அமைதிப் படையின் அளவிலா அட்டூழியத்தால்
அம்மன் கோவிலில் அகதிகளாக இருந்த வேளை
திருமஞ்சக் கிணற்றடியில் எம் முதல் சந்திப்பு
அத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியிலும்
தொடர்ந்தது என் தேடல் உன்முகத்தை நாடி
செல்லடியில் சிதைந்த உன் வீட்டின் மதில்கள்
உன் முகத்தை மீண்டும் காட்டித் தந்தது
ஹெலிக்குப் பயந்து ஒடும் போதும்
விமானக் குண்டுக்கு பயந்து ஒதுங்கும் போதும்
நினைவெல்லாம் நீயாக நீங்காத படமாகதேடல் தொடர்ந்தது
அரசடி வீதித் தரிப்பிடத்தில்மீண்டும்
அந்தத் திவ்விய தரிசனம் கிடைக்கும் வரை
கண்களால் பல்லாயிரம் வார்த்தைப் பரிமாற்றம்
மறக்க வொணாத மாதங்கள் கணங்களாக மறைய
அலைகிறான் மகன் அகால வேளைகளில்
இயக்கத்தில் சேர்ந்திட்டானோ சேரப்போகிறானோ
அஞ்சினாள் அம்மா அதிர்ந்தார் அப்பா
அனுப்பினர் வெளிநாட்டிற்கு.
ஊர்களே மாறியது போல் ஊரார்கள் மாறினர்
நீயும் எங்கேயோ சென்று விட்டாய்
பிரிந்தோம் சந்திக்க வில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
:(
nam kanavukal ellam verum kaanal neerakathan poi vittathu
Post a Comment