Tuesday 16 December 2008

சாத்தான்கள் ஓதும் வேதம்


மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்

வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்

2 comments:

Vel Tharma said...

It is beautiful.

Unknown said...

our sorrows coming out

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...