வெங்காயம் பார்த்து
பெருங்காமப்பட்டு
என்ன்னகம் பறிகொடுத்து
நிம்மதியை இதயத்திற்பலிகொடுத்தேன்
துயரலை மோதகமாய்
ஆனதென் சீரகம்
உன்விழியின்னிலைக்கஞ்சி
நிற்குமென்னிலைக்காய்
என்றுமிளகு முன் மனம்.
சுக்கு நூறாயுடைந்த உள்ளம்
பக்குவப்பட ஒருவார்த்தை
மல்லிகையெடுத்த
வாய்திறந்து சொல்லாயோ
கூட்டுத்தானில்லை
குலவல்தானில்லை
பிரியானீ என்றால்
இன்பம்வருமன்றோ
இல்லை இனிச்சா தம்மடி
புகைக்கிறது நெஞ்சம்போல்
பாரொட்டா கால்கள்
பதறித்தவிக்கிறது
வரவா நான் தேடி
ஊறுவாய் உலர்த்த
சேமியா நினைவுகள்
பூமியோடு புதைய
வெங்காயம் - வெறும் உடம்பு அல்லது வெள்ளை நிற உடம்பு
மோதகம் - மோதும் இடம்
சீரகம் - சீரான உள்ளம்
பாரொட்டா - பாரில் தொடாத
சேமியா - சேமிக்காத
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

1 comment:
Very Nice
Post a Comment