
உடலது மேலுலகோடி - அது
தரும் சுகமது பல கோடி
.... ...இதழது அமுது இணையோடி
…………என்னுடன் வந்து இணையோடி
நினதடி இதம் தினம் நாடி
எனதாவி வரும் தாவி
…………தொடும்படி உனைநாடி
…………துடிக்குதடி என் நாடி
என் இடம் தேடி வாடி- இலையெனில்
தவிதவிக்கும் என் மனம் வாடி
…………நின் கழலடி என் நிழலடி
…………உன் கண்ணடி கடும் சுழலடி
ஒடி கொடி இடையடி தேடி
ஓடி வருவேன் நற் கவிபாடி.
No comments:
Post a Comment