நீ அனுப்பிய குறுந்தகவல்கள்
உள் பெட்டகத்தில் அழிந்துவிட்டன
இணந்திருந்து எடுத்த நிழற்படங்களும்
அழிந்தே போய் விட்டன
தெய்வீகமாய் இசைத்த உன் குரல்களை
தென்றல் வந்து அழித்துவிட்டது
கைகோத்து நாம் நடந்த காற் தடங்களை
கடலலைகள் அழித்துவிட்டன.
என் உதட்டில் உன் உதட்டின் ஈரத்தை
காற்றலைகள் அழித்துவிட்டன.
உடல்களின் உல்லாச உரசல்களை
உணர்வலைகளாய் அழிந்த்துவிட்டன.
என் நெஞ்சத்தில் உன் நினைவுகளை
எது வந்து அழிக்கும்....
No comments:
Post a Comment