Friday 17 December 2021

HAWC: அமெரிக்காவின் புதிய சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை

  


அமெரிக்க வான்படையும் Defence Advanced Research Projects Agency (DARP) என்னும் படைத்துறை முகவரகமும் இணைந்து புதிய வகை வானில் இருந்து வானுக்கு தாக்குதல் செய்யும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கான ஏவுகணைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தை Raytheon நிறுவனத்திற்கும் ராம்ஜெட் இயந்திரத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை Northrop நிறுவனத்திற்கும் 2019-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக் என அழைப்பர்பறக்கும் விமானம்பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது.


இயந்திரங்கள் வளியில் உள்ள ஒட்சிசனையும் எரிபொருளையும் (பெற்றோல், டீசல்) இணைந்து எரியச் செய்து உந்துவலுவை (thrust) உருவாக்குகின்றன. வளிமண்டலத்திலும் உயரமாகச் செல்லும் ஏவூர்திகள் (ராக்கெட்) தமக்கு தேவையான ஒட்சிசனை (Oxygen) தம்முடன் எடுத்துச் செல்லும். தாரை (ஜெட்) விமானங்கள் தமக்கு தேவையான ஒட்சிசனை வளிமண்டலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும். ஒலியிலும் வேகமாக இயங்கும் விமானங்களும் ஏவுகணைகளும் Ramjet, Scramjet ஆகிய இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. Ramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க ஆகக் கூடியது ஆறுமடங்கு வேகத்தில் இயக்க வல்லன. Scramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகம் வரை இயக்க வல்லன.


Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதுடன் அது பாய்ந்து கொண்டிருக்கும் இறுதிக் கட்டத்தில் அதன் பாயும் திசையையும் வழியையும் மாற்றலாம். மற்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை திசை மாற்ற முடியாது. ஆனால் சீனா 2021 ஜூலை மாதம் பரிசோதித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை திசை மாற்றக் கூடியது. ஆனால் அதனால் இலக்கை துல்லியமாக தாக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் புதிய ஏவுகணை துல்லியமாக தாக்க வல்லது என நம்பப்படுகின்றது. Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்பவர்கள் இது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறையை சாரும் என்கின்றனர். குறுகிய கால அவகாசத்தில் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதுடன் அவையில் பாய்ச்சல் தூரமும அதிகம் என்கின்றனர். ஆனால் தூரம் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை. இவற்றின் இன்னும் ஓர் அம்சம் இவற்றைக் குறைந்த செலவில் உருவாக்கலாம். முதலாவதாக ஏவும் பரிசோதனை 2021 செப்டம்பர் மாதமளவில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பெரும்பாலும் அது அமெரிக்காவின் B-52 H குண்டு வீச்சு விமானத்தில் இருந்து வீசப்பட்டிருக்கலாம். இரசியா HAWC ஏவுகணைகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. சீனா வானில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசும் வல்லமையை இன்னும் அடையவில்லை எனவும் சொல்லப்படுகின்றது. அமெரிக்காவின் HAWC ஏவுகணை எந்த விமானத்தில் இருந்து வீசப்படுகின்றதோ அந்த விமானத்தின் பறப்பு வேகமும் ஏவுகணையின் வேகத்திற்கு வலுவூட்டும்.

HAWC ஏவுகணைகள் காற்றை சுவாசிக்கும் தன்மை கொண்டவை என்பதால் காற்றுடன் உரசும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பு குறைவாக இருக்கும் அத்துடன் காற்று ஏற்படுத்தும் வேகக் குறைப்பும் குறைவானதாகவே இருக்கும். ஒட்சிசன் செறிவாக உள்ள வளிமண்டலத்தில் Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் மிகவும் சிறப்பாக செயற்படும் எனப்படுகின்றது. அதாவது சிறந்த செலுத்துதற்கையாள்கையும் (manoeuvrability) வேகமும் அதன் சிறப்பு அம்சமாக இருப்பதுடன் அவற்றை எதிரிகளால் இலகுவில் இனம் காண முடியாது.

HAWC ஏவுகணைகளின் அடுத்த தலைமுறை ஏவுகணைகள் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களான B-52, B-1 Lancer ஆகிய குண்டு வீச்சு விமானங்களில் இருந்தும் F-35, F-15 போன்ற சண்டை விமானங்களில் இருந்தும் இலகுவாக வீசக் கூடியவையாக இருக்கும்.

Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் எப்படி இரசியாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளான எஸ்-400 மற்றும் எஸ்-500 ஆகியவற்றிற்கு எதிராக எப்படிச் செயற்படும் என்பதை ஒரு போர் முனையில்தான் கண்டறிய முடியும்.

Wednesday 15 December 2021

இலங்கையில் இருந்து கூலி கிடைக்காமல் ஏங்கும் இந்தியா

 


கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் கடனையும் இலங்கைக்கு வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனக் கப்பல்கள் தமிழர்களின் கடற்பரப்பில் காவல் நாய்கள் போல் நின்று தமிழர்களுக்கு உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் தடுக்கவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாக இல்லை. ஆனால் இலங்கையில் இருந்து தனக்கு வேண்டியதை சீனா துறைமுகங்களாகவும் தீவுகளாகவும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் சீனா செய்யாதவற்றைச் செய்த ஒரு நாட்டுக்கு சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் சிங்களவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.

இலங்கையும் அமெரிக்க இந்திய உறவும்

இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் எதிர் எதிர் நிலையில் இருந்தன. 1970களில் இருந்து அந்த முரண்பாடு தீவிரமடைந்தது. அமெரிக்க நெறியாள்கையில் சிங்களம் நடத்திய ஜெயசிக்குறு படை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் இந்தியா செய்த விட்டுக் கொடுப்புடன் 1998 மே மாதம் முறியடித்தனர். அந்த முறியடிப்பு இந்தியாவைப் பகைத்து இலங்கையில் அமெரிக்காவால அரசுறவியல் நகர்வுகளை வெற்றிகரமாக செய்ய முடியாது என அமெரிக்காவை உணர வைத்தது. அதன் பின்னர் இந்தியாவுக் அமெரிக்காவும் இணைந்து செயற்பட ஆரம்பித்தன. 1999இல் இந்தியா பாக்கிஸ்த்தானிடையே நடந்த கார்கில் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு இந்தியாவை திருப்தியடைய வைத்தது. அமெரிக்கா இஸ்ரேல் இந்தியவிற்கு ஆதரவாக தனது வான்படையை அனுப்பியதை எதிர்க்கவுமில்லை. 2000-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டார். 32 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அதிபர் புது டில்லிக்கு மேற்கொண்ட பயணம் அதுவாகும். இந்தியாவின் அணுக்குண்டு பரிசோதனையின் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது விதித்த பொருளாதாரத் தடை 2001-ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன பின்னர் சிங்களவர்களுக்கு இரண்டு நாடுகளும் இணைந்து ஆதரவு வழங்குவதும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒழிப்பதும் ஆரம்பமானது. அமெரிக்காவின் பயங்கரவாததத் திற்கு எதிரான போரில் இந்தியா இணைவதற்கு நிபந்தனையாக விடுதலைப் புலிகளை அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிபந்தனையாக இருந்தது. இலங்கையின் நட்புப் பட்டியலில் இந்தியாவிற்கு முதன்மை நிலையைப் பெறுவதற்காக இந்தியா இதைச் செய்தது. இரண்டு நாடுகளும் இலங்கை இனக்கொலையின் கூட்டுப் பங்காளிகளாக செயற்பட்டன. இலங்கையை இந்தியாவின் பின்புறமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. ஆனால் இலங்கையை கையாளும் திறன் இந்திய வெளியுறவுத்துறைக்கு இல்லாத படியால் இலங்கை சீன சார்பு நாடாக 2009இன் பின்னர் ராஜபக்சேக்களின் ஆட்சியில் மாறிக் கொண்டது. இந்தியாவை இலங்கை தொடர்ந்து ஏமாற்றியது.  இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும் விதம் அமெரிக்காவிற்குத் திருப்தி அளிக்காததால் 2013-ம் ஆண்டு அமெரிக்கா தனது கையில் இலங்கை விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டது. மாலை தீவிலும் அதையே செய்தது. இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தை ஒழிக்கும் தன் தந்திரோபாய நடவைக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி 2013-ம ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க நிர்பந்தித்தது. ஆனாலும் இலங்கையின் சில்லறைக் கூலிகள் போற் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்த பின்னரே அதற்கு ஆதரவு வழங்கினர்.

இந்தியாவின் அயோக்கியத் தனம்
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.

சீபா வேண்டாம் சீ போ என்ற இலங்கை

சிங்களவரக்ளுக்கு இனக்கொலை செய்ய உதவி செய்த இந்தியா அதற்கான கூலியாக சீபா ஒப்பந்தம் எனப்படும் Comprehensive Economic Partnership Agreement (CEPA) ஒப்பந்தத்தை இலங்கை இந்தியாவுடன் செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு போர் நடக்கும் போது கையொப்பம் இட வேண்டும் என இந்தியா நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் கையொப்பம் இடுவோம் என இலங்கை இழுத்தடித்தது. 2005-ம் ஆண்டு சீபா ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. 2008இல் ஒரு புறம் போர் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடினமான 13சுற்றுப் பேச்சு வார்த்தை செய்யப்பட்டு ஓர் ஒப்பந்தம் வரையப்பட்டது. போரில் பின்னரும் இலங்கை கையொப்பமிடவில்லை, 2013இல் ஒப்பந்தத் தில் கையொப்பமிட மாட்டோம் இன இலங்கை கையை விரித்து விட்டது. 2015-ம் ஆண்டு தலைமை அமைச்சர் பதவிக்கு வந்த ரணில் விக்கிர்மசிங்கவும் சீபா ஒப்பந்தத்தை நிராகரித்து இந்தியாவின் முகத்தில் கரி பூசினார். இதனால் இனக்கொலைக்கு கூலி வேலை செய்த இந்தியா ஏமாற்றப்பட்டது.

இலங்கை இந்திய சீபா ஒப்பந்தம்

இலங்கையின் சில தொழிற்துறையினர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீபா எனப்படும் பரந்த பொருளாதார பங்காண்மை ஒப்பந்தம் தமக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியா தமக்குத் திறந்து விடப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கையை சீபாவிற்கு சம்மதிக்க வைக்க தனது சலுகைக்களை முக்கியமாக ஆடை உற்பத்தித் தொழிலில் அதிகரித்தது. ஏற்கனவே சுங்கவரியின்றி மூன்று மில்லியன் துண்டுகளை இலங்கை ஏற்றுமதி செய்யலாம் என்றிருந்தது. இதை இந்தியா இரட்டிப்பாக்கியதுடன் மேலும் பல மில்லியன் துண்டுகளை குறைந்த சுங்கவரியுடன் இலங்கை ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் வெறுப்பை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அரசியல்வாதி விமல் வீரவன்ச சிபாவில் இலங்கை ஒப்பமிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா தனது நாட்டு வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்த ஒப்பத்தத்தை நிர்ப்பந்தித்தது என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் என்கிறார்; இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கை தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு ஈடானது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது. சீபா ஒப்பந்தம் என்ற பேச்சு எழுந்த போது இலங்கையில் பல சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் தொழில் நெறிஞர்களும் (Professionals), இடதுசாரிகளும் பொங்கி எழுந்தனர்.


இலங்கையின் நெருக்கடி

அமெரிக்காவில் இருந்து செயற்படும் கடன்படு திறன் தரப்படுத்தும் மூன்று நிறுவனங்கள் இலங்கை அரசின் கடன்படு திறனை தரம் தாழ்த்திய பின்னர் இலங்கை அரசு பன்னாட்டு நிதிச் சந்தையில் கடன்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு செலவாணிக் கையிருப்பு குறைந்த நிலையில் இலங்கைக்கு இலகு கடனும் நிதி உதவியும் அவசரம் தேவைப்படுகின்றது. சீனாவிடம் கடனோ நிதி உதவியோ பெறுவதாயின் சீனாவிற்கு பெரும் விட்டுக் கொடுப்புக்களை இலங்கை செய்ய வேண்டும். அது இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் கடும் விசனத்திற்கு உள்ளாக்கும். இலங்கையின் ஏற்றுமதியின் மூன்றில் இரண்டு பங்கு மேற்கு நாடுகளுக்கும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் செய்யப்படுகின்றது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வந்தால் இலங்கை அவர்களின் எல்லா நிபந்தனைகளுக்கும் அடி பணிய வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாயின் அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அரசு மக்களுக்கு செய்யும் சமூகநலக் கொடுப்பனவுகள் பலவற்றை நிறுத்த வேண்டி வரும். அதனால் ராஜ்பக்சேக்கள் அடுத்த தேர்த்தல்களில் தோல்விகளைச் சந்திக்க வேண்டி வரும்.

இலங்கையில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நெருக்கடிக்கு உதவி செய்து இலங்கையை சீபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியா முயல்கின்றது. இலங்கையின் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா ஒரு நான்கு அம்சத் திட்டத்தை முன் வைத்துள்ளது:

1. உணவு, மருந்து, எரிபொருள் கொள்வனவிற்கு கடன வழங்குதல்

2. நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம்

3. திருகோணமனை எரிபொருள் குதங்களை மேம்படுத்துதல்

4. இலங்கையில் இந்திய முதலீட்டிற்கு இலங்கை வசதி செய்து கொடுத்தல்

இவற்றைச் செய்த பின் இந்தியாவிற்கான கூலி கிடைக்குமா?

Monday 13 December 2021

சீன அச்சுறுத்தல் ஜப்பானை வல்லரசாக்குகின்றது

  



உலகத்திலேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக நடந்த இப்போரில் மூன்று மில்லியன் சீனப்படை வீரர்களும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். முதலாம் ஜப்பான் – சீனப் போர் 1894-1895 ஆண்டுகளில் நடந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த ஆசிய நாடுகளில் மோசமான போர்க்குற்றங்கள் நடந்தன. சீனப் பெண்களை ஜப்பானியர்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர். சீனா ஜப்பானின் அட்டூழியங்களை அதன் மக்கள் மனதில் ஆழமாக பதித்து  வைத்துள்ளது. சீனாவில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பானிய விளையாட்டு வீரர்களைக் கண்டவுடன் சீனப் பார்வையாளர்கள் கூச்சலிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை நிறைந்த வேற்றுமை

சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது. உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும்.வ்

கிழக்குசீனக்கடல்

கிழக்குச் சீனக் கடசீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  2013 நவம்பர் 24-ம் திகதி சீனா இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமா பிரகடனம் செய்தது. சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியது. 2013 நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நம்பகமற்ற தன்மை

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் அமெரிக்காவின் நம்பகத்தைனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.வ் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருந்தது. சீனாவின் மிகையான படைத்துறை வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அயல் நாடுகளின் மீது சீனா அதிகரிக்கும் ஆதிக்கமும் ஜப்பானை தனது பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றது. அதனால் தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதுடன் அந்த நாடுகளுக்கான தனது படைக்கலன் விற்பனையையும் அதிகரிக்கவும் முடியும்.

ஜப்பானின் பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கை – 2020

2020 ஜூலை 13-ம் திகதி ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஜப்பான் F-35 போர்விமானங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் F-X போர்விமானங்கள், மூன்று P-1 ரோந்து விமானங்கள் ஏழு SH-60K ரோந்து உலங்கு வானூர்திகள், ஆளில்லாப் போர்விமானப் படையணி, வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்பும் விமானங்கள், இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி, ஆளில்லாமல் நீரின் கீழ் இயங்கும் கலன்கள் போன்றவை ஜப்பானியப் படையில் இணைக்கப்படும் என சொல்கின்றது. அமெரிக்க உற்பத்தி F-35 போர்விமானங்கள் 157ஐ வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 42 F-35-B விமானங்களும் அடங்கும். F-35-B விமானங்கள் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தக் கூடியவகையில் குறுகிய தூர ஓட்டத்துடன் வானில் எழும்பவும் செங்குத்தாக உலங்கு வானூர்தி போல் தரையிறங்கவும் (Short take off and vertical landing STOVL) வல்லன. சீனாவை அதிக கரிசனை கொள்ள வைத்த F-35 விமானங்களை அமெரிக்காவின் Lockeed Martin, Northdrop Grumman பிரித்தானியாவின் BAE System ஆகியவை உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. வானாதிக்கம், வான்மேன்மை, இலத்திரனியல் போர், தாக்குதல், வேவு, உளவு, கண்காணிப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய பற்பணிப் போர் விமானங்களாகும்.

ஜப்பானின் விமானம் தாங்கிக் கப்பல்

ஜப்பானிடம் இரண்டு Izumo வகை நாசகாரிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை உண்மையில் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல்களாகும். இவை நீர்மூழ்கி அழிப்புப் பணிகள், கிழக்கு சீனக் கடல் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைச் செய்வதுடன் கட்டுப்பாட்டகம்+கட்டளையகம் ஆகவும் செயற்படக்கூடியவை. 248 மீட்டர் நீளமுள்ள இவற்றை ஜப்பான் மேலும் மேம்படுத்தி அவற்றில் அமெரிக்கத் தயாரிப்பான F-35-B ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை ஜப்பான் உள்ளடகிக் கொண்டிருக்கின்றது. இது ஜப்பானின் வலிமை மிக்க கடற்படையை மேலும் வலிமையுள்ளதாக்கின்றது.

சீனாவிற்கு எதிரான இரு தீவுச் சங்கிலிகளில் ஜப்பான்



சீனாவின் பசுபிக் பிராந்திய ஆதிக்கத்தை தவிற்பதற்கு இரண்டு சங்கிலித் தொடர் தீவிகளை அமெரிக்கா வியூகமாக வகுத்துள்ளது. முதலாவது சங்கிலித்தீவில் ஜப்பானின் யொக்கோசுக்கோ, ஒக்கினோவா ஆகிய தீவுகள், கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் எனவும் ஜப்பானியத்தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவு, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் தீவுக் கூட்டம் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தீவுச் சங்கிலிகளிலும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகின்றது. சீனா தைவானை ஆக்கிரமித்தால் இவ்விரு தீவுச் சங்கிலிகளும் சீனாவின் வர்தகப் போக்குவரத்தை முற்றாக தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சீனா அறியும்.

ஜப்பானின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

1997-ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை ஜப்பான் வாங்க முயன்ற போது அவற்றை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்கா அறிவித்தது. தனது உயர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா F-22 போர்விமான ங்களை எந்த நாட்டுக்கும் விற்பனைச் செய்யவில்லை. அப்போது ஜப்பான் தனது நாட்டிலேயே உயர்தர விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்தது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கி முடிக்கும் போது அது பிந்தங்கிய ஒரு விமானமாகிவிடும் என்பதால் ஜப்பான் நேரடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. இதே வழியை பிரித்தானியாவும் பின்பற்றியது. அமெரிக்கா 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முதல் விமானத்தை உருவாக்கி பரீசித்துள்ளது. ஜப்பானின் F-X என்னும் பெயர் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதில் ஜப்பான் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். எதிரிகளின் கதுவிகளால்(ரடார்களால்) அவற்றைக் கண்டறிய முடியாது. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு

இந்தியாஜேர்மனிதென் ஆபிரிக்காபிரேசில் ஆகிய நாடுகளைப் போல ஜப்பானும் ஒரு வல்லரசாக விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகைபொருளாதார வலுபடை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை. ஜப்பானின் வயோதிபர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பு ஜப்பானின் ஒரு பாதகமான அம்சமாகும்.

 

அமெரிக்க சீனப் போர் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2020/10/2021.html

இந்தியா ஜப்பானிய உறவின் முக்கியத்துவம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2014/09/blog-post_8.html

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...