![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgXf9KDEPpI/AAAAAAAAAsQ/FhEOsvCntzw/s320/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.jpg)
Saturday, 9 May 2009
வன்னியில் - இறந்தவர் மீண்டெழுந்த அதிசயம்
![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgXf9KDEPpI/AAAAAAAAAsQ/FhEOsvCntzw/s320/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.jpg)
இந்தியாவின் குட்டு உடைகிறது. இலங்கைக்கு பல இராணுவ உதவிகள்
![](http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgXJK9Rmp1I/AAAAAAAAAsI/ZDQma3qLUI4/s320/Ranil.jpg)
![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgXJFSEXszI/AAAAAAAAAsA/BJZdTq5X7Pg/s320/ltte-ship2.jpg)
வரும் தேர்தலில் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
வீரத் தமிழன் முத்துக்குமாரை விதைத்தோம்! காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்புதைப்போம்!
களைத்தாலும் சளைக்காத பிரித்தானியத் தமிழர்.
பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கம் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன்பாகவும் டயானாவின் இறுதிக்கிரியை நடந்த Westminster Abbey இற்கு அருகிலும் இருக்கிறது. தினமும் பல்லாயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் இங்கு வந்து பிக் பென் கடிகாரத்துடன் படமெடுத்துக் கொள்வர்.
பிக்பென் கடிகாரம் 12 மணிகாட்டுகிறது. வெள்ளிக்கிழமை விடை பெறுகிறது சனிக்கிழமை வருகிறது. நடன அரங்குகளிலும் விடுதிகளிலும் மதுபானச் சாலைகளிலும் உல்லாசங்கள் ஓய்கிறது. இலண்டன் நகரம் கேளிக்கையில் களைக்கிறது. களைத்தாலும் சளைக்காமல் நள்ளிரவிலும் பல நுாற்றுக் கணக்கான தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரம் மைல்களுக்க அப்பால் பரிதவிக்கும் தம் உறவுகளுக்காக. இது ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கிறது.
கடந்த ஏப்ரல் ஆறாம் திகதிபாராளமன்ற சதுக்கத்தில் சில மணித்தியாலங்களில் முடிப்பதாக அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்பாட்டம் ஈழத்தில் ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் வேதியியல் ஆயுதங்கள் பாவித்து கொல்லப் பட்டனர் என்ற சேதி வந்தவுடன். கைத்தொலைபேசிகளூடாகப் பல குறுந்தகவல்கள் பறந்தன. மேலும் பல தமிழர்கள் அங்கு திரண்டனர். தாம் தெருவில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் முதலில் காவல் துறையினரிடம் மன்றாட்டமாகக் கேட்டனர். அவரகள் மறுக்கவே அவர்களைத் தள்ளி விட்டு சாலை மறியல் போராட்டத்தில் கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் ஈடுபட்டனர். இரவு முழுக்க இது தொடர்ந்தது. மறுநாள் காலை கலைந்து செல்லும் படி காவலர்கள் விடுத்த வேண்டு கோளிற்கு செவி சாய்க்கவில்லை. விளைவு பெரும் போக்கு வரத்து நெருக்கடி. காவலர்கள் பின்னர் அவர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினர். ஆனால் தமிழர்கள் பாராள மன்ற சதுக்கத்தில் மீண்டும் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பாராளமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தனர். இந்த ஆர்பாட்டம் இன்று வரை தொடர்கிறது. இரவு பகலாக நடக்கிறது. பல பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பபை இடை நிறுத்திவிட்டு இங்கு தினசரி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்களில் தெரிகிறது அவர்கள் எவ்வளவு துாரம் களைத்துப் போய் இருக்கின்றனர் என்று. களைத்தாலும் அவர்கள் சளைக்கவில்லை.
Friday, 8 May 2009
சட்ட விரோதச் செயலுக்கு இந்தியா 100கோடி தமிழ்நாடு 25 கோடி.
![](http://2.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgQk0ttpJDI/AAAAAAAAArw/zCLh0OodL2c/s320/idp1.jpg)
இளைஞர்கள் தனியாக்கப் பட்டு நிர்வாணமாக்கப் பட்டுஇருவரை ஒன்றாகச் சேர்த்து கைகால்கள் கட்டப் பட்டு வைக்கப் பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக்கேடு.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக் கேடு!!! வெட்கக் கேடு!!!
இத்தோடு நிற்கவில்லை இந்தியாவின் வெட்கங் கெட்ட செயல். கேவலமான இலங்கைக்கு இப்போது மோசமான பொருளாதாரப் பிரச்சனை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதில் தாமதம். இப் பிரச்சனையை தீர்க்க இந்திய ஆட்சியாளர்கள் ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர். இடைத்தங்கல் முகாம் எனப்படும் வதை முகாம்களைப் பராமரிக்க என்று சொல்லி இந்திய மத்திய அரசு 100கோடியும் உண்ணாவிரத நாடகக் கலைஞரின் அரசு 25 கோடியும் கொடுத்து உதவிசெய்ய விருப்பதாக இலங்கைப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாபெரும் இனக்கொலைத் திட்டம்
![](http://2.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgPVUyMBlvI/AAAAAAAAAro/4nSuHDpcy2o/s320/banner38_s.jpg)
.
ஒரு திட்டம் போர் முனையில் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன் படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்தல். இதற்கான ஆயுதங்கள் இப்போதே குவிக்கப் பட்டுள்ளன. இடைத் தங்கல் முகாம்களில் உள்ள மக்களைப் பராமரிப்பதற் கென்ற போர்வையில் இந்தியா பல கோடி ரூபாக்களை இந்தியா வாரி இறைக்கவிருக்கிறது. இப் பணம் மேலும் பயங்கர ஆயுதங்களை பாக்கிஸ்தானிடமிருந்து வாங்கவிருக்கிறது.
இடைத்தங்கல் முகாம்களில் கலவரம்
1983இல் வெலிகடைச் சிறைச்சாலையில் செய்தது போல இடைத்தங்கல் முகாம்களில் பாரிய கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பெரும் தமிழின அழிப்பை ஏற்படுத்துதல்.
நாடாளாவிய இனக் கலவரம்
நாடாளிவிய ரீதியில் ஒரு இனக் கலவரம் ஏற்படுத்தி தமிழர்களுக்கு பெரும் உயிரழிப்பும் சொத்தழிப்பும் ஏற்படுத்துதல். இதன் மூலம் பொருளாதாரப் பிரச்சனையால் தவிக்கும் சிங்களக் காடையர் கூட்டத்தின் பணப் பிரச்சனையையும் தீர்கும் திட்டமும் அடங்கும்.
இனிப் பல தலைமுறைக்கு தமிழர்கள் உரிமைப் போராட்டத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாமல் செய்வோம் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதை இங்கு நினைவு
Thursday, 7 May 2009
கணவனுக்கு 40வது பிறந்த நாள் பரிசு - ஒரு வருட உன்னத பாலியல் உத்தரவாதம்
![](http://2.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgLxE-EeG8I/AAAAAAAAArg/yKde0CeLg8w/s320/muthukumarcong.jpg)
![](http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgLxAePXeBI/AAAAAAAAArY/RA4t-RVJnZM/s320/charlabradmull.jpg)
பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்பது பலருக்கு பெரிய பிரச்சனை. சார்லா என்ற அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த பெண் ஒரு புதுமையான பரிசாகத் தனது கணவனின் 40வது பிறந்த நாளுக்கு வழங்கினார்.
அவர் கொடுத்த பரிசு ஒரு வருட கட்டிலின்பத்திற்கான உத்தரவாதம். இதை அவரது கணவர் பிரட் முல்லர் தனது 365 இரவுகள் என்ற நூலில் வெளியிட்டுள்ளார்.
.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
.
முகநூலில் (Facebook) அழவைத்த அறிமுகம்
முக நூலில் நண்பர்கள் பலர் கண்டதுண்டு
அறிமுகத்திலேயே பாராட்டுவோருண்டு
கேலி செய்வோருண்டு திட்டுவோருண்டு
சில நிமிடங்களில் நட்பைத் துண்டித்தோருமுண்டு
ஆனாலும் அழ வைத்தார் ஒரு நண்பன்
அறிமுகமான சில நொடியில் ஹாய் என்றான்
முகவரியில் அழகிய சிறுமியின் படம்
அமைதியான அழகு முகமுடைய சிறுமி
எப்படி என்றேன் துக்கம் என்றார்
ஏன் என்றேன் தன்னூர் புதுக்குடியிருப்பென்றார்.
பலிகொடுத்தேன் என் சிறு தங்கையை என்றார்
அவள் படம் தான் தன் முகவரிப் படம் என்றார்.
மெல்லக் கசிந்தன என் கண்கள்
பொருளாதார மந்தத்திலும் கவர்ச்சீகரமான உள் ஆடை விற்பனை பிரித்தானியாவில் அதிகரிப்பு
![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgLBK8gUNuI/AAAAAAAAArQ/xFyCaH8lHq4/s320/GetAttachment.aspx.jpg)
பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலையால் பல வியாபார நிறுவனங்கள் தமது விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்த வேளையில் பிரபல கவர்ச்சிகரமான உள்ளாடை உற்பத்தி நிறுவனமொன்று தமது விற்பனை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிறப்பு வீதமும் அதிகரிக்குமாம்.
பொருளாதாரப் பிரச்சனையால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே சென்று கேளிக்கைகளில் ஈடுபடாமல் வீட்டிலேயே கேளிக்கயில் ஈடுபடுவதால் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிக்கும் என்று ஒரு பத்திரிகை எதிர்வு கூறியுள்ளது.
இத்தாலிச் சனியாளிற்கு
தமிழினக் கொலையாளிக்கு
வாக்களிப்போரை
வரலாறு மன்னிக்காதே!
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்
விடுதலைப் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் - இந்திய அதிகாரவர்கத்திற்கு அது தேவையில்லை.
![](http://3.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgKZBtiMPXI/AAAAAAAAArI/bKoWQPEBDGM/s320/V3.jpg)
![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgKYkbC-wII/AAAAAAAAArA/tJ8x1oAgklo/s320/indianarmy.jpg)
தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இந்தியாவின் நண்பர்கள் என்பதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் இதைக் கருத்தில் கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் இந்திய நலன்களுக்கு எதிராக செயல் பட்டதுமிலை. சிங்கள அரசும் சிங்கள மக்களும் இந்தியாவிற்கு எதிரான மனப்பாங்கையே கொண்டுள்ளனர் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் நன்றாக அறிவர். இருந்தும் ஏன் இந்திய ஆட்சியாளர்களிடம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த நிலைப்பாடு? இராஜீவ் காந்தி கொலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாமா? ராஜீவைக் கொன்றவர்கள் யார்? என்ற கேள்விக்கே விடையில்லை! ராஜீவ் கொலைக்கு முன்பே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தது. இந்திரா காந்தி அம்மையார் இருக்கும் போதே ரெலோ இயக்கமும் இந்தியப் படைகளும் சேர்ந்து புலிகளை அழித்தொழிக்கும் திட்டம் போடப்பட்டது. புலிகள் முந்திக்கொண்டு ரெலோ இயக்கத்தை சின்னாபின்னப் படுத்தினர். ராஜீவ் காந்தி கொலை செய்யப் படாமல் இருந்தாலும் இந்திய ஆட்சியாளர்கள் புலிகளுக்கு எதிரான நிலைப் பாட்டோடுதான் இருந்திருப்பர் என்றார் முன்னாள் காங்கிரசு உறுப்பினர் தமிழருவி மணியன். இதே கருத்தைப் பலரும் முன் வைத்துள்ளனர்.
Wednesday, 6 May 2009
நினைவுகள் ஏன் நீங்குவதில்லை?
மிக மிக அண்மையில்...
அந்த தேர்த் திருவிழாவில்
மக்கள் நெரிசலில்....
அந்தக் குலுக்கும் பேரூந்தில்
அருகருகில்......
அந்த இராணுவ அட்டூழியத்தில்
அகதி முகாமில்
அந்த கடலோரத்தில்
தாழை மரத்தடியில்...
அந்த உணவகத்தில்
மெழுகு திரியொளியில்..
அந்த கேளிக்கை விடுதியில்
நடன மாடுகையில்....
அந்தத் தனியறயில்
ஒரு சிறு கட்டிலில்...
அந்த மணவறையில்
இன்னொருத்தன் அருகில்!!!!!
சோனியா காந்தி வருவார் ஆனால் வரமாட்டார்
தமிழ்மண்ணில் காலடி
வைக்க முயன்றாள்
தமிழின எதிர்ப்புக் கண்டாள்
பீதியடைந்தாள்
பேதிகொண்டாள்.
.
.
ஈழத்தமிழனைக் கொல்லக்
கொலைவாள் கொடுத்த கொடியோள்
ஆரியப்பேய்களின் ஆதிக்கவெறிக்கு
ஆதரவு கொடுக்கும் சனியாள்
அவர்தம் பண்புப்படி கூறுவோமானால்
புகுந்தவீட்டை கூறு போட்டவள்
காலடி எடுத்து வைத்த ராசி
மைத்துனன் மண்டையைப் போட்டான்
மாமியும் சல்லடையானாள்
கைப்பிடித்தோன் சிதறினான்
அயல் நாட்டில் இன அழிப்பு
ஐய்யோ என்னதான் முடிவோ?
அன்பர் Ananth Sn அவர்களின் பின்னூட்டம்
Tuesday, 5 May 2009
பாலியல் வதைக்குள்ளாகும் தமிழ்பெண்கள் - பிரத்தானியத் தொலைக்காட்சி தகவல்
செல்வி ஜெயலலிதாவின் எழுச்சியும் பார்ப்பனர்களின் மெளனமும்
![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgCW2NZBihI/AAAAAAAAAqA/G1_7NJXh1TA/s320/cho.jpg)
![](http://4.bp.blogspot.com/_rdxGIaasPPM/SgCWvNu1aZI/AAAAAAAAAp4/MPPWh1heCYM/s320/jayajj.jpg)
.
செல்வி ஜெயலலிதாவின் கையைப் பற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் ஈழ தமிழர்கள் உள்ளனர். அவர்களின் இன்றைய நிலை அப்படி. ஆனால் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது ஈழத் தமிழ் எதிர்ப்பாளர்களான சோ இராமசாமி ஹிந்து ராம் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் செல்வி ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் தொடர்பான பேச்சுக்களுக்கு எந்த விமர்சனமும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
Monday, 4 May 2009
பலத்த இழப்புக்களுடன் தீவிரமடையும் போர். - துடிக்கும் சனியாள்
![](http://3.bp.blogspot.com/_rdxGIaasPPM/Sf5_OoQkAnI/AAAAAAAAApo/jtqfRYSWJSs/s320/congress.jpg)
![](http://2.bp.blogspot.com/_rdxGIaasPPM/Sf55Ds7PnzI/AAAAAAAAApg/M9b6NI3U2rg/s320/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D2.jpg)
Sunday, 3 May 2009
சோனியா காந்தி அம்மையார் ஒரு செத்துப் போன ஆன்மா
![](http://2.bp.blogspot.com/_rdxGIaasPPM/Sf00o9pbtKI/AAAAAAAAApY/FZNHbGKgI4E/s320/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D1.jpg)
“மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும்” என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா இலங்கையில் நடக்கும் இனக்கொலை தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்புப் படி 8500 இற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஐநா சொல்கிறது இது ஒரு மதிப்பீடு என்று. இம் மதிப்பீடு மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டது. மருத்துவ மனைக்கு போகாத இறப்புக்களையும் சேர்த்தால் நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தும் இலட்சக் கணக்கானோர் அவயங்களை இழந்தும் உள்ளனர். இப்பத்தாயிரம் இறப்புக்களும் இலட்சக் கணக்கான அவயங்களை இழந்தோரையும் ஒருவர் மனதைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்தான் சோனியா காந்தி அம்மையார்.
சோனியா காந்தி அம்மையார் இலங்கை அவலங்கள் தொடர்பாக மெளனமாக இருப்பதற்குக் காரணம் அவரது கணவர் கொலையில் இலங்கைத் தமிழர் சம்பத்தப் பட்டிருப்பது தான் என்று அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் சொல்கிறார்கள். அவரது அரசு இலங்கை அரசிற்கு சகல உதவிகளையும் வழங்குகிறது.
.
சோனியா அம்மையாரின் கணவரின் மரணம் தொடர்பாக
ஒரு அன்பர் அனுப்பிய இ-மடல் இப்படி இருந்தது:
ஜாலியன் வாலபாக் படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை ( Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.உதம் சிங், அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் செய்கிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார்.... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொல்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள் உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அவருக்கு மரண தண்டனை அளித்து 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு அஸ்தி கங்கையில் கரைக்கப் படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம். 400பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்..... ராஜிவ்காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதிப் படை ஈழத்திற்கு சென்று 8000 பொது மக்களை மற்றும் 5000 பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இந்தியாவில் ஒருவனை கொன்றால் அது தவறா?
இப்போது சொல்லுங்கள் சோனியா காந்தி அம்மையார் ஒரு செத்துப் போன ஆன்மாதானே!!!
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi24zeuSQIDmpZNiLZB8Bpfm0NwsBGvfI9KqXukiJkM3oOqLWpOEkhyyq7Gseu8McrUwhQMSKARWtj8M01d7tqWqApt6pXbX9mjy8E0Zx6cPBwEliudy3xxBws8U0fIc2P79pM9YbnPVdxi/s320/uss-.jpg)
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
லூசு பெண்ணே ..! !
லூசு பெண்ணே ..! ! !
லூசு கிழவன் உன்மேலதான் ...
லூசா Hospitala இருக்கிறான்..!
ஓட்டு வராதே ..!
ஓட்டு வராதே ..!
தமிழ் நாட்டு ஓட்டு
உனக்கு வராதே ..!