Saturday 19 September 2009

பிரபா இறந்ததாகக் கூறியவரின் நேர்மைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு.


குட்டிமணி ஜெகன் தங்கத்துரை போன்றோர் குற்றவாளிகள் எனத் தண்டித்தது இலங்கையின் நீதித் துறை. ஆனால் அவர்கள் நூற்றுக் கணக்கானவர்களோடு சிறையில் கொடூரமாகக் கொல்லப் பட்டதற்கு இலங்கையின் நீதித் துறை எவரையும் தண்டிக்கவில்லை.

அண்மையில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றில் தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக தெரிவித்தது அதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கான மரண சான்றிதழ் இன்னும் வழங்கப் படவில்லை. சட்டமா அதிபரின் நேர்மைக்கு எடுத்துக் காட்டாக இன்னோரு சம்பவம் அண்மையில் இலங்கையில் நடந்துள்ளது. கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபர் பி. ஏ அபேவர்த்தன என்பவர் இலங்கைக் காவற் துறைக்கு போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 2008-ம் ஆண்டு அவர் மீது நீதி மன்றில் குற்றம் சுமத்தப் பட்டு அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இப்போது பொதுமக்கள் என்று சிலர் பி. ஏ அபேவர்த்தனவை வழக்கிலிருந்து விடுவிக்கும் படி மனுக் கொடுத்தனர். அத்துடன் குற்றம் சாட்டப் பட்ட பி. ஏ அபேவர்த்தன தான் வருத்தம் தெரிவிப்பதாக ஒரு சத்தியக் கடுதாசியையும் சமர்ப்பித்தார். அதை வைத்துக் கொண்டு பி. ஏ அபேவர்த்தனவை வழக்கிலிருந்து விடுவிக்கும் படி சட்டமா அதிபர் நிதிமன்றத்திற்க்கு வேண்டுகோள் விடுத்து இலங்கையின் சட்டம் மற்றும் நீதித் துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். உலகின் எந்தப் பகுதியிலும் குற்றம் சுமத்தப் பட்டவரின் வருத்தம் தெரிவிக்கும் சத்தியக் கடுதாசியை வைத்துக் கொண்டு எவரும் அவரைத் தண்டனையில் இருந்து விடுவிப்பதாகச் சொல்லுவதில்லை. சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

தலை கீழாக நிற்கும் இலங்கையின் சட்டத் துறை.
ஆசிய மனித் உரிமைக் கழகத்தின் இயக்குனர் பசில் பெர்ணாண்டோ இலங்கைச் சட்டமா அதிபரிர் மோஹன் பீரிஸ் அவர்களின் செயல் பற்றிக் கடுமையாகச் சாடியுள்ளார். இலங்கையின் சட்டவிரோதச் சட்டம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இலங்கையின் குற்றவியல் நீதித் துறை தலைகீழாக நிற்கிறது என்றார்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமனா?
சட்டமா அதிபர் மோஹன் பீரிஸ் அவர்களின் செயல் தமிழ் மக்கள் காலம் காலமாக த் தெரிவித்து வந்த கருத்தான இலங்கையில் சட்டத்தின் முன் எல்லோரும் சமன் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

6 comments:

Anonymous said...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

Anonymous said...

Varuvaar thalaivar meendum...

Donkey Tamil said...

HEE HAW!

Anonymous said...

Someone please tell me the truth, please..

Anonymous said...

Everyone telling lies..

Anonymous said...

மறந்திருந்து வழிகாட்டியவன் மறைந்தாலும்(??????) வழிகாட்டுவான்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...