
என் இதயத்தில் இன்று நீ
ஒரு வலியாகத்தன்னும்
இருப்பதும் ஒரு சுகம்
அடங்காப் பசி
ஆணவத்தின் உணவகத்தில்
சாப்பிடப் போனவர்கள்
என்றும் பசியாறுவதில்லை
பொய்யும் உண்மையும்
அரசியல்வாதிளின் மானத்தில் அரைவாசி
அவர்கள் சொல்லும் பொய்களால் போகும்
மிகுதியாய் இருக்கும் அவர் மானம்
அவர்கள் பற்றிய உண்மைகளால் போகும்
பயங்கரவாதம்
அரசியலைச் சுத்தமாக்க
செய்ய நாம் நினைப்பதெல்லாம்
அரச விரோதச் செயலாம்.
வாழ்வு
இறப்பு வேண்டாம் என்றால்
முதுமை வேண்டுமா?
நல்ல ஆயுள் ஒரு கொடை
நீண்ட ஆயுள் கடும் தண்டனை
2 comments:
துனுக்கு கவிதைகள் அருமை
வாழ்த்துக்கள்..
கவிதைகள் அருமை...............
Post a Comment