Tuesday, 16 December 2008
சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
2 comments:
It is beautiful.
our sorrows coming out
Post a Comment