Saturday 28 January 2012

நகைச்சுவைக் கதை: காணாமல் போன மனைவி

அன்று சுந்தரின் சம்பள நாள் இரண்டு நாள். வீட்டுக்குப் போனால் மனைவி முழுப்பணத்தையும் அபகரித்து விடுவாள் என்று சுந்தர் இரண்டு நாட்கள் நண்பர்களுடன் வெளியோர் சென்று தங்கி நன்றாக குடித்துக் கும்மாளமடித்து விட்டுத் திரும்பினாள். வீடு திரும்பினான். பத்திரகாளியாக மனைவி ஜானகி. இரண்டு நாட்களாக காணவில்லை எங்கு போனாய் என்று கூச்சலிட்டாள் ஜனகி. சுந்தர் தான செய்த எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சொன்னான் சுந்தர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மனைவி ஜானகி நான் ஒரு வாரம் காணமல் போனால் உனக்கு எப்படி இருக்கும் என்றாள். அது மிக மகிழ்ச்சிகரமான ஒரு வாரமாக இருக்கும் என்று தன் மனதுக்குள் நினைத்த சுந்தர் ஒரு மாதிரிச் சமாளிப்பேன் என்றான். சமாளிப்பியா மவனே சமாளிபியா என்று கேட்டுக் கொண்டே சரமாரியாக சுந்தரின் மூஞ்சியில் குத்து விழுந்தது. ஒரு வாரம் கழித்து முகத்தில் உள்ள வீக்கங்கள் போனபின்னர்தான் அவனால் கண்திறந்து மனைவியைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.


இரகசியமாகக் கதைத்த பையன்
அவர் ஒரு சட்டவாளர். தனது கட்சிக்காரர் ஒருவரின் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார். மறுமுனையில் ஒரு சிறுவன் இரகசியமாக ஹலோ என்றான். சட்டவாளர் வீட்டில் அப்பா இல்லையா என்றார். அப்பா பிஸியாக இருக்கிறார் என்றான் சிறுவன் இரகசியமாக. வீட்டில் அம்மா இருக்கிறாரா என்றார் சட்டவாளர். அம்மா சரியான பிஸி என்றான் சிறுவன் மீண்டும் இரகசியமாக. வீட்டில் வேறு யார் பெரியவங்க இருக்கிறார்கள் என்றார் சட்டவாளர். காவல்துறையினர் இருவர் என்றான் பையன் மீண்டும் படு இரகசியமாக. அவர்களிடம் போனைக் கொடு என்றார் சட்டவாளர் பதற்றத்துடன். பையன் மேலும் இரகசியமாகச் சொன்னான் அவர்களும் சரியான பிஸி. இப்போது சட்டவாளர் நடுங்கியபடியே கேட்டார் வேறு யாராவது இருக்கிறார்களா என்றார் சட்டவாளர். தீயணைக்குப் படையினர் ஆறுபேர் என்றான் பையன். இப்போது சட்டவாளர் தம்பி இவங்க எல்லாம் என்னடா செய்கிறார்கள் என்றார் உரத்த குரலில். அதற்குப் பையன் சும்ம கத்தாதை ஐயா அவர்கள் எல்லோரும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டான்.

Friday 27 January 2012

பலான குடும்ப நகைச்சுவைகள்

ஒரு பேருந்து விபத்தில் பலர் இறந்துவிட்டனர். அதில் பயணம் செய்த மூன்று நண்பர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் வாகன வசதி செய்யும் பகுதிக்குச் சென்றபோது "நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு உண்மையாய் இருந்தீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கான வாகனங்கள் வழக்கப்படும்" என்று சொல்லப்பட்டது. முதல் போன சேகருக்கு பென்ஸ் கார் கொடுக்கப்பட்டது. பின்பு சந்துருவிற்கு பிஎம்டபிளியூ கார் வழங்கப்பட்டது. பின்னர் மணிக்கு ஒரு பழைய அம்பாஸடர் கார் வழங்கப்பட்டது. மூவரும் தங்கள் வண்டிகளை ஓட்டிச் சென்று சொர்க்கத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு பின்னர் மாலை சந்த்தித்தனர். அதில் பென்ஸ்கார் பெற்ற சேகர் மிகக் கவலையுடன் காணப்பட்டான். மற்றவர்கள் காரணம் கேட்டபோது "இல்லை மச்சான் எனது மனைவிக்கு பழைய மிதிவண்டி ஒன்று கொடுத்திருக்கிறாங்கள்" என்றான்.

மகன்: அப்பா நம்பிக்கைக்கும் இரகசியத்திற்கும் என்ன வித்தியாசம்.
அப்பா: உனக்கும் உன் நண்பனுக்கும் நரேனுக்கும் உள்ள வித்தியாசம் போல்....நீ என் மகன் என்பது நம்பிக்கை..... நரேன் என் மகன் என்பது இரகசியம்.

மனைவி: நான் பாடும்போதெல்லாம் ஏன் போய் மொட்டையில் நிற்கிறீர்கள்/
கணவன்: அல்லாவிடில் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் நான் உன்னை உதைக்கிறேன் என்று நினைப்பார்கள்.

வாகனத்தில் எனது மனைவியும் பக்கத்தில் இருக்க ஓட்டிக் கொண்டிருந்தேன் வழியில் ஒரு நிறச் சைகையில் தரித்து நிற்கையில் பக்கத்து வண்டிக்காரன் தன் வண்டியில் பக்கத்தில் இருந்த பெண்ணின் முகத்தில் தடவிக் கொண்டிருந்தான். அதைக் காட்டி என் மனைவி அங்கு பாருங்க அவன் மனைவியை எவ்வளவு அன்பாக வருடிக் கொடுக்கிறான் நீங்களும் இருக்கிறியளே என்றாள். உனக்குத் தெரியாது அவனது மனைவி இன்று வேலைக்குப் போய்விட்டாள் அவன் தனது காதலியுடன் இப்போது இருக்கிறான். நானும் அப்படிச் செய்யவா என்றேன் நான்.

உனது தவறுகளைப் பார்த்து நீயே சிரித்தால் உன் ஆயுள் அதிகரிக்கும்.
உன் மனைவையின் தவற்களைப் பார்த்து நீ சிரித்தால் நீ அற்ப ஆயுளில் போகலாம்.

உன் காதலியை காதலிப்பவனுக்கு என்ன செய்யப் போகிறாய்?
அவனுக்கு சரியான தண்டனை அவளையே திருமணம் செய்வதுதான்.

மனவி: ஏன் எங்கள் marriage certificateஐத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்?
கணவன்: எங்காவது  expiry date இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

இருக்கையிலும் இன்பம் தரும்
படுக்கையிலும் இன்பம் தரும்
வாகனத்தின் பின் ஆசனத்திலும் இன்பம் தரும்
அது என்ன?
கண் மூடிச் செய்யும் தியானம்

தத்துவங்களும் பொருள்களும்
தத்துவம்: பணம்தான் வாழ்க்கை என்றில்லை
பொருள்: கடன் அட்டையும் தான்.

தத்துவம்: மிருகங்கள் மீது அன்பு காட்டுங்கள்
பொருள்: ஏனெனில் அவை சாப்பிடச் சுவையானவை.

தத்துவம்: புத்தகங்கள் புனிதமானவை
பொருள்: அவற்றைத் தொடக்கூடாது

தத்துவம்: உங்கள் அயலவரை நேசியுங்கள்
பொருள்: ஆனால் பிடிபடக்கூடாது.

Thursday 26 January 2012

விவரங்கெட்ட விபரங்கள்

பெண்கள் கேட்கும் "நான் எப்படி இருக்கிறேன்?" என்னும் கேள்விக்கு நேர்மையான பதிலை எதிர்பார்ப்பதில்லை.

சந்திரனில் முதலில் விளையாடிய விளையாட்டு கோல்ஃப். 1971 பெப்ரவரி 6-ம் திகதி அலன் ஷெப்பர்ட் என்னும் விண்வெளிப் பயணியால் அது விளையாடப்பட்டது.

உலகில் அதிகப் பாவிக்கப் படும் பெயர் மொஹமட்.

. It’s cool to be a daddy’s girl. It’s sad to be a mommy’s boy

விண்வெளிப் பயணி விண் வெளியில் கண்ணீர் விட முடியாது. ஈர்ப்பு விசையின்மையால் அது நடக்காது.

மனிதன் எழுதத் தொடங்க முன்னரே தனது சூழல் பற்றிய வரைபடத்தை(Map) வரையத் தொடங்கிவிட்டான்

ஒன்பது கிரகங்களிலும் அடர்த்தி கூடிய கிரகம் பூமி.

99%மான இந்தியப் பெரு வாகன
செலுத்துனர்களுக்கு (truck drivers) தெருக்களில் இருக்கும் அறிவிப்புகளை வாசிக்கத் தெரியாது.

பழைய தலையணை ஒன்றின் பாரத்தில் 25% அழுக்கும் கிருமிகளும்.

பழுதடையாத உணவும் பொருள் தேன்.

உலகில் முதல் முத்திரை வெளியிட்ட நாடு பிரித்தானியா. அதனால் அந்நாட்டு முத்திரைகளில் நாட்டின் பெயர் இருப்பதில்லை.

ஒரு தாய் யானை தனது குட்டியை இரண்டு ஆண்டுகள் வயிற்றில் வைத்திருக்கும்.

55% ஆண்கள் மட்டுமே கழிப்பறை சென்றபின் தம் கைகளை சரியாகக் கழுவுகிறார்கள்.

விசைப்பலகை(Keyboard) முதல் வரியில் உள்ள எழுத்துக்களை வைத்து அமைக்கக் கூடிய மிக நீண்ட ஆங்கிலச் சொல்
TYPEWRITER.

The word "checkmate" used in chess game, comes from the Persian phrase "Shah Mat," meaning "the king is dead".

The only 15-letter word that can be spelled without repeating a letter is "uncopyrightable".

1958இல் இரு பென்ஜி, லஸ்க்கா என்னுன் இரு எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

20% ஆண்களும் 10% பெண்களும் தங்கள் திருமண நாளை குறைந்தது ஒரு தடவையாவது தங்கள் திருமண நாளை மறந்து விடுகிறார்கள்.

கில்லேட் என்னும் சவர அலகு தயாரிப்பாளர்களின் கணிப்பின்படி 70% பெண்கள் தமது உடலில் உள்ள ரோமத்தை சவரம் செய்கிறார்கள்.

உயிருடன் இருக்கும் ஒரு மரத்தின் எடையில் 70% நீர்.

1936-ம் ஆண்டில் இருந்து 100பில்லியன் Tampax tampons(பெண்கள் அந்த நாலு நாட்கள் பாவிப்பவை) விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Wednesday 25 January 2012

மீண்டும் சீறும் ஈரான்

 ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு.

ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு.

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என்ற குற்றச் சாட்டை மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் முன்வைத்துள்ளன. அதை தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இதனால் ஆத்திர மடைந்த ஈரான் ஹோமஸ் நீரிணைய மூடிவிடப்போவதாக எச்சரிக்கிறது. இதைத்தொடர்ந்து ஈரானுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான முறுகல் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்ததும் ஈரான் அத் தடையால் அதிகப் பாதிப்படையப் போவது ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பிய ஒன்றியமே என்றும் அறிவித்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்க பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈரானிய அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். ஈரானிய ஏவுகணைத் தாயாரிப்புத் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து அண்மையில் ஏற்பட்டது. இவ்விபத்து அங்குள்ள கணனித் தொகுதிகளை ஊடுருவி மேற்கொள்ளப்பட்டிடுக்கலாம் என நம்பப்படுகிறது.

ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடிவிடுவேன் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா தனது கடற்படையை வளைகுடாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. பொருளாதாரத் தடையை விதித்த ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானின் எண்ணெய் ஏற்று மதியைத் தடை செய்ய தமது கடற்படைகளைப் பாவிக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி. அப்படி ஒரு தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொள்ளும் பட்சத்தில் ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடும். ஹோமஸ் நீரிணை மூடும் பட்சத்தில் உலக எண்ணை விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சவுதி அரேபியா ஈராக், காட்டார், பாஹ்ரெய்ன் ஆகிய நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் எரி பொருள் விநியோகம் பாதிப்புக்குள்ளாகும். இதனால் உலக எரிபொருள் விநியோகத்தில் 30% தடை படும். இது உலகு எங்கும் பெரும் பொருளாதாரச் சிக்கலைக் கொண்டுவரும்.

மேற்குலகக் கடற்பலமும் புலிகளின் உத்தியும்
ஹோமஸ் நீரிணையை மூடுவது தம்க்கு காப்பி குடிப்பது போல் இலகுவானது என்று ஈரானியக் கடற்படைத் தளபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஈரானின் மரபு வழிப் படையால் தம்முன் நின்று பிடிக்க முடியாது என்று மேற்குலக நாடுகள் உறுதியாக நம்புகிறது. ஆனால் அதன் கொரில்லாப்பாணி கடற்படைத் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதுதான் கேள்வி. ஈரான் தன்னிடம் இருக்கும் சிறிய விசைப் படகுகள் மூலமும் கண்ணிவெடிகள் மூலமும் இதைச் சாதிக்கலாம் என்று நம்புகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விசைப்படகுத் தொழில் நுட்பத்தை இந்தியா வாங்கியது போல் ஈரானும் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அவ்விசைப் படகுகளில் ஹிஸ்புல்லா இயக்கத் தற்கொடைப் போராளிகள் மூலம் மேற்குலகின் விமானம் தாங்கிக் கப்பல்களை Swarming Attack மூலம் அழிக்கலாம் என்று ஈரான் நம்புகிறது. Swarming Attack என்பது எதிரியை பலமுனைகளில் இருந்து தாக்குவது. ஒரு பெரிய கப்பலை நோக்கிப் பல விசைப் படகுகள் செல்லும் போது  அவற்றி ஒன்று அல்லது பல படகுகள் தற்கொலைப் படகுகளாக இருக்கும். அதில் ஒன்று பெரிய கப்பலைத் தாக்கி சேதம் விளைவித்து அதை மூழ்கச் செய்யும். இப்படிப்பட்ட தாக்குதல்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே அமரிக்கக் கப்பலகள் ஈரானியப் படையினர் வளைகுடாவில் கடற்கண்ணிகளை பரப்புகின்றனரா என்று கண்காணிக்கத் தொடங்கிவிட்டன.

ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டு மே ஹோமஸ் நீரிணையை மூட முடியும் அதை அமெரிக்கப்படைகளால் சில நாட்களில் மீண்டும் திறக்க முடியும். என அமெரிக்கப் படை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஈரானின் படை நிலைகள் மீது நேட்டோ விமானப் படைகள் முதலில் தாக்குதல் தொடுத்து அவற்றை நிர்மூலமாக்கும். ஈரானியப் படை நிலைகள் பற்றி ஏற்கனவே அமெரிக்கா தனது ஆளில்லா விமாங்கள் மூலம் தகவல்கள் திரட்டி வைத்துள்ளது. ஈரானைச் சுற்றவர உள்ள பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கப் படை நிலைகள் உள்ளது இந்து சமூத்திரத்தில் உள்ள கடற்படைப் பிரிவு பாரசீக வளைகுடாவிற்கு நகர்த்தப்படலாம். மேலும் இஸ்ரேல் ஈரானின் கணனிகளை ஊடுருவி அதன் படைத்துறை கட்டளைப் பணியகத்தைச் செயலிழக்கச் செய்யலாம். பின்னர் கடற்சண்டையும் ஆளில்லா விமானத் தாக்குதலும் தொடரலாம். இதனால் ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி ஒரு சில வாரங்களே தாக்குப் பிடிப்பார் என நேட்டோப் படையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் ஆறு மாதங்கள் நின்று பிடித்தார். லிபியப் போர் எரிபொருள் விநியாகத்தைப் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க வில்லை. ஆனால் வளைகுடாப் போர் பாதிக்கும். ஹோமஸ் நீரிணை மூடப்பட்டால் ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கான எண்ணை விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும். இது ஈரானுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தும். ஈரான் ஹோமஸ் நீரிணை முடப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஈரானிய நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் பாராளமன்றத் தேர்தலும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடக்க இருக்கிறது. பாராளமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஈரானின் சீர்திருத்தவாதிகள் அறிவித்திருக்கின்றனர். ஈரானில் மக்கள் கிளர்ந்து எழாமல் திசை திருப்பவே இந்த ஹோமஸ் நீரிணை நாடகம் ஆடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம்.

ஹோமஸ் நீரிணையை மூடுவது ஈரான் பொருளாதாரத் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது:

Tuesday 24 January 2012

மொழிபெயர்த்த நகைச்சுவைகள்

கண்ணும் கண்ணும் கதைத்தால் என்ன சொல்லும்?
எங்கள் இருவருக்கிடையில் ஒருத்தன் மூக்கை நுழைக்கிறான்

கைப்பேசிகள் எப்படித் திருமணம் செய்யும்?
Ringtone மாற்றி

உன்னிடம் இருக்கும்
பகிர்ந்து கொள்ள விரும்புவாய்
பகிர்ந்தால் அது உன்னிடம் இருக்காது
அது என்ன?
இரகசியம்

நாம்வெறுக்கிறோம் ஆனால் இழக்க விரும்பவில்லை: வேலை

ஏம்பா சட்னியில் ஒரு இலையான் இருக்கிறதே.
கவலைப் படாதீங்க சார். தோசையில் இருக்கும் சிலந்தி எப்படியும் அதைப் பிடித்துத் தின்றுவிடும்.

ஆங்கில இலக்கண வகுப்பில் ஆசிரியை: "He does not like girls". In this sentence who is "He"?
மாணவன் ஒருவனின் பதில்: "Gay"

தனது இரு மகன்களும் செய்யும் குளப்படி தாங்க முடியாமல் ஒரு தாய் அவர்களை பாதிரியாரிடம் அழைத்துச் சென்றார். பாதிரியார் முதலில் இளைய மகனைத் தன் அறைக்குள் கொண்டு போய் தனியாக கதைத்தார். முதலில் அவர் கேட்ட கேள்வி "கடவுள் எங்கே?" பையன் பதில் தெரியாமல் விழித்தான். தனது குரலை சற்று உயர்த்தி மீண்டும் "கடவுள் எங்கே?" என்றார். பையன் விழி பிதுங்கினான். இப்போது பாதிரியார் உரத்த குரலில் "கடவுள் எங்கே?" என்றார் பையன அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினான். அவனது அண்ணன் என்னடா நடந்தது என்று அவன் பின் ஓடினான். அதற்கு அவன் "அவங்கள் கடவுளைத் தொலைத்து விட்டாங்கள். நாங்கள் திருடியதாகச் சந்தேகிக்கிறாங்கள்" என்றான்.

வீடுகள் பெரிதாகின்றன
இல்லறம் சிறிதாகின்றது
மருத்துவம் வளர்கிறது
ஆரோக்கியம் குறைகிறது
பிரபஞ்சத்தில் எல்லை வரை அறியத் துடிக்கிறோம்
பக்கத்து வீட்டில் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை
மனிதர்கள் பெருகுகின்றனர்
மனிதாபிமானம் குறைகின்றது
நகைச்சுவகள் என்று மொக்கைகள் பல வருகின்றன
சிரிப்பு வருவதில்லை

எனக்கு என்று ஓரு இனியா வாழ்க்கை இருந்தது. நண்பர்களுடன் வெளியில் செல்வேன். அம்மா அப்பாவுடன் கோவில் செல்வேன். மாமா வீட்டிற்குச் சென்று அனபாகக் கதைத்துக் கொண்டிருப்பேன். புதிதாக வந்த படத்தைப் பற்றி பலருடன் கதைப்பேன். Facebook வந்ததில் இருந்து என் வாழ்க்கையே போச்சுது.

ஒரு ஆசிரியர் எனது அடுத்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் முதலில் வீடு போகலாம் என்றார். உடனே ஒரு பையன் தனது புத்தகத்தை வெளியே வீசினான். யாரடா புத்தகத்தை வெளியே வீசியது என்றார் ஆசிரியர் ஆத்திரத்துடன். நான் என்று சொல்லிவிட்டு அப்பையன் வகுப்பறையை விட்டு வெளியேறினான்.

பழக்கதோசம்
ஒரு அம்மா தனது மகளுடன் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கையில் சிறு விபத்து நடந்து மகளுக்கு காயம் ஏற்பட்டு விட்டது. அண்மையில் உள்ள மருத்துவ மனைக்கு மகளை தாய் கொண்டு சென்றார். அங்கு மகளின் விபரத்தை கேட்ட போது மகள் சொன்ன பதில் 18 வயது,  50kg, 5அடி 6அங்குலம். உடனே தாயார் குறுக்கிட்டு இது Facebookஇல்லை உண்மையைச் சொல்லு.

இவற்றை மொழிபெயர்த்தால் நல்லாயிருக்காது.
Teacher: What’s the chemical formula for water?
Sam: “HIJKLMNO”.
Teacher: What?!
Sam: Yesterday you said it’s H to O!


Apple and Blackberry should team up and make a phone called the Pie...

My alarm clock is clearly jealous of my amazing relationship with my bed.

If you dont say it in the streets dont say it in your tweets


Monday 23 January 2012

நகைச்சுவைக் கதை: இலண்டனில் சாப்பிட்ட இந்தியனும் இலங்கையனும் பாக்கிஸ்த்தானியும்

இலண்டன் பல்கலைக் கழகம் ஒன்றில் கல்வி பயிலும் இலங்கை இந்திய பாக்கிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஒரு அறையில் தங்கி இருந்தனர். இலங்கை மாணவர் சுரேன் தனது மாமனாரின் எரிப் பொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பகுதி நேரம் வேலை செய்தான். இந்திய மாணவன் அனில் தனது தகப்பனாரின் ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவியின் சித்தாப்பாவின் மருகனின் நண்பரின் மூலைக் கடை ஒன்றில் பகுதி நேர வேலை செய்து வந்தான். பாக்க்கிஸ்தான் மாணவன் அன்வர் ஒரு ஈரானிய இறைச்சிக் கடையில் பகுதி நேர வேலை செய்து வந்தான். இவர்கள் உழைக்கும் பணத்துடன் சிக்கனமாகச் சீவித்து வந்தனர். சுரேன் அவ்வப்போது தந்தைக்குப் பணம் அனுப்புவான். தந்தை அதில் ஊரில் கோவிலுக்கு தன் பையன் நல்லாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அபிசேகம் செய்வார். அனில் தனது தகப்பனுக்கு அனுப்பும் பணத்தை அவர் இந்தியாவில் வட்டிக்குக் கடன் கொடுப்பார். அனவர் தன் பணத்தில் மிச்சம் பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவான்.

சுரேனுக்கும் அனிலுக்கும் அன்வருக்கும் இலண்டனில் உள்ள உயர்தர உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். ஒரு நாள் அதை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று திட்டமிட்டு நல்ல பகட்டான ஆடைகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு ஆடம்பர இத்தாலிய உணவகத்திற்கு ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சாப்பிடுவது என்று திட்ட மிட்டனர். முதலில் இலங்கை மாணவன் சுரேன் உணவகத்திற்குள் போய் பஸ்ராவும் கோழியும் நல்ல ஐஸ் கிரீமும் சாப்பிட்டு விட்டு கடைசியில் பில்லை கொண்டு வந்து அவன் முன் வைக்க தான் ஏற்கனவே பில்லுக்கான பணத்தைச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். ஒரு கனவான் போல் ஆடை உடுத்திய பையனுடன் தகராறு போட்டு உணவகத்தில் உள்ள மற்ற கனவான் வாடிக்கையாளர்கள் அமைதியாக உண்டு கொண்டிருப்பதைக் ஏன் கெடுப்பான் என்று நான் மறந்து விட்டேன் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டு சுரேனை குட் நைட் சொல்லி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

அடுத்து உணவகத்திற்குச் சென்ற இந்திய மாணவன் அனில் அங்குள்ள சிறந்த சைவ உணவுகளைச் சாப்பிட்டு உயர்தர மது பானங்களையும் அருந்திவிட்டு பில் வரும்போது சுரேன் சொன்னமாதிரிச் சொல்லி அவனுக்கு நடந்த மரியாதையை தானும் பெற்றுக் கொண்டு வெளியில் வந்து விட்டான்.

அடுத்து உணவகத்திற்குள் சென்ற பாக்கிஸ்தானிய மாணவன் அனவர் அங்குள்ள சகல உணவுகளையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டினான். எல்லாம் முடிந்தவுடன் அவனிடம் உணவக முகாமையாளர் சென்று உங்களுக்கு முன்னர் இரு ஆசிய மாணவர்கள் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கொடுத்தோம் என்று சொன்னார்கள்.....என்று சொல்ல அன்வர் இடைமறித்து "I dont want to hear the story of those bloody f*****g Indian and Srilankan.....bring my balance என்றான். (அந்த இந்தியனதும் இலங்கையனதும் கதை எனக்கு வேண்டாம் எனது மிகுதிப் பணத்தைக் கொண்டுவா என்றான்.)

Sunday 22 January 2012

இன அழிப்பின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்து வைத்த அப்துல் கலாம்

2008ம் ஆண்டிலும் 2009ம் ஆண்டிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை இலங்கையும் இந்தியாவும் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் பல உலக அறிஞர்கள் ஒன்று கூடிக் இந்த இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையும் பன்னாட்டு சமூகமும் இணைந்து தடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். அந்த இன அழிப்பின் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணு மற்றும் ஏவுகணை விஞ்ஞானியும்  இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவருமான ஏ பி ஜே அப்துல் கலாம் தான் இப்போது இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தைப் பற்றி தமிழ் விரோதப் பார்ப்பனப் பத்திரிகை இந்து இப்படிக் கூறுகிறது: The former President, A.P.J. Abdul Kalam, will embark on a mission to promote peace, harmony and prosperity for all societal constituents in Sri Lanka and propagate an agenda for an inclusively developed nation.
அப்துல் கலாமின் பயணம் ஒரு நோயாளி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் போது கண்டும் காணாதது போல் இருந்து விட்டு பின்னர் நோயாளி இறந்து புதைத்த பின்னர் அவனது சமாதியை அழகுபடுத்த வந்த மருத்தவரின் செயல் போல் இருக்கிறது.

கடந்த பல மாதங்களாக பல பெரியார் கொள்கை சார் ஊடகங்கள் அப்துல் கலாம் இப்போது பார்ப்பனரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப செயற்படுகிறார் என்று எழுதி வந்துள்ளன. அப்துல் கலாமின் இலங்கைப் பயணமும் அதற்கு பார்ப்பன இந்துப் பத்திரிகை கொடுக்கும் முக்கியத்துவமும் அதை உறுதி செய்கின்றன.

மஹிந்த ராஜபக்சவின் திட்டத்தில் ஒன்று தமிழர்களின் அரசியல் பிரச்சனையை ஒதுக்கி விட்டு இப்போது அவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி என்ற மாயைக்குள் மாட்டி தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதே. இதனால்தான் அப்துல் கலாமின் நிகழ்ச்சியின் நோக்கங்களாக peace, harmony and prosperity அமைதி, ஒற்றுமை, செழுமை இருக்கின்றன அதிகாரப் பரவலாக்கம் பற்றி எதுவுமில்லை. இதற்குத் துணை போக அப்துல் கலாம் தமிழின அழிப்புக்குத் துணை போகும் பார்ப்பன சக்திகளால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்துல் கலாம் தமிழ் விரோதப் பார்ப்பன இந்துப் பத்திரிகைக்கு இலங்கையில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் ஒரு பேட்டியை வழங்கியுள்ளார். அவர் அப்பேட்டியில் அபிவிருத்தி, வளப் பகிர்வு, ஒற்றுமை போன்ற மஹிந்த ராஜபக்ச அடிக்கடி பாவிக்கும் வார்த்தைகளை கவனமாக கையாண்டுள்ளார். ஆனால் அதிகாரப் பகிர்வைப் பற்றி வாய் திறக்கவில்லை.

தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை மீறிய கலாம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தீர்மானத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் அப்துல் கலாம இலங்கை சென்றது மொத்த தமிழினத்தையுமே அவமதிக்கும் செயல்.

தமிழர் சிங்களம் படித்தால் நன்மை கிடைக்குமா?
1977-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடாளாவிய ரீதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பல தமிழர்கள் கொன்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் கொள்ளையிடப்பட்ட போது குருநாகல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ பேசத் தெரியாத சிங்களம் மட்டும் பேசத் தெரிந்த தமிழர்கள் அங்கு தாக்கப்பட்டு விரட்டிஅடிக்கப்பட்டனர். தமிழர்கள் சிங்களத்தையும் சிங்களவர்கள் தமிழையும் படித்தால் இலங்கையில் இனப் பிரச்சனை இருக்காது என்று முன்பு அடிக்கடி கூறிவந்த பிரபல இடது சாரி அரசியல்வாதியான திரு வி பொன்னம்பலம் அவர்கள் இந்தக் குருநாகல் மாவட்ட சம்பவத்தின் பின்னர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். அதை அவர பலதடவைகள் தெரிவித்திருந்தனர். பின்னர் சன்சோனி ஆணைக் குழுவிலும் இலைங்கை இனப்பிரச்சனை மொழிப் பிரச்சனைக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தைப் பல முன்னணி அரசியல்வாதிகள் முன் வைத்தனர்.


ஏன் இந்த மும்மொழித்திட்டம்?
தமிழ் மக்களை சிங்களம் பேசவத்து அவர்களை தமிழைப் பேசாமல் தடுக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் நீண்ட நாள் கனவு. ஏற்கனவே வடக்குக் கிழக்கில் இருக்கும் சிங்களப் படையினர் சிங்களத்தை தமிழர்களுக்கு போதிக்கத் தொடங்கிவிட்டனர். அதை இனி அரசு முறையாகாவும் திட்டமிட்ட முறையிலும் செய்யவே மும்மொழித்திட்டம என்ற போர்வையில் தமிழர்களுக்கு சிங்களம் போதிக்க சிங்கள ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்.  மேலும்சிங்கள ஆசிரியர்கள் என்ற போர்வையில் மேலும் பல சிங்களவர்களை தமிழர் தாயகத்தில் குடியேற்றவும் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். இன அழிப்பு என்ற நஞ்சுக் கேக்க்கிறகு மும்மொழித்திட்டம் எனற ஐஸிங்கை சிங்களம் பூசியுள்ளது. அந்த ஐஸிங்கிற்கு மேல் வைக்கப் பட்ட அழகுப் பூதான் அப்துல் கலாம். தமிழ்மக்கள் அந்த கேக்கை உண்பார்களா? தமிழர்கள் சிங்களமும் சிங்களவர்கள் தமிழும் படித்த பின்னால் இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டுமே ஆக்கப்படுவது இலகுவாக இருக்கும். சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்பின் அடுத்த திட்டமான மும்மொழித்திட்டத்தை அப்துல் கலாம் ஆரம்பித்துள்ளார்.

இன்னும் ஒரு மொழியைப் படிப்பது எவ்வளவோ சிறப்பான ஒன்று.
"You live a new life for every new language you speak.  If you know only one language, you live only once."  - Czech proverb. ஒரு மொழி மட்டும் தெரிந்திருந்தால் நீ ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறாய். நீ தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு புது மொழிகளாலும் நீ ஒரு புது வாழ்க்கையை வாழ்கிறாய். என்பது முற்றிலும் உண்மை. ஆனால் உன்னை அழிக்கவே இங்கு உன் மீது ஒரு மொழி திணிக்கப்படும் செயல் கடந்த 55 ஆண்டுகளாக நடக்கிறது என்பதைத் தமிழா நீ உணர்ந்து கொள். அப்துல் கலாமை ஒரு அறிஞனாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ மட்டும் பாராமல் ஒரு பார்ப்பனச் சதியின் ஒரு அம்சமாகப்பார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...