Friday 31 December 2021

இந்தியாவை ஒரம் கட்டுவதே தமிழ், சிங்கள உய்விற்கு வழி

 


தமிழர்களுக்கு உதவ இந்தியா இருக்கின்றது என்ற மூடத்தனமான அச்சம் சிங்களவர்களிடையே உண்டு. 1987 அமைதிப்படை என்னும் பெயரில் வந்த கொலைவெறி நாய்ப்படைகளில் இருந்து 2009இனக் கொலைவரை இந்தியா சிங்களவர்களுக்கு பல உதவிகள் செய்த பின்னரும் இந்தியா தமிழர்களுக்கு உதவும் என நம்பும் முட்டாள்கள் சிங்களவர்களிடையே இன்றும் உண்டு என்பது ஆச்சரியத்துக்கு உரியது. அப்படி நம்பும் சில தமிழ் மூடர்களும் இருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கின்றது.

தமிழர்கள் மீதான இந்திய வெறுப்பை இலங்கையர்கள் உணருங்கள்

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பல இலட்சம் இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுதான். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் அதை வைத்துக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் நாட்டைப் பிரித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை முதலில் சிங்களவர்கள் கைவிட வேண்டும். உலகத்திலேயே பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாத இந்துக்கள் இலங்கையில் உள்ள இந்துக்களே. 1980களில் இலங்கைப் பிரச்சனையைக் கையாள வந்த இந்தியப் பிராமண அரசுறவியலாளர்களும் உளவுத்துறையினரும், ஊடகர்களும் இதை அவதானித்து இலங்கைத் தமிழர்கள் மீது கடும் சினம் கொண்டனர். தமிழர்கள் என்றாலே சூத்திரர்கள். அவர்களை அடக்க சிங்களவர்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.  அவர்களுடன் தமிழரகள் மேல் பொறாமை கொண்ட சில மலையாளிகளும் இணைந்து கொண்டனர். இந்தியாவில் 4%இலும் குறைவான பிராமணர்கள் இந்தியாவை ஆளவும் ஆட்டிப்படைக்கவும் செய்கின்றார்கள். இந்தியா பிராமணர்களால் ஆளப்படவேண்டும் அல்லது அவர்களின் ஆலோசனைப்படி நடப்பவர்களால் ஆளப்பட வேண்டும் என்பது இந்துத்துவா கும்பலின் கொள்கை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியில் பெரும்பாலோர்களின் கொள்கையுமாகும். அதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால்தான் ராகுல் என்கின்ற மொக்கை காந்தியும் தன்னை பார்ப்பான் என்கின்றார்; வங்கத்து மம்தா அக்காவும் தன்னைப் பாப்பாத்தி என்கின்றார்.

தமிழர்கள் திருந்த வேண்டும்

இந்தியாவால் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய நலனும் தமிழர்களின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என சில ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிக அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்ற கொள்கையில் இந்தியா இருக்கும்வரை இந்திய நலனும் தமிழர்களின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்க முடியாது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். அவர்களின் அடிமனதில் பதிந்து போயுள்ள இந்திய நேயம் அவர்களை சரியான வழியில் சிந்திக்க விடாது. இந்தியாவின் அடுத்த பொய்மையான நிலைப்பாடு இலங்கையில் தமிழ் ஈழம் பிரிந்தால் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து விடும் என்பது. இது சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது என்ற இந்துக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட போலி அச்சம். நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறீமா-சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்ச தீவுக் கையளிப்பு, அமைதிப்படை, 13 என்னும் தீர்வுப் பொறி, ரணில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்க முற்பட்ட போது நிருபாம ராவ் சீறி எழுந்து அவரது ஆட்சியைக் கலைத்து மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியமை, 2009 இனக்கொலை, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவின் செயற்பாடு ஆகியவற்றை பற்றி உணர முடியாதவர்கள் தான் இந்தியாவால் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும், இந்திய நலனும் தமிழர்கள் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் எனவும் சிந்திக்கின்றனர். இவர்களில் சிலர் கொடுத்த காசுக்கும் அதிகமாக கூவுகின்றனர். பலர் காசு கொடுக்காமலே கூவுகின்றனர். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசல்ல

ஒரு பிராந்திய வல்லரசு என்றால் அதன் ஆதிக்கத்தில் ஒரு பிராதியம் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதிக்கத்தில் ஒரு பிராந்தியமும் இல்லை. இந்தியாவின் சொந்த நிலப்பரப்பு எனச் சொல்லப்படும் பிராந்தியத்திலேயெ இந்தியாவின் கட்டுப்பாடு இல்லை. இந்தியாவின் அரசியலமைப்பு இந்தியப் பிராந்தியம் எனச் சொல்லும் இடங்களில் ஒன்றான கஷ்மீரில் ஒரு பகுதியை பாக்கிஸ்த்தானும் இன்னொரு பகுதிய சீனாவும் ஆக்கிரமித்துள்ளன. இந்திய எல்லைகளில் பல இடங்களில் சீனா அத்து மீறி பல இடங்களை கைப்பற்றி வைத்துள்ளது. இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே அமைத்துள்ளது. இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைப் பிரித்து சிக்கிம் நாட்டை இந்தியாவுடன் இணைத்து இலங்கையை அச்சுறுத்தி ஒரு பிராந்திய வல்லரசாக இந்தியாவை உருவாக்க முற்பட்ட போது அவர் கொல்லப்பட்டார். அவருக்குப் பின் வந்த ராஜிவ் அனுப்பிய இந்தியப் படையினர் இலங்கையில் இருந்து வெளியேறும் போது இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாகும் தகமையை இழந்தது. தொடர்ந்து இலங்கைக் குடியரசுத் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவை பதவியில் இருந்து விலக்க இந்தியா காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோரூடாக முயற்ச்சித்து படு தோல்வியடைந்த பின்னர் இந்தியாவும் ஒரு மூன்றாம் தர நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தியாவின் தனிநபர் வருமானம் பங்களாதேசத்தின் தனிநபர் வருமானத்திலும் குறைந்த நிலையில் இருக்கும்போது அது பிராந்திய வல்லரசு எனச் சொல்ல முடியாது. ஆனாலும் இந்தியாவிடம் ஒரு வலிமை மிக்க படைத்துறை உண்டு. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் எந்த வெளிநாட்டு வல்லரசின் பக்கம் இந்தியா இருக்கின்றதோ அந்த வல்லரசுக்கு சார்பாக அப்பிராந்திய படைத்துறை சமநிலை மாறும். அதனால் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் வல்லரசு (Balancing Power) என அழைக்கபடுகின்றது. இந்திய வாற்பிடிகள் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்று கூவுவதை தமிழர்களோ சிங்களவர்களோ கணக்கில் எடுக்கக் கூடாது.

இந்தியாவை ஓரம் கட்டவும்

ஒரு புளியமரம் தன் நிழலில் வேறு தாவரங்களை வளரவிடாது என்பது போல் இந்தியாவின் நிழலில் இலங்கை விமோசனமடையாது என்ற மறைந்த ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை உருவாக்கிய ரோஹண விஜயவீராவின் கூற்றை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். சிங்கள மக்கள் திம்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த முனையில் தான் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்று பட முடியும். இந்தியாவை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து ஓரம் கட்ட வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பிற்கு சீனாவின் உத்தரவாதம் தேவைப்படலாம்

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா நேரடியாக பங்கேற்றது. சீனா சிங்களவர்களுக்கு உதவியது ஆனால் பின் கதவால் பத்தாயிரம் படையினரை இனக்கொலைக்கு உதவி செய்ய அனுப்பவில்லை. சீனாவிற்கும் தமிழர்களுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. சீனர்களை தமிழரகள் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்று பட்டு சீனாவின் நட்புடன் இலங்கையின் பாதுகாப்பை மட்டுமல்ல இலங்கை பிளவு படாமலும் பார்த்துக் கொள்ளலாம். அது தமிழர்களையிட்ட சிங்களவர்களின் அச்சத்தைப் போக்கும்.

காலங்கள் மாற களம் மாறும்

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 1980களில் கடும் போட்டி இருந்தது. இன்று அவற்றிடையே ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க-சீன முரண்பாடு தீவிரமடைந்து கொண்டே போகின்றது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது. இன்று சீனா மீது அமெரிக்கா கொண்டுள்ள அச்சம் போல் இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியா மீது கொள்ளும். இன்று இரு தரப்பு போட்டியாக இருப்பது அப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா என முத்தரப்பு போட்டியாக மாறும். அப்போதும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து பேரினவாத இந்தியா மாறாது. ஆனால் தமிழர்களும் சிங்களவர்களும் இந்தப் போட்டியில் கருவிகளாக இருக்காமல் இவற்றில் இருந்து விடுபடும் வழியைத் தேட வேண்டும். இருவருக்கும் எதிரியான இந்தியாவை ஓரம் கட்டி விட்டு சிங்களவர்களுக்காவது நட்பாக இருக்கும் சீனா தன்னை தமிழர்களும் நட்பான நாடாக மாற்ற வேண்டும். ஆனால் இலங்கையை போட்டிக்களமாக மாற்றக் கூடாது.

வட்டுக்கோட்டை விட்டுக் கொடுப்பு, திம்புக் கோட்பாடு ஏற்பு, இந்தியாவை ஓரம் கட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் ஒற்றுமை காணப்பட வேண்டும். மாற்றிச் சிந்திக்காமல் மாற்றமில்லை

Thursday 30 December 2021

உக்ரேன் போர்: புட்டீனின் இரண்டாம் சோவியத் ஒன்றியம்


இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஆசியாவிலும் ஐரோப்பியாவிலும் சோவியத் ஒன்றியம் ஒரு வலிமை மிக்க நாடாக உருவெடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் “பொதுவுடமையைப் பரப்பல்” என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்தன. சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கபட்டது.

ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில்

பதினைந்து நாடுகளைக் கொண்ட சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மத்திய ஆசிய நாடுகளும் தனித்தனி நாடுகளாக உருவெடுத்தன. அவற்றில் முக்கியமான நாடுகள் உக்ரேனும் ஜோர்ஜியாவும் ஆகும். இரசியாவுடன் ஓரளவு நல்ல உறவுடன் இருக்கும் நாடு பெலரஸ் மட்டுமே. மொல்டோவா நடுநிலையான உறவை இரசியாவுடன் வைத்திருக்கின்றன. 2008-ம் ஆண்டு ருமேனிய நகர் புச்சரெஸ்டில் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதற்கான வழி-வரைபடம் வகுக்கும் முடிவு எடுக்கப்பட்டதில் இருந்து இரசியாவின் சினம் அதிகரித்தது. இரசியா உடனேயே ஜோர்ஜியாமீது படையெடுத்து ஜோரியாவை இரண்டு நாடுகளாக்கியது. உக்ரேனில் இரசிய சார்பு சார்பானவர்கள் ஆட்சியில் அமர்த்த இரசியா வழி செய்தது.



1987 மே மாதம் 27-ம் திகதி நிலைமை
இரசியா விடுத்துள்ள வேண்டுகோள்களில் 1987-05-21-ம் திகதிக்குப் பின்னர் நேட்டோவில் இணைந்த நாடுகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தமது படையினரை நிறுத்த முடியாது. இரசியா விடுத்துள்ள நிபந்தனைகள் வேண்டு கோள்களுக்கு நேட்டோ நாடுகள் உடன்பட்டால் இரசியா அதற்குப்பதிலாக என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதிலில்லை என மேற்கு நாடுகள் விசனமடைந்துள்ளன. இரசியா ஆக்கிரமித்துள்ள உக்ரேனின் கிறிமியா, டொன்பாஸ் ஜோர்ஜியாவின் Abkhazia, South Ossetia ஆகிய பிராந்தியங்களில் இருந்து இரசியா வெளியேறுமா என மேற்கு நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.  இரசியாவின் இந்த ஆணவம் மிக்க நிலைப்பாடு அது தனது படைவலிமையில் அதிக நம்பிக்கையை வைத்துள்ளது என்பதை உணர்த்துகின்றது. இரசியா தனது படைவலிமையை கடந்த இருபது ஆண்டுகளாக வளர்த்து விட்டே இப்படி ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இரசியா தன்னை பொருளாதார நிலையிலும் உயர்த்தியுள்ளது. $622 பில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை இரசியா வைத்துள்ளது. 

அமெரிக்க உலக ஆதிக்கம்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதிமறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

நேட்டோ விரிவாக்கம்

பதினாங்கு நாடுகள் ஆரம்பித்த நேட்டோவில் தற்போதுஅல்பேனியாபெல்ஜியம்பல்கேரியாகனடாகுரோசியாசெக் குடியரசுடென்மார்க்எஸ்த்தோனியாபிரான்ஸ்ஜேர்மனிகிரேக்கம்ஹங்கேரிஐஸ்லாந்து இத்தாலிலத்வியாலித்துவேனியாலக்சம்பேர்க்மொன்ரிநிகிரோநெதர்லாந்துநோர்வேபோலாந்துபோர்த்துக்கல்ருமேனியாசுலொவேக்கியாசுலோவேனியாஸ்பெயின்துருக்கிஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இரசியா தனது கவச நாடுகளாகக் கருதும் எஸ்த்தோனியாலத்வியாலித்துவேனியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட்டமை இரசியாவைக் கடுமையாக சினத்திற்கு உள்ளாக்கியது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைய முற்பட்டபோது இரசியா அந்த நாடுகளுக்கு எதிராகப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிரான இரசிய நகர்வு

2021இன் இறுதியில் இரசியா 120,000படையினரை உக்ரேன் எல்லையில் குவித்து விட்டு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியை நேட்டோ அமைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் விடுத்தார். ஒரு நாடு ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதா இல்லையா என்பதை அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும். அம்முடிவை எடுப்பது இரசியா அல்ல என்பது நேட்டோ நாடுகளினதும் அதில் இணைய விரும்பும் நாடுகளினதும் பதிலாக அமைந்தது. புட்டீனின் வேண்டுகோள் ஒர் ஒப்பந்த வரைபாக வெளியிடப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படையினரின் உட்கட்டமைப்புக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்பதும் புட்டீனின் கோரிக்கையாக இருக்கின்றது. உக்கிரேனுக்கு நேட்டோ நாடுகள் படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்பதும் இடைத்தூர தாக்குதல் ஏவுகணைகளை ஐரோப்பாவில் தடைசெய்ய வேண்டும் என்பதும் புட்டீனின் கோரிக்கைகளாக இருக்கின்றன. இவற்றை நேட்டோ நாடுகள் செய்யவில்லை எனில் இரசியா படை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற மிரட்டலும் புட்டீனால் விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான தாக்குதல் விண்வெளிப் போராகலாம்

2021 நவம்பரில் செய்மதி அழிப்பு ஏவுகணையை வெற்றீகரமாகப் பதிவு செய்தது. புவியின் மேற்பரப்பில் இருந்து 300மைல்கள் உயரத்தில் இருந்த இரசியாவின் செய்மதி அதனால் அழிக்கப்பட்டது. உக்ரேனில் இரசியப்படைகளின் நகர்வுகளை நேட்டோ நாடுகளின் செய்மதிகள் அவதானித்து உக்ரேனுக்கு தகவல் வழங்கினால் அச்செய்மதிகளை இரசியா அழிக்கலாம். அமெரிக்காவின் விண்வெளிப்படை இரசியாவிற்கு எதிராக தாக்குதல் தொடுக்கலாம். அமெரிக்காவின் விண்வெளிப் படையின் ரடார்கள் 22,000மைல்கள் (36,000கிமீ) உயரத்தில் இருந்து ஒரு கால்பந்தின் நகர்வைக் கூட அவதானிக்கும் வகையில் உணர்திறன் மிக்கவை.

அனுபவமற்ற படையினர்.

கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்கா சமச்சீரற்ற போர்களை தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக செய்துள்ளது. வலிமை மிக்க எதிரியுடன் மோதும் அண்மைக்கால அனுபவம் அமெரிக்கப் படையினருக்கு இல்லை, அதேவேளை இரசியப் படையினர் போர் முனை அனுபவம் இல்லாமல் பல பத்தாண்டுகளைக் கடந்து வந்துள்ளன. 1950களின் ஆரம்பத்தில் நடந்த கொரியா போரின் பின்னர் வல்லரசு நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தாக்குவதை தவிர்த்து வந்துள்ளன. உக்ரேன் படையினர் உக்ரேனின் இரசியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்குப் பதியில் இரசிய ஆதரவுடன் செயற்படும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக 2014-ம் ஆண்டில் இருந்து போர் செய்து வருகின்றனர். 120,000இற்கும் மேற்பட்ட படைகளை உக்ரேனுக்கு இரசியா அனுப்பவிருக்கும் இரசியா அவற்றிற்கான வழங்கல்களை ஓரு மோசமான கால நிலையில் செய்ய வேண்டியிருக்கும். ஜனவரி – பெப்ரவரி காலப் பகுதியில் உக்ரேனின் வெப்ப நிலை செண்டிகிரேட்டில் -10 முதல் +8 வரை இருக்கும். பனி நிறைந்த சூழலில் போர் அனுபவம் பெறுவதற்காக நேட்டோ படையினர் பின்லாந்துடன் இணைந்து ஆண்டு தோறும் போர்ப்பயிற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரேனைத் துண்டாடுவது என்பதில் இருந்து உக்ரேனை முற்றாக ஆக்கிரமிப்பது என்பது வரை இரசியாவின் தெரிவுகள் பரந்துள்ளனஉக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையாமல் தடுப்பதில் இரசியா தற்காலிக வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை நிரந்தரமாக்குவற்கு இரசியா பெரு முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.  2014-ம் ஆண்டில் இருந்தமையிலும் பார்க்க உக்ரேனியப் படையினர் தற்போது அதிக அளவு பயிற்ச்சிகளையும் படைக்கலன்களையும் நேட்டோப் படையினரிடமிருந்து பெற்றுள்ளார்கள். கனடியப் படையினர் பலர் உக்ரேன் சென்று பயிற்ச்சி வழங்கியுள்ளனர். அமெரிக்கப் படைத்துறை நிபுணர்களும் உக்ரேனில் இருந்து செயற்படுகின்றனர்.

செல்வாக்கு

விளடிமீர் புட்டீனை மேற்கு நாடுகள் எதிர்க்கும் போதெல்லாம் அவரது செல்வாக்கு இரசியர்கள் மத்தியில் அதிகரிக்கும். இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டு வந்தபோது அவரது செல்வாக்கு இரசியாவில் அதிகரித்தது. இரசிய விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள்களைப் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டை மேற்கு நாடுகள் முன்வைத்த போது புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. இரசியா சிரியாவில் தலையிட்டதை மேற்கு நாடுகள் எதிர்க்க புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. உக்ரேனுக்கு எதிரான படை முற்றுகை மிரட்டல் அவரது செல்வாக்கை அதிகரிக்கும். ஆனால் உக்ரேனுக்குள் இரசியப் படைகள் நுழைந்த பின்னர் ஏற்படும் பின்னடைவுகள் உயிரிழப்புகள் பொருளாதார பாதிப்பு போன்றவை மக்கள் நடுவில் அவரது செல்வாக்கை இழக்கச் செய்யலாம்.

வலுவற்ற பொருளாதார நிலை

கொவிட் பெரும் தொற்று நோயால் ஒரு நீண்ட காலப் போரைச் செய்யக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள், உக்ரேன், இரசியா ஆகியவற்றின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. அதிலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உக்ரேனின் பொருளாதாரம் கொவிட்-19இற்கு முன்னரே பாதிப்படைந்த நிலையில் இருந்தது.

படைக்கலப் பரிசோதனைக் களம்

இரசியாவின் எஸ்-500 என்னும் வான் பாதுகாப்பு முறைமை 2021-ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இரசியா தனது எஸ்-400 வான்பாதுகாப்பு முறைமையை சிரியாவில் பரிசோதித்தது. அவற்றிற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கத் தயாரிப்பு F-35-I என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை பரிசோதித்தது. எஸ்-500ஐ இரசியா உக்ரேனில் பாவிக்கலாம். உக்ரேனிற்கு அமெரிக்கா புதிய போர் போர்விமானங்களை விற்பனை செய்யவில்லை. மாறாக இரசியாவின் போர்த்தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரசியாவின் T-14 Armata, T-70, T-90 ஆகியவை இரசியாவிடம் உள்ள எதிரிகளுக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய தாங்கிகளாகும். அமெரிகாவின் Javelin, BGM-71 TOW ஆகிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் இரசியாவின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் போர் அமையலாம். துருக்கியின் ஆளிலிப்போர்விமானங்கள் ஆர்மினீயா – அஜர்பைஜான் போரில் இரசியத் தாங்கிகள் பலவற்றை அழித்தன. துருக்கி அதே பணியை உக்ரேனில் இரசியாவிற்கு எதிராக செய்யலாம். இரசியாவின் SU-37, SU-57, Checkmate போன்ற விமானங்களை எதிர் கொள்ளக் கூடிய படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்குமா?



அமெரிக்க – இரசிய நேரடி மோதல் நடக்க வாய்ப்பில்லை

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்கும் போது இரசியாவுடன் அமெரிக்கா நேரடியாக மோதுவதைத் தவிர்த்து உக்ரேனிற்கு படைக்கலன்களையும் உளவுத் தகவல்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இரசியப் படைகள் நகரத் தொடங்கும் போதே அவற்றின் மீது முன்கூட்டித் தாக்குதல் நடத்தக் கூடிய வகையில் உளவு ஏற்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது. நிலைமையை உக்ரேனியப் படைகள் சமாளிக்க முடியாத போது போலந்தும் துருக்கியும் படையினரை உக்ரேனுக்கு அனுப்பி நேரடியாக இரசியப் படையினருடன் போர் புரியச் செய்யலாம். இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகவிருப்பவை போலந்தும் துருக்கியுமே. அமெரிக்காவின் இணையவெளிப்படையினர் இரசியாவிற்கு எதிராக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. போர் என்று நடந்தால் அங்கு அமெரிக்கா தனது படையினருக்கு பயிற்ச்சி களமுனைப் பயிற்ச்சி வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதுண்டு. இரசிய – உக்ரேன் போரில் இணையவெளிப் போர்ப் பயிற்ச்சியை அமெரிக்கா தனது படையினருக்கு வழங்கலாம். 2014-ம் ஆண்டு கிறிமியாவை உக்ரேனிடமிருந்து இரசியா அபகரித்த போது முதலில் உக்ரேனின் உட்கட்டுமானங்கள் மீது முதலில் இணையவெளித்தாக்குதல் தான் இரசியாவால் செய்யப்பட்டது.



பொருளாதாரத் தடை – SWIFT

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் மேலதிக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் செய்யலாம். குறிப்பாக பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான SWIFTஇல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆப்த்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம்.

தற்போது இரசியாவிற்கு உக்ரேனை விட்டுக் கொடுத்தால் அத்துடன் நிற்காமல் நேட்டோவில் இருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை விலக்க வேண்டும் என்ற மிரட்டலை புட்டீன் விடுப்பார் என நேட்டோ நாடுகள் கருதுகின்றன. அதனால் உக்ரேனை இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றும் புட்டீனின் முயற்ச்சியை நேட்டோ படையினர் உறுதியாக நிற்கின்றனர். புட்டீனிற்கு விட்டுக் கொடுத்தால் அவரது கனவான மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவார் என்ற கரிசனை நேட்டோ நாடுகளுக்கு மட்டுமல்ல பின்லாந்து, சுவீடன் போன்ற நேட்டோவில் உறுப்புரிமை இல்லாத நாடுகளுக்கும் உண்டு. போர் மூலம் உக்ரேனை ஆட்கொள்ளும் முயற்ச்சி வெற்றி தருமா? 

Tuesday 28 December 2021

புதிய அரசியலமைப்பு யாப்பும் தமிழர்களும்

  

இலங்கைக்கு என புதிதாக ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அது 2022 ஜனவரியில் இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபாயாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்துள்ளன. 2020 செப்டம்பர் -02-ம் திகதி கோத்தபாய ரொமேஷ் டி சில்வா(குடியரசுத் தலைவர் சட்டத்தரணி) தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். இன்னும் அந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினரிடையே புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிகாரப்பரவல்லாக்கல் தொடர்பில் ஒன்பது பேர் கொண்ட குழுவில் கடும் முரண்பாடு காணப்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் 73 ஆண்டுகால வரலாற்றில் அது மூன்று அரசியலமைப்பு யாப்புக்களை கண்டுள்ளது. 2022-ம் ஆண்டு வரவிருப்பது நான்காவது யாப்பாக அமையலாம். வரவிருக்கும் யாப்பின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதற்கான தயாரிப்பு வேலைகள் பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை.

தமிழ்ர்களைப் பாதுகாக்காத சோல்பரி யாப்பு

முதலாவது சோல்பரி யாப்பு பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்களால் வரையப்பட்டது. அதில் பெரும்பான்மை மக்களுக்கு ஐம்பது விழுக்காடு நாடாளுமன்ற உறுப்புரிமையும் சிறுபான்மை மக்களுக்கு ஐம்பது விழுக்காடு உறுப்புரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜீ ஜீ பொன்னம்பல அவர்கள் இலண்டன் சென்று அரசியல் யாப்பை வரைந்த சோல்பரி பிரபுவிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை மற்ற தமிழ்த் தலைவர்கள் ஏன் விடுக்கவில்லை என்ற கேள்வியை சோல்பரி பிரபு பொன்னம்பலத்திடம் முன்வைத்தார். பொன்னம்பலம் கொழும்பில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களுக்கு அக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சோல்பரிப் பிரபுவிக்கு தந்தி அனுப்புமாறு வேண்டினார். ஆனால் பொன் இராமநாதன் பொன் அருணாச்சலம் ஆகியோரின் அடுத்த வாரிசான அருணாச்சலம் மகாதேவா நாம் 50/50 உறுப்புரிமை தேவையில்லை நாம் சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு வாழ்வோம் என சோல்பரிப் பிரபுவிற்கு தந்தி அனுப்ப பொன்னம்பலம் ஏமாற்றத்துடன் திரும்பினார். அந்நியர் தயாரித்த இலங்கை அரசியலமைப்பு யாப்பிலும் தமிழர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சிங்களம் பேசும் தெலுங்கு அரசியல்வாதிகளும் தமிழ் பேசும் தெலுங்கு அரசியல்வாதிகளும் இணைந்து சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் உருவாக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதுகாப்பாக அதன் 29(2) பிரிவு இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவது, இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்களின் குடியுரிமையை பறிப்பது, இலட்சக்கணக்கான தமிழர்களை நாடற்றவர்கள் என்னும் நிலைக்குத் தள்ளிய சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் ஆகியவை செய்யப்பட்டன.

பிழைகள் நிறைந்த சில்வா அரசியலமைப்பு யாப்பு

1972-ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொல்வின் ஆர் டி சில்வா இலங்கை குடியரசுக்கான அரசியலமைப்பு யாப்பை வரைந்தார். அதில் தமிழர்கள் தரப்பில் வைத்த எந்த ஒரு கோரிக்கையும் உள்ளடக்கப்படவில்லை. பேரினவாத ஒற்றையாட்சி யாப்பாக வரைந்து இலங்கையை ஒரு மக்களாட்சி சமூகவுடமை குடியரசாக உருவாக்கினர். இந்த யாப்பு நிறைவேற்றப்படுவதை தமிழர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். யாழ் நாவலர் மண்டபத்தில் அந்த யாப்பின் பிரதி ஒன்றை தந்தை செல்வா தீயிட்டுக் கொழுத்தினார். அங்கு உரையாற்றிய மூதூர் தங்கத்துரை, காசி ஆனந்தன் போன்றோர் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் தமிழர் தரப்பிலிருந்து ஐந்து அம்ச குறைந்த பட்ச கோரிக்கை ஒன்றை தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு தமிழர்களால் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் வரவே இல்லை. மாறாக சீனாவில் இருந்து படையினருக்கு என பெருமளவு கவச வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு அவை தமிழர்களின் நிலப்பரப்புக்களின் உள்ள படைமுகாம்களில் நிறுத்தப்பட்டன. அமெரிதலிங்கம், சிவசிதம்பரம், நவரத்தினம் ஆகியோர் புதிய அரசியலமைப்பு யாப்பின் அவசரநிலைப் பிரகடனத்தை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்கள் என்பதால் கைது செய்யப்பட்டு அறக்கூறவை அற்ற சிற்ப்பு நீதிமன்றம் ஒன்றை அவசரநிலைச் சட்டத்தின் படி நியமித்து விசாரணை நடந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஜீ ஜீ பொன்னம்பலம், எம் திருச்செலவம், புள்ளநாயகம் ஆகியோர் உட்பட 63 சட்டடதரணிகள் அந்த நீதிமன்றத்தில் வாதாடினார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் தொடர்பான வாசகம் பிழை என்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டவாக்கல் அதிகாரம் இல்லை என்றபடியால் அவர் பிரகடனம் செய அவசர காலச் சட்டம் செல்லுபடியற்றது என ஜீ ஜீ பொன்னம்பலம் வாதடினார். எம் திருச்செல்வம் இலங்கை தமிழர்கள் மீது இலங்கை அரசுக்கு நியாய ஆதிக்கம் இல்லை, அவர்கள் இறைமை உள்ள தனித் தேசிய இனம் என வாதாடினார். அரசு தரப்பில் சட்டமா அதிபர் சிவா செல்லையா வாதாடினார். அவசரகாலச் சட்டம் செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்பு சிறிமா அரசு ஒரு மேன்முறையீடு செய்து தனக்கு தேவையானதை சாதித்துக் கொண்டது.

தமிழர்களால் ஜே ஆருக்கு என தயாரித்த யாப்பு

இலங்கையை சிங்கப்பூர் போல் தனது செய்மதி நாடாக மாற்றுவதற்கு ஓர் அதிகாரம் மிக்க ஆட்சியாளர் தேவை என உணர்ந்த அமெரிக்கா தனது கையாட்களான நீலன் திருச்செல்வம், பேராசிரியர் ஏ ஜே வில்சன் ( தந்தை செல்வாவின் மகளின் கணவர்) ஆகியோர் மூலமாக இலங்கையை அமெரிக்கா போல் அதிகாரம் மிக்க குடியரசுத் தலைமையின் கீழ் ஆட்சி செய்யும் நாடாக மாற்றப்பட்டது. அந்த அரசியலமைப்பு யாப்பிலும் தமிழர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நல்லாட்சி அரசு அமைக்க முயன்ற யாப்பு

மைத்திரி-ரணில் நல்லாட்சி என்னும் பெயரில் நடத்திய காட்டாட்சியில் ஒரு புதிய அரசியலமைப்பு வரையும் முயற்ச்சி செய்யப்பட்டது. மைத்திரி-ரணிலை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் ஆட்சி நாற்காலியில் ஏற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்தது. எந்த அடிப்படையில் மைத்திரி-ரணிலுடன் இணைகின்றீர்கள் என வினவப்பட்ட போது இதயத்தால் இணைகின்றோம் என மதியாபரணம் சுமந்திரன் பதிலளித்தார். சிங்களத்தில் ஏக்க ராஜ்ஜிய எனவும் தமிழில் ஒருமித்த நாடு எனவும் அந்த யாப்பில் இருக்கும் என்றும் ஒற்றையாட்சிக்குள் இணைப்பாட்சி(சமஷ்டி) இருக்கும் எனவும் தமிழர்கள் சார்பில் யாப்பு வரைபில் செயற்பட்ட மதியாபரணம் சுமந்திரன் குழப்பியபடியால் அவரை தமிழர்கள் சுத்துமாத்து சுமதிரன் என கேலி செய்யத் தொடங்கினர்.

சிங்களவர்களுக்கு உரிமையில்லையாம்

துருக்கியின் TRT தொலைக்காட்சிக்கு பொது பல சேனாவைச் சேர்ந்த  திலாந்தே விதானகே பேட்டியளிக்கும் போது சிங்கள மக்கள் உரிமையற்று இருக்கின்றார்கள் என்ற படியால் அவர்களின் உரிமையற்று இருப்பதாகவும் அவர்களின் உரிமை புதிய அரசியலமைப்பு யாப்பில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவுக் கருத்து தெரிவித்திருந்தார். புதிய யாப்பில் தமிழர்களுக்கு மேலும் பாதகமானதாகவே அமையும் என்பது அவரது கருத்தில் இருந்து தெரியவருகின்றது.

13-ம் இல்லை இணைப்பாட்சியும் இல்லை

அமெரிக்கா இணைப்பாட்சி (சமஷ்டி) அடிப்படையில் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தரும் என ஒரு குழுவினரும் பதின்மூன்றாம் திருத்தத்தை பாதுகாக்க வேண்டும் என இந்திய வாற்பிடிக் குழுவினரும் என இரு பிரிவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றனர். சுமந்திரன் சிங்கள் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய போட்டியில் நாங்கள் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரவில்லை இப்போதுள்ள 13-ம் திருத்தத்தில் மிகச்சிறிய மாற்றத்தையே கோருகின்றோம் எனத் தெரிவித்திருந்தார். பின்பு தனக்கே உரியவகையில் அதைச் சுத்துமாத்து செய்தார். புதிய அரசியலமைப்பு யாப்பில் 13இல்லாமல் போகலாம், 13 உள்ளடக்கப்பட்டு அது தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப் படாமல் போகலாம். தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்த ஒரு வாசகமும் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட்டால் அதற்கு எதிராக பிக்குகள் கிளர்ச்சி செய்வார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் அதிகமான அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் செய்யப்படுவதை தமிழினவிரோதியும் பேரினவாதியுமான இந்தியா கடுமையாக எதிர்க்கும். சிங்களக் கட்சிகள் மக்களிடையே செல்வாக்கை இழக்கும் போதெல்லாம் இனவாதத்தை கையில் எடுப்பது வழமை. தற்போது பிளவுபட்டு செல்வாக்கு இழந்த எதிர்க்கட்சிகளும் மோசமான பொருளாதார நிலையால் செல்வாக்கிழந்த ஆளும் கூட்டணிக் கட்சிகளும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் புதிய யாப்பில் உள்ளடக்க அனுமதிக்க மாட்டார்கள்.

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியை சாதகமாக வைத்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இலங்கை ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுப்பார்கள் என சில தமிழ் அரசியல்வாதிகள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். அமெரிக்காவுடன் இலங்கை SOFA என்ற அமெரிக்கப் படையினரை இலங்கையில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தையும் இந்தியாவுடன் CEPA என்ற பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் இலங்கை செய்தபின்னர் இரு நாடுகளும் முன்பு போல தமிழர்களை அம்போ என விட்டு விடும். சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்டது என சம்பந்தர் மீண்டும் அங்கலாய்ப்பார். இந்திய வாற்பிடிகள் தொடர்ந்தும் காணி பொலிஸ் வேண்டும் பராசக்தி காணி பொலிஸ் வேண்டும் என பஜனைக் கச்சேரியை இறக்கும்வரை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். 


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...