Saturday 13 December 2008

நோயும் நீ மருந்தும் நீ


ஒளி மிளிர் விழி வழி வரு மொழி
என் உயிரழி கொடு வாளி.
.....................
இதழ் கடை வழி அமுதம்
மீள் தரு மொரு வாழ்வு.
..................
நினைவினில் நிதம் நடம் புரியெழில்
துயிலழி ஊழித்தீ.
.................
ஐங்கணை தொடுமவன் தருவலி
போக்கினை என எனையணை.
.......................
நிமலனை நிதம் நினை அடியவர்க்கிணை
யென் மனம் பொடிப்படும் முன்னகையால்.
.................
நின் மலர்க் கரம்பட உரம் பெறும்
என் உடலொடு ஆவி.
.................
மெல்லுடல் பட வரும் கவின்
தரும் ஒரு கவி கோடி
..............
கனவெது நிஜமெது
துயிலெது விழிப்பெது
மயங்குது என் மனம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...