Wednesday 5 May 2010

என் தூக்கத்தை ஏன் பறித்தாய்


தேம்ஸ் நதிக்கரையில் வில்லோ மர நிழலில்
நடனசாலைகளில் மின்னும் விளக்கொளியில்
நகரத் தெருக்களில் மூலை முடுக்குகளில்
இணைந்திருந்த நாட்கள் இன்று எங்கே

என் இனிய காதலை ஏன் சிதைத்தாய்
என் இளகிய இதயத்தை ஏன் வதைத்தாய்
நாம் பழகிய நாட்களை ஏன் மறந்தாய்
அந்த அழகிய கனவுகளை ஏன் கலைத்தாய்

என் அரிய தூக்கத்தை ஏன் பறித்தாய்
பறந்த கற்பனைகளை ஏன் மறித்தாய்
வளர்ந்த அன்பு மரத்தை ஏன் தறித்தாய்
இன்று காரணமின்றி எனை ஏன் வெறுத்தாய்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...