Saturday 28 February 2009

போர் முனையில் ஒரு வகுப்பறை


நாங்கள் படித்த அந்த முன் பள்ளி
கூரையின்றிக் கிடக்கின்றது
எண்பத்து நான்கில் விழுந்த
எறிகணையில் சிதைந்து போனது

எண்பத் தெட்டில் அமைதிப் படை
எனும் பெயரில் வந்திறங்கிய
இந்திய ஆட்கொல்லிப்படையின்
டாங்கி சுவரை தகர்த்தது

எங்கள் ஆசிரியை தவமலர்
குடும்பத்தொடு அழிந்தா
இரவோடு இரவாக
விமானக் குண்டு வீச்சால்

பின் வாங்குக் குளப்படிகாரர்
சுகந்தனும் குண்டுக் காந்தனும்
வாக்குக் கண் வாமனும்
காணாமற் போனோர் பட்டியலில்

சும்மா இருந்த சுமதியையும்
கமலினியையும் சுந்தரியையும்
அமைதிப் படையினர் அநியாயமாய்
கெடுத்துக் கொன்றனர்

சந்தியில் நின்று வெட்டியாக
சைக்கிளோடு கதைத்துக் கொண்டிருந்த
சந்திரனும் சாந்தனும் கட்டைக் கதிரும்
ஆமிக்காரங்களால் சுடப்பட்டாங்கள்

ஆமிக்காரங்கடை பிரச்சினைக்கு
பயந்தொழிச்சோடி மட்டக்கிள்ப்பில்
மாமியாரோடை இருந்த மனோவை
சுனாமி கொண்டு போயிட்டுது

ஓமானுக்கு போன ஓணான் தலையன்
அவுணேஷன் சாலை விபத்தில்
அங்கு மண்டையைப் போட்டான்
பிரேதம் வரவில்லை

கறுப்பியென்று நாங்கள் நக்கலடிக்கும்
செம கட்டை சொரூபி கல்யாணம் கட்டி
கனடா போனவள் கள்ளரால்
கத்திக் குத்தில் மாண்டாள்

ரஜனி ஸ்ரைல் விட்டுக்கொண்டு
திரிஞ்ச கரியன் சுரேஷ்
தூள் வித்துப் பிடிபட்டு
இந்தியாவில் சிறையிலை இருக்கிறான்

பயந்தாங் கொள்ளி நிமலும்
ஒல்லி கமலும் இம்ரான்-பாண்டியன்
படையணியில் இணைந்து
மாவிரராய்ப் போனாங்கள்

டெண்டுல்கர் என நாம் கிண்டலடிக்கும்
கிரிக்கெட் பைத்தியம் கிரிசாந்தனின்
பரிதாபக் கதை சொல்ல ஏலாது
உயிரோடு புதையுண்டான் பாவம்

தினமும் பிந்தி வரும்
திக்குவாய்த் தீபா
கடற்கரும் புலியாகி
டோராவோடு சிதறினாள்

தெத்திப் பல் அபியும்
சொத்திவாய் ஹேமாவும்
சப்பட்டை சியாமாவும்
எங்கு போச்சினம் என்னாச்சினம்
எண்டு யாருக்கும் தெரியாது

எப்பவும் முதலாம் பிள்ளையாய்
வரும் அப்பாவி ரமணன்
விரிவுரையாளாயிருந்தவனை
கடத்திக் கப்பம் கேட்ட ஒட்டுக் குழு
சுட்டுப் போட்டு கடலுக்கை போட்டாங்கள்

வெளிநாட்டுக் கென்று காணி ஈடுவைத்து
பை நிறையப் பத்து லட்சம் பணத்தோடு
போன குரு போனது போனதுதான்
பாரக்கப் போனால்எஞ்சியது நீயும் நானும் தான்.

14 comments:

Anonymous said...

Its Fantastic man.....
I can recall my past...
Almost same story with me....
thanks man,.....

Anonymous said...

Is this poem yours? It was touching. I was very angered by your anti-India comments in this blog. But this poem helped me understand your anguish a bit.

Anonymous said...

//Is this poem yours? It was touching. I was very angered by your anti-India comments in this blog. But this poem helped me understand your anguish a bit.//

pannada payale. yaarudaaa neee.
India la entha state.

Arun said...

i really liked all your posts...
your posts are very sensational.. we tamils on the other side of the shore find know way to help the srilankan tamils in distress.

Anonymous said...

Concept is good, but flow is not. Some editing might be needed. OK.

வெண்காட்டான் said...

superb.

Unknown said...

i am moved , very good peom dear

Unknown said...

so simple .....your poema are so nice like you
nice poems.. keep it up...

சுப்பு said...

உணர்ச்சிகரமான வரிகள்

Anonymous said...

It soudns like a joke. But it is a brief history of Tamils in Srilanka.

Anonymous said...

Black history of innocent tamils

suri said...

I was read full but I had only one what is the current real position of ours ( tamilars ) status and what happen to MAA VEERAR PRABAKARAN pls tel me on mail or here
my mail id : suri_91@rocketmail.com

WorldEntertainer said...

very feelings...

sakthivel said...

Very feelings...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...