Thursday, 8 January 2009
கிழக்கிலங்கை
காற்சலங்கை பரதநாட்டியத்திற்கு அழகு
கிழக்கிலங்கை தமிழுலகத்திற்கு மெருகு
கிழக்கு நங்கைதன் அழகை நான் பாடினால் - அது
பிரசவ வேதனையில் துடிக்கும் பெண்ணிடம்
சரச மொழி பல பேசியது போலாகும்.
நகமும் சதையுமாய் வாழ்ந்த இனங்கள்
பாம்பும் கீரியுமாயப் போனதை யார் தடுத்தார்
நென்மணி பூண்ட அந்த நிலமகள்
கண்ணி வெடிகளால் கற்பிழந்தாளே
மட்டு நங்கை மறைவாக மனம் வாடிக்
கொட்டும் கண்ணீரை யார் துடைப்பார்
வாவிகள் யாவும் பொட்டிழந்த பெண்போல்
ஆவியது துடித்து நிற்பதை யாரறிவார்
திருமலையாளின் திண்ணிய நெஞ்சமது
எரிமலையாகக் கொதிப்பதை யாருணர்வார்
கரும்புதரு அம்பாறையாள் எழில்யாவும்
வேம்பாகக் கசந்து போக யார் கெடுத்தார்
திருக்கோயிலின் அற்புதங்கள் யாவும்
திரும்பவொணாப் புற்புதங்களாய் உடைந்தனவே
மூதூர் என்னும் நன்னிலப் பூமியது
ஏதூர் எனும் படியாய்ப் போனதுவே
உடைந்து நிற்கும் ஒவ்வொரு சுவரும்
துரோகங்களின் காவியங்களாகின்றனவே
படுவான்கரையு மொருநாள் எழுவான் கரையாகும்
எழுவான்கரையில் ஒருநாள் எதிரி விழுவான் நிரையாக.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment