Tuesday 15 September 2009

கவிழ்ந்தார் மஹிந்த ராஜபக்சே


மே மாதம் 17ந்திகதிக்கு முன்னர் இரு மலையாளிகள் இலங்கைக்கு அடிக்கடி வந்து போயினர். அவர்கள் மஹிந்த ராஜபக்சேவிற்கு தமிழர்களைக் கொன்றொளிப்பது பற்றி ஆலோசனை வழங்கிவிட்டு பின்னர் அறிக்கை விடுவார்கள் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் இராணுவத் தீர்வு அல்ல என்று. இப்போதும் வேறு சில மலையாளிகள் இலங்கைக்கு வந்து போகிறார்கள். இவர்கள் வருவது ராஜபக்சேவிற்கு நடக்கவிருக்கும் சனிப் பெயர்ச்சி பற்றி அறிவுரை வழங்குவதற்கு.

சனிப்பெயர்ச்சியை இட்டு மஹிந்த ராஜபக்சே பயந்து குழம்பியிருக்கும் வேளையில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது செயலகமான அலரி மாளிகையில் இன்று நடந்த தேசிய சாகித்திய விழாவில் அவர் குத்து விளக்கேற்றிய பின்னர் தனது இருக்கையில் அமரச்சென்ற வேளை அவரது நாற்காலி கவிழ்ந்ததால் அவர் வீழ்ந்தார். ஊடகச் சுதந்திரம் நிறந்த இலங்கையில் இக்காட்சியை பதிவு செய்த அனைவரது ஒளிப்பதிவுக் கருவிகளும் பறிமுதல் செய்யப் பட்டதாம். இது தொடர்பான செய்திகள் பல கொழும்பு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப் பட்டுள்ளன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...