Friday 28 February 2014

பாக்கிஸ்த்தான் சவுதிக்கு அணுக் குண்டு விற்பனை செய்யுமா?

பாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். எண்பது விழுக்காடு சுனி முசுலிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. பங்களா தேசப் பிரிவினையின் போது பாக்கிஸ்த்தானிய அதிபராக இருந்த யஹியா கானும் பெனாஸிர் பூட்டோவின் கணவரான முன்னாள் பாக்கிஸ்த்தானிய அதிபர் அசிஃப் அல் ஜதாரி ஆகியோர் சியா முசுலிம்களே. அணுக்குண்டு வல்லரசாக முயலும் சியா ஈரானிற்கும் பிராந்திய வல்லரசாக முயலும் சுனி சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டியில் பாக்கிஸ்த்தான் இனி வரும் காலங்களில் பெரும் பங்காற்றவிருக்கின்றது.

1987இன் பின்னர் பாக்கிஸ்த்தானில் மதவாதம் தீவிரமடைந்த போது சியா-சுனி மோதல்கள் பல நடைபெற்றன. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுமளவிற்கு மோதல்கள் தீவிரமடைந்தன. இந்த மோதல்களுக்கு அல் கெய்தா ஒரு புறமும் சவுதி அரேபியா மறுபுறமும் நின்று சுனி முசுலிம்களுக்கு உதவின.

சியா முசுலிம்களுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சவுதி அரேபியா தனது எதிரி நாடான  சிய முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன் பல முனைகளில் போட்டி போடுகின்றது. இந்த இரு நாடுகளின் போட்டிக்களமாக பல மத்திய கிழக்கு நாடுகள் மாறிவருகின்றன.
ஈரான் தொழிழ்நுட்பத்துறையில் வளர்ச்சியடைந்து தானகவே பல படைக்கலன்களை உருவாக்கி வருகின்றது. சவுதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து பல புதிய தரப் படைக்கலன்களை வாங்கிக் குவிக்கின்றது.

ஈரானின் அணுக் குண்டு உற்பத்தியை அமெரிக்கா அழித்து ஒழிக்க வேண்டும் என சவுதி அரேபியா விரும்பியது. ஈரானுக்கு எதிரான தாக்குதல் தமது நாட்டுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலைத் அதிகரிக்கும் எனக் கருதிய அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை விரும்பவில்லை. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் தாம் அமெரிக்கா மீது தாக்குதல் நடாத்துவோம் எனப் பகிரங்கமாக அறிவித்தது. இதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியைத் தடுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடையை நடைமுறைப்படுத்தின. இதனால் ஈரானியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட அது அமெரிக்காவுடன் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இருதரப்பும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தன. ஈரான் பதப்படுத்திய முழு யூரேனியத்தையும் அழிக்க வேண்டும் என சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் வலியுறுத்தின. அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்க சவுதி திட்டமிடுகின்றது. சிரியாவில் ஆட்சி செய்யும் அல் பஷார் அசாத் சியா முசுலிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனக் குழுமத்தை சேர்ந்தவர். இவரை அகற்றி சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சுனி முசுலிம்களின் கைக்களில் ஆட்சியை ஒப்படைக்க அமெரிக்கா உதவி செய்யாததும் சவுதியை ஏமாற்றவும் ஆத்திரமும் அடைய வைத்தது. இதனால் சவுதி அரேபியா அமெரிக்காவுடனான தனது நெருங்கிய உறவை ஒரு புறம் வைத்து விட்டு தனது பாதுகாப்புத் தொடர்பாக மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியது. இரசியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தனது நட்பு நாடும் சுனி முசுலிம் நாடான எகிப்தையும் இரசியாவுடன் நட்பைப் புதுப்பிக்க வைத்தது.

சவுதி அரேபியா தனது பாதுகாப்புக்கு மாற்று வழி தேடும் முயற்ச்சியில் இன்னும் ஓர் அம்சமாக சவுதி இளவரசரும் துணைத் தலைமை அமைச்சருமான சல்மன் பின் அப்துல் அசீஸ் 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாத நடுப்பகுதியில்பாக்கிஸ்த்தானிற்கான ஒரு பயணத்தை மேற்கொண்டார். சவுதி அரச பிரமுகர் பாக்கிஸ்த்தானிற்கு இப்போது பயணம் செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது எனக் கருதப்படுகின்றது.

உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட நாடுகளின் ஒன்றான பாக்கிஸ்த்தானின் உறவும் ஒத்துழைப்பும் சவுதி அரேபியாவிற்குப் பெரிதும் பயன்படும். அணுக்குண்டு வைத்திருக்கும் ஒரே ஒரு நாடு பாக்கிஸ்த்தானாகும். கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியா பாக்கிஸ்த்தானின் அணுவலு உற்பத்தியில் முதலீடு செய்து வருகின்றது. சவுதியின் துணைத் தலைமை அமைச்சர் சல்மன் பின் அப்துல் அசீஸின் பாக்கிஸ்த்தானியப் பயணத்தின் போது சவுதி அரேபிய போர் விமானிகளுக்கு பாக்கிஸ்த்தான் பயிற்ச்சி வழங்குவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்துடன் பாக்கிஸ்த்தானியப் பயிற்ச்சி விமானங்களை சவுதிக்கு விற்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

தனது பாதுகாப்பிற்கான மாற்று வழிகளில் சவுதி சீனாவிடமிருந்து புதிய தர தரையில் இருந்து தரைக்கு வீசக் கூடிய ஏவுகணைகளையும் இரகசியமாக வாங்கிக் குவித்துள்ளது.

மத்திய கிழக்கு தொடர்ந்து எரியும் என எதிர்பார்க்கலாம்.

Sunday 23 February 2014

காணாமல் போன அதிபரும் கதறிய உக்ரேயின் சிதறுமா என்ற கேள்வியும்.

2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் திகதி உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யவிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆரம்பமான உக்ரேயின் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் திகதி திடீரென பெரும் திருப்பத்துக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரேயின் பாராளமன்றத்தின் அதிரடி நடவடிக்கைக்கள்
உக்ரேயினைத் தன்பக்கம் இழுக்கப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருந்த இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை (Oleksandr V. Turchynov) தற்காலிக அதிபராக்கியது. இதற்கு முன்னரே நிலைமை தனக்கு எதிராகத் திரும்புகிறது என உணர்ந்த விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். உக்ரேயினில் நிகழந்த மற்ற அதிரடி மாற்றங்கள்:

  • சிறையில் இருந்த முன்னாள் தலைமை அமைச்சர் ஜூலியா தமொஷென்கோவை ( Yulia V. Tymoshenko) விடுவித்தது.
  • பதவியில் இருந்து விரட்டப்பட்ட விக்டன் யனுக்கோவைச்சை கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • விக்டர் யனுகோவிச்சிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட உற்துறை அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கியது. 
  • உக்ரேனியப் படைத்துறை தாம் அரசியல் மாற்றங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தது.
  • வெளியுறவுத் துறை அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கியது.
  • இரசியாவின் முகத்தில் கரிபூச சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைச் சட்டத்தை இரத்துச் செய்தது. 
  • சுகாதாரத் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
  • ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • கல்வித்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
  • மே மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 
இரகசியச் சதி
உக்ரேயினில் ஆட்சி மாற்றத்திற்கு திரைமறைவில் ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, போலாந்து ஆகிய நாடுகள் செயற்பட்டன. விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன. பன்னாட்டு நாணய நிதியம் அரச உடமையான நிறுவனங்களை தனியார் மயமாக்கும் படி உக்ரேயினின் அரசை நிர்ப்பந்திக்கும். அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் போது மேற்கு நாடுகள் அவற்றில் முதலீடு செய்து இலாபமீட்டும்.

அடிவயிற்றில் அடிவாங்கிய இரசியா தனது படையை அனுப்புமா?
உக்ரேயினில் நடந்து கொண்டிருக்கும் அதிரடி மாற்றங்கள் உக்ரேயினை இரசியாவின் பிடியில் இருந்து விடுவித்து அதை மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் இணைப்பதற்கு வழி செய்வதாக அமைகின்றது.  மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பின்னணியில் இருந்து செய்த திரைமறைவு நடவடிக்கைகள்தான் விக்டர் யனுகோவிச்சைப் பதவியில் இருந்து விரட்டியது என்பதில் ஐயமில்லை. இரசியாவின் பாதுகாப்பிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின் நேட்டோப் படைக் கூட்டமைப்பில் இணைந்தால் அது இரசியாவின் உலக அரங்கில் மீண்டும் செய்ய விரும்பும் ஆதிக்கத்திற்கு பேரடியாகும். உக்ரேயின் என்பதன் பொருள் எல்லை நாடு என்பதாகும். இரசியாவின் எல்லையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் என்பது. இரசியா விரும்பக்கூடிய ஒன்றல்ல. இரசியக் கடற்படையின் கருங்கடல் பிரிவின் தலைமையகம் உக்ரேயினின் செவெரோப்போல் நகரில் இருக்கிறது. உக்ரேயின் இரசியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை அதன் மென்மையான அடிவயிறு என்கிறார்கள் படைத்துறை நிபுணர்கள். இரசியா மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை உக்ரேயினூடாகவே செய்கின்றது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொண்டலினா றைஸ் இரசியா உக்ரேயினில் படைத்துறைத் தலையீடு செய்தால் அது பெரும் ஆபத்தான தவறாக அமையும் என்றார். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரும் இரசியா உக்ரேயினில் தலையிடக் கூடாது எனத் தெரிவித்தார். உக்ரேயினில் நடந்த ஆட்சி மாற்றத்தை இரசியா ஒரு பயங்கரவாதிகளின் படைக்கலன் ஏந்திய சதி என இரசியா விமர்சித்துள்ளது. அத்துடன் உக்ரேயினின் கிரிமியாப் பிரதேச மக்கள் தம்மைப் பாதுகாக்கும்படி இரசியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிரிமியாவில் இரசியப் படைத்தளம் இருக்கின்றது. 1954-ம் ஆண்டின் முன்னர் கிரிமியா இரசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் குருசேவ் அதத உக்ரேயினுடன் இணைத்தார்.

உக்ரேயின் பிளவுபட்டுச் சிதறுமா?
2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23-ம் திகதி உக்ரேயினில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்களை உக்ரேயினில் இரசியர்கள் பெரும்பகுதியாக் வாழும் பகுதியில் உள்ள பிரதேச அதிகார மையங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேயினில் கிழக்குப் பகுதி முழுவதிலும் சில தெற்குப் பகுதிகளிலும் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்கள் தாம் இனி உக்ரேயின் அரசிற்கு கீழ்படிந்து நடக்க மாட்டோம் வரி செலுத்த மாட்டோம் என அறிவித்து விட்டனர். சிலர் ஆர்ப்பாட்டங்களும் செய்யத் தொடங்கி விட்டனர். உக்ரேயின் பிளவு படக்கூடாது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொண்டலினா றைஸ் தெரிவித்துள்ளார். உக்ரேயில் திடத்தன்மை நிலவ அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பன்னாட்டு நாணய நிதியத்துடனும் இரசியாவுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய உக்ரேயின் அரசை எதிர்க்கும் பிராந்தியம்.
இரசியாவிற்கு மும் முனை ஆபத்து
இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின் இரசியாவிற்கு எதிரான நேட்டோப் படைக் கூட்டமைப்பில் இணையும் அபாயம் இப்போது தோன்றியுள்ளது. அத்துடன் தனது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியா என்னும் ஒரு பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கும் கனவிற்கு பெரும் அடி விழுந்துள்ளது. உக்ரேயினைஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிடாமல் தடுத்து தனது யூரோ ஏசியாக் கூட்டமைப்பில் இணைக்க இரசியா எண்ணி இருந்தது. இவை எல்லாவற்றிலும் மேலாக இரசியாவிலும் அரசியல் சீர் திருத்தம் கோரி மக்கள் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனுக்கு எதிராகக் கிளம்பலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...