Tuesday 6 January 2009

ஓடி வருவேன் கவிபாடி


உடலது மேலுலகோடி - அது
தரும் சுகமது பல கோடி
.... ...இதழது அமுது இணையோடி
…………என்னுடன் வந்து இணையோடி
நினதடி இதம் தினம் நாடி
எனதாவி வரும் தாவி
…………தொடும்படி உனைநாடி
…………துடிக்குதடி என் நாடி
என் இடம் தேடி வாடி- இலையெனில்
தவிதவிக்கும் என் மனம் வாடி
…………நின் கழலடி என் நிழலடி
…………உன் கண்ணடி கடும் சுழலடி
ஒடி கொடி இடையடி தேடி
ஓடி வருவேன் நற் கவிபாடி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...