Sunday 21 December 2008

எம் உறவு ஒர் இனிய கீர்த்தனம்.


உரசல்களும் வருடல்களும்
பல்லவியாகத் தொடங்கும்
நெருக்கமும் அணைப்பும்
அநுபல்லவியாகத் தொடரும்
வளையொலியும் கட்டிலொலியும்
பக்க வாத்தியங்களாய் இணையும்
முத்தங்களும் தழுவல்களும்
சரணங்களாய் வந்து சேரும்
சிணுங்கல்கள் நிரவல்களாகும்
முனகல்கள் ஆலாபனைகளாகும்
தாரஸ்தாயி சஞ்சாரம்
தரும் ஒரு தனி சுகம்
மேல்ஸ்தாயி சஞ்சாரம்
கொண்டு செல்லும் சுவர்க்கம்.
மொத்தத்தில் நம் உறவு
தனியாவர்த்தனம் இல்லாத
கர்நாடக கீர்த்தனம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...