Sunday 15 February 2009

பிரிவோம் சந்திக்க வேண்டாம்


அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகள் நாம்
உற்ற நேரத்தில் உறவுகளைப் பிரிந்தோம்
தக்க தருணத்தில் ஆயுதம் ஏந்தவில்லை
தாய்மண்ணைக் காக்க முனையவில்லை
வெளிநாடு வந்தோம் தப்பிப் பிழைத்தோம்
நீயும் நானும் காதல் வசப் பட்டோம்
ஆனாலும் எமக்குள் கருத்து வேறுபாடு
ஈழ விடுதலை தொடர்பாக.
எந்நேரமும் என் சிந்தனையில்
ஈழத்தோர் படும் துயர்
நீ வெளி நாட்டு மோகத்தில்
தாயகப் போராட்டத்திற்கு
நீ நிதியுதவி செய்யவில்லை
பாராளமன்றத்தின் முன்
கோஷம் போட நீ வரவில்லை
எதிர்ப்பு ஊர்வலங்களிற்கும் வரவில்லை
தாயகத்து உணரவின்றி வாழ
என்னால் முடியாது பெண்ணெ.
சரிவராது உனக்கும் எனக்கும்
பிரிவோம் சந்திக்க வேண்டாம்.

3 comments:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

அருமை நண்பா..

Tharik Ahamed said...

Super kavithai...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...