
பொது இடத்தில் உடலுறவு செய்தால் வாழைப் பழ உற்பத்தி பெருகும் என்று போதித்தவர் காவல்துறை அங்கு வந்ததைத் தொடர்ந்து நிர்வாணமாகத் தப்பி ஓடினார்.
பப்புவா நியூகினியில் யாமினா என்னும் இடத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது. மக்களைப் பொது இடத்தில் உடலுறவு செய்யும் படி நிர்பந்தித்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் இவரை விசாரிக்கச் சென்ற காவல் துறையினரைக் கண்டதும் இவர் நிர்வாணமாக தனது இரு மனைவிகளுடனும் ஏழு சீடர்களுடனும் காட்டுக்குள் ஓடித் தப்பித்துக் கொண்டார்.
இவரின் நிர்பந்தத்தின் பேரில் மூன்று மாதமாக இவரது அடியார்கள் பொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்டனராம்.
No comments:
Post a Comment