காதல் என்பது பொய்யான மோச வலை
குடும்பம் என்பது பொய்யான பாச வலை
உறவு என்பது பொய்யான நேச வலை
வாழ்க்கை என்பதே பொய்யூரில்
நாம் பெற்ற வதிவிட உரிமை
எருவாய்ப் போகும் மெய்யை
பொய்யென்றுணராமல்
கனிவாய் என கருவாய்
மோகம் கொண்டு
நிலை இழப்போமா
கண்ணில் தெரிவதும் பொய்
கண்கள் சொல்வதும் பொய்
மண்ணாய் முடிவில்
மறைவோம் என்பதே மெய்
உடலும் பொய் உறவும் பொய்
சொல்லும் பொய் செயலும் பொய்
உணவும் பொய் நினைவும் பொய்
இறப்போம் நாம் என்பதே மெய்
பொய்யினை மெய்யென்று அலையாமல்
கையினை மெய்யாய் மெய்க்காக நீட்டி
மெய்யினை மெய்யறிவில் நிறுத்தி
மெய்வழி செல்லும் நாள் என்னாளோ

No comments:
Post a Comment