Friday 23 October 2020

குவாட்டில் (QUAD) இலங்கை இணையுமா?

 


குவாட் என்னும் பெயரில் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. ஒன்று குவாட் குழு. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றைக் கொண்ட வர்த்தகக் கூட்டமைப்பு. மற்றது குவாட் பாதுகாப்பு உரையாடல் என்னும் பெயர் கொண்டது. இது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஒஸ்ரெலியா ஆகைய நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா கேந்திரோபாய அமையம் ஆகும். இதை ஆங்கிலத்தில் Quadrilateral Security Dialogue என்றும் சுருக்கமாக QUAD என்றும் அழைப்பர். 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைய விரும்புவதால் அதை QUAD+ எனவும் அழைக்கின்றனர். இது சீனாவை அடக்க உருவாகவிருக்கும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பின் முன்னோடி. சீனாவின் நடுத்தர காலக் கொள்கை ஆசியாவில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கமும் உலக அரங்கில் அமெரிக்காவினதும் சீனாவினதும் இருதுருவ ஆதிக்கமும் எனவும் நீண்ட காலக் கொள்கை உலகில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கம் எனவும் கருதப்படுகின்றது. இதைத் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை நெருங்கிச் சென்ற இரசியா தனது நெருக்கத்தை நிறுத்தி சீனாவிற்கான தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் நிறுத்தியுள்ளது.

இலங்கை உலக அரங்கில் பகிரங்க கொள்கை ஒன்றையும் திரைமறைவுக் கொள்கை ஒன்றையும் வைத்திருக்கின்றது. தன்னுடைய திருவோட்டை நிரப்புவதற்கு ஏற்ப அவ்வப்போது தன் கொள்கையை திரித்துக் கொள்ளும். இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுடைய அரசுறவியலாளர்கள் கொழும்பு சென்றால் அவருக்கு பதின்ம வயதுப் பெண்கள் (சிலருக்கு ஆண்கள்) உட்பட பரிமாறி அவர்களை நன்கு விருந்தோம்பும். இதையறியாமல் சில தமிழ் அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இலங்கை சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வைத்திருக்கின்றது மற்ற உலக நாடுகளை தனது அறிஞர்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கையாள்கின்றது எனப் பிதற்றுவார்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சீனாவை தங்களது எல்லாச்சூழலிலும் உதவும் நண்பனாகப் பார்க்கின்றனர். இந்திய இந்துக்களை இந்தியாவில் பௌத்த மதத்தை ஒழித்துக் கட்டியவர்களாவே பார்க்கின்றனர். தாராண்மைவாதம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் இலங்கையில் பராமரிக்கப் பட்டு வந்தது. ரணிலின் தில்லுமுல்லுக்களால் அது இலங்கையில் இப்போது படுதோல்வியடைந்துள்ளது. உலக அரங்கிலேயே ஓரம் கட்டப்பட்ட தாராண்மைவாதம் இனி ஒரு புதிய வடிவத்தில் வரமுயற்ச்சிக்கலாம். இந்தியா சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு தன்மீது இருக்கும் பகைமையை நீக்க கடந்த சில ஆண்டுகளாக பெரு முயற்ச்சி செய்கின்றது. அது இன்னும் வெற்றியளிக்க வில்லை. இந்தியாவை ஏமாற்றும் கலையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் விற்பன்னர்களாக இருக்கின்றார்கள். சிங்கள பொதுவுடமைவாத தீவிரவாதிகளையும் தமிழ்பிரிவினைவாதிகளையும் அழிப்பதில் இந்தியா கூலி வாங்காத கூலிப்படையாக இலங்கைக்காக செயற்பட்டது. இலங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா அதைச் செய்யவில்லை தனது பிராந்திய நனலைக் கொண்டே செய்தது என்பதை சிங்கள பௌத்த பேரினவாதிகள் நன்கறிவர்.

சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவானது போல் இந்த நூற்றாண்டில் ஆசியாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் சீனாவும் வட கொரியாவும் கம்போடியாவும் இருக்கும். மற்றதில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, வியட்னாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகியவை உட்பட மேலும் ஒரு சில நாடுகள் இருக்கும். சுவீடன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் இல்லாமல் இருந்தன. அது போல் ஆசியாவிலும் பல நாடுகள் இருக்க முடியும். தற்போதைய சூழலில் பிலிப்பைன்ஸ் என்ன செய்யும் என சொல்ல முடியாமல் இருக்கின்றது. ஆனால் அங்கு உள்ள அமெரிக்கப் படைத்தளம் தற்போதைக்கு அகற்றப்பட மாட்டாது. அமெரிக்கா தலைமையிலான சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பு தற்போது குவாட் என அழைக்கப்பட்டாலும் அது வேறு பெயரைப் பெறும். குவாட் என்பது நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தை அமைப்பு மட்டுமே.

இலங்கை எந்தக் கூட்டமைப்பில் சேரும் எனற கேள்விக்கான விடை அது எதிலும் சேராது ஆனால் சீனாவுக்கு எதிராக எந்த ஒரு நகர்வையும் செய்ய மாட்டாது. எந்தச் சூழலிலும் இலங்கைக்கு ஆதரவாக ஐநா பொதுச் சபையில் இலங்கைக்காக இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும் ஒரு நாட்டின் நட்பு இலங்கைக்கு அவசியம். பொதுநலவாய நாடுகள், ஐநா துணை அமைப்புக்கள் போன்றவற்றில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். இலங்கை சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் சீனா இலங்கையில் உள்ள பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பயன்படுத்தி தனக்கு ஏதுவான ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை பாயும். சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி அது சிங்கப்பூருக்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க குறைவானது. இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்க்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி அதன் மொத்த ஏற்றுமதியில் 75%இலும் அதிகமானதாகும். அந்த நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால் இலங்கை எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் சேரமாட்டாது.

சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் போட்டியில் இலங்கை சீனா பக்கம் நிற்கும். அப்போது அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கும். எமக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும். சர்வதேசம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியா எனது நண்பன் என்பவையெல்லாம் மனப்பால் மட்டுமே.

இலங்கையும் அமெர்க்காவும் Status of Forces Agreement (SOFA) செய்தாலும் ஆதற்கு இணையான வசதிகளை இலங்கை சீனாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.


Monday 19 October 2020

பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஒளிரும் இரசியா

  


இரசிய நடுவண் வங்கி ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலையின்கீழ் 2021இன் ஆரம்பத்தில் இருந்து 2023இறுதி வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் மசகு ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை இருபத்தைந்து டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. கொவிட்-19 தொற்று நோயின் மோசமான இரண்டாவது அலைத்தாக்குதல்புவிசார் அரசியல் குழப்பங்கள்முன்னணி நாடுகளிடையேயான வர்த்தகப் போர்நாடுகளின் கடன் பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இரசிய நடுவண் வங்கி தனது எதிர்வு கூறலைச் செய்துள்ளது. 

பொருளாதார வளரச்சி

மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளாலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல சவால்களை இரசியப் பொருளாதாரம் எதிர் கொண்ட போதும் பல மேற்கத்தைய பொருளியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரசியப் பொருளாதாரம் உறுதியாக இருக்கின்றது. 2013 முதல் 2019வரை இரசியப் பொருளாதாரம் சராசரியாக ஒரு விழுக்காட்டால் வளர்ச்சியடைந்தது. இரசிய நிதியமைச்சர் இரசியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தி 2020இல் 4விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் எனத் தெரித்தார். பன்னாட்டு நாணய நிதியமும் இரசியப் பொருளாதாரம் 2020இல் 4.1விழுக்காட்டால் சுருங்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை 2021இல் 2.8விழுக்காட்டால் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அது 2019இல் 4.5 விழுக்காடாக இருந்த இரசியாவின் பணவீக்கம் 2020இல் 3.7 விழுக்காடாகத் தணியும் எனவும் கருதுகின்றது. 2020 ஜூலையில் உலக வங்கி இரசியாவின் பொருளாதாரம் 6விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறிய போது இரசிய நடுவண் வங்கி தனது வட்டி வீதத்தை 4.25 விழுக்காடாகக் குறைந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது மிகக்குறைந்த வட்டி விழுக்காடாகும். அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் இரசியப் பொருளாதர வளர்ச்சி எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டது.

 

 

மசகு எண்ணெயின் விலை பீப்பா ஒன்றிற்கு முப்பது டொலராகக் குறைந்தாலும் இரசியாவின் பொருளாதாரம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு இரசிய அரச நிதியத்திடம் நிதி இருக்கின்றது அதற்கு முன்னர் இரசிய அரசு அறிவித்திருந்தது. 2020 ஒக்டோபர் 14-ம் திகதி உலகச் சந்தையில் எரிபொருள் விலை 42 டொலராக இருந்தது.

அரச நிதி

2020 ஜனவரியில் இரசிய அதிபர் புட்டீன் இரசிய உட்கட்டுமானங்களிலும் சமூகத் திட்டங்களிலும் நான்கு ரில்லியன் ரூபிள்களைச் செலவு செய்வதாக உறுதியளித்திருந்தார். இரசியப் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அரச நிதியை சமாளிக்க அடிப்படை வருமான வரியை 2021இல் 13விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்க இரசிய அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இரசிய அரச வருமானம் அறுபது பில்லியன் ரூபிளால் அதிகரிக்கும். இரசியாவின் வருமானவரி விதிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பிடுங்கி வறிய மக்களுக்கு உதவிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இரசிய அரசின் நிதிப்பற்றாககுறை 2020இல் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.1விழுக்காடாகவும் 2021இல் 2.4 விழுக்காடாகவும் 2022இல் ஒரு விழுக்காடாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசியாவில் முதலீடுகள்

ஐநாவின் அங்ராட்டின் அறிக்கையின் படி 2019-ம் ஆண்டு இரசியாவில் வெளிநாட்டு முதலிடு 31.7பில்லியன் டொலர்களாகும். இது 2018இன் 13பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வளர்ச்சியாகும். ஐக்கிய இராச்சியம்சைப்பிரஸ்லக்சம்பேர்க்நெதர்லாந்துபஹாமாஸ்அயர்லாந்துபெர்மூடா ஆகிய நாடுகள் இரசியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இரசியாவின் கனிம வளம் மற்றும் இணையவெளி போன்றவற்றில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படுகின்றன. இரசியாவின் ஆர்க்டிக் எரிபொருள் ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் விதித்துள்ளன. இரசிய அரச நிதியமும்இரசிய நேரடி முதலீட்டு நிதியமும் ஐக்கிய அமீரகத்தின் நிதியம் ஒன்றுடன் இணைந்து முகங்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. சீன இந்தத்த் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது.

பிராந்தியப் பிரச்சனைகள்

இரசிய அரசு பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெலரஸில் தேர்தலை எதிர்த்து மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்கின்றனர்அஜர்பைஜானும் ஆர்மேனியாவும் மோதிக் கொள்கின்றனகஜகஸ்த்தானில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இரசியா முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான பெலரஸ்கஜ்கஸ்த்தான்ஆர்மேனியாஅஜர்பைஜான்கிரிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதரக் கூட்டமைப்பு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போட்டியாக உருவாக்கியுள்ளது. 180மில்லியன் மக்களைக் கொண்ட அந்த பொருளாதாரக் கூட்டமைப்பு மிகப் பெரிய நாடாகிய இரசியாவுடன் பல மிகச் சிறிய நாடுகளை இணைக்க முயல்கின்றது. இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் என்பது மட்டுமல்ல முதலாம் உலகப் போரிற்கு முன்னர் துருக்கியால் ஆளப்பட்ட நாடுகள். இந்த நாடுகளில் துருக்கியும் தன் ஆதிக்கத்தை செலுத்த முயல்கின்றது. துருக்கியினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் தற்போது மாறியுள்ளன.

இரசியாவின் படைக்கல ஏற்றுமதி

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா இருக்கின்றது. 2019-ம் ஆண்டு இரசியா 13பில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது 2018இலும் பார்க்க இரண்டு பில்லியன் டொலர் அதிகமாகும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி பல சவால்களைச் சந்திக்கின்றது. சீனா தனது உள்நாட்டு படைக்கல உற்பத்தியை அதிகரிக்கின்றது. இந்தியாவும் அதையே செய்வதுடன் அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்குகின்றது. கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகில் பல நாடுகள் சிக்கன் நடவடிக்களை 2021-ம் ஆண்டு மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். சிக்கன நடவடிக்கை என வரும் போது பல நாடுகள் தமது படைக்கலன் கொள்வனவை குறைக்கும். இது இரசிய படைக்கலன் ஏற்றுமதியையும் பாதிக்கும்.

இரசியாவின் அரச நிதியம் 2020இன் ஆரம்பத்தில் 124பில்லியன் டொலர்களாக இருந்தது. கொவிட்-19 தொற்று நோயல் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க செய்த செலவால் 2020இன் இறுதியில் அது 95பில்லியன்களாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டில் இருந்து அது அதிகரிக்கத் தொடங்கலாம். ஆகையால் இரசியா தனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...