அமைதிப் படையின் அளவிலா அட்டூழியத்தால்
அம்மன் கோவிலில் அகதிகளாக இருந்த வேளை
திருமஞ்சக் கிணற்றடியில் எம் முதல் சந்திப்பு
அத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியிலும்
தொடர்ந்தது என் தேடல் உன்முகத்தை நாடி
செல்லடியில் சிதைந்த உன் வீட்டின் மதில்கள்
உன் முகத்தை மீண்டும் காட்டித் தந்தது
ஹெலிக்குப் பயந்து ஒடும் போதும்
விமானக் குண்டுக்கு பயந்து ஒதுங்கும் போதும்
நினைவெல்லாம் நீயாக நீங்காத படமாகதேடல் தொடர்ந்தது
அரசடி வீதித் தரிப்பிடத்தில்மீண்டும்
அந்தத் திவ்விய தரிசனம் கிடைக்கும் வரை
கண்களால் பல்லாயிரம் வார்த்தைப் பரிமாற்றம்
மறக்க வொணாத மாதங்கள் கணங்களாக மறைய
அலைகிறான் மகன் அகால வேளைகளில்
இயக்கத்தில் சேர்ந்திட்டானோ சேரப்போகிறானோ
அஞ்சினாள் அம்மா அதிர்ந்தார் அப்பா
அனுப்பினர் வெளிநாட்டிற்கு.
ஊர்களே மாறியது போல் ஊரார்கள் மாறினர்
நீயும் எங்கேயோ சென்று விட்டாய்
பிரிந்தோம் சந்திக்க வில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
2 comments:
:(
nam kanavukal ellam verum kaanal neerakathan poi vittathu
Post a Comment