Monday 5 January 2009

நீ ஒரு தமிழிலக்கியம்.


புறந்தள்ளினாய் எனை நானூறு தடவை
அதனால் நீயொரு புறநானூறு.
மனம் மாறினாய் நானூறு தடவை
அதனால் நீயொரு அகநானூறு
என் மனமெனும் சிலம்புடைத்தாய்
அதனால் நீயொரு சிலப்பதிகாரம்.
எனை ஏழரைச் சனியாக ஆட்டினாய்
அதனால் நீயொரு கலித்தொகை.
என் காதல் கவி கேட்டு குதிரை போல் குதித்தாய்
அதனால் நீயொரு பரிபாடல்.
என் வாழ்வில் தொலைந்த காப்பியம் நீ
அதனால் நீயொரு தொல்காப்பியம்.
மனதில் மணியாகப் உனைப் பதித்தேன்
அதனால் நீயொரு மனோன்மணியம்.
உனை எட்ட நினைத்தேன் பல முறை
அதனால் நீ ஒரு எட்டுத்தொகை
எதற்கும் வளையாமல் நின்றாய் நீ
அதனால் நீ ஒரு வளையாபதி
மனதில் பதித்து உன் மேல் பக்திவைத்தேன்
அதனால் நீ ஒரு பதிற்றுப்பத்து
மலையாகப் பாடல்கள் படித்தேன் உன்பால்
அதனால் நீ ஒரு குறிஞ்சிப்பாட்டு
எனை விரும்பாதது போல் கணக்குவிட்டாய்
அதனால் நீயும் பதினெண் கீழ்க்கணக்கு
மொத்தத்தில் நீயொரு தமிழிலக்கியம்.

4 comments:

nel(i) said...

really super

nel(i) said...

really super

Anonymous said...

WONDERFUL THOUGHTS AND CREATION........REALLY AWESOME...TAMIL IS ALWAYS GREAT..

Anonymous said...

azhagu thamizhmagalin azhagu

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...