Thursday 14 April 2022

உக்ரேனின் டொன்பாஸ் பிராந்தியத்திற்கு சுயநிர்ணய உரிமையுண்டா?

  


2022 ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து உக்ரெனின் கிழக்குப் பிரதேசமான டொன்பாஸ் பகுதியில் இரசிய அதிபர் புட்டீன் தனது ஆக்கிரமிப்பு போரை தீவிரப்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை இரசியப் படையினரின் ஆதரவுடன் அங்கு வாழும் இரசிய மக்கள் பிரிவினைவாதப் போர் தொடுத்தனர். உக்ரேனின் முழு நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்கும் விளடிமீர் புட்டீனின் திட்டத்தில் அது முக்கிய பங்காக அமைந்தது. உக்ரேனில் மிகவும் கைத்தொழில் மயமாக்கப்பட்ட டொன்பாஸ் பிரதேசத்தின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளை இரசியப் படையினரும் டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களும் இணைந்து 2014-15இல் நடந்த போரில் கைப்பற்றிக் கொண்டனர். டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களுக்கு அங்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா என நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

டொன்பாசின் வரலாறு

ஆறாம் நூற்றாண்டில் உக்ரேனிலும் கிறிமியாவிலும் கிரேக்கர்கள் குடியேற்ற ஆட்சி ஏற்படுத்தினர். அதன் பின்னர் அவர்களுடன் ஈரானியர்கள் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து துருக்கியர்கள் அப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்களிடமிருந்து உக்ரேனியர்கள் ஏழாம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களை அரபுக்கள் ஆக்கிரமித்தனர். உக்ரேனியர்கள் கிரேக்கர், ரோமர், துருக்கியர், அரபுக்கள், ஈரானியர் போன்ற பண்டைய நாகரிகம் மிக்க இனங்களுடன் தொடர்பு பட்டவர்களாக இருந்தபடியால் அவர்களும் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். தற்போதைய இரசியத் தலைநகர் மொஸ்க்கோ ஒரு கிராமமாக இருந்த போது உக்ரேனியத் தலைநகர் கீவ் ஒரு உலகத்தரம் வாய்ந்த நகராக இருந்தது. 18-ம் நூற்றாண்டின் பின்னரே உக்ரேனின் கிழக்குப் பதியான டொன்பாஸ் பிரதேசத்துடன் இரசியர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

நிலக்கரிக்காக நிலம் பிடித்த இரசியர்

கைத்தொழில் புரட்சி ஐரோப்பாவிற்கு பரவிய நிலையில் நிலக்கரிக்கான தேடல் ஐரோப்பாவில் தீவிரமானது. 1721-ம் ஆண்டு உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொன்பாஸ் பிரதேசத்தில் நிலக்கரி இருப்புக் கண்டறியப்பட்டது. மரம் பழுக்க வரும் வௌவால்களாக கிரேக்கர், சேர்பியர், இரசியர் எனப்பலர் அங்கு சென்று நிலக்கரி அகழும் தொழிலில் ஈடுபட்டனர். பிரித்தானிய முதலாளிகளும் அங்கு அக்கறை காட்டினர். 1869-ம் ஆண்டு வேல்ஸ் வர்த்தகரான John Hughes என்பவர் டொன்பாஸ் பகுதியில் உருக்கு அகழ்வில் ஈடுபட்டு அங்கு பெரிய உருக்கு ஆலையையும் நிறுவினார். அவரே Donetsk என்ற நகரை உருவாக்கிவர் ஆவார். Donetsk இரசியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். Russian Imperial Census என்ற இரசிய ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிவு 1897 ச்செய்த கணக்கெடுப்பின் படி Donetsk மாகாணத்தில் 52.4% உக்ரேனியர்களும் 28.7% இரசியர்களும் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள், ஜெர்மனியர்கள், யூதர்கள், தாட்டார்கள் போன்றவரகளும் அங்கு வாழ்ந்துள்ளனர். 1918-ம் ஆண்டு வரை உக்ரேனிய குடியரசின் கட்டுப்பாட்ட்டில் டொன்பாஸ் பிரதேசம் இருந்தது. பின்னர் இரசியர்கள் உக்ரேனை ஆக்கிரமித்து உக்ரேனையும் தங்களது “பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு” என்பதன் ஒரு பகுதியாக்கினர். உக்ரேனையும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ஒரு “குடியரசு” எனவும் பறைசாற்றினர். சோவியத் ஒன்றிய காலத்தில் அதில் இணைக்கப்பட்ட குடியரசுகளின் வளம் மிக்க பகுதிகளில் இரசியர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பிரதேசத்தில் இரசியர்கள் திட்டமிட்ட முறையில் பெரும்பான்மை இனமாக்கப்பட்டனர். Donetsk பகுதியில் 52.4% விழுக்காடாக இருந்த உக்ரேனியர்கள் 46% ஆக்கப்பட்டு 28.7% ஆக இருந்த இரசியர்கள் 48.15% ஆக அதிகரிக்கப்பட்டனர். இதுவே Luhansk மாகாணத்திலும் நடந்தது. ஆக்கிரமித்து இணைத்து குடியேற்றம் மூலம் பெரும்பான்மை ஆக்கப்பட்டவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா? கட்டமைக்கப்ப்ட்ட இனக்கொலை, இனச்சுத்தீகரிப்பு போன்றவற்றை இரசியா பல நூற்றாண்டுகளாக உக்ரேனியர்களுக்கு சொந்தமாக இருந்த டொன்பாஸ் பிரதேசத்தில் செய்யவில்லை என்பதை மறுக்க முடியுமா?

உக்ரேனின் ஒரு பகுதி டொன்பாஸ்

சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்த போது டொன்பாஸ் பகுதி உக்ரேனின் பகுதியாகவே இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கு ஏற்ப உக்ரேன் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்றது. ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபையால் உக்ரேன் ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக டொன்பாஸ் இருந்தது. உக்ரேன் சோவியத் ஒன்றியதில் இருந்து பிரியும் போதோ அல்லது தனிநாடாகப் பிரகடனப் படுத்தப் பட்ட போதோ டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பெரும்பாலான உக்ரேனியர்களின் கருத்து தம்முடைய கடந்த காலத்தை இரசியா அபகரித்தது. என்பதாகும். அதே இரசியா தமது எதிர்காலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதும் பெரும்பாலான உக்ரேனியர்களின் நிலைப்பாடும் ஆகும். அதனால அவர்கள் இரசியாவின் இரசியாவின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதிலும் பார்க்க வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பில் இணைய விரும்பினார்கள் இதற்கான நகர்வுகளை 2014இல் உக்ரேனியர்கள் செய்த போது இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது. 2019இல் உக்ரேனின் அரசியலைப்பு நேட்டோவில் உக்ரேன் இணைவதை உறுதி செய்யும் வகையில் உக்ரேன் அதிபர் செயற்பட வேண்டும் என திருத்தப்பட்டது. இரண்டாம சோவியத் ஒன்றியத்தை (USSR-2.0) கட்டி எழுப்பும் வெறியுடன் இருக்கும் விளடிமீர்புட்டீனுக்கு அது கடும் சினத்தை மூட்டியதனால் 2021இல் உக்ரேனை சுற்றி இரசியப் படைகளை நிறுத்தி உக்ரேனை ஆக்கிரமிப்பேன் என மிரட்டிய போது உக்ரேனியர்கள் மசியவில்லை. சீற்றமடைந்த புட்டீன் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனை ஆக்கிரமிக்க அங்கு தன் படைகளை அனுப்பினார்.

புட்டீனின் நில அபகரிப்பு வெறி

2014இல் உக்ரேனின் கிழக்குப் பகுதிக்கு இரகசியமாக இரசியப் படையினரை அனுப்பி அங்கிருந்த உக்ரேனியப் படையினர் விரட்டப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை உக்ரேனியர்கள் இழந்தனர். டொன்பாஸ் பகுதியின் Donetsk மற்றும் Luhansk மாகாணங்கள் தம்மை தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. அதேவேளை கிறிமியாவை கைப்பற்றிய இரசியப்படைகள் அங்கு கருத்துக் கணிப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதை இரசியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். உக்ரேனை முழுமையாக அபகரிக்காமல் பகுதி பகுதி பகுதியா அபகரிக்கும் திட்டத்தின் முதற்பகுதியை புட்டீன் 2014 சிறப்பாக நிறைவேற்றியமைக்கு காரணம் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பிற்கு தயார் நிலையில் இல்லாமல் இருந்தமையே காரணம். 2008-ம் ஆண்டு ஜோர்ஜீயா மீது இரசியா ஆக்கிரமிப்பு போர் தொடுத்த போது உக்ரேனியர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இரசிய எல்லையில் உள்ள போல்ரிக் நாடுகளான எஸ்துவேனியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. ஆனால் அந்த நாடுகளால் இரசியாவிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்பட்டதில்லை. 2014 உக்ரேனின் நிலங்களை இரசியா அபகரித்த பின்னர் இரசியாவின் பல அயல் நாடுகள் தமது நாடுகளில் நேட்டோ படைகள் நிலை கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. போலாந்து அமெரிக்கப்படையினர் தமது நாட்டில் நிலை கொள்வதற்கான செலவை ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு வழங்குவோம் எனச் சொல்லி அமெஇர்க்கப் படையினரை தம் நாட்டில் நிலை கொள்ள வைத்தனர். கரும்பு தின்னக் கைக்கூலி கிடைத்த நிலை அமெரிக்க ஆதிக்கவாதத்திற்கு!

2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னர் உரையாற்றிய புட்டீன் உக்ரேன் ஒரு நாடாக இருப்பதற்கு தகுதியற்றது. அதன் எல்லை போலியானது என்றார். ஆனால் உக்ரேனின் டொம்பாஸ் பிரதேச மாகாணங்களான Donetsk மற்றும் Luhansk ஐ தனி நாடுகளாக அங்கீகரித்தார். நியாயமற்ற அந்தக் கூற்று உக்ரேனியர்களைச் சினமடையச் செய்தமையால் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உறுதியாக நின்று போராடுகின்றார்கள். உக்ரேனும் இரசியாவும் இலங்கையின் இனக்கொலைக்கு உதவிய நாடுகள். உக்ரேன் தனது விமான ங்களை விமானிகளுடன் இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியது. அவர்கள் இலங்கையில் குண்டு போட்டார்கள் என்பதால் தமிழர்கள் உக்ரேனியர்கள் மீது வஞ்சத்தை வைத்திருக்கலாம் அதற்காக இரசியப் படையினர் உக்ரேனில் செய்யும் அட்டூழியங்களை நியாயப்படுத்தக் கூடாது.

Tuesday 12 April 2022

ஓரடியால் உலகை மூன்றாக்கிய புட்டீன்

 


இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் ஆரம்ப நோக்கங்களில் முக்கியமானவற்றில் மூன்று: 1. ஐரோப்பாவில் ஜேர்மனியை அடக்கி வைப்பது. 2. இரசியாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பது. 3. அமெரிக்காவை ஐரோப்பாவிற்குள் வரவேற்பது. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம் ஆகியவை   ஆரம்பத்தில் இதில் இணைந்து கொண்ட நாடுகளாகும். பின்னர், கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டன. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து, பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, அல்பேனியா, குரோசியா ஆகிய முன்னாள் "பொதுவுடமை" நாடுகள் இணைந்து கொண்டன.

உலக அயோக்கிய கும்பல்கள்

இரசியாவின் ஆதிக்கத்தில் இரண்டு நாடுகளின் அமைப்புக்கள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றியம். மற்றது வார்சோ ஒப்பந்த நாடுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருப்படாமல் இருந்த நாடுகள் நேட்டோ என்ற அயோக்கியக் கும்பலில் 1991இல் ஒன்றியம் உடைந்த பின்னர் இணைந்து கொண்டன. அவை ஆக்கிரமித்து இணைக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும் அவை இரசியாவிற்கு அஞ்சியே நேட்டோவை நாடின. தானும் உருப்படாமல் தன்னை சார்ந்தவர்களையும் உருப்படாமல் அரைநூற்றாண்டு இருந்த இரசியா தற்போது ஒரு உதவாக்கரைத் தலைமையின் கீழ் இயங்குகின்றது. இருக்கும் எரிபொருள் வளத்தை வைத்துக் கொண்டு தன் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி தன்னை ஒரு ஈடு இணையற்ற நாடாக முன்னேற்றாமல் உக்ரேன் என்ற ஆப்பை இழுத்து விட்டுள்ளது இரசியாவின் உதவாக்கரை தலைவனான விளடிமீர் புட்டீன். உலகப் பொருளாதாரத்திற்கும் குறிப்பாக வளர் முக நாடுகளுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. நேட்டோ என்னும் உதவாக்கரை நாடுகள் வித்தித்த பொருளாதாரத்தடை. நேட்டோவில் இணைந்த நாட்டு மக்கள் நேட்டோவில் இருந்து விலக வேண்டும் என தமது எதிர்ப்பைக் காட்டாமல் இருப்பதற்கு காரணம் சோவியத் என்ற வல்லாதிக்க அரசு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையில் அதன் உறுப்பு நாடுகளை மீது இழைத்த கொடுமைகளே! வார்சோ கும்பலுக்கும் நேட்டோ கும்பலுக்கும் இடையிலான போட்டி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் உலகைச் சீரழித்தது. சிறந்த உதாரணம் மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளத்தைக் கொண்ட ஆப்கானிஸ்த்தான்.

இரசியாவையும் ஒரு துருவம் ஆக்க புட்டீனால் முடியாது.

ஒரு துருவ ஆதிக்கம் கூடவே கூடாது என்பதை ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவு எமக்கு நன்கு போதித்தது. சிரியாவில் யாரும் எதிர்பாராதவிதமாக தலையிட்டு அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை ஆட்டிபார்த்த புட்டீன் இரசியாவை உலக ஆதிக்கத்தில் ஒரு துருவமாக்காமல் கத்தி வைத்துக் கொண்டு மிரட்டும் தெருச் சண்டியன் போல் அணுக்குண்டைப் பாவிப்பேன் என்ற மிரட்டலுடன் போதிய உளவுத் தகவல் இன்றி, போதிய படைக்கலன்கள் இன்றி, போதிய தயாரிப்பு இன்று உக்ரேனுக்குள் போதிய பயிற்ச்சியின்றிய படைப்பிரிவுகளை அனுப்பினார். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் ஒன்றான ரெக்சஸ் மாநிலத்தின் பொருளாதாரத்திலும் பார்க்க சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இரசியாவிற்கு தேவையற்ற ஒன்று இருக்குமானால் அது போர்தான். உக்ரேன் மீது போரைத் தொடங்கிய புட்டீனின் படைகள் அங்கு உள்ள மக்கள் குடியிருப்புக்களை தரைமட்டமாக்கி அப்பாவிகள் தஞ்சமடைந்திருந்த அரங்குகளிலும் தப்பி ஓட தொடருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் மீது குண்டுகளை வீசியும் தங்களை உலக அரங்கில் கேவலமான குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கின்றனர். இரசியாவும் வலிமை மிக்க நாடாக மாறி அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் உருவாக வேண்டிய நிலையில் தனது காட்டு மிராண்டித்தனமான உக்ரேன் மீதான போரால் இரசியர்கள் மீது உலக மக்களின் வெறுப்பை மேற்கு ஊடகங்கள் வெற்றிகரமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன. உக்ரேனுக்கு இரசியப்படையினரை அனுப்பி சாதித்தவை:

1.இரசியாவில் பணவீக்கத்தை 20% ஆக உயர்த்து,

2. இரசியப் பொருளாதாரம் 2022இல் பத்து விழுக்காடு தேயச்செய்யும் நிலையை உருவாக்கிமை,

3. இரசியப் பங்குச் சந்தையைச் செயலிழக்கச் செய்தமை,

4. இலண்டன் பங்குச் சந்தையில் இரசியப்பங்குகளின் பெறுமதியை 90% வீழ்ச்சியடையச் செய்தமை.

5. இரசியாவின் தாங்கிகளை துருக்கிய ஆளிலிபோர் விமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளால் தகர்க்க முடியும் என அம்பலப்படுத்தியமை

6. இரசியப் படைத்துறை திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் வலிமையற்று இருக்கின்றது என்பதை அம்பலப்படுத்தியமை.

7. அமெரிக்கா இருபது ஆண்டுகளில் ஆப்கானிஸ்த்தானில் இழந்த படையினரிலும் பார்க்க அதிக இரசியப்படையினர் உக்ரேனில் பத்து வாரங்களுக்குள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க ஊடகஙகள் கேலி செய்ய வைத்தமை. 

8. நடுநிலையாக இருந்த சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவிச் சேர்வது பற்றி சிந்திப்பதை தீவிரமாக்கியமை

9. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரசியாவின் எரிபொருளில் ஐரோப்பிய நாடுகள் தங்கியிருப்பதை இல்லாமல் ஆக்கவிருப்பமை.  

10. ஒதுங்கியிருந்த ஜெர்மனியை படைவலிமையை அதிகரிக்க செய்தமை

மொத்தத்தில் இரசியாவை உலக அரங்கில் ஒரு பெருமை மிக்க நாடாக உருவாக்குவதற்கு புட்டீன் சரிப்பட்டு வரமாட்டார். இரசியர்களுக்கு வேறு தலைமை தேவை.

புட்டீனும் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இரசியாவில் கொள்ளையடித்தையெல்லாம் இப்போது பொருளாதாரத்தடை என்னும் பெயரில் மேற்கு நாடுகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உலக ஒழுங்கு மேற்கு நாடுகளுக்கு சாதகமாக இருக்கின்றபோது அதை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயல்கின்றது. புட்டீன் சாதித்தது. எல்லாவற்றையும் குழப்பி விட்டதுதான். அத்துடன் நேட்டோக் கும்பலை புட்டீன் மேலும் ஒன்று படுத்திவிட்டார். உலகத்தை நல்வழிப்படுத்தும் திறமையோ தூய்மையோ மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து உலகைக் காப்பற்றும் திறனோ புட்டீனிடம் இல்லை.

உக்ரேன் மீது போர் தொடுத்ததன் மூலம் ஒன்று பட்ட நேட்டொ என்ற ஓர் அணி, இரசியாவும் அதன் ஒட்டு நாடுகள் என இன்னும் ஓர் அணி, இரண்டிலும் சேராமல் நேட்டோ நாடுகளுடன் மோதலைத் தவிர்க்கும் சீனா, இந்தியா போன்றநாடுகளைக் கொண்ட மேலும் ஓர் அணி என உலகத்தை மூன்றாக பிரித்து விட்டார் புட்டீன்.

இரசியாவின் எரிபொருள் வளத்தையும் கனிம வளத்தையும் இரண்டு கண்டஙகள் பரந்த அதன் பெருநிலப்பரப்பையும் வைத்து உலகை நல்வழிப்படுத்தும் நாடாக இரசியாவைக் கட்டியமைக்க ஒரு நல்ல தலைமை இரசியாவிற்கு அவசியம் தேவைப்படுகின்றது.

Monday 11 April 2022

இரசியாவின் SU¬-35 விமானத்தை சுட்டுவீழ்த்திய உக்ரேன்

  

உலகிலேயே முன்னணி விமானங்களையும் நன்கு பயிற்ச்சி பெற்ர விமானிகளையும் கொண்டதாகக் கருதப்படும் இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU­-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU­-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது.இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU­-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU­-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57 இன்னும் உக்ரேனில் களமிறங்கவில்லை என்றும் அது களமிறங்க இன்னும் தயாராகவில்லை எனவும் கருதப்படுகின்றது. 

தாழ்த்தப்பட்ட உயர் தொழில்நுட்பம்

இரசியாவின் SU­-35 போர்விமானம் எதிரியின் ரடார்களுக்கு புலப்படமாட்டாது என இரசியர்கள் பறைசாற்றியிருந்தனர். அதனால் அதை உக்ரேனுக்குள் பறக்க விட்டு அங்குள்ள ரடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு முறைமைகளை அழிப்பது என்ற நோக்கத்துடன் உக்ரேனுக்குள் சென்ற போதே அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் சென்ற இரசியப்படையினர் பல தாங்கிகளையும், உலங்கு வானூர்திகளையும் ஆளணியையும் இழந்து பல படைத்துறை நிபுணர்களின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற வேளையில் இரசியா தனது மிக உயர் தொழில்நுட்ப விமானத்தை இழந்திருப்பது அவர்களுக்கும் மேலும் அவமானகரமாக அமையும். இரசியாவின் வலிமை மிக்க Mi-28 உலங்கு வானூர்தி ஒன்று பிரித்தானியாவின் தோளில்காவும் ஏவுகணைச் செலுத்தியில் இருந்து உக்ரேனியர்கள் ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில நாட்களில் SU­-35 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

சீனா தனக்கு பாடம் என்கின்றது

இரசியாவின் Su-35 சுட்டு வீழ்த்தப்பட்சதை செய்தியாக வெளியிட்ட சீனாவின் South China Morning Post ஊடகம் அது சீனாவிற்கு ஒரு பாடம் என்கின்றது. Su-35 விமானம் ஆபத்தான வகையில் தாழப் பறந்தமையே சுடப்பட்டமைக்கான காரணமாக அது தெரிவிக்கின்றது. SEAD என்னும் Suppression of Enemy Air Defence நடவடிக்கையில் ஈடுபட்ட போதே Su-35 சுட்டு விழ்த்தப்பட்டதாக பல்கேரிய ஊடகம் சொல்கின்றது. SEAD நடவடிக்கையின் போது விமானங்கள் எதிரியின் வான் பாதுகாப்பு முறைமை, தொடர்பாடல் முறைமை, கண்காணிப்பு முறைமை போன்றவை அழிக்கப்படும்.

உன் கைப்பிள்ளை உன்னையே சரித்தது

The Drive என்ற இணையத்தளம் இரசியா தனது புதிய 9K37BUK வான் பாதுகாப்பு முறைமையை உக்ரேனில் பாவிப்பதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனின் தென்பகுதியில் உள்ள Kherson நகரைக் கைப்பற்றுவதற்கு இரசியாவிற்கு வான் ஆதிக்கம் தேவைப்பட்ட போது 9K37BUK உக்ரேன் போர் முனையில் பயன்படுத்தப்பட்டது என்றது The Drive. Kyiv Independent என்னும் உக்ரேனிய ஊடகம் 2022 ஏப்ரல் 3-ம் திகதி உக்ரேனில் செயற்பட்டுக் கொண்டிருந்த இரசியாவின் 9K37BUK என்னும் வான் பாதுகாப்பு முறைமை ஒன்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனியர்கள் தமது சிறப்புப் படையணி ஒன்றை 9K37BUK ஐக் கைப்பற்ற அனுப்பினார்கள் என்றும் அது வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்தனர் என்றும் உக்ரேனியர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் கைப்பற்றிய பின்னர் அதி அழிக்க வந்த அழிக்க வந்த இரசியாவின் Su-35 ஐ உக்ரேனியர்கள் முந்திக் கொண்டு அழித்து விட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:

1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை

2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை

3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)

4.  மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)

5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).

 

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானப் பிரச்சனை.

ஒற்றை விமானி மூலம் இயக்கப்படும் Su-35 மணிக்கு 1500மைல்கள்(2400கிமீ) வேகத்தில் 2200மைல்கள் (3600கிமீ) தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடியது. 2014-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் Su-35 வானில் இருந்து வானிற்கும் வானில் இருந்து தரைக்கும் ஏவக் கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். ஐந்தாம் தலைமுறைப் போர் வானூர்திகளின் முக்கிய திறன் அவற்றை எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாமையே. அதனால் அவற்றை Stealth (புலப்படா) என அழைப்பர். இரசியாவான் இன்னும் முழுமையான புலப்படாப் போர்வானுர்திகளை இரசியாவால் உருவாக்க முடியவில்லை. இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. இதனால் இரசிய இந்தியக் கூட்டு ஐந்தாம் தலைமுறைப் போர்வானூர்தி உருவாக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. Su-35 முதற் பறப்பைச் செய்த போது அதை 4++தலைமுறைப் போர் விமானம் என்றே புட்டீன் அறிவித்தார். பின்பு இரசியா முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57ஐ உருவாக்கியது. அது இன்னும் போதிய எண்ணிக்கையில் உருவாக்கப்படவைல்லை. முன்மாதிரி விமானங்கள் தான் உருவாக்கப்பட்டன.

உக்ரேனியர்கள் பிரித்தானியாவின் தோளில் வைத்துச் செலுத்தப்படும் Starstreak missiles ஐப் பாவித்து இரசியாவின் Mi-28 உலங்கு வானூர்தி ஒன்றையும் 2022 ஏப்ரல் மாதத்தில் சுட்டு வீழ்த்தியமையும் இரசியாவிற்கு அவமானமாக அமைந்தது. இரசியாவின் போர் விமானங்கள் எப்போதும் excellent manoeuvrability and thrust vectoring engines கொண்டவை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் வானில் வைத்து எதிரி விமானங்கள் மோதிக் கொள்ளும் நாய்ச் சண்டையில் (Dog fight) எப்போதும் இரசிய விமானிகளும் விமானங்களும் சிறப்பாக செயற்படும். உக்ரேனில் இரசியாவின் படைக்கலன்களுக்கு ஏற்படும் பின்னடைவு இரசியாவின் படைக்கல விற்பனையை பெருமளவில் பாதிக்கும் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...