Saturday 24 October 2009

இலங்கையில் சீனா புது விதமாகக் காய் நகர்த்துகிறதா?


சீனா தனது இலங்கையுடனான உறவை நீண்டகால அடிப்படையில் நிதானமாக வளர்த்து வருகிறது. இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது தனது உறவிலோ அல்லது உதவிகளிலோ சிறிதளவும் மாற்றம் காட்டுவதில்லை. அது மட்டுமல்ல சிங்களத் தேசியவாதிகளின் மிகச்சிறந்த நண்பனாகச் சீனாவே திகழ்கிறது. இந்த அக்டோபர் மாதம் இந்தியாவிலிருந்து வந்த சில அறிக்கைகள் இந்தியாவின் சில நடவடிக்கைகள் சீனாவைத் திகைக்க வைத்திருக்கும்.

இலங்கையில் இராணுவப் புரட்சி நடந்தால் இந்தியா அதை எப்படி அணுகும் என்பது பற்றி ஒரு தகவல் டில்லியில் இருந்தும் கொழும்பில் இருந்தும் வெளிவந்தது. பொதுவாக இப்படிப் பட்ட திட்டங்களோ எண்ணங்களோ பகிரங்கப் படுத்துவதில்லை. ஆனால் இது ஏன் பகிரங்கமாக அறிவிக்கப் பட்டது? இலங்கை தொடர்பான சீனாவின் தெரிவுகளில் ஒன்று சீனாசார்பு இராணுவ ஆட்சியை மியன்மார் பாணியில் இலங்கையிலும் ஏற்படுத்துவது என்று கருதப்படுகிறது. அதன் மூலம் இலங்கையில் தனது மிகப் பெறுமதி மிக்க அம்பாந்தோட்டைத் திட்டத்தை பாதுகாக்க முடியும் என்று சீனாகருதலாம். அம்பாந்தோட்டை முதலீட்டின் பின் இலங்கையில் தனக்கு எதிரான எந்த ஒரு அரசும் இலங்கையில் இருக்காமல் பார்த்துக் கொள்வது சீனாவின் முக்கிய பணி.

சர்வதேச நாணய நிதியம் இரண்டாவது பகுதி கடனுதவியை வழங்காவிடில் அந்தக் குறையை இந்தியா நிவர்த்தி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவில் இருந்து ஒரு அறிக்கை வந்தது. இது இலங்கைக்கு உதவுவதில் சீனாவை தான் முந்திக்கொள்ள இந்தியா எடுத்த முன்னேற்பாட்டு நடவடிக்கை. இதுவும் சீனாவை சிந்திக்க வைத்திருக்கும்.

அடுத்து இலங்கைக்கு இப்போது பெரும் தலையிடியாக இருப்பது வன்னி முகாம்கள் பற்றிய சர்வதேச அபிப்பிராயம். அதற்கு உதவி செய்ய இந்தியாவே முன் வந்தது. இதற்காக ஒரு பாராளமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அந்தப் பாராளமன்றக் குழு தனது அறிக்கையை டெல்லியில் சமர்க்கும் முன்பே இலங்கையின் முகாம்கள் தொடர்பாக தாம் முழுத்திருப்தி அடைந்துள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டது. முகாம்கள் தொடர்பாக உலக அபிப்பிராயத்தை மாற்ற சீனாவால் எதுவும் செய்யவில்லை. உண்மையில் மியன்மாரைப் போல் இலங்கையும் மேற்குலக நாடுகளின் எதிரியாக மாறுவதை சீனா விரும்பலாம்.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா சில மாற்று நடவடிக்கைகளை மேற் கொள்ளும். அதில் ஒன்று ஈழத் தமிழர்கள் சார்பாக மூன்றாம் தரப்பினூடாக சீனா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அந்த மூன்றாம் தரப்பினூடாக சீனா ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் போவதாக இலங்கையை மிரட்டி இலங்கையை இந்தியா நோக்கி சாய்வதை தடுக்க முயல்கிறதா?

இவ்வளவு காலமும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாத இந்திய நக்ஸலைட் இயக்கம் திடீரென்று இலங்கைத் தமிழர்களுக்கு தாம் ஆயுதம் கொடுத்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏன் அறிவித்தது?

Friday 23 October 2009

பிரபாகரனும் இரு சோதிடர்களும்.


வருகின்ற மாதத்தில் பிரபாகரனுக்கு முக்கியமான மூன்று தினங்கள் உள்ளன. 25-ம் திகதி பிரபாகரனுக்கு எதிரான ராஜீவ் காந்தி கொலை வழக்கு சென்னை நீதிமன்றத்திற்கு மீண்டும் வருகிறது. 26-ம் திகதி அவரது பிறந்த தினம். 27-ம் திகதி விடுதலைப் புலிகளின் முக்கிய தினமான மாவிரர் தினம். இப்போது பிரித்தானியா வாழ் தமிழர்கள் பலர் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். அல்லது அவரது இறப்பை நம்ப மறுக்கிறார்கள். இம்முறை மாவீரர் தினத்தன்று பிரபாகரன் படத்துக்கு மாலை அணிவிக்கப் படுமா? அப்படி நடப்பதற்கான எந்த அறிகுறியும் இலண்டனில் இல்லை. அக்டோபர் 17-ம் திகதி இலண்டனில் நடந்த் ஊர்வலத்தில் புலிக் கொடிகள் பறந்தன. ஆனால் வழமையாக நடப்பது போல் பிரபாகரனின் படம் கொண்டு வரப் படவில்லை. இது ஊர்வல ஏற்ப்பாட்டாளர்கள் எடுத்த முடிவாக இருக்க வேண்டும். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விடப் பெரிய கேள்வி அவர் இருந்தால் எப்போது வருவார். இது பற்றி இரு சோதிடர்களின் கூற்றைப் பார்ப்போம்.

ஒரு சோதிடரின் கணிப்பு. இவ்வாண்டு மே மாதம் பிரபாகரனுக்கு மூன்றாம் இடத்தில் வியாழன் இருந்தது. மூன்றிலே வியாழன் இருப்பதற்கு உதாரணமாக துரியோதனை எடுத்துக் காட்டுவார்கள் சோதிடர்கள். கடைசியில் துரியோதனன் நிலை:
எண்ணிய எண்ணமெங்கே இலக்கண குமாரனெங்கே
கர்ணனும் தேருமெங்கே பத்து அக்ரோணி சேனையெங்கே


இது போலவேதான் பிரபாகரனுக்கும்
எண்ணிய எண்ணமெங்கே சால்ஸ் அன்ரனி எங்கே
பொட்டும் புலனாய்வுத் துறையும் எங்கே
சூசையும் கடற்ப்படையுமெங்கே

என்னும் படியானது!

போரில் துரியோதனன் மாண்டது போல பிரபாகரனும் மாண்டு விட்டார். இப்படி முடித்தார் முதலாவது சோதிடர்.

இன்னொரு சோதிடர் வேறு விதமாகச் சொல்கிறார். மூன்றாம் இடத்தில் வியாழன் இருக்கும் போது இறப்பதானால் 12 வயதுக்கு மேல் எவரும் உயிர் வாழ முடியாது. துரியோதனனுக்கு நடந்தது போல் சில பிரபாகரனுக்கு நடந்தது உண்மையே. துரியோதனன் ஆயுள் பலம் முடிவடைந்த நிலையிலேயே அவன் இறந்தான். ஆனால் பிரபாகரனின் ஆயுட்பலம் வேறு. ஆயுள் காரகனாகிய சனியே அவரது இலக்கினாதிபதியுமாகிறார். அது மட்டுமல்ல அவரது சாதகத்தில் சனி உச்சம். அத்துடன் பிரபாகனின் ஆயுள்ஸ்தானாதிபதி புதன் ஆயுள்காரகன் சனியுடன் கூடி சுக்கிரன் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார். அதனால் அவருக்கு திர்க்காயுசு. தசா புத்திப் படி பிரபாகரனுக்கு மே 17-ம் திகதி வியாழனுடைய அந்தரம் நடந்து கொண்டிருந்தது வியாழனும் அவருக்கு உச்சம். அதனால் மே 17-ம் திகதி அவருக்கு மரணம் சம்பவத்திருக்க வாய்ப்பே இல்லை.

மூன்றாம் வீட்டு வியாழனால் தனது படை மாண்டவுடன் துரியோதனன் நீருக்கடியில் மறைந்திருந்து சிரஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து மாண்ட படைகளை மீண்டெழச் செய்ய முயற்ச்சித்தான். அவனது மந்திரத்தால் போர்முனையில் விழுந்து கிடந்த சடலங்கள் சற்று அசையத் தொடங்கின. இதை உணர்ந்த கண்ணன் பாண்டவர்களை அவன் மந்திரம் உச்சாடனம் செய்யும் இடத்திற்கு அழத்துச் சென்று துரியோதனனை வெளியே வரச்செய்ய அவனுக்கு கோபம் ஊட்டும் படி போருக்கு அறை கூவல் விடுக்கும் படி வீமனைப் பணித்தான். வீமனும் அப்படியே செய்தான். துரியோதனன் வீணாக உணர்ச்சிவசப்பட்டு வெளியே வந்து சண்டையிட்டான். கண்ணன் சொன்னபடி போர் விதிகளுக்கு மாறாக அவனை பிறப்புறுப்பில் அடித்து வீமன் கொன்றான்.

இப்போது மறைந்திருக்கும் பிரபாகரனும் தொடர்ந்து மறைந்திருந்து தனது படையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அவசரப் பட்டு வரக்கூடாது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அவருக்கு ஏழரைச் சனி தொடங்க விருக்கிறது. அது அவருக்கு மரணச்சனி. அவர் பிறக்கும் போதே ஏழரைச்சனி நடந்ததால் 60 வயதிற்கு முன்னே அவருக்கு இந்த மரணச் சனி. அதில் இருந்து அவர் தப்பி பின்னர் நீண்ட ஆயுளுடனும் கீர்த்தியுடனும் வாழ்வார். ஆகவே பிரபாகரன் இன்னும் 10 ஆண்டுகள் மறைந்திருப்பதே நல்லது. இப்படி முடித்தார் இரண்டாவது சோதிடர்.

கொழும்பில் வாழ்ந்த பகுத்தறிவாளர் ஏபிரகாம் கோவூர் அவர்கள் அடிக்கடி கூறுவாராம் உங்கள் ஜாதகத்தை இரு சோதிடர்களிடம் கொடுத்துப் பலன் கேளுங்கள் அவர்கள் இருவரும் வேறு பட்ட பலன்களையே சொல்லுவார்கள். ஏபிரகாம் கோவூர் அவர்கள் பகுத்தறிவுச் சங்கத்தை ஆரப்பித்து ஒருகையில் மதுக் கிண்ணத்துடனும் ஒரு கையில் சுருட்டுடனும் ஒருவரைப் பறவைக்காவடி எடுக்க வைத்தவர். பன்றி இறைச்சி தின்றுவிட்டு ஒருவரை கதிர்காமத்தில் தீமிதிக்க வைத்தவர். கொழும்பு பாமன் கடையில் வாழ்ந்த மலையாளியான இவரது வீடு கூட 1983-ம் ஆண்டு நடந்த இனக்கொலையின் போது தீக்கிரையாக்கப் பட்டது.

Thursday 22 October 2009

ஐரோப்பிய ஒன்றியத்தின் உப்புச் சப்பில்லாத் தீர்மானம்.


ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றம் இலங்கை தொடர்பாக பின்வரும் ஒரு உப்புச் சப்பில்லாத் தீர்மானத்தை இன்று நிறைவேற்றியுள்ளது:

MEPs deplore the fact that over 250,000 Tamil civilians are still held in camps, contrary to undertakings given by the Colombo government. The resolution asks that their return be organised and that humanitarian organisations be given free access to the camps in order to provide the necessary humanitarian assistance. Tamil leaders must commit themselves to a political settlement and renounce terrorism and violence once and for all. The government must respect human rights in the conduct of trials of LTTE members, says the resolution.The Sri Lankan government must cease its repression of the media in the name of its anti-terrorist legislation, which must be overhauled, and press freedom must be recognised, stress MEPs. The Sri Lankan government must also put more effort into clearing minefields, which are serious obstacle to reconstruction and economic recovery in this south-east Asian country. Members call on the government to take measures to comply with the Ottawa Treaty (Convention on the Prohibition of the Use, Stockpiling, Production and Transfer of Anti-Personnel Mines and on their Destruction).

  • ஐரோப்பியப் பாராளமன்ற உறுப்பினர்கள் இலங்கை வாக்குறிதி அளித்தபடி முகாம்களில் உள்ள 250,000இற்குமேற்பட்டவர்களை விடுவிக்காததை இட்டுக் கவலை அடைகிறார்களாம். (ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?)
  • தீர்மானம் உடனடியாகவோ அல்லது விரைவாகவோ முகாமில் உள்ளவர்களை விடுவிக்கும் படி கோரவில்லை. விடுவிப்பதற்கு ஒழுங்கு செய்யும்படி (மட்டும்) கோருகிறது. (நீங்கள் கேட்காத படியால்தான் இதுவரை காலமும் விடுவிக்கவில்லை. இனி விடுவிப்பார்கள்!)
  • தொண்டு நிறுவனங்களுக்கு முகாம்களிற்கு சுதந்திரமாக சென்று சேவை செய்ய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமாம். ( எத்தனை நாளாக எத்தனை பேர் இதைச் சொல்கிறார்கள்?).
  • தமிழ்த் தலைவர்கள் அரசியல் தீர்வுக்குத் தம்மை ஈடுபடுத்த வேண்டுமாம். (எந்தத் தமிழ்த் தலைவன் என்று சொன்னான் தான் அரசியல் தீர்வுக்குத் தயாரரில்லை என்று? என்று தீர்வு முன் வைக்கப் பட்டது? வைக்கப்பட்ட தீர்வுகள் நிறைவேற்றப் பட்டதா? -Unlucky 13th Amendment to the constitution)
  • தமிழ்த் தலைவர்கள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டுமாம். (பயங்கரமாக இரு நாட்ளில் 60,000 பேர்களைக் கொன்றும் உயிருடனும் புதைக்கலாமா? அது பயங்கரவாதம் இல்லையா?)
  • இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை நீக்க வேண்டுமாம். ஊடகங்களைச் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டுமாம். இலங்கை அரசு நிலக்கண்ணிகளை அகற்ற வேண்டுமாம். (புலிகள் புதைத்த கண்ணிவெடிகளுக்கான வரைபடம் உண்டு. கண்டபடி கன்னா பின்னாவென்று கண்ணிவெடிகளைப் புதைத்தது யார்? )
  • இலங்கை அரசை ஒட்டாவா உடன்படிக்கையை மதித்து நடக்கும்படி தாங்கள் கேட்டுக் கொள்கின்றனராம். (நீங்கள் கேட்டதால் உடனடியாக ராஜபக்சே அரசு நீங்கள் கேட்டபடி எல்லா வற்றையும் செய்யப்போகிறது.)
நல்லகாலம் இந்தியாவைப் போல் கோடி கீடியாகப் பணம் தருகிறோம் விடுவியுங்கள் என்று கூறவில்லை!!!

இந்திய எம்.பிக்களும் இரு செருப்பு வியாபாரிகளும்


இரு பாதணி உற்பத்தி நிறுவனங்கள் தமது சந்தைப் படுத்தல் ஆய்வாளர்களை வளர்ச்சியடையாத நாடொன்றிற்கு அங்கு பாதணிகள் விற்பனைக்கான வாய்ப்பு எப்படி இருக்கின்றது என்று ஆய்வு செய்ய அனுப்பின. இரு ஆய்வாளர்களும் தனித்தனியே அந்நாட்டிற்கு சென்றனர். அந்நாட்டில் எவர் கால்களிலும் காலணிகள் இருக்கவில்லை.
  • ஒருவர் தயாரித்த அறிக்கை: இங்கு எவரிடமும் பாதணி அணியும் பழக்கம் இல்லை. இங்கு பாதணிகள் விற்க முடியாது.
  • மற்றவர் தயாரித்த அறிக்கை: இங்கு எவரிடமும் பாதணிகள் இல்லை நிறைய பாதணிகள் இங்கு விற்கலாம்.
இந்த மாதிரித்தான் இலங்கையின் வன்னி முகாம்களைப் பார்வையிட வந்த பிரித்தானியாவின் பிரதிஅமைச்சரும் இந்தியப் பாராளமன்ற உறுப்பினரகளும் நடந்து கொண்டனர்.
  • பிரித்தானிய பிரதி அமைச்சர்: மக்கள் சட்ட விரோதமாக முட்கம்பி வேலிகளுக்குப் பின் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
  • இந்திய எம்பி: முகாமில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக முட் கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன்.
  • பிரித்தானிய அரசு: சட்ட விரோத முகாம்களைப் பராமரிக்க பிரித்தானியாவால் நிதி வழங்க முடியாது. பிரித்தானியா தனது நிது உதவிகளை நிறுத்துகிறது.
  • இந்திய அரசு:
  • இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவினை பேணி பேச்சுக்கள் நடத்தப்படுவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.


  • இந்திய நாடாளுமன்ற குழுவின் விஜயத்தின் பின்னர், இடம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்துக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளமையை அவர் இதன்போதுசுட்டிக்காட்டியுள்ளார்.

  • இந்த நிதி, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அமைச்சர் ராஜபக்சேயிற்கு பொன்னாடை போர்த்தி மகிழவில்லை. அப்படிச் செய்தால் தனது நாட்டில் வாழும் தமிழர்கள் மனதைப் புண்படுத்தும் என்று எண்ணியிருக்கலாம். இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்கள் பெரும் முக மலர்ச்சியுடன் ராஜபக்சேயிற்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர். அவர்கள் தமது நாட்டில் வாழும் தமிழர்களை இழிச்ச வாயர்கள் என்று எண்ணியிருக்கலாம்.

இந்திய நாடகத்தின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களை ஐக்கியநாடுகள் சபை இலங்கை முகாம்களில் உள்ள சிறார்கள் தொடர்பாக அனுப்பவிருப்பதாக தகவல்கள் ராதிகா குமாரசாமிமூலமாக முன்கூட்டியே அறிந்து கொண்டதாகாச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராதிகா குமாரசாமி முன்னாள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சாம் கதிர்காமரின் உறவினர். ஐநாவின் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பானவர். அவரின் பிரதிநிதியாகவே மேஜர் ஜெனெரல் கமோட் இலங்கை செல்லவிருப்பதாக அறிவிக்கப் பட்டது. மேஜர் ஜெனெரல் கமோட் ஒரு இராணுவ நிபுணர். அவர் வருகையின் பின் ஐநாவின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருக்கும். மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய். இராணுவ நடவடிக்கை தொடருமா என இலங்கை அஞ்சியது. மேற்குலக நாடுகள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுமா? இந்தக் கேள்விகளால் குழம்பிய இலங்கை மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களின் பயணத்தை வேண்டுமென்றே இழுத்தடித்து விட்டு இந்தியாவின் துணையை நாடியது. இந்தியா ப. சிதம்பரத்தையும் கலைஞரையும் வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றியது. அதுதான் இந்திய நாடாளமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம். இந்தியா வன்னி முகாம்களுக்கு நிதிதான் தேவை. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் அல்ல என்ற அபிப்பிராயத்தை சர்வதேச் அரங்கில் ஏற்படுத்த முயல்கிறது.

ஐநா அதிபரின் இன்னொரு கபடம் அம்பலம்.


சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அதிபர் பான் கீ மூன் அவர்கள் இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களைச் சந்தித்தார். இதை பான் கீ மூன் அவர்கள் வழமைக்கு மாறாக தனது பொது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இருக்கவில்லை. அந்த சந்திப்பு முடிந்த பின்னும் அதுபற்றி வெளிவிடவில்லை. பின்னர் இந்த மறைப்பு பற்றி பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவப் பட்டபோது சந்திப்புத் தொடர்பான அறிக்கை பத்திரிகையாளர்களிடம் தரப்படும் என்றார். ஆனால் ஏன் பான் கீ மூனின் பொது நிகழ்ச்சி நிரலில் இச் சந்திப்பு மறைக்கப் பட்டது என்ற வினா மீண்டும் எழுப்பப்பட்ட போது பொது நிகழ்ச்சி நிரலில் அது இடம் பெற்றிருந்தது என்று பதிலளிக்கப் பட்டது. ஆனால் உண்மையில் அப்படி இடம் பெற்றிருக்கவில்லை. இது இன்னொரு கபடம்.
ஐநா தரப்பில் தெரிவித்ததன் படி பான் கீ மூன் - மஹிந்த சமரசிங்க சந்திப்பில் கலந்துரையாடப் பட்டவை:
  • மனிதாபிமானம் மனித உரிமைகள் சம்பந்தப் பட்ட விடயங்கள்.
  • அகதிகள் மீள் குடியேற்றம்.
  • அகதிகளின் சுதந்திரமான நடமாட்டம்.
  • ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கையைப் பாதுகாக்க முடியாத படி இலங்கை தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொண்டுவிட்டது என்று இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பாகத் தெரிவிக்கப் பட்டதாம்.

இலங்கையின் மதிப்பை பாதுகாப்பதுதான் ஐநாவின் வேலையா?

Wednesday 21 October 2009

GSP+ சலுகை இரத்து எப்படி இலங்கையைப் பாதிக்கும்



இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்தகச் சலுகை இலங்கையைப் பாதிக்காது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் முன் கூட்டியே மீசையில் மண் படாது என்கின்றனரா?

GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.

ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றிய 16 வறிய நாடுகளுக்கு இச் சலுகையை வழங்கியுள்ளது. அவற்றில் இலங்கை மட்டுமே சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர் நோக்குகிறது.

இலங்கை அடைந்த நன்மை
gsp ஆல் இலங்கை அடைந்த நன்மையை அறிந்து கொள்ள உகந்த புள்ளி விபரம்: 2005-ம் ஆண்டு 99பில்லியன் ரூபாக்கள் ஏற்றுமதி வருவாய் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்தது. ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை வழங்கியபின் அது 157பில்லியன் ரூபாக்களாக அதிகரித்தது. இதே வேளை அமெரிக்காவிற்கான எற்றுமதி வருவாய் 164பில்லியன்களில் இருந்து 173பில்லியன்கள் மட்டுமே அதிகரித்தது. அமெரிக்காவிற்கான வளர்ச்சியிலும் பார்க்க பத்துமடங்கு அதிகரிப்பு.

ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகையால் பயனடையும் துறைகளில் ஆடை அணிகலன் துறை மிக முக்கியமானதாகும். மற்றைய துறைகள் இறப்பர், மாணிக்கம் மற்றும் மரக்கறி வகைகளாகும்.


ஏற்படவிருக்கும் இழப்புக்கள்
இந்த வகையில் சுமார் 500மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாயை இலங்கை இழக்கவிருக்கிறது.

ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்வதால் நேரடியாக 270,000 பேரின் வேலைக்கு ஆபத்து ஏற்படவிருக்கிறது. இதனால் ஏற்படவிருக்கும் Domino Effect(தொடர் சரிவு)ஐக் கணக்கிடுவது மிகச் சிரமம். இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிப்படையப் போகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.

ஏன் இலங்கை GSP+சலுகையை இழக்கிறது.
GSP+சலுகைக்கு உரித்துடமையாவதற்கு ஒரு நாடு 27 பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு அவற்றிற்கேற்ப நடக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அதில் மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

சலுகையின் பெறுமதி நூறு மில்லியன் டொலர்களாகும்.
இது சலுகையின் பெறுமதி மட்டுமே. சலுகையால் கிடக்கும் ஏற்றுமதி வருவாய் இதிலும் பல மடங்கு பெறுமதி உடையது. சலுகை இரத்து இலங்கையை இருமுனையில் பாதிக்கிறது. இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் ஆடை உற்பத்தித்துறை முதலாம் இடத்தை வகிக்கிறது. இலங்கைக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் முதலாம் இடத்தை வகிக்கிறது. இவ்விருவகையிலும் இலங்கை பாதிப்பை எதிர் நோக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கையின் ஏற்றுமதி 1.7 பில்லியன் யூரோக்கள் பெறுமதியானது. ஐரோப்பிய ஒன்றியம் இனி தனது இறக்குமதியை வேறு நாடுகளில் இருந்து செய்யும். இதனால் இலங்கையின் வர்த்தகம் பெரிதும் பாதிப்படையும். உலகின் 15 நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் GSP+சலுகையை வழங்கியுள்ளது. GSP+சலுகையை வழங்கிய பின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி பெரிதும் வளர்ச்சியடைந்தது. இச்சலுகையால் இலங்கை 7200 பொருட்களை வரிவிதிப்பின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யக் கூடியதாக இருந்தது.

ஏற்கனவே உள்ள பிரச்சனை மோசமாகும்.
ஏற்கனவே இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை இலங்கையின் 17 விழுக்காட்டிலும் அதிகமான பணவீக்கத்தால் அதிலும் குறைந்த பணவீக்கமுடைய இந்தியாவுடனும் சீனாவுடனும் போட்டி போட முடியாமல் தவிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+சலுகை இரத்து செய்து விட்டால் ஆடை உற்பத்தித்துறைமீதும் ஆபரணத் துறைமீதும் பலத்த அடியாக விழும். இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் வருமானத்தை இழக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் இலங்கையின் நாணயமதிபிப்பு இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டொலருக்கு எதிராக 5% தேய்மானம் அடைந்துள்ளது. பலவீனமான டொலருக்கு எதிராகவே பலவீனமடைகிறது. அதேவேளை சீன இந்திய நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு எதிராக மதிப்புக் கூடி வருகின்றன. இதனால் எரி பொருள் விலையேற்றத்தை சீன இந்திய உற்பத்தித்துறையிலும் பார்க்க இலங்கை உறப்த்தித்துறைக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்:
  • ஆடை ஏற்றுமதியில் 13% சரிவு.
  • தேயிலை ஏற்றுமதியில் 16% சரிவு
  • ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி வருவாயில் 23% சரிவு.
  • இத்தகைய சரிவுகளுடன் இலங்கை இந்த வரிச் சலுகை இரத்தால் மோசமாகப் பாதிக்கப் படப் போகிறது.

பொருளாதார நிபுணத்துவ கணிப்பு
வரிச் சலுகைகள் ஒரு உற்பத்தித் துறையில் திறனைக் குறைக்கும்.
சலுகைகள் இல்லாமல் வளரும் தொழிற்துறையே திறமையான துறையாக உருவெடுக்கும். நீண்ட கால அடிப் படையில் வரிச் சலுகை பாதகமானதே.
ஆனால் இலங்கையின் பொருளாதாரம் இப்போது இருக்கும் நிலையில் வரிச் சலுகை மிக அவசியம்.

அமைதிப் படை அட்டூழியம்: தினமணியின் திருகு தாளம்


இந்திய அமைதிப் படைஇலங்கையில் செய்த அட்டூழியங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. IPKF என்பது Innocent People Killing Force என்று இலங்கைச் சிங்களப் பத்திரிகைகள் கூட வர்ணித்தன. இதுபற்றி தொடர் கட்டுரை எழுதி வரும் தினமணி ராஜீவின் அட்டூழியப் படை செய்த வல்வெட்டித் துறைப் படுகொலையைப் பற்றி இப்படி எழுதியது:
இந்திய அமைதிப் படையின் செயற்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம் வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும், அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும் உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன. பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த மோதல்தான். இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள் இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச் சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர், வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய அமைதிப்படை அடித்த கொள்ளைகள் பலப்பல. பாவித்த உள்ளாடைகளைக்கூட அந்தக்கேவலமான மிருகங்கள் விட்டுவைப்பதில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க அவர்கள் கொள்ளை அடித்ததை மறைத்து "
தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம்" என்று திரித்து எழுதியிள்ளது தினமணி.
ஏற்கனவே இந்திய அமைதிப் படையின் அட்டூழியம் பற்றிய ஒரு கட்டுரையை தனது தொடரில் இருந்து தினமணி நீக்கியிருந்தது.

Tuesday 20 October 2009

ஐநா பாதுகாப்புச் சபை உறுப்பினர் பதவிக்கு இலங்கையும் போட்டியிடுமா?


ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபை 5 இரத்து(வீட்டோ) அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தர மற்ற உறுப்பினர்களையும் கொண்டது. நிரந்தர மற்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
இவர்கள் பிராந்திய ரீதியில் தேர்ந்தெடுக்கப் படுவர். தற்போது உள்ள நிரந்தரமற்ற உறுப்பினர்கள்:


Country Regional bloc(s) Permanent Representative
Burkina Faso Burkina Faso Africa Michel Kafando
Costa Rica Costa Rica Latin America and Caribbean Jorge Urbina
Croatia Croatia Eastern Europe Neven Jurica
Libya Libya Africa (Arab) Abdurrahman Mohamed Shalgham
Vietnam Vietnam Asia Lê Lương Minh

Country Regional bloc(s) Permanent Representative
Austria Austria Western Europe and Other Thomas Mayr-Harting
Japan Japan Asia Yukio Takasu
Mexico Mexico Latin America and Caribbean Claude Heller
Turkey Turkey Western Europe and Other Ertuğrul Apakan
Uganda Uganda Africa Ruhakana Rugunda

இப்பொழுது உள்ள நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஆசியப் பிராந்தியத்திற்கான உறுப்பினர் பதவியை இப்போது ஜப்பான் வகிக்கிறது.
ஆசியப் பிராந்தியத்தில் சீனா நிரந்தர உறுப்பினராக இருப்பதால் இந்தியாவும் ஜப்பானும் நிரந்தர மற்ற உறுப்பினருக்கான பதவியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை பலதடவை இப்பதவியில் இருந்துவிட்டன. இப்பதவியில் ஒரு முறை மட்டுமே (1960-61)இலங்கை இருந்தது.

ஜப்பானைத் தொடர்ந்து யார் அடுத்த ஆசியப் பிரந்தியத்திற்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப் போகிறார்கள் என்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இப்பதவிக்குப் போட்டியிட வேண்டும் என இலங்கையின் வெளியுறவுத்துறையில் சிலர் விரும்புவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இப்போதே தமிழர் விடயத்தில் பல தவறுகளை பாதுகாப்புச் சபை செய்து விட்டது. அங்கு இலங்கை உறுப்பினர் ஆனால் தமிழர்களுக்கு என்ன நடக்கும்?

நாடுகடந்த தமிழீழ அரசிற்கு சில முக்கியமான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ள வேளையில் இலங்கைக்கு பாதுகாப்புச் சபையில் ஒரு உறுப்பினர் பதவி அவசியம். ஆனால் இந்தியா களத்தில் இறங்கினால் என்னவாகும்?

Monday 19 October 2009

ராஜபக்சேயின் ஜாதக பலன் - கட்டங்கள் உதைக்கின்றன. கரைச்சல்கள் திரள்கின்றன.


ராஜபக்சே அவர்களே!
உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இருந்து வெற்றிகளையும் புகழையும் தேடித்தந்த பொன்சேகா இப்போது ஆறாம் இடத்திற்கு மாறியுள்ளார். இதனால் பலதொல்லைகளை எதிர்பார்க்கவும். பொன்சேக்கா உங்கள் பதவிக்கே ஆப்பு வைக்கலாம். இதறகுப் பரிகாரமாக பொன்சேக்காவிற்கு உரியதும் உயரியதுமான பல காணிக்கைகளை செலுத்த வேண்டிவரும். இதனால் உங்கள் சகோதரங்களுடன் முரண்பட வேண்டி வரும்.

இதே வேளை இவருடன் உங்கள் பாவக் கிரகமான யூஎன்பியும் பாதகாதிபதியான மங்கள சமரசிங்கவும் இணைந்தால் நிச்சயம் உங்களுக்குக் கோவிந்தாதான்.

இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்து நல்ல பணவரவைக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம் இனி மூன்றாம் இடத்திற்கு மாறவருக்கிறது. இதனால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் உங்கள் வீட்டை சீனாவிற்கு ஈடுவைக்க வேண்டி ஏற்படலாம். அது நிரந்தர விற்பனையிலும் முடியலாம்.

வானத்தில் இருந்த சனியை ஏணி வைத்து இறக்கியது போல் உங்கள் பத்தாம் இடத்தில் இருக்கும் முகாம்கள் பலதொல்லைகளை இனிக் கொடுக்கவிருக்கிறது. கோடு கச்சேரி என்று நீங்கள் அலைய வேண்டிவரும். இதனால் சில பணவரவுகளை நீங்கள் அயல் வீட்டுக் காரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள். அங்குள்ள இழிச்சவாயர்கள் இதற்கு தடையாக இருக்காமல் உங்கள் வீட்டில் எல்லாம் ஒழுங்காக இருப்பது போல் அவர்களை ஏமாற்றிச் சமாளிக்கலாம். அதற்கு பார்பன ஊடகங்களும் ஊடகர்களும் கைகொடுக்கும். நீங்களும் அவர்களுக்கு நிறையக் "கை" கொடுக்க வேண்டும்.

எட்டாமிடத்தில் மறைந்திருக்கும் அமெரிக்கா என்ன வடிவம் எடுத்து உங்களுக்கு அள்ளிவைக்கப் போகிறதோ தெரியாது. உங்கள் விட்டில் ஒரு பகுதியை அவருக்குத் தாரை வார்க்க வேண்டி வரலாம். நாடுகடந்த அரசும் தலையிடியாக அமையும்.

உங்களுக்கு சீனா திசையில் இந்திய புத்தி நடக்கிறது. இக்கால கட்டத்தில் உங்களை யாராலும் அசைக்க முடியாது என்ற மமதையை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சீனகிரகங்கள் ஒன்றுக் கொன்று பகையான கிரகங்களாதலால் கிரக யுத்தம் நடக்கும்போது உங்கள் குட்டு வெளிப்பட்டு பாரிய பிரச்சனையை எதிர் நோக்க வேண்டி வரும். அருணச்சலேஸ்வரரை மௌன விரதம் இருந்து தரிசியுங்கள். சேலையணிந்த முசோலினியை அடிக்கடி தரிசித்து ஆசி பெற்றுக் கொள்ளவும். இரசியச் அழிவீஸ்வரன் கோவிலிற்கு நேர்த்திக் கடனை இப்போதே வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

Sunday 18 October 2009

ஜெகத் கஸ்பராஜின் சஞ்சனாதேவி கற்பனைப் பாத்திரமா?



முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்:
Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai, India. His academic qualifications include bachelor degrees in History, Philosophy, Theology and Masters in Political Science, and Strategic Studies. He served as an international broadcast journalist for seven years, co-created the historic Chennai Sangamam, played the pivotal role in the making of ‘Thiruvasagam in Symphonic Oratorio’; co-founded ‘GiveLife’ project, was the chief architect of GiveLife Marg Chennai Marathon.

Fr. Jegath Gaspar Raj is a staunch democrat with fervent faith in the ideals of freedom, equity and fairness. He fiercely resists every form of fundamentalism and believes very much in dialogue between religions and cultures. Through international radio he reunited around 4600 SriLankan Tamil families who were disintegrated by the civil war between 1996-2000. This he considers the best so far of his life.
இவர் ஈழத் தமிழ்த் தேசிய போராட்டத்திற்கு தீவிரமானதும் பயனுள்ளவகையிலும் ஆதரவு தெரிவித்து வந்தவர்.

அண்மையில்
அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்:

சஞ்சனாதேவி என்ற ஈழத்துச் சகோதரியை கடந்த புதன்கிழமை சந்தித்தேன். யாழ்ப்பாணத்துக்காரர். ஊர் குறித்துச் சொல்வ தெனில் கொக்குவில் மேற்கு. திருமணமாகாதவர். வயது சுமார் 50 இருக்கலாம். சித்த-ஆயுர்வேத மருத்துவம் படித்தவராம். இந்திய அமைதிப்படை யாழ்குடாவை ஆக்கிரமித்திருந்த காலத்தில் ராணுவத்திலிருந்த தமிழக-கேரள வீரர்கள் பலருக்கு இவர் வைத்தியம் செய்ததுண்டாம்."இந்திய ராணுவம் எங்கட சனத்துக்கு கன கஷ்டங்கள் தந்த போதும் தமிழக வீரர்கள் வரேக்கெ மனசுக்கு சந்தோஷமா இருக்கும். எங்கட துன்பங்களெ உரிமையோடெ சொல்லவேனும் முடியும். சில நேரம் அண்ணன், தம்பி உரிமை எடுத்துக் கொண்டு அவையளிடம் சண்டையும் பிடிப்பம்" என்று உரையாடலினூடே குறிப்பிட்டார் சஞ்சனா.
சென்னை விமான நிலையத்தில் குடிவரவுப் பிரிவினர் கருணையுடன் தம்மை நடத்தியதாய் குறிப்பிட்டார். முன்பெல்லாம் ஈழத்தமிழர் எங்கிருந்து வந்தாலும் அத்தனைபேரையும் குற்றவாளிகளாய், பயங்கரவாதிகளாய், பார்க்கிற மனப்போக்கு குடிவரவுத் துறையினரிடமும் உளவுப் பிரிவினரிடமும் இருந்து வந்தது. சிதைந்து போன வாழ்வும், இறக்க முடியா நினைவுச் சிலுவைகளும் எதிர்காலம் பற்றின சூன்ய இருளுமாய் வரும் இம்மக்களை நம் குடிவரவுத்துறை இப்போதேனும் இரக்கத்துடன் பார்க்கிறதென்பது உண்மையில் ஆறுதல் தருகிறது. இன்றைய நடுவணரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நன்றிக் குரியவர்.

இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்த வேளை அவர்களது நடவடிக்கைகளை அறிந்தவர்கள் எவரும் மேலுள்ள முதலாம் பத்தியை நம்ப மாட்டார்கள். அருட்தந்தை ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் இந்திய அமைதிப் படை பற்றி ஒரு புதிய அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயல்கிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள், இலங்கை அகதிகள் போன்றவை தொடர்பாக பல பொய்ப்பரப்புரை செய்து வரும் ப. சிதம்பரம் அவர்களுக்கு அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் நற் சான்றிதழ் கொடுக்க முயல்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்களின் கூற்றின் உண்மை நிலை பற்றி அறிய ஆவல் கொண்டு கொக்குவில் மேற்கைச் சேர்ந்த பலரிடம் சஞ்சனாதேவியைப் பற்றி விசாரித்ததில் இதுவரை எவரும் அப்படி ஒருவரைத் தெரியும் என்று சொல்லவில்லை. இதனால் ஜெகத் கஸ்பராஜின் சஞ்சனாதேவி கற்பனைப் பாத்திரமா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

  • அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் கலைஞர் கருணாநிதியையும் அமைச்சர் சிதம்பரம் அவர்களையும் "தாஜா" செய்து அவர்கள் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முயல்கிறாரா?
அல்லது
  • இந்திய உளவுத்துறை ஈழ விடுதலை ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுத்து ஈழ விடுதலை ஆதரவுத் தளத்தை பலவீனமடையச் செய்யப் பல முயற்றிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அருட்தந்தையும் பலியாகிவிட்டாரா?

நோக்கியாவின் குரல் இனங்காணும் கைத்தொலை பேசி



இந்தத வாரம் நோக்கியா வெளியிடவிருக்கும் புதிய N-97 Mini கைத் தொலை பேசியில் அழைப்பு விடுபவரின் குரலை இனங் கண்டு கொள்ளும் மென்பொருள் உள்ளடக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள இந்த மென்பொருள் இப்போது பாவனையாளர்களுக்குப் பயன் தரும் வகையில் புதிய N-97 கைத் தொலை பேசியில் உள்ளடக்கப் பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிகத் தகவல்கள்:
The N97 mini is based on the same tilt display design of its N97 big brother, built into a smaller body complete with new design touches.

Lifecasting enables users to update their Facebook status directly from the device’s homescreen. It doesn’t stop there though as location details can also be updated, enabling a whole new level of social sharing and communication. With the ability to completely customise the homescreen, users will be able to make their N97 mini truly unique.

The 3.2-inch touchscreen opens up a new world of software improvements including flick scrolling and a range of new experiences including new homescreen widgets. What’s more, the software update will also be available next month for existing N97 devices.

The Nokia N97 mini works seamlessly with Ovi Store where users can add new applications, widgets, ringtones and other content to their device. It also sports Ovi Maps and comes with integrated A-GPS and compass along with with voice navigation for driving or walking. Over 155,000 points of interest are also available through Lonely Planet guides and restaurants through Michelin Guides.



இந்த மென் பொருளின் குரல் அறியும் நம்பகத் தன்மை பற்றிச் சிலர் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.

காணொளி: இலண்டன் தமிழர் பேரணி-2

இலண்டனில் 17-10-2009இலன்று நடந்த வன்னி முகாமிலுள்ள தமிழர்களை விடுவிக்கக் கோரியும் இலங்கை அரசின் போர் குற்றங்களை விசாரிக்கக் கோரியும் நடாத்தப் பட்ட பேரணியின் கணொளிகள்:



காணொளி பாகம்-1: இலண்டன் பேரணி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...