Showing posts with label செம்மொழி. Show all posts
Showing posts with label செம்மொழி. Show all posts

Wednesday, 30 March 2011

போர் முனையில் கடாபியின் கவர்ச்சியான மகள்


லிபிய அதிபர் மும்மர் கடாபி இன்னும் ஒரு ஆயுதத்தை தனக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை அடக்கும் போரில் களமிறக்கியுள்ளார். அது அவரது 34 வயதான அழகிய ஒரே ஒரு மகள் ஆயிஷா. சட்ட வல்லுனரான இவர் சதாம் ஹுசேய்னுக்காக வாதாடிப் புகழ்பெற்றவர். கடாபி தத்தெடுத்து வளர்த்த இவரது தங்கை 2006இல் அமெரிக்க விமானங்கள் கடாபியைக் கொல்லும் நோக்குடன் வீசிய குண்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிஷா மேற்குலக நாடுகளை வெறுக்கத் தொடங்கினார். தனது தங்கையில் அலறல் கேட்டு ஒன்பது வயதாயிருக்கும் போது விழித்தவருக்கு அவரது உடல் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். அண்மையில் இவரது 26வயது தம்பி கமிக்காஸ் கிளர்ச்சிக்காரர்களின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். அதனால் போர்முனை வரை சென்று பணியாற்றுகிறார். இவரால் பல வீரர்கள் உற்சாகமடைவார்கள் என்பது நிச்சயம்.

தந்தை கடாபியின் படைகளுடன் போர் முனையில் நின்று இவர் பணிபுரிகிறார். கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு பற்றியுள்ளார். கடாபியை தனது நண்பன், சகோதரன், தந்தை, தலைவன், பாதுகாவலன் என இவர் புகழ்கிறார். பெண் உரிமைவாதியாகவும் செயற்படுகிறார்.

இசுலாமிய வழக்கப்படி தனது ஒன்று விட்ட சகோதரனும் படைத் தளபதியுமான அஹமட் அல் கடாபி அல் ஹாசியைத் திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுக்கு இவர் தாயுமானார்.

Thursday, 24 June 2010

வெளுத்துப் போன சிவத்த தம்பி




அன்று இப்படிச் சொன்ன சிவத்தம்பி இன்று சொல்வது:
  • முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
முதல்வர் கருணாநிதிக்கு ஒர் உறுதியான நிலைப்பாடு இருக்கிறது என்பதை சிவத்தம்பி அறியமாட்டார். அவரால் சொர்க்கத் தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியாவின் நிலைப்பாடுதான் அவரது நிலைப்பாடு. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு என்று அவர் பகிரங்கமாக அறிவித்தவர்.

இலங்கையில் ஒருகாலத்தில் தங்களை மார்கசியவாதிகள் முற்போக்களர்கள் என்று சொல்லிக் கொண்டு சிங்களப் பேரினவாதிகள் பின்னால் அலைந்த பலருள் கலாநிதி சிவத்தம்பியும் ஒருவர். இலங்கையில் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் இலக்கியங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்று முழங்கியது இந்தக் கும்பல். இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதிகளின் பேராசையை நிறைவேற்றவே இவர்கள் இப்படிக் கூக்குரல் இட்டார்கள்.

சிவத்தம்பி உட்பட தங்களை முற்போக்கு வாதிகள் என்று கூறிக் கொண்ட இந்த கம்யூனிச முகமூடிய சிங்களப் பேரினவாதிகளின் அடிவருடிகள் பெரியாரின் திராவிட இயக்கத்தையும் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் எப்படி விமர்சனம் செய்தார்கள் என்பதை தமிழர்கள் மறக்கவில்லை. இவர்கள் தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை எப்படி விமர்சித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

தமிழ்நாட்டு பத்திரிகைகள் சஞ்சிகைகள் இலங்கைக்கு வருவதை எதிர்த்த கும்பலில் சிவத்தம்பியும் ஒருவர். அவர் அன்று எந்த சஞ்சிகைகளை குப்பை என்று எதிர்தாரோ அதே சஞ்சிகைகளுக்கு பேட்டிகள் கட்டுரைகள் இன்று வழங்கிப் பெருமை தேடுகிறார்.

1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் என்றபோர்வையில் நடந்த இனக்கொலையின் பின்பே இந்த சிவத்த தம்பி சிங்களவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டார்.

Tuesday, 15 June 2010

செம்மறி மாநாட்டுக் கீதம் - தமிழனை செம்மறியாக்கும் கள்ள நரி


கட்டிய மனைவியர்க்கும்
கட்டாத காரிகையர்க்கும்
யாதும் சொத்தே யாவர்க்கும் பதவியே
புகலிடம் என்பது தமிழ்நாடேன
கொள்ளையடித்து வாழ்ந்தோம்
கோடிகள் பல சேர்த்தோம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்


சொத்தும் சுகமும் பிறர் தர வரா எனும்
நன் மொழியே என் தனி வழியாம்
தமிழரைப் புறந்தள்ளி
பொருள்கள் குவிக்கவே
டெல்லி வழிகாட்டும்
கொலை மெழியே
என் மகளான மொழி கனியாம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

வேங்கடம் முதல் கதிர்காமம் வரையிலே
ஏமாற்றிப் பெறும் பெரும் சொத்தை வகுத்துக் கொடுத்தும்
தீராச் சகோதர யுத்தமும்
குடும்பச் சண்டையில் குடுமி படும்பாடு
ஒலிக்கின்ற என் தொலைக்காட்சியும்
கணக்கற்று வளரும் கோடிகளும்
பேரப்பிள்ளைகளின் திரைப்படங்களும்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

ஆள்காட்டானும் அழகன்பனும்
எல்லோரையும் ஏற்று ஏமாற்றி
என் மக்கள் பகிர்ந்து பதவி பெறுவர்
எத்தனையோ ஆயிரத்தை ஈழத்தின் கொன்ற
காந்தி குடும்பத்தின் கால் பிடித்து வாழ்வோம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

Friday, 11 June 2010

செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்த பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சிகள்


இம்மாதம் 23-ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் உலகத் தமிழ செம்மொழி மாநாட்டிற்கு பல தமிழ உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செம்மொழி மாநாடு ஈழத்தில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அவலத்துக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் தேவைதான என்பதும் இவர்கள் எதிர்ப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. இபோது அவர்கள் அவலங்களைத் துடைப்பத விட்டு தமிழுக்கு விழா எடுப்பதா என்பதும் ஒரு கேள்வி.

பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு. இதை பல சிங்கள அமைச்சர்கள் பலதடவை தெரிவித்து விட்டனர். இதை இந்திய அரசு மறுக்கவுமில்லை. இந்திய அரசில் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு அங்கம். இதனால் இலங்கைத் தமிழர்களின் அவலத்திற்கு திரு மு கருணாநிதிக்கும் அவரது கட்சிக்கும் பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் பொறுப்பு உள்ளதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பு செம்மொழி மாநாட்டைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.

இலங்கையில் இனக் கொலை நடந்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி என்ற சிங்களவர்களின் உற்ற நண்பன் எந்த வகையில் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்? செம்மொழி மாநாட்டு அமைப்பாளர்களின் மிக முட்டாள்த் தனமான முடிவு பிரணாப் முஹர்ஜியை அழைத்தது.

பிரித்தானியாவில் உள்ள சில "தமிழ் அறிஞர்கள்" கருணாநிதியின் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ்தொலைக்காட்சிகளை அணுகி தங்களைப் பேட்டி காணும்படி கோரினார். அதற்கு இரு தொலைக்காட்சிச் சேவைகளும் மறுத்துவிட்டன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...