுன் அங்கு வேலை செய்பவர்களைப்பற்றிய தகவல்களை அறிதல் நன்று.
இந்தக் கம்பனியில் வேலை செய்பவர்களில்
29 பேர் மனைவிகளைக் கொடுமைப்படுத்துபவர்கள்
52பேர் மருமகளைக் கொடுமைப்படுத்துபவர்கள்
117 பேர் பாரிய ஊழல் செய்பவர்கள்
67 பேர் திருட்டுத் தொழில் செய்பவர்கள்
19 கள்ளச் சராயம் காய்ச்சுபவர்கள்
3 பேர் ஏற்கனவே சிறையில் இருந்தவர்கள்
71 பேர் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்காதவர்கள்.
28 பேர் போதைப் பொருள் கடத்துபவர்கள்
54 பேரில் நீதிமன்ற வழக்கு உள்ளது.
84 பேர் குடிபோதையில் வேலைக்கு வருபவர்கள்.
28 பேர் கொலை செய்தவர்கள்
இப்போது உங்களுக்கு அங்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று தெரிகிறது.
கம்பனியின் பெயர் Loksabha (pvt)Ltd..