Thursday 17 December 2020

ரஃபேல் விமானத்தில் குழப்ப முடியாத GPS

  


2018-ம் ஆண்டு நேட்டோ படையினரும் பின்லாந்தும் இணைந்து செய்த Trident போர்ப்பயிற்ச்சியின் போது. நோர்வேயினதும் பின்லாந்தினதும் பூகோள நிலையறி முறைமையை (GPS) இரசியா குழப்பியதாக செய்திகள் வெளிவந்திருந்தன. சிரியப் போரிலும் இது நடந்தது எனக் கருதப்படுகின்றது. இரசிய அதிபர் விளடிமீர் பயணிக்கும் இடங்களில் பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்பி அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இரசியா முதலில் குழப்பி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின்னர் அது போர்முனைகளில் பாவிக்கக் கூடிய அளவிற்கு மேம்படுத்தப்பட்டது. இதைச் சமாளிக்க ரஃபேல் விமானத்தில் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்படவுள்ளது. 

இலத்திரனியல் போரில் வல்ல இரசியா

பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்புதல் என்பது இலத்திரனியப் போரியலின் ஒரு பகுதியாகும். 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் USS Donald Cook போர்க்கப்பலுக்கு அண்மையாக இரசியாவின் SU-24 போர் விமானம் பறைந்தவுடன் அந்தப் போர்க்கப்பலில் உள்ள எல்லா இலத்திரனியல் கருவிகளும் செயலிழந்து போயின. அந்த அளவிற்கு இரசியாவின் இலத்திரனியல் போர் முறைமை மேம்பட்டதாக இருக்கின்றது. இரசியாவின் SU-24 இருந்து வீசிய வானலை இலத்திரன் அலைகள் மூலமாக அமெரிக்கப் போர்க்கப்பலின் இலத்திரனியல் செயற்பாடுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அமெரிக்காவின் மிகப்பாரிய பெறுமதி மிக்க கப்பல்களை மிகமலிவான இலத்திரனியல் கருவிகள் மூலம் செயலிழக்கச் செய்யும் இரசியாவின் தொடர்ச்சியான ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளது. 

துல்லிய தாக்குதலுக்கு GPS அவசியம்

தரையில் இருந்து 20,000கிமீ (12,000மைல்) உயரத்தில் மிதக்கும் முப்பதிற்கு மேற்பட்ட செய்மதிகளில் இருந்து வரும் தொடர்பாடல்கள் மூலம் பூகோள நிலையறி முறைமை (GPS) செயற்படுகின்றது. பூகோள நிலையறி முறைமை செய்மதிகளின் உதவிகளுடன் செயற்படுகின்றது. செய்மதிகளில் இருந்து ஒளியின் வேகத்தில் வரும் சமிக்ஞைகளை குழப்புவதன் மூலம் பூகோள நிலையறி முறைமையைக் குழப்பலாம். 1990/91 ஆண்டுகளில் நடந்த வளைகுடாப் போரின் போது அமெரிக்கப் படையினர் தரை, வான், கடல் ஆகிய மூன்று நிலைகளில் இருந்தும் ஈராக் மீது ஏவுகணைகளை வீசி இலக்குகளை துல்லியமாக தாக்கியமைக்கு பூகோள நிலையறி முறைமை (GPS) காரணமாக அமைந்தது. அதைப் பார்த்து வியந்த ஒரு இரசியப் படைத்துறை நிபுணர் இது போரியலில் அடுத்த தலைமுறை வகையைச் சேர்ந்தது. என்றார்.

What is a GPS jammer?

A GPS jammer is a typically small, self-contained, transmitter device used to conceal one’s location by sending radio signals with the same frequency as a GPS device. When this occurs, the GPS device is unable to determine its position due to interference.

பரவலாகப் பயன்படும் GPS

இலண்டன் பங்குச் சந்தை உலகின் பல் வேறு பாகங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பாவிக்கும் பூகோள நிலையறி முறைமையும் பல தடவை குழப்பப்பட்டன. பெரு நகரங்களில் நடந்து செல்லும் சாதாரண பயணிகள், படையினர், விமானங்கள், கடற்கப்பல்கள் என எல்லாப் போக்கு வரத்துக்களுக்கும் பூகோள நிலையறி முறைமை (GPS) பெரிதும் ங்கள், ஆளில்லா கப்பல்கள், ஆளில்லா நீர்மூழ்கிகள், தானாக இயபயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா விமானங்கும் மகிழூர்ந்துகள், ஊபர் போன்ற வாடகைப் போக்குவரத்து நிறுவனங்கள் தமது செயற்பாடுகளுக்கு பூகோள நிலையறி முறைமையில் (GPS) பெரிதும் தங்கியிருக்கின்றன. 

குவய தொழில்நுட்பம் (Quantum Technology)


2018-ம் ஆண்டு நேட்டோவின் போர் ஒத்திகையின் போது பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்பியதைத் தொடர்ந்து இனி வரும் காலத்தில் இதை எப்படி எதிர் கொள்வது என பல நாடுகளும் ஆய்வில் இறங்கின. பிரான்ஸ் குவய தொழில்நுட்பத்தை (Quantum Technology) பாவித்து குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமையை உருவாக்கியுள்ளது. அணுவின் உட்பிரிவுகளான இலத்திரன் புரோட்டன் போன்றவற்றையும் அவற்றின் அலை இயக்கத்தையும் பாவிப்பது குவய தொழில்நுட்பமாகும். Extremely High-Performance quantum accelerometers மூலம் Gyroscopes எனப்படும் தொலை நோக்கிகளை இயக்குவதால் குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமையை பிரான்ஸ் உருவாக்கியுள்ளது.  Gyroscopes துரிதமாகச் சுழலும் சில்லுகளைக் கொண்டது. இதன் இலத்திரனியல் வடிவம் தானாக இயங்கும் விமானங்களிலும் ஏவுகணை வழிகாட்டி ஏவுகணைகளிலும் பயன்படுத்தப் படும். இவற்றை Quantum Technology மூலம் பிரான்ஸ் மேம்படுத்தியுள்ளது.



பிரான்ஸின் குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமை ரஃபேல் விமானங்களில் இணைக்கப்படவுள்ளன. இந்தியா பிரான்ஸின் ரஃபேல் விமானங்களை வாங்கியதைத் தொடர்ந்து கிரேக்கமும் துருக்கியின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ரஃபேல் விமானங்களை வாங்கியது. இப்போது இந்தோனேசியாவும் ரஃபேலைக் கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. தனது போர்ப்படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதை பிரான்ஸ் எப்போது தவிர்க்கின்றது. தனது படைக்கலன்களை தானே உற்பத்தி செய்வதால் தனது தனித்துவத்தைப் பேண முடியும் எனக் கருதும் பிரான்ஸ் தனது போர் விமானங்களை தொடர்ச்சியாக புதியதாக்கிக் கொண்டே இருக்கின்றது.

இணைய வெளிப் போர் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்(Click): அமெரிக்க இணையவெளிப் போர்

Monday 14 December 2020

அமெரிக்க சீன மும்முனைப் போர்

 

அமெரிக்க தரைப்படைத் தளபதி (ஜெனரல்) மார்க் மில்லே 2020 டிசம்பர் 8-ம் திகதி அமெரிக்க ஊடகமான Wall Street Journal இற்கு பேட்டியளிக்கும் போது சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஈடாக தன் படைத்துறையை வளர்ச்சியடையச் செய்து 2035-ம் ஆண்டளவில் அமெரிக்காவிற்கு இணையான ஒரு படைத்துறையை உருவாக்கி 2050-ம் ஆண்டளவில் அமெரிக்காவைத் தோற்கடிக்கக் கூடிய நிலையை எய்தவிருக்கின்றது என்றார். சீனாவைச் சமாளிக்கக் கூடிய வகையில் அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும் படைத்துறையையும் கட்டி எழுப்ப வேண்டும் என்றார் ஜெனரல் மார்க் மில்லே. மேலும் அவர் இரு பெருவல்லரசுகளின் போட்டி பெரும் போராக உருவெடுக்காமல் இருக்க அமெரிக்கா விண்வெளியிலும் இணையவெளியிலும் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நகர்வுகளைச் செய்யத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.



சீனக் கனவும் சீன விரிவாக்கமும்

இரு பெரும் சீனக் கனவுகள்

1. சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை 2021-ம் ஆண்டு நிறைவு செய்யும் போது சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கம்

2. 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கம்.

சீன விரிவாக்கத்தின் இலக்குகள்:

1.  தென் சீனக் கடலை முழுமையாக தனதாக்கல்

2. தைவானைக் கைப்பற்றல்

3. அருணாச்சல பிரதேசம் – தெற்கு தீபெத்

4. கிழக்குச் சீனக் கடல்

5. மங்கோலியாவை சீனாவுடன் இணைத்தல்

6. இரசியா ஆதிக்கத்தை மத்திய ஆசியாவில் இல்லாமற் செய்தல்

7. மத்திய ஆசிய நாடுகளிலும் பாக்கிஸ்த்தானிலும் சீனப் படைத்தளங்கள்.



இரசிய சீன ஒத்துழைப்பு

சீனாவும் இரசியாவும் ஒன்றை ஒன்று ஐயத்துடன் நோக்கினாலும் பொது எதிரியான அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ள பல முனைகளின் ஒத்துழைக்கின்றன. 2012இல் இருந்து இரசியாவும் சீனாவும் இணைந்து கடற்போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா சீனாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தொழில்நுட்ப உருவாக்கலில் உதவி செய்து வருகின்றது என்றார். சீனா அமெரிக்காவுடன் படைத்துறைத் தொழில்நுட்பத்தில் போட்டியிடும் திறனை வளர்க்க இரசிய சீன நட்பு உதவியாக அமைகின்றது. 2014இல் உக்ரேனில் இரசியா தலையிட்டதன் பின்னர் அதிகரித்த அமெரிக்க இரசிய முறுகல் சீன இரசிய ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2020 நவம்பரில் சூடான் துறைமுகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இரசியாவின் நான்கு கடற்படைக் கப்பல்களும் 300 படையினரும் நிலைகொள்வதற்கான உடன்படிக்கையை இரசியா சூடான் அரசுடன் செய்துள்ளது. அமெரிக்கா, ஆபிரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் பெரும் கடல்களால் தனியாக பிரிக்கப்பட்டிருக்க ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அதில் இரசியா இரண்டு கண்டத்திலும் அகன்றுள்ளது. ஐரோப்பிய-ஆசியப் பெரு நிலப்பரப்பில் இரசியா, இந்தியா, சீனா ஆகியவை மக்கள் தொகை அடிப்படையில் பெரிய நாடுகள். இரசிய சீன ஒத்துழைப்பு இந்த பெரு நிலப்பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

சீனப் பொருளாதாரமும் படைத்துறையையும்

முத்துமாலைத் திட்டம் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் திட்டம் என நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே உலகின் பெரும் பகுதியை துறைமுக அபிவிருத்தி என்னும் பெயரில் சீனா சுற்றி வளைத்து விட்டது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விநியோகத் தொடரிக்கு என்ன மாற்றீடு என்று சிந்திக்கும் போது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (Belt & Road Initiative) திட்டத்தை செயற்படுத்தி உலகின் பெரும் பகுதியை சீனா தன்னுடன் ஒரு விநியோகத்தொடரி மூலம் இணைக்கின்றது. விண்வெளிப் போர்த்திறன், ஹைப்பர் சோனிக் வேகப் படைக்கலனகள், விமானம் தாங்கிக் கப்பல்கள் என பலவகையில் தன்னைப் வலிமைப்படுத்தும் சீனா 2017-ம் ஆண்டு சீனா தனது நாட்டுக்கு வெளியே முதலாவது தனது படைத்தளத்தை ஆபிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபுக்தி நாட்டில் அமைத்தது. உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் சீனா மட்டுமே 2020-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க தரைப்படைத் தளபதி (ஜெனரல்) மார்க் மில்லே சொல்லியது போல் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான நகர்வுகளை செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நடக்காமல் தடுக்கும். அவரது உட் கருத்து அமெரிக்கா சீனாவிலும் பார்க்க படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் பெருமளவு முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே. அதனால் அமெரிக்கா வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போர், நாணயப் போர் ஆகிய மும் முனைப் போரை செய்ய வேண்டியுள்ளது.



வர்த்தகப் போர்

சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வர்த்தக்ப் போர் என்பது, சுருங்கச் சொல்லின், இரண்டு நாடுகள் தமக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப் படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்தலாகும். டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்து வைத்த இப்போரை அவருக்குப் பின் பதவிக்கு வரும் ஜோன் பைடனும் தொடரவிருக்கின்றார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளைப் பிரித்தலை இணைபிரித்தல் (decopuling) என அழைக்கின்றனர். சீனாவில் இருந்து அமெரிக்கா பெருமளவு பொருட்களை இறக்குமதி செய்தல், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தமது உற்பத்திகளை செய்தல், அமெரிக்காவின் திறைசேரி விற்பனை செய்யும் கடன்முறிகளை சீனா வாங்குதல் (சீனாவிடம் அமெரிக்கா கடன் படுதலை இப்படிக் கௌரவமாக அழைப்பர்), சீனா மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்றல் என இரு நாடுகளும் பல துறைகளின் இணைந்துள்ளன. இந்த இணைப்பை இலகுவில் பிரிக்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் உலக விநியோகத் தொடரி (Supply chain) பெரிதும் தங்கியுள்ளது. இதைப் பிரிக்க நீண்ட காலம் எடுக்கும்,


தொழில்நுட்பப் போர்

தொழில்நுட்ப போர் என்பது ஒரு நாட்டின் தொழில்நுட்பம் வளராமல் தடுக்க இன்னொரு நாடு எடுக்கும் நடவடிக்கைகளாகும். குறைகடத்தி (Semiconductor) உற்பத்தியில் 2019-ம் ஆண்டுக்குரிய தகவல்களின் படி அமெரிக்கா 47%, தென் கொரியா 19%, ஜப்பான் 10% ஐரோப்பா 10%, தைவான் 6%, சீனா 5% என இருந்தது. அமெரிக்காவுடனும் தைவானுடனும் ஒப்பிடுகையில் சீனா குறைகடத்தி தொழில்நுட்பத்தில் நான்கு ஆண்டுகள் பிந்தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  இதை சீனாவின் வலுவின்மைப் புள்ளியாகப் பார்த்த அமெரிக்கா சீனாவிற்கான குறைகடத்தி ஏற்றுமதி மீது தடைகளை விதித்ததுடன் மற்ற நாடுகளையும் தடை செய்ய வற்புறுத்தியது. குறைகடத்திகள் சீனா உற்பத்தி செய்யும் பெருமளவு இலத்திரனியல் பொருள்களிற்கு அவசியமானவையாகும். அதிலும் சீனாவின் 5ஜீ தொழில்நுட்பத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்வதற்கும் அவசியமானவையாகும். அதைச் சமாளிக்க சீனா குறைகடத்தி உற்பத்தித் துறையில் 29பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்தது, அதற்கு போட்டியாக அமெரிக்கா 37பில்லியன் டொலர்களை அதே துறையில் முதலீடு செய்ய முடிவெடுத்தது. சீனா தான் முன்னணியில் இருக்கும் முக இனங்காணல் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு அரச அனுமதி பெற வேண்டும் என அறிவித்தது.

ஹுவாவே நிறுவனத்திற்கு தேவையான Semiconductorsஐ தைவானில் இருந்தே பெறப்பட்டு வந்தன. அமெரிக்கா ஹூவாவேயிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் தைவான் சீனாவிற்கு Semiconductorsஐ ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது. அத்துடன் Semiconductorsஐ உருவாக்கும் Chip designing software ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டது. HiSilicon Kirin 9000 என்ற Semiconductorsஐ உருவாக்கும் சீனாவின் முயற்ச்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை. மென்பொருட்களை சீனாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்கா தடை செய்தமை சீனாவின் பல Semiconductors உற்பத்தி நிறுவனங்களை நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சீனாவின் என்ற நிறுவனத்தின் Semiconductor Manufacturing International Corporation மீதும் அமெரிக்கா ஏற்றுமதி தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் ஷென்ஜெயின் பிராந்திய அரசு ஹூவாவே நிறுவனத்திற்கு Semiconductors உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்க நிதி உதவி வழங்கியுள்ளது.  உலகில் அதிக கைப்பேசிகளை விற்பனை செய்யும் ஹூவாவே நிறுவனத்திடம் போதிய அளவு நிதி இருக்கவில்லை.

வூஹரின் உள்ள Semiconductors உற்பத்தி நிறுவனம் ஒன்று நிதித் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

Yangtze என்ற Memory Chip உற்பத்தி நிறுவனமும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. 

நாணயப் போர்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை தாமாகவே குறைத்தல் நாணய்ப் போர் ஆகும். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும் போது அந்த நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் இறக்குமதி குறையும். 2020இல் அமெரிக்க டொலரின் பெறுமதி எட்டு விழுக்காட்டிற்கு மேல் வீழ்ச்சியடையும் என்றும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு டொலரின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியை அமெரிக்காவால் தடுக்கவும் முடியாது. தடுப்பதை அமெரிக்கா விரும்பவும் செய்யாது. சீன நாணயத்திற்கு எதிராக டொலரின் பெறுமதி குறையும் போது சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறையும். அதைத் தடுக்க சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும். டொலரின் பெறுமதி குறையும் போது அமெரிக்காவில் உள்ள சீன முதலீடுகளின் பெறுமதியும் குறையும்.

வர்த்தகப் போரால் சீனாவிற்கு மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளும், தொழில்நுட்பப் போரால் தைவான், தென் கொரியா போன்ற நாடுகளும் நாணயப் போரால் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உட்பட ஏற்றுமதியில் தங்கியிருக்கும் நாடுகளும் பாதிப்படையும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...