Saturday, 16 October 2010

ஈழம்; பாதிக் கிணறு தாண்டிப் பாதாளத்தில் விழுந்தோமா?????



பாதிக் கிணறு தாண்டிவிட்டு
பாதாளத்தில் விழுந்துவிட்டு
போராட்டத்தின் புதுவடிவம்
எனப் புதுக்கதை பேசவில்லை
தூரோகங்கள் நிறைந்த பூமியில்
போராட்டங்களின் வரலாறு
பின்னடைவுகளின் வரலாறாகும்
தகராறுகள் தீராமல்
போராட்டம் முடிந்ததாக
வரலாறு எங்கும் இல்லை.

துணைவர்கள் என நம்பியவர்காள்
எம்மை முடக்கினர்
நண்பர்களாக நடித்து
எம்மை முடக்கினர்

வீழ்ந்தோம் என்பது
எழாமையே
தோற்கவில்லை என்பது
முயலாமையே
வெற்றிப் பள்ளியின்
பரீட்சைக் கட்டணமே
தோல்வி

Friday, 15 October 2010

ஒரே கட்டிலில் உறங்குவதில்லை


அவனும் அவளும்
ஆண்கள் பத்து நிமிடத்தில்
களைத்துபோவர்
பெண்கள் இன்னும் வேண்டும்
வேண்டும் என்று துடிப்பர்
சேலைக் கடையில்

முயற்சி மேலானது

தாண்டினால் தடை உன் பின்னால்
ஏறினால் மலை உன் காலடியில்

கேள்! அதிகம் பேசாதே!
எல்லோருக்கும் காது கொடு
எல்லோருக்கும் வாய் கொடாதே

இன்றே செய்
ஒரு நாள் ஒத்திவை
ஒரு வாரம் இழப்பாய்

மார்க்கங்கள் பல
ஒவ்வோர் ஊர்களுக்கும்
பல பாதைகள் உண்டு

உழைப்பு
வெற்றியும் சோம்பலும்
ஒரே கட்டிலில் உறங்குவதில்லை

Wednesday, 13 October 2010

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆறு வித்தியாசங்கள்.


ஆனும் பெண்ணும் சரி நிகர் சமன் என்று என்னதான் வாதிட்டாலும் அவர்களிடை பல வித்தியாசங்கள் உண்டு அவற்றில் முக்கியமான ஆறு வித்தியாசங்கள்:

1. ஒர் ஆண் தனக்குத் தேவையானதை அதிக விலை கொடுத்தாவது வாங்கி மகிழ்ச்சி அடைவான். ஒரு பெண் தனக்குத் தேவையில்லாதவற்றை விலைக்குறைத்து வாங்குவதில் மகிழ்ச்சி அடைவான்.

2. ஒரு பெண் தனது திருமணம் வரை தனது எதிர்காலத்தையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். ஒர் ஆண் தனது திருமணத்தின் பின் தனது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தொடங்குவான்.

3. ஒர் ஆணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவனை அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்; தேவையான அளவு அன்பு செலுத்த வேண்டும். ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவள் மீது அளவு கடந்த அன்பு காட்ட வேண்டும்; அவளைப் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கக் கூடாது.

4. ஆண்கள் படுக்கைக்குப் போகும் போது எப்படி இருந்தார்களோ அப்படியே படுக்கையில் இருந்து எழும்புவர். பெண்கள் படுக்கைக்குப் போகும்போது இருந்ததிலும் பார்க்க படுக்கையில் எழும்பும்போது மோசமாக இருப்பர்.

5. ஒரு பெண் ஆணைத் திருமணம் செய்யும் போது இவன் இப்படியே இருக்க மாட்டான் இனித் திருந்துவான் என்று எதிர்பார்த்து ஏமாறுவர். ஒர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்யும் போது இவள் இப்படியே என்றும் இருப்பாள் என்று நம்பி ஏமாறுவர்.

6. பெண்கள் தமக்குத் தேவையான எல்லாவற்றையும் உடலுறவின் மூலம் பெற்றுக் கொள்வர். ஆண்களுக் தேவையான தெல்லாம் உடலுறவுதான்.

Tuesday, 12 October 2010

ஹைக்கூ கவிதைகள்: இதயத்தின் முனகல்


கண்ணைக் கவர்ந்தது
உள்ளம் கவரவில்லை
காமம்

இதயத்தின் முனகல்
வேதனையின் வெளிப்பாடு
பெரு மூச்சு

அழகற்றோர் அழகாகத் தெரிவர்
தேவையற்றோர் தேவையானவராவர்
காதல்

கல்லுக் கிடைக்கும் வரை
நாய்மீது அன்பு காட்டு
ராஜதந்திரம்

பணம் முடிந்தது
மாதம் முடியவில்லை
வறுமை

கண்ணீர் விட்டு வளர்த்த பயிர்
கண்காணிப்பின்றிக் கருகுகிறது
சுதந்திரம்

முதுமை விலையாவது
தவறுகளில் பெறுவது
அனுபவம்

தடிமன் பற்றி புதிய கண்டு பிடிப்புக்கள்.


வாழ்நாளில் ஒருவருக்கு சராசரியாக இருநூறு தடவை தடிமன் பிடிக்கிறது. அது சராசரியாக ஒன்பது நாட்கள் நீடிக்கிறது. இப்படிப்பார்க்கையில் ஒருவர் தனது வாழ்நாளில் ஐந்து வருடங்கள் தடிமனால் அவலப்படுகிறார். உலகில் மிக அதிகமாகப் பிடிக்கும் நோய் தடிமனாகும். கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி தடிமன் பற்றிப் பல நம்பிக்கைகளைத் தவிடு பொடியாக்கியுள்ளது.

Jennifer Ackerman என்னும் விஞ்ஞானி தடிமன் பற்றிக் கண்டறிந்த உண்மைகள்:

1. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தடிமனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன தெரியுமா? பலமான நோய் எதிர்ப்புச் சக்தி தடிமனைக் கொண்டுவருமாம். Cold symptoms do not result from the ­destructive effects of viruses but rather from how strongly your immune system reacts to them. In other words, terrible cold symptoms are the product of a strong immune system, rather than a weak one.

2. விட்டமின் சி மாத்திரைகள் தடிமனைக் குணப்படுத்தாது.

3. மதுபானம் பாவித்தல் தடிமன் வருவதை அதிகரிக்காது ஆனால் குறைக்கலாம்.

4. முத்தமிடுவதால் தடிமன் தொற்றாது. தடிமன் கிருமிகள் மூக்கினூடாகவும் கண்ணினூடாகவும் அதிகமாக எமது உடலில் பிரவேசிக்கின்றன. தடிமன் கிருமி உள்ள இடங்களை எமது கைகளால் தொடுவதாலும் தடிமன் பரவலாம்.

5. பாதிக்கப் பட்ட ஆடைகளை துவைப்பது தடிமன் கிருமிகளைக் கொல்லாது.

6. தடிமன் வந்தவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பது பயன் தராது.

7. பலமாக மூக்கைச் சிந்துதல் பயன் தராது. மாறாக உங்கள் கபாலத்தில் கிருமிகள் பரவ வழி செய்யும்.

8. கிருமிக் கொல்லி சோப்புக்கள் பயன்தராது.

9. போர்வைகளால் மூடுவது பயன் தராது

10. மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும்

11. அதிக நீராகாரம் அருந்துவது பெரிய பயன் தராது

12. கோழி சூப் தடிமனைத் தடுக்கும்.

13. உங்களுக்கு அடிக்கடி தடிமன் வந்தால் உங்கள் ஜீன்கள்தான் காரணம். உங்களுக்கு அதிகம் தடிமன் வந்தால் உங்கள் பரம்பரைக் குறைபாடுதான் காரணமாம்.

Monday, 11 October 2010

ஹைக்கூ கவிதைகள்: மௌனத்தின் சுவை மொழி


உலகம் உன்னை ஏற்க
உன்னை நீ ஏற்றுக் கொள்
தன்னம்பிக்கை

மௌனத்தின் சுவை மொழி
காதலின் இணை வழி
உதடுகளின் உரசல்

சாத்தியப்படாதவை எதுவுமில்லை
சாதிக்க முடியாதது எதுவுமில்லை
காதலிலும் கனவிலும்

எதையும் செய்யலாம் என் நம்பு
எல்லாவற்றையும் செய்யமுடியாது
ஒன்றே செய் இன்றே செய்

ஊரோடு ஒத்து வாழ்
ஊரோடு சேர்ந்து ஏமாறாதே
தேர்தல்

அறியாமல் வைத்த நம்பிக்கை
புரியாமல் செய்த உடன்பாடு
அழிவு

விலைகளை அறியலாம்
மதிப்புக்களை அறிய முடியாது
உலக வர்த்தகம்

ஒருவரை ஒருவர் விரும்புவதல்ல
ஒரே திசையில் செல்ல விரும்புவது
காதல்

பெற்றோர் விட்ட தவறுகளைப்
பிள்ளைகளும் செய்கின்றனர்
மக்கள் தொகைப் பெருக்கம்.

Sunday, 10 October 2010

காணொளி-"மட்டுநகர் வாவியிலிலே...."

மட்டக்களப்பு நகரின் எழில் கூறும் பாடல்.
"மட்டுநகர் வாவியிலிலே....". பாடல் வரிகள் இணுவில் வீரமணி ஐயர் பாடியவர் Vidya Brainerd. தேஷ் இராகம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...