Saturday 4 September 2010

நகைச்சுவை: "அந்த மாதிரி" விளம்பரங்கள்


இவை உண்மையாக வந்த விளம்பரங்கள்:
  1. Wanted. Widower with school-age children requires person to assume general housekeeping duties. Must be capable of contributing to growth of family.
  2. Mixing bowl set designed to please a cook with round bottom for efficient beating.
  3. Semi-Annual after-Christmas Sale.
  4. And now, the Superstore--unequaled in size, unmatched in variety, unrivaled inconvenience.
  5. We will oil your sewing machine and adjust tension in your home for $1.00.
  6. Girl wanted to assist magician in cutting-off-head illusion. Blue Cross and salary.
  7. For Sale. Three canaries of undermined sex.
  8. Get rid of aunts: Zap does the job in 24 hours.
  9. Christmas tag-sale. Handmade gifts for the hard-to-find person.
  10. Modular Sofas. Only $299. For rest or fore play.
  11. Wanted: Hair-cutter. Excellent growth potential.
  12. Wanted. Man to take care of cow that does not smoke or drink.
  13. 3-year-old teacher need for pre-school. Experience preferred.
  14. Our experienced Mom will care of your child. Fenced yard, meals, and smacks included.
  15. Our bikinis are exciting. They are simply the tops.
  16. Auto Repair Service. Free pick-up and delivery. Try us once, you'll never go anywhere again.
  17. Holcross pullets. Starting to lay Betty Clayton, Granite 5-6204.
  18. Illiterate? Write today for free help.

ஹைக்கூ கவிதைகள் - இரவு நடக்கவிருப்பதை எண்ணி வெட்கம்.


இயற்கை அன்னைக்கு
மரம் வெட்ட மனம் தவிக்கிறது
வற்றும் கண்ணீர்


விளக்குச் சிவந்திருந்தது
முகம் சிவக்கவில்லை
இதயம் சிவந்தது


பூமிக்கும் சூரியனுக்கும்
இனிய ஊடல் முகம் திரும்பியது
இரவு

என்னிடம் இருந்தால் பாதுகாப்பு
உன்னிடம் இருந்தால் அழிவு
அணு குண்டு

ஏன் இந்த வெட்கம்?
இரவு நடக்கவிருப்பதை எண்ணியதாலா?
செவ்வானம்

Friday 3 September 2010

நிருபாமா ராவ் முன் நகர்ந்ததில் நெகிழ்ந்த வலம்புரிப் பத்திரிகை.


நிருப்ப-மா? திருப்பமா?
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இருந்து ஒரு பன்னாடைக் கூட்டம் பாராளமன்ற உறுப்பினர் என்ற பெயரில் வந்து இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திச் சென்றது. அதில் வந்த டி ஆர் பாலுவை சனீஸ்வரன் என்று வர்ணித்துப் புகழ் பெற்றது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வலம்புரி நாளேடு. அதே நாளேடு இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபாமா ராவ் யாழ் நூலகத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் பேச்சை அக்கறையுடன் கேட்டதை "ஒரு திருப்பு முனை" என புளுகித் தள்ளியுள்ளது. வலம்புரியின் "வாக்குஸ்தானத்தை" சனீஸ்வரன் பார்க்கிறாரா? அல்லது "இலாபஸ்தானத்தை" இந்தியா பார்த்துக் கொள்கிறதா தெரியவில்லை. அதன் செய்தி இப்படிக் கூறுகிறது:

  • பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் முன்வைத்த கருத்தை மிக நிதானமாகவும் அங்கீகரிப்பதுபோன்ற பாவனையுடனும் நிரு பமா ராவ் ஏற்றுக்கொண்டார். இது நிருபமா ராவ் தகைசார் வெளியுறவுச் செயலர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது.பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் கருத்துரை கூற எழுந்தபோது நீங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்துங்கள் என நிருபமா ராவ் கேட்டார். அதற்கு நான் பேராசிரியர் சிற்றம்பலம் என்றார்.
  • அந்த அவை அமைதிகொண்டது. நிருபமா ராவ் தனது ஆசனத்திலிருந்து சற்று முன் நகர்ந்து பேராசிரியரின் கருத்தை கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்தியதை பார்த்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது.
இந்திய முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஜீ பார்த்தசாரதியிலிருந்து இன்று நிருபாமா ராவ் வரை பல வெளியுறவுச் செயலர்கள் தமிழர்களைக் சந்தித்து "அக்கறையுடன்" தமிழர் பிரச்சனைகளைக் கேட்டுக் கொண்டனர். அப்போதும் பலர் ஒரு "ஒரு திருப்பு முனை" வரப்போகிறது என்று கூறிக்கொண்டனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை ஜீ பார்த்தசாரதி இலங்கை வந்தபோது இலங்கையில் தமிழர்கள் இருந்த நிலைக்கும் இப்போது தமிழர்கள் இருக்கும் நிலயையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திருப்பு முனைகள் எதை நோக்கி இருந்து வந்தது என்று புரிந்து கொள்ளலாம்.

நிருபாமா சிங்களவர்களிடம் மீள் குடியேற்றத்திறிகான சகல உதவிகளும் இலங்கை அரசினூடாக வழங்கப் படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மீள் குடியேற்றத்திற்கான உதவி தமிழர்களுக்கு நேரடியாகவே வழங்கப் படும் என்றும் கூறினார். இது இந்தியாவின் வழமையான சிங்களவர்களுக்கு தலையையும் தமிழர்களுக்கு காலையும் காட்டும் செயல்.

நிருபாமா ராவ் எந்த நிலையில் இலங்கை வந்தார்?
  • அம்பாந்த்தோட்டையில் சீனர்கள் .
  • நுரைச் சோலையில் சீனர்கள்.
  • மீரிகம சிறப்புப் பொருளாதார வலயத்தில் சீனர்கள்.
  • ஏ-9 நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்ய சீனர்கள்.
  • கிளிநொச்சியில் கணனிப் பாகங்கள் உற்பத்தி செய்ய 500ஏக்கர் நிலத்தில் சீனர்கள்.
  • முல்லைத்தீவில் சீனர்கள்.
  • யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படையினருக்கு வீடுகள் கட்ட சீனர்கள்.
  • காங்கேசந்துறைக்கும் பலாலிக்கும் இடையில் தொடரூந்துப் பாதை அமைக்கச் சீனர்கள்.

இந்தச் சீனர்கள் திரும்பிச் செல்வார்களா? சுன்னாகம் மின்னிலையத்தை புனரமைக்க வந்த 50 சீனர்கள் தங்கள் வேலை முடிந்தவுடன் திரும்பிச் செல்லவில்லை. அங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். இப்பொது இலங்கையில் சீனர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
இவை மட்டுமா? நிருபாமா ராவ் இலங்கையில் கால் பதிக்க இரு சீனக் கடற்படைக் கப்பல்கள் மியன்மாரில் இறங்கியது.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்ட சபைத் தேர்தலை இலக்கு வைத்து இலங்கைக்கு ஒரு அரசியல்வாதிகள் குழுவை அனுப்பி அதன் மூலம் தாம் இலங்கைத் தமிழர்களுக்கு பெரிதாக எதையோ செய்துவிட்டதாக தங்கள் ஊடக பலம் மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்யவிருந்தது திமுக-காங்கிரசுக் கூட்டணி. ஆனால் இலங்கையில் மாறிவரும் சூழல் வெறும் தேர்தல் நோக்கத்திற்கு அப்பால் இந்தியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு மிக அண்மையாக வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தால் தடம் மாறி அது இந்தியாவின் வெளிவிவகாரத்துறையின் விவகாரமாக மாறிவிட்டது. இம்முறை பொன்னாடை போர்த்தி ராஜபக்ச தரும் பரிசைப் பெறமுடியாது போய்விட்டது. பாவம் சிதம்பரம். இலங்கையில் தமது நிலைப்பாட்டை குறைந்த அளவாவது உறுதி செய்வதும் அங்குள்ள தமிழர்களின் மனோ நிலையை அறியவும் இந்தியா முனைப்புக் காட்டியது. நிருபாமாவின் இலங்கைப் பயணம் ஒரு தமிழர்களுக்கு திருப்பு முனையாக அமையும் என்று வாசுதேவ நாணயக்கார கூறவில்லைல்; மனோ கணேசன் கூறவில்லை; தமிழரங்கம் கூறவில்லை; இந்தியாவில் உள்ள தமிழின உணர்வாளர்கள் கூறவில்லை; கேவலம் கருணாநிதியே கூறவில்லை.

நிருபாமா ஆசனத்தில் இருந்து முன் நகர்ந்து அக்கறையுடன் கேட்டது வலம்புரியை நெகிழச் செய்துவிட்டது நல்ல வேளை முன் நகரும் போது நிருபாமாவில் மேலாடை விலகவில்லை. விலகியிருந்தால் வலம்புரி இடம்புரியாக மாறி உருகியே போயிருக்கும்.

Thursday 2 September 2010

விஞ்ஞானிகள்:பிரபஞசத்தை கடவுள் படைக்கவில்லை ஈர்ப்பு சக்திதான் படைத்ததாம்



The Grand Design என்னும் தமது புதிய நூலில் Stephen Hawking, Leonard Mlodinow ஆகிய பிரபல விஞ்ஞானிகள் இந்தப் பிரபஞ்சத்தை கடவுள் படைக்கவில்லை அது ஈர்ப்புச் சக்தியால் உருவானது என்கிறார்கள்.


Stephen Hawking 1988இல் வெளிவிட்ட தனது A Brief History of Time என்னும் நூலில் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் புதிய நூலில் கடவுள் இந்தைப் பிரபஞ்ச உருவாக்கத்தில் தேவைப்பட்டிருக்கவில்லை என்கிறார்.

ஈர்ப்பு விசைத் தத்துவங்களிற்கு ஏற்ப பிரபஞ்சம் தானாகவே தோன்றியது என்பது தான் Stephen Hawking, Leonard Mlodinow ஆகிய விஞ்ஞானிகளின் கருத்து. ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்த ஐசாக் நியூட்டன் கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கியதை ஏற்றுக் கொண்டிருந்தார். 1992இல் மற்ற நடசத்திரங்களைச் சுற்றியும் கிரகங்கள் இருக்கின்றன என்று கண்டு பிடித்ததைத் தொடர்ந்து நியூட்டனின் கோட்பாடான ஒரு சூரியன் பிழைத்து விட்டது. அதற்கு முன்னர் பூமி மனிதர்கள் வாழ்வதற்கென்று சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட ஒன்று என்று நம்பப்பட்டது. இப்போது எமது பூமியைப் போல் பல கோடி இப்பிரபஞ்சத்தில் இருகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Leonard Mlodinow ஆகிய பிரபல விஞ்ஞானிகள் இப்போது M-theory என்பதை முன்வைக்கிறார்கள். அது இந்தப் பிரபஞசம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் விளக்கும் என்கிறார்கள் Leonard Mlodinow ஆகிய பிரபல விஞ்ஞானிகள்.

Stephen Hawking பிரபஞ்சத்தின் வேறு பகுதிகளில் பூமியில் உள்ள மனிதர்களைப் போல் அறிவுள்ள உயிரினங்கள் இருக்கிறது என்று நம்புகிறார். அத்துடன் பிரபஞம் என்பது ஒன்றல்ல பல இருக்கின்றன. அவை அழிந்து மீண்டும் தோன்றுகின்றன.

அண்மையில் Stephen Hawking மனிதர்கள் பூமியில் இருந்து விலகி வேறு சூரிய மண்டனங்களில் உள்ள கிரகங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

Wednesday 1 September 2010

அந்த மாதிரியான SMS JOKES



Pleas turn your mobile phone upside down now!!! Hurry
370HSSV 0773H

Girls are like phones. We love to be held, talked too but if you press the wrong button you'll be disconnected!


HELP: Cops are after a suspect who smart, witty, sexy and good lookin...so where you gonna hide ME?

Birdy birdy in the sky dropped a poopy in my eye, I don't worry I don't cry, I'm just happy that cows can't fly!

Learn from your parents' mistakes - Use birth control!

What’s hairy on the outside and moist inside, begins with a 'C' ends with a 'T' and has U' and 'N' in the middle? Answer: 'COCUNUT'.

Wat's the diff between pulling a curtain and a panty?
ANS: When U pull a curtain, it means tat the show is over. But pulling down a panty means IT'S SHOWTIME!


What did the call gir's left leg say to her right leg? Between the two of us, we can make a lot of money.

Last night I desperately missed you I wanted to feel u on my naked body. I had to go to bed without you....where are u stupid pyjamas.....!

I love the way it rubs against the soft pink flesh.. and creates a creamy foamy liquid as it thrusts in and out, up and down... Can’t wait to brush my teeth

Tuesday 31 August 2010

மீண்டும் ஏமாற்றும் இந்தியா. மீண்டும் ஏமாறும் தமிழர்கள்.



இலங்கையில் "தகடு கொடுத்தல்" என்ற ஒரு சொற் தொடர் உண்டு. முன்பு மலையாளச் "சோதிடர்கள்" இலங்கைக்கு வந்து தாம் அருள் மிக்கவர் என்று சொல்லி பரிகாரத்திற்கு இயந்திரத் தகடுகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிப் பெரும் பணம் பெற்றுக் கொள்வர். இதனால் தகடு கொடுத்தல் என்பது ஏமாற்றுதல் என்று பொருள்படும். இலங்கையில் உள்ள போரினால் பாதிக்கப் பட்ட மக்களை மீள் குடியேற்றத்திற்கு அவர்களுக்கு நான்கு தகடுகளைக் கொடுத்து இதைக் கொண்டு போய் உங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அவர் தாம் வாழ்ந்த வளமான பூமிக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. வளமுள்ள பிரதேசங்களில் சிங்களவர்களை இலங்கையும் இந்தியாவும் இணைந்து குடியேற்றம் செய்து வருகிறது. இப்போது இலங்கையில் இருக்கும் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாம ராவ் மீள் குடியேற்றத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மீள் குடியேற்றம் தமிழர் பகுதிகளைத் துண்டாடி அவர்களை மீளா அடிமைகளாக்கும் விதத்தில் சிங்களவர்களையும் சிங்களப் படையினரையும் தமிழர் பிரதேசங்களில் குடியமர்த்துகிறார்கள். தமிழர்கையில் சில தகடுகளைக் கொடுத்து இவற்றைக் கொண்டு உங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் மீள் குடியேற்றம்.

தமிழர்களுக்கு இலங்கையில் இப்போது ஒரு பிரச்சனையுமில்லை. அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு பிரச்சனை சில ஆயிரம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். (அவற்றைத் தடுப்பு முகாம் என்கிறதே மஹா தப்பு. கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அவை நலன் புரி நிலையங்கள்!!!!!) அவர்களை மீள் குடியேற்றம் செய்வதுதான். இப்படி ஒரு எண்ணம் தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். சென்ற வாரம் ஆனந்த விகடனில் இப்படி ஒரு கேள்வி பதில்:
விகடனின் கேள்வி:
சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றிருக்கிறாரே பழ.நெடுமாறன்?"

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதில்

"நிச்சயமாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காரணம், மத்திய அரசு ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்காக எல்லாவிதமான நன்மைகளையும் செய்து வருகிறது. இப்போதுகூட 50,000 வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்திருக்கிறது. அகதி முகாம்களைப் பார்வையிட புதிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதையெல்லாம் நம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்!"

ஆனால் இலட்சக்கணக்கான விடுகளை அழிக்க ஆயுதம் கொடுத்தது யார்? பயிற்ச்சி கொடுத்தது யார்? படை கொடுத்தது யார்?

தாம் பிறந்து வளர்ந்த முற்றத்தை பார்க்கும் உரிமையைக் கூட பறிக்கப்பட்ட மக்களுக்கு தகடு கொடுத்து வீடு கட்டிக் கொடுப்பதால் என்ன பயன்? தமிழினத்தைக் கெடுத்து அழித்தவர்கள் வீடு கட்டப் போகிறார்களாம்!!! அதற்கு 20,000 இந்தியர்களைக் இலங்கைக்கு கொண்டுவரப் போகிறார்களாம்!!!

தமிழனின் வாழும் உரிமையைப் பறித்தது யார்?

வன்னியில் ஒரு வாலி வதைப் படலத்தை நிறைவேற்றியது யார்? தமிழனை பின்னால் இருது முதுகில் குத்திய துரோகிகள் யார்?

ராஜீவ் காந்தி(கான்) ஒரு கொலை வெறிப்படையை அனுப்பி இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் என்று முழங்கியது. அது இதுவரை நிறைவேற்றப் படவில்லை. அது பற்றி இப்போது யாரும் கதைப்பதில்லை. இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அதிக சிங்கள மக்களைக் குடியேற்றி அங்கு அவர்களைச் சிறுபான்மையினராக்கிய பின் இந்த திருத்தம் நிறைவேற்றப் படுமா? இது பற்றி ஆராயத்தான் இலங்கை இந்தியா இப்போது கைகோத்து நிற்கிறதா?

இலங்கையில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் ஒரு சில தெரிந்தெடுக்கப்பட்டவர்களைமட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அவரிடம் யாழ்ப்பணத்திலும் வன்னியிலும் வைத்து இந்தியா தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம் பற்றி மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இவர்களை இனி யார் காப்பாற்றுவார்களோ தெரியாது!!!

பாவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழ் கட்சியில் இருந்த தமிழின தீவிர உணர்வாளர்களை இந்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க அக்கட்சியிலிருந்து ஓரம் கட்டப் பட்டனர். தமிழத் தேசியக் கூட்டமைப்பு இப்போது தமிழர்களின் பிரச்சனை பற்றிக் கதைக்கக்கூடாது என்று இந்தியா உத்தரவிட்டுள்ளதாம். இந்தியாவின் பின்னால் சென்ற தமிழ் சகல அரசியல்வாதிகளும் இறுதியில் துரோகிகளாகவே மாறினார்கள்.

பாவம் சிதம்பரம் ஐயா
சிவகங்கைத் தொகுதியில் ஏதோ எல்லாம் செய்து தேர்தலில் வெற்றி பெற்ற சிதம்பரம் ஐயா அண்மையில் வீராப்புடன் பேசினார் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய உதவி அவர்களுக்கு நேரடியாகவே கையளிக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகவே இந்தியாவால் வைப்பிலடப் படும் என்று முழங்கினார். மறுநாள் இலங்கையின் ஒரு சாதாரண அமைச்சர் அப்படிச் செய்ய அனுமதிக்க முடியாதென்றார். இப்போது போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான இந்திய "உதவி" இலங்கை அரசினூடாகவே வழங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்தியாவின் இப்போதைய கவலை சீனா தனது அபிவிருத்தித் திட்டம் என்ற போவையில் பல சீனர்களை இலங்கையில் இறக்கி விட்டது. இவர்களில் செம்படையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்தியாவும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு தமிழன் மேல் சாவாரி செய்வதுதான் இந்தியாவின் நோக்கம். இலங்கையில் வீடு கட்டிக் கொடுப்பது என்ற போர்வையில் முதலில் 20,000 இந்தியர்கள் இலங்கையில் வந்து இறங்கப் போகிறார்கள். இவர்களின் நோக்கங்களில் ஒன்று இலங்கையில் இனி தமிழ்த் தேசிய போராட்டம் தலை தூக்காமல் பார்த்து கொள்வதாகவே இருக்கும். இந்தியா மீண்டும் தமிழர்களை ஏமாற்றுகிறது. தமிழர்களும் ஏமாறுகிறார்கள்.

மீண்டு சுட்டவை நாற்பது (பலான மட்டர்களும் உண்டு)


கற்பனையாளர்களுக்கு கைப்பேசி குறுந்தகவல்கள் ஒரு படைப்புத் தளமாக மாறி விட்டது. அவர்களின் கற்பனைகளில் பிறந்தவை:


  1. Most interesting line written
    on the front of T-shirt of a girl,
    .
    .
    .
    .
    Excuse me !
    My face is above
  2. What’s an average 6 inch long
    Inside a guy’s pants and girls love to blow it up?
    ?
    ?
    ?
    ?
    A:1000- rupee currency note.!
    Always think positive.
  3. Girl:It’s 2 tight
    Boy:Don’t worry,I’ll do it slowly,
    Gal:Push it in,
    Boy:Ah..I can’t,
    Gal:It’s painful,
    Boy:Forget it.
    .
    .
    We’ll buy new WEDDING RING!
  4. Boy and girl of class 2 asked teacher:
    “can kids of our age have kids?”
    Teacher replied ” NO Never!!”
    Boy said to girl :
    “see i told you not to worry!!!!”.
  5. A beautiful girl goes to Professor cabin
    and
    say
    that i will do anything to pass in the exams
    and professor says
    NOW OPEN YOUR
    .
    .
    Books And Study
  6. NURSE kept SARDAR’S FINGER in HER MOUTH
    after BLOOD TEST.
    THEN SARDAR STARTED DANCING .
    NURSE:y r u DANCING.
    SARDAR:next is URINE TEST
  7. He came at night,
    explored my body,
    got on top of me,
    touched me, he bit,
    sucked, swalowd,
    when he was satisfyed,
    he left, i was hurt,
    .
    .
    .
    BLOODY… MOSQUITO !!!!
  8. 2 men went t a callgirl.
    1st went in and came out n said
    “Na my wife is better.”
    2nd went in and came out n said "ya man u r right ur wife is better"
  9. what is the diference between stress,tension & panic?
    Stress is when wife is pregnant,
    tension is when girlfriend is pregnant &
    panic is when both r pregnant

  10. Marriage is a three ring circus: an engagement ring, a wedding ring, and suffering
  11. Why do dogs never marry? Bcoz they are already leading a dog's life!
  12. Funny Hindi Girl climbs up a tree. A monkey was sitting on the tree

    Monkey: Why are you climbing up?

    Funny Hindi Girl: To eat apples.

    Monkey: But this is a mango tree.

    Girl: I know, I brought apples with me.

  13. A child said to a pregnant lady:
    Wat’s in ur belly?
    She rep: here I’ve my cute beautiful baby
    Child says: if it was so much cute n beautiful then why you eaten that baby?
  14. I love you in blue.

    I love you in red but most of all.

  15. Father: If you dont pass your exam dont call me dad......Son: How are you Mr. Ramasamy

  16. Sex is like NOKIA (connecting people)

    like NIKE (just do it)

    like PEPSI (ask for more)

    like SAMSUNG (everyone is invited)

    and like ME (TO GOOD TO BE TRUE)..

  17. In art gallery
    Couple looks at a picture of a naked girl
    Covered by leaves only
    Husband keeps watching
    Wife says: would you leave or you’ll keep waiting for autumn?
  18. Hard work has a future payoff. Laziness pays off NOW!
  19. You are ABCD
    Attractive beautiful cute dear
    EFG
    Excellent funny gorgeous
    HIJ
    Hello I am joking ;)
  20. Please dear
    Be my
    TEDDY BEAR!
  21. Which is most difficult sport in the world to watch? Women's doubles tennis- 9 balls bounce at a time and you don't know which one to watch.
  22. KISSING at the top,HOLDING at the middle &FIRE at the bottom!

    Do you know the ANSWAR?

    WHAT?
    ho...don't think dirty...

    its A ''CIGRETTE''
  23. Boys say it's great
    boys say it's fine
    9 months later
    they say: it's not MINE
  24. Wife: if I sleep with your best friend, what thought will first come into your mind?
    Husband: that you’re a Lesbian
  25. sometime girl can attract man with her mind
    but most often she can attract him with what she doesnt mind
  26. Marriage is the price men pay for sex
    And sex is the price women pay for marriage
  27. Why is a car engine works like a wife?
    On a cold morning, when you need it, it wont turn over
  28. I once had One2One with a Virgin, she teased me till i had an Erikson, sucked me till my face went Orange, till I busted my Siemen all over her Nokias!
  29. Dad brought a robot which slaps a person who lies.
    Dad: son, where were you?
    Son: School, robot slap. Son: film.
    Dad- which one?
    Son: sai baba, robot slap again. Son: "A" film
    Dad: what? I have not seen such films, robot slaps dad.
    Mom: forgive him dear after all he is your son, robot slaps mom.
  30. If I could rearrange the alphabet, Id put U and I together.
  31. What is live ? Live is love. Whats love ? Love is kissing. Whats kissing ? Come here and I show you.
  32. Do u believe in love at first site or do I have to walk by again?
  33. BITCH also stands for: Beautiful, Intelligent, Talented and Charming Human being!
  34. A special world for you and me
    A special bond one cannot see
    It wraps us up in its cocoon
    And holds us fiercely in its womb
  35. Teacher: What should be in a book to make it a bestseller? Student: A girl on the cover and no cover on the girl.
  36. How to catch a squirrel
    Climb up a tree and just be yourself.
    Squirrels will come to u on their own.
    Because they just luv NUTS
  37. Why do 90%
    of the girls have a bigger left chest ?
    ...) (
    ( .)( . )
    ...) (
    because....
    90% of the
    boys are
    right handed..
  38. AM I CUTE? TEST
    call, if i m cute
    miss call, if i m gorgeous
    Text back if i m pretty

    Text a joke if i m charming
    Just ignore if u r jealous
  39. I want to touch your lips
    taste ur tongue smell your breath! wat hapen
    i am your toothpaste
  40. A Short thing
    It gets Longer
    when yoU hold it
    and pass between
    women chests
    and enters into
    A hole
    What is it
    1 min to think
    Car Seat Belt
    yoU dirty mind

Monday 30 August 2010

பத்மநாதன் தமிழர்களை பௌத்தத்திற்கு மாற்றுவாரா?

பத்மநாதன் கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror பத்திரிகைக்கு கனடாவில் வசிக்கும் டி. பி. எஸ். ஜெயராஜ் என்பவருக்கு தொடர்ந்து நான்கு வாரங்களாகப் பேட்டியளித்துள்ளார்.

பத்மநாதனின் பேட்டி மிக மிகக் கவனமெடுத்து துல்லியமாகத் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்பது அவர் பேட்டியில் கூறியவற்றில் இருந்து தெரிகிறது.

இப்பேட்டி ஆங்கிலத்திலேயே செய்யப்பட்டது. கொழும்பில் பல சிறந்த நிருபர்கள் இருந்தும் இப் பேட்டிகாண தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்வதில் வல்லவரானரும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றவருமான டி. பி. எஸ். ஜெயராஜ் தெரிவு செய்யப்பட்டமை இதன் உள்நோக்கத்தைப் புலப்படுத்துகிறது. இவர் தமிழ்த் தேசியத்து எதிராக சேறு பூசுவதற்கு சென்னையில் இருந்து வெளிவரும் பார்ப்பன சஞ்சிகையான Frontline உடனும் இணைந்து செயற்பட்டவர்.

இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்கள் இலங்கை பற்றி உடன் செய்திகளை அறிவதற்க்கு கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror இன் இணையத் தளத்தை பெரிதும் நம்புகிறார்கள். ஒரு சில தமிழ் இணையத் தளங்கள் தமது செய்திகளுக்கு Daily Mirrorஐயெ பெரிதும் நம்பி இருக்கின்றன. Daily Mirror வெளிவரும் சூடான செய்திகளை சில நிமிடங்களில் அவை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொள்ளும். Daily Mirror ஒரு இலங்கை அரசின் துதிபாடும் பத்திரிகை அல்ல என்றாலும் அது இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஒரு பேரினவாதப் பத்திரிகை. FP என் அழைக்கப்படும் தந்தை செல்வாவின் Federal Partyஐ Foolish Party, Fickle Party என்றும் பல தமிழ்த் தலைவர்களை கேவலமாகச் சித்தரித்து வரும் பத்திரிகை Daily Mirror ஆகும். பத்மநாதனின் பேட்டி உலகெங்கும் வாழும் தமிழர்களைக் குறிவைத்தது. அதற்க்காகவே Daily Mirror பத்திரிகை அவரது பேட்டி வெளிவரத் தெரிவு செய்யப்பட்டது.

பாடகர் சாந்தன் உயிருடன் உள்ளார்
விடுதலைப் புலிகளின் பாடகர்களுள் பிரபலமானவரான சாந்தன் (எனக்கு மிகவும் பிடித்த பாடகர்) என்பவர் உயிருடன் உள்ளார் என்று பத்மநாதனின் பேட்டியில் கூறியுள்ளார். அவரை இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும்

பணிஸ் மாமாவாக மாறிய பத்மநாதனின் NERDOஇன் சாதனை
பத்மநாதன் வடகிழக்கு புரமைப்பு அபிவிருத்திச் சபை என்று ஒன்றை அமைத்துள்ளார். அது இதுவரை சாதித்தது தேர்வுகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஒரு தேநீரும் பணிஸும் 28 நாட்களுக்கு வழங்கியது என்று பத்மநாதன் பெருமையுடன் சொல்கிறார்.

பத்மநாதன் தனது பேட்டியை இப்படி முடித்தார்:

முதலாவது, எனது தமிழ் உறவுகளுக்கு நான் சொல்வது இதுதான்... போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து, உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை

இரண்டாவது செய்தி... எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.. சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துபோன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.. யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக இலங்கையர்கள் எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து, சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்.




பத்மநாதன் பேட்டியின் நோக்கங்கள்:

  • பிரபாகரன் இறந்து விட்டார் என்று பிரகடனப் படுத்துவது.
  • கோத்தபாய ராஜபக்ச ஒரு கண்ணியவான என்று பிரகடனப்படுத்துவது.
  • புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் இருந்து பணம் கறந்து அதை இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை பராமரிக்கப் பயன்படுத்துவது.
  • தமிழர்களின் போராட்டம் தோற்றுப் போன ஒன்று என்று பிரகடனப் படுத்துவது.
  • தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்று வலியுறுத்துவது.
  • சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தமிழர்கள் ஏற்க வேண்டும் என்று பிரகடனப் படுத்துவது.
  • சகல தமிழ் இன உணர்வாளர்கள் மீதும் சேறு பூசுவது.
  • இலங்கை இனக் கொலையில் இந்தியாவின் பங்கை மறைத்து அது தமிழர்களுக்கு இறுதியில் உதவ முன்வந்தது என்று பொய்ப்பிரச்சாரம் செய்வது.
  • கருணாநிதிக்கு தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக ஒரு துருப்புச் சீட்டுக் கொடுப்பது.

பத்மநாதன் சொல்லாமல் விட்டது
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு. பத்மநாதன் இனிவரும் காலங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லை என்றும் கூறலாம். இலங்கை அரசால் "கைது" செய்யப்பட்டபின் ஒரு வருடமாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.

பிரபாகரனின் செல்வாக்கை இலங்கை அரசு உணர்ந்துள்ளது
விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதில் எஞ்சி உள்ளவர்களைப் பற்றியும் பல அவதூறுகளைத் தனது பேட்டியில் தெரிவித்தார் பத்மநாதன். ஆனால் பத்மநாதன் தனது பேட்டியில் எங்கும் பிரபாகரனுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது பிரபாகரனுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு இருக்கிறது என்று இலங்கை அரசு உணர்ந்துள்ளது என்று புலப்படுகிறது.

பத்மநாதன் பௌத்தராக மாறி தமிழர்களையும் மாற்றுவாரா?
இத் தலைப்பைப் பார்த்தவுடன் சிலர் தமிழர்கள் இந்துக்களாக இருந்து என்னத்தை கிழித்தார்கள் என்று சொல்வது கேட்கிறது. ஒரு காலத்தில் சில பார்ப்பன ஊடகங்கள் ஈழத் தமிழர்கள் மலையாளிகள் என்று ஆராய்ச்சி செய்தார்கள். பின்பு பல தமிழின உணர்வாளர்கள் அதன் அபத்தத்தை நிரூபித்தார்கள். இப்போது ஈழத் தமிழர்கள் சிங்கள பௌத்தர்கள் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். பத்மநாதன் பௌத்த மதத்தை உயர்த்தி பேட்டியளித்துள்ளார். அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் பௌத்த மதத்திற்கு மாறினால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலை தோன்றலாம். பத்மநாதனுக்கு மொட்டை அடித்தாயிற்று. காவி உடை தரிக்க வேண்டியதுதான் மிச்சம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...