Saturday 30 January 2010

இலங்கைத் தேர்தலுக்குப் பின் தமிழர்கள் நிலை.


இலங்கையில் தமிழர்கள் ஆயுதவன்முறையைக் கைவிட்டு "ஜனநாயக வழியில்" தமது பிரச்சனையைத் தீர்துக்கொள்ள வேண்டும் என்று போதித்துக் கொண்டு சர்வதேசப் பயங்கரவாத நாடுகள் ஒன்று கூடி தமிழ்த் தேசியவாதத்தை "ரவுண்டு கட்டி" தடை செய்யப் பட்ட பயங்கர ஆயுதங்களைப் பாவித்துத் தாக்கி மழுங்கடித்தன.

இலங்கையில் "ஜனநாயகம்"
இலங்கையின் "ஜனநாயகம்" பற்றி 1981இல் நடந்த மாவட்ட சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். 1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. இது ஜனநாயக வழியில் தமிழர்கள் பிரச்சனை எப்படி சிங்களவர்கள் தீர்ப்பர் என்பதற்கு கிடைத்த முதல் எடுத்துக்காட்டு.

மாவட்டசபை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் மாகாணசபை முறை இந்திய நிர்பந்தத்துடன் 1987இல் அறிமுகப் படுத்தப் பட்டது. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல் தமிழ்பிரதேசங்களில் 2008வரை நடத்தப் படவில்லை. 2008 தமிழர் மாகாணம் துண்டாடப் பட்டு கிழக்கு மாகாணசபைக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. பிரதான தமிழ்கட்சிகள் இத் தேர்தலைப் புறக்கணித்தன. இருந்தும் வாக்குப்பெட்டிகள் பலவந்தமாக நிரப்பப்பட்டமை, வாக்காளர்கள் தாக்கப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை போன்ற வன்முறைச் சம்பவங்களுடன் தேர்தல் நடத்தப் பட்டது.

இப்படிப்பட்ட"ஜனநாயக" அனுபவங்களைக் கொண்ட தமிழர்களுக்கு "ஜனநாயக" வழிநின்று செயற்படும் படி போதிக்கப் படுகிறது.

2010 ஜனவரி 26இல் நடந்தஇலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்ததா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

  • தேர்தல் ஆணையாளர் பலத்த அழுத்தத்துக்குள்ளானார்.
  • தேர்தல் ஆணையாளர் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டார்.
  • தேர்தல் ஆணையாளர் பதவி விலகுகிறார்.
  • தேர்தல் தினத்தன்று காலை 7 முதல் மாலை 4 மணிவரை வன்முறைகள் இன்றி அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் அன்றைய தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது வன்முறை குழுக்களுடன் பிரவேசித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிடச் சென்ற பலரை விரட்டியடித்தனர்.
    தமது கட்சியின் ஆதரவாளர்களை தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கவில்லை.
  • கணனிகளில் பெரும் மோசடி இடம் பெற்றது.
  • வாக்குக்கள் எண்ணும்வரை வேட்பாளர் இராணுவ முற்றுகையில்.
இப்படியாக பல செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. பெருமளவில் மக்கள் தேர்தலில் பங்கு பற்றியதாக மேற்கு நாடுகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன. பெருமளவில் மக்கள் பங்குபற்றினரா அல்லது அல்லது பெருமளவில் வாக்குப் பெட்டிகள் நிரப்பப் பட்டனவா? தேர்தல் கண்காணிப்பாளர்கள் வடக்குக் கிழக்கில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற இடங்களை கோட்டை விட்டனரா? இவை போன்ற கேள்விகளுக்கு விடைதேவை.

தேர்தலை ஒட்டி தளர்த்தப் பட்ட தமிழ்மக்கள் மீதான கெடுபிடிகள் தேர்தலுக்குப் பின் இறுக்கப் படுகின்றன தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தம்மால் வெற்றி பெறமுடியும் என்று அறிந்தவர்கள் இனி தமிழ் மக்களைப் பற்றி கொஞ்சமாவது கவலைப் படுவார்களா? தமக்கு வாக்களிக்காத தமிழர்களை ஜே ஆர் ஜயவர்தன எப்படிப் பழிவாங்கினார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். மிக மோசமான தோல்விகளை தமிழர் வாழும் பிரதேசங்களில் பெற்ற ராஜபக்சேக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? வரலாற்றில் அறியாத மிக மோசமான அடக்கு முறை இனித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும்.

Friday 29 January 2010

தமிழர் தாயகத்தை வரைந்த தேர்தல் முடிவுகள்





















.



உலக வரைபடத்தை முதல் வரைந்த அறிஞர் தாலமி இலங்கையில்தமிழர்கள் வாழும் பகுதியை தனியாகக் காட்டினார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி வேறு வேறு காலங்களில் வேறு வேறு விதமாக அமைந்திருந்தது.

தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இலங்கையில் வேண்டும் என்று போராடியவர்கள் தங்கள் தாயகதை வரைபடமாக வரைய பெரு முயற்ச்சி எடுத்தனர். அதையொட்டி பலவாதப் பிரதி வாதங்களும் எழுந்தன. அந்த வரைபடம் வெளிவந்தவுடன் பல தமிழர்ககூட ஆச்சரியப் பட்டனர். உங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களா என்று அதிசயித்தனர். அந்த வரைபடம் சிங்களவர்களை ஆத்திரமூட்டியது. இலங்கையின் கடல் வளத்தில் மூன்றில் இரு பகுதி தமிழர்களுடையாதா என்று சினமுற்றனர்.

ஆனால் நடந்து முடிந்த இலங்கைக் குடியரசிற்கான தேர்தல் முடிவுகள் தமிழர் தாயகத்தை வரைந்து கொடுத்துள்ளது. இலங்கைத் தேர்தல் முடிவுகளை (மஹிந்த ராஜபக்ச வென்ற இடம், மஹிந்த ராஜபக்சவிற்கு அடிவிழுந்த இடம்)அடிப்படையாகக் கொண்டு பிரதீப் ஜயக்கொடி என்பவர் வரைந்த வரைபடம் இதைக் காட்டுகிறது. சில வித்தியாசங்கள் இருந்தாலும்(புத்தளம் சிலாபம்) சுயநிர்ணய உரிமை இல்லாத் தமிழர் தாயகம் தன்னாட்சி வேண்டி நிற்கிறது.

தொடர்புடைய பதிவு: மஹிந்த வெற்றியின் பின்னணியும் பின் விளைவுகளும்.

Thursday 28 January 2010

சரத்தைப் பாதுகாக்க இந்தியாவிடம் மன்றாடிய ரணில்


தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட எதிர் கட்சியினர் தமது களைப்பைத் தீர்த்துக் கொள்ள ஒரு உல்லாச விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டே தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டாடலாம் என ஒன்று கூடினர். அவர்கள் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர்களை இலங்கை இராணுவம் சூழ்ந்து கொண்டது.

அமெரிக்கத் தலையீட்டால் முதலில் ரணில் விக்கிரமசிங்க விடுவிக்கப் பட்டார். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் படைத்துறைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ந்தும் அங்கு "இராணுவ முற்றுகைக்கு உட்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தார்.

நாட்டை "பயங்கரவாதிகளிடம்" இருந்து பாதுகாத்தவர் தன் பாதுகாப்பிற்காக கவலைப்படும் நிலை. சட்டரீதியாக தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி தேர்தல் ஆணையாளரை சரத் பொன்சேக்கா தொடர்பு கொண்டு வேண்டினார். தன்னை ஒரு நட்பான அயல் நாடு ஒன்றிற்கு செல்ல ஏற்பாடு செய்யும்படி வேண்டிக் கொண்டார். தேர்தல் ஆணையாளர் ஐயோ சாமி ஆளை விடுங்கோ என்றார். தேர்தல் என்று முடியும் என்று வீடு செல்வேன் என்று காத்திருந்தார் ஆணையாளர். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

சரத்தை விடுவிக்க அமெரிக்கா எடுத்த முயற்ச்சி கைகூடாமல் போகவே சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க சண்டைக் காரன் காலில் விழுவது மேல் என்று உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் தொடர்பு கொண்டார். அதன் பின்னர் அவர் வீடுசெல்ல அனுமதிக்கப் பட்டார்.

சரத் பொன்சேக்காவையும் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று அறியப்படுகிறது. சரத் பொன்சேக்கா வெளிநாடு சென்றால் அவர் இலங்கையில் நடந்த போர்குற்றங்களுக்கு ஒரு சாட்சியாவாரா?

Wednesday 27 January 2010

தோல்வியை ஏற்க மறுக்கும் சரத் பொன்சேக்கா.


இலங்கைத் தேர்தலின் முடிவுகளை தான் ஏற்க மறுப்பதாக எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு தாம் சவால் விடுப்பதாகவும் அறிவித்துள்ளார். அவரது சவால் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாடளாவிய மக்கள் எழுச்சிப் போராட்டமா அல்லது சட்டரீதியாக நீதிமன்றில் நடவடிக்கையா அலலது இரண்டும் கலந்ததா?

தேர்தல் முடிவுகளை அறிவித்த தேர்தல் ஆணையாளர் இப்படிக் குறிப்பிட்டார்: இது வழமையான அறிக்கையே தவிர எந்த சட்டவமைப்பிற்கும் உட்படாதது. இந்தச் சொற்றொடரின் தாற்பரியம் என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேவேளை இலங்கைத் தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் உறுதிப் படுத்தப் படாத செய்திகள் முன்பு தெரிவித்தன . தேர்தல் வாக்குக்கள் எண்ணப் படும் இடங்களில் அரச சார்பு ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதிகளை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல எதிர்க் கட்சிப் பிரமுகர்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லமல் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. தடுத்து வைத்திருக்கப் பட்ட ரணில் விகிரமசிங்கே அமெரிக்கத் தலையீட்டால் விடுவிக்கப் பட்டார்.

நேற்று வாக்கு எண்ணிக்கை ஆரமபித்ததில் இருந்தே பல மின்ன்ணு ஊடகங்கள் மூடப் பட்டுவிட்டன.

வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தேர்தல் ஆணையாளர் வீட்டுக் காவலில் என்றால் தேர்தல் வாக்கு எண்ணிக்ககைகளை நெறிப்படுத்துவது யார்?

இதே வேளை அஸ்கிரிய மகா நாயக்கர்கள் தேர்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.

டெய்லி மிரர் இணையத்தளம் இப்படித் தெரிவிக்கிறது: The election monitoring body Centre for Monitoring Election Violence (CMEV) reported that some counting officers and agents of the main opposition candidate at counting stations in Anuradhapura, Polonnaruwa, Kurunegala and Matale had been physically assaulted when they were carrying out their duties.

The spokesperson for the Centre for Monitoring Election Violence Dr. Pakiasothy Saravanamuttu raised concerns over the incidents in a letter to the Elections Commissioner.

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் - ஆணையாளர் வீட்டுக் காவலில்?


இலங்கைத் தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் உறுதிப் படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குக்கள் எண்ணப் படும் இடங்களில் அரச சார்பு ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதிகளை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல எதிர்க் கட்சிப் பிரமுகர்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லமல் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

நேற்று வாக்கு எண்ணிக்கை ஆரமபித்ததில் இருந்தே பல மின்ன்ணு ஊடகங்கள் மூடப் பட்டுவிட்டன.

வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தேர்தல் ஆணையாளர் வீட்டுக் காவலில் என்றால் தேர்தல் வாக்கு எண்ணிக்ககைகளை நெறிப்படுத்துவது யார்?

இதே வேளை அஸ்கிரிய மகா நாயக்கர்கள் தேர்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.

டெய்லி மிரர் இணையத்தளம் இப்படித் தெரிவிக்கிறது: The election monitoring body Centre for Monitoring Election Violence (CMEV) reported that some counting officers and agents of the main opposition candidate at counting stations in Anuradhapura, Polonnaruwa, Kurunegala and Matale had been physically assaulted when they were carrying out their duties.

The spokesperson for the Centre for Monitoring Election Violence Dr. Pakiasothy Saravanamuttu raised concerns over the incidents in a letter to the Elections Commissioner.

ராஜபக்சவின் வெற்றியின் பின்னணியும் பின் விளைவுகளும்.


மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர் . முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன.

மேற்குலகப் பத்திரிகைகளில் வெளிவந்த "Tamils are the King Makers", "Defeated Tamils a Force Again" "Tamils to Decide Srilankan Poll Results" போன்ற தலைப்புச் செய்திகள் சிங்களவர்களைச் சிந்திக்க வைத்திருக்கும். மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன. தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை:

ஆதரவு வாக்குக்கள் அல்ல ஆத்திர வாக்குக்கள்.
சரத் பொன்சேக்காவிற்கு தமிழர்கள் அளித்த வாக்குக்கள் அவர்மீது விருப்புக் கொண்டு அளிக்கப் படவில்லை. மஹிந்த ராஜபக்சமீது உள்ள ஆத்திரத்தால் அளிக்கப் பட்ட வாக்குக்கள். இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர்தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேக்கா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குக்கள் எடுத்துள்ளார். மொனராகலவில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம் வாக்குக்களையும் சரத் பொன்சேக்கா பதினையாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணமாவட்டத்தில் பொன்சேக்கா நூற்றி ஏழாயிரம் வாக்குக்களையும் ராஜபக்ச நாற்பத்தி இரண்டாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம் பேரூந்துகளில் கொண்டு சென்று இறக்கப்பட்ட சிங்களவர்கள் இப்படிப்பல அட்டகாசங்களுக்கு மத்தியிலும் வன்னி மாவட்டத்தில் ராஜபக்ச 24 ஆயிரம் வாக்குக்களைமட்டுமே பெற்றார். பொன்சேக்கா 61ஆயிரம் வாக்குகள் பெற்றார்.

தமிழர்களும் கலந்து வாழும் கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ச அறுநூற்றி பதினையாயிரம் வாக்குகளும் பொன்சேக்கா ஐநூற்றி முப்பத்தி முன்றாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். இம்முடிவை சிங்களவர்கள் அதிகம் வாழும் மஹரகம தொகுதியின் வாக்களிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அங்கு ராஜபக்ச 59 ஆயிரம் பொன்சேக்கா 35 ஆயிரம்.

முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் கல்முனைத் தொகுதியில் ராஜபக்சவைவிட பொன்சேக்கா மூன்று மடங்கு வாக்குக்களைப் பெற்றுள்ளார்.

மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தனிச் சிங்களப் பகுதிகளைப்போல் ராஜபக்ச பொன்சேக்காவைவிட இருபங்கு வாக்குக்கள் பெறமுடியவில்லை. மத்தளை மாவட்டத்தில் ராஜபக்ச 157 ஆயிரம் பொன்சேக்கா 100 ஆயிரம். மாத்தளைத் தேர்தல் தொகுதியில் ராஜபக்ச 27 ஆயிரம் வாக்குக்கள் பொன்சேக்கா 26ஆயிரம் வாக்குக்கள். மலையகப் பகுதியான நுவரெலியாவில் சரத் பொன்சேக்கா பெரு வெற்றி ஈட்டியுள்ளார். பொன்சேக்கா 113ஆயிரம் வாக்குகள், ராஜபக்ச 62ஆயிரம் வாக்குக்கள். மலையகத் தமிழர்களும் போரில் ராஜபக்ச நடந்துகொண்டமைக்கு எதிராக வாக்களித்தனர் என்று துணிந்து கூறலாம்.

சிங்கள மக்களின் மனோபாவம்
மஹிந்த ராஜபக்சவின் நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் முழு இலங்கையையும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைவிட பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. பொருளாதாரம் முன்னேறவில்லை. ஆட்சியாளர்களின் குடும்பம் சொத்துக் குவித்தமை மனித உரிமை மீறல்கள் பத்திரிகைகள்மீதான அடக்குமுறை அளவிற்கு அதிகமான மந்திரிகள் போன்றவற்றைப் புறந்தள்ளி சிங்களமக்கள் இந்தத் தேர்தலில் தமிழர்கள் மீதான அடக்கு முறையை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் வாக்களித்தமையும் சிங்கள மக்கள் வக்களித்தமையும் நேர் எதிர் எதிரானவையாக அமைந்தன.

சரத் பொன்சேக்காவின் தோல்வியின் காரணிகள்.
சரத் பொன்சேக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதுதான். அவர் தோல்விக்கு மேலும் இரு காரணிகளைச் சொல்லலாம். ஒன்று அவர் தமிழத்தேசியக் கூட்டமைப்புடன் ஓர் உடன்படு நிலைக்குச் சென்றமை. இந்தக் காரணி எந்த அளவிற்கு அவருக்கு தோல்வியைக் கொடுத்தது என்பதை அறிவது கடினம். மற்றக் காரணி அவர் பின்னால் மேற்குலக நாடுகள் நின்கின்றன என்று சிங்கள மக்கள் கருதியமை. இந்த இரண்டு காரணிகளும் இணைந்து சரத் பொன்சேக்காவின் தோல்விக்கு பெரிய பங்காற்றி இருக்கும் என்று சொல்லலாம். சரத் பொன்சேக்கா ஒரு நல்ல மேடைப் பேச்சாளர் அல்ல (மோசமான பேச்சாளர் என்றும் சொல்லலாம்) என்பதும் ஒரு காரணி. சிங்கள மக்கள் பொதுவாக அரசியலில் இராணுவத் தலையீட்டை விரும்புவதில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஒரு தடவை மட்டும் இராணுவப் புரட்சி சதி ஒன்று இடம் பெற்றது. அது எளிதாக முறியடிக்கப் பட்டது. போரில் வென்றதை சிங்களமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதில சரத் பொன்சேக்காவிற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்காக அனுபவம் அற்ற ஒருவரிடம் நாட்டை கையாளிக்க அவர்கள் தயாரில்ல்லை.

ஒட்டுக் குழுக்கள்
சிங்களப் பேரினவாதிகளுடன் இணைது செயற்படும் முன்னாள் ஆயுததாரிகள் மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்கும்படி செய்த பிரச்சாரம் வெற்றியளிக்கவில்லை. அவர்களுக்கு தமிழ்மக்கள் மத்தியில் உள்ளஆதரவுத் தளம் மிகச் சிறியது என்பதைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. மஹிந்த ராஜபக்சவிற்கு பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவட்டம் மொனராகல. அவருக்குப் பெரும் தோல்வியை ஈட்டிக் கொடுத்தது அவரது இருபெரும் தமிழ் நண்பர்கள் தோன்றிய மட்டக்களப்பு மாவட்டம். இவர்கள் இருவரினது அடாவடித்தனத்தில் மக்கள் எவ்வளவு தூரம் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்று இதில் இருந்து தெரிகிறது.

செல்லாக் காசாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க
இலங்கையின் இரு முன்னாள் பிரதம மந்திரிகளின் மகளும் இருதடவை இலங்கைக் குடியரசுத் தலைவியாக இருந்தவருமான சந்திரிக்கா பண்டார நாயக்க சரத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அவரது பரம்பரைச் சொத்தாகக் கருதப் படும் அத்தனகல்ல தொகுதியில் மஹிந்த ராஜபக்ச பெரு வெற்றி ஈட்டியுள்ளார். பெரும் நிலப் பிரபுவான அவரது தந்தையால் பெரும் தொகைப் பணம் செலவழித்து உருவாக்கப் பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கைநழுவிப்போனதுடன் அவரது வாரிசு தனது அரசியல் எதிர்காலத்தை இழந்துள்ளார்.

சுயநிர்ணய உரிமை அற்ற தமிழர்கள்
தமிழர்களுக்கு இலங்கையில் சுய நிர்ணய உரிமை கிடையாது அவர்கள் வாக்களிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை இத்தேர்தல் உணர்த்தி நிற்கிறது. தமிழர்கள் ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை அதற்கு செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையில் யாரும் இறங்கப்போவதில்லை. மாறாக அவர்களை எப்படிப் பழிவாங்கலாம் என்ற போக்குத்தான் இனிக்காணப்படும். ஜே ஆர் ஜயவர்தனேயும் இதைத்தான் செய்தார். ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், ஊடகவியாலாளர்கள் கொலைகள் போன்றவற்றிற்கு சிங்களப் பேரினாவாதம் அனுமதி அளித்துள்ளதா என்ற கேள்வியைத் தேர்தல் முடிபுகள் எழுப்புகின்றன. தமிழர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட இடங்களில் அவசர அவசரமாகக் கட்டப் பட்ட சிறைச்சாலைகள் விரைவில் நிரப்பப்படுமா? இன்னும் பத்துத் தலைமுறைக்கு தமிழர்கள் போராட்டம் ஆரம்பிக்காமல் இருக்கும்படி செய்ய வேண்டும் என்ற ராஜபக்சக்களின் வேலைத் திட்ட்ம தொடராமல் இருக்க தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.
தமிழர்கள் தமக்கு வாக்களிக்காமல் மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எந்த ஒரு சிங்களக் கட்சியாவது கருதும் பட்சத்தில் அவர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் என்பதை தேர்தலன்று யாழ்ப்பாணத்தில் வெடித்த 13 குண்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

பொருளாதார நிலை
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி. எஸ். பி வர்தகச் சலுகை இரத்தும் சவுதி அரேபியா இலங்கை பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்ற முடிவும் இலங்கைப் பொருளாதாரத்தில் குறுங்காலப் பிரச்சனையை ஏற்படுத்தும். அரச ஊழியரகளின் சம்பள அதிகரிப்பும் விவசாயக் கடன் இரத்தும் இலங்கையின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் இன்னும் என்ன என்ன கெடுபிடிகளை கொண்டு வரவிருக்கிறது என்பதும் தொடர்ந்தும் சர்வ தேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் கிடைக்குமா என்பதும் இப்பொது கேள்விக் குறிகளே.

போர்குற்றம் - மேற்குலகம் எதிர் ராஜபக்சக்கள்
ராஜபக்ச மேற்குலக விரோதிகளான சினா, ஈரான், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளுடன இணைந்து செயற்பட்டமை மேற்குலகை ஆத்திரமூட்டச் செய்து அவருக்கு மிக இலகுவாகக் கிடைக்க வேண்டிய தேர்தல் வெற்றியை சற்று சிரமப்பட்டு கிடைக்கச் செய்தது மேற்குலகம். இனி போர்குற்றம் என்ற ஆயுதத்தை பயன் படுத்தி அவரை அடி பணிய வைக்க மேற்குலகம் முனைப்புக்காட்டும். அவர் மேற்குலகுடன் இணங்கிப் போவாரா அல்லது முரண்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போர்குற்றத்திற்கான முதல் தர சாட்சி சரத் பொன்சேக்கா. அவரை மஹிந்த அரசு கைது செய்து ஆயுத ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்களில் சிறையிலிட்டு ராஜபக்சக்கள் செய்த போர்குற்றங்களை வெளிவராமல் செய்யலாம்.

தன்வினையால் சுடப் படும் பொன்சேக்கா.
தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஒன்றாக ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தன்னுடன் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 400 பேர்வரை அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருடனும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 400 பேருடனும் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா முகாமிட்டுள்ளார் என்றும் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமைந்தால் இராணுவ புரட்சி ஒன்றைமேற் கொள்வதற்காகவே பொன்சேகா இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா தப்பி ஓடவிடாமல் அவரைக் கைது செய்ய இந்த முன்னேற்பாடா?

சரத் பொன்சேக்கா தமிழர்களுக்கு செய்த அநியாயத்திற்கு இனி அநுபவிப்பார். சரத் பொன்சேக்காவைப் பொறுத்தவரை அரசன் அன்று அறுக்கிறான் என்றால் ராஜபக்சக்களை நின்று அறுப்பது யார்?

Tuesday 26 January 2010

இது ஒரு இனிய தேர்தல்


இது ஒரு இனிய தேர்தல்
இப்படி எங்குதான் நடக்கும்

கூடிநின்று கொக்கரித்து
நாம் ஆண்ட பூமியை
நாம் மாண்ட பூமியாய் ஆக்கியோர்
எதிரெதிர் அணியில் அடிபடுகின்றனர் - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒன்று என்று தான் நடக்கும்.

எக்காலமும் இனிநாம் தலைதூக்க முடியாதென்று
எக்காளமிட்ட பேய்கள் முட்டி மோதி
முக்காலமும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒன்றிற்கு எத்தனை நாள் பார்த்திருந்தோம்.

வாழை இலைக்கு மேல் விருந்துமில்லை
வாழை இலைக்குக் கீழ் காசுமில்லை - எம்
வாழ்வை அழித்த நாய்கள் குரைத்துக் குதறுகின்றன - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
எம்மினம் என்றும் அறியாத் தேர்தல்.

நாமிங்கு ஒரு மூலையில் வாழலாம்
ஒரு நாளும் நாமிங்கு ஆளமுடியாதென்றோன்
தனக்கே வாக்களிக்க் வக்கத்து நிற்கின்றான் -அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இதைப் பார்த்து இரசிக்க யாருக்கு கிடைக்கும்.

எம் வீடுகள் கொழுத்திய கொடியோ
எம் குழந்தைகள் கொன்ற தீயோர்
எம் குமரிகள் கெடுத்த கயவர்
ஈரணி நின்றெனி அடிபடுவர் - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒன்று யார்தான் காண்பர்

யார் வென்றாலும் அவன் எம் முதல் எதிரி
யார் தோற்றாலும் அவனைப் பார்த்து நகைப்போம்
எம் வழி என்றும் தனி வழி எம் தலைவன் காட்டிய வழி - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒரு தேர்தல் யார்தான் அறிவார்.

இந்திய சிங்களக் கூட்டமைப்பால் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு -




மஹிந்த திடீரென்று இந்தியா சென்றார்.
இன்னொரு இந்தியப் படையெடுப்பு?

இந்தியாவில் பிரார்த்தனை என்ரு சொல்லிக் கொண்டு மஹிந்த இன்று திடீரென இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் பின்னணியில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. தேர்தலில் தான் தோல்வியடைந்தால் இராணுவ ஆட்சி அமைப்பதற்கு இந்திய உதவியைக் கோரவே மஹிந்த இந்தியா சென்றாரா? மஹிந்த தோல்வியடைந்து அவர் பதவி விலக மறுத்தால் இலங்கை இராணுவம் இரு பிரிவாகப் பிரிந்து மோதலாம். இதற்கு இந்திய இராணுவ உதவி வேண்டியே மஹிந்த இந்தியா சென்றாரா? இன்னொரு இந்தியப் படை எடுப்பா?
இலங்கை இராணுவ மயப்படுத்தப் பட்டுவிட்டது. மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இராணுவச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. மக்களாட்சி முறையில் நடக்கும் தேர்தல் என்று சொல்லப் படுவது இராணுவ நலன்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் படுகிறது.

வாக்களிக்க முடியாத சரத் பொன்சேக்கா.
இன்று நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை. 2008-ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் தனது பெயரைப் பதிவுசெய்ததாக அவர் கூறினார். ஆனாலும் அவர் பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கவில்லை. அன்று அறுப்பது அரசனா? தெய்வமா? சரத் பொன்சேக்கா கனடாவில் கூறியது:"I strongly believe, that this country belongs to the Sinhalese, but there are minority communities and we treat them like our people...We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country...We are also a strong nation ... They (the minorities) can live in this country with us. “
ஐயா பொன்சேக்கா அவர்களே நீங்கள் ஸ்ரீலங்காவில் வாழலாம் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் வாக்களிக்க முடியாது.
இராணுவமயமான வாழ்வு
தமிழர்கள்மீது இன்னொடு படை எடுப்பு நடத்தப் படுகிறது. வன்னிப் பிரதேசம் எங்கும் சிங்களவர்கள் தேர்தலை ஒட்டி பேரூந்துகளில் கொண்டுவந்து இறக்கப் பட்டனர். இராணுவ அதிகாரிகள் பலர் திடீரென ஏன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் பட்டனர்? யாழ்ப்பாணத்தில் நடமாடும் சிங்களவர்கள் தொகை திடீரென அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் எந்த சுதந்திரமும் இன்றி மக்கள் வாழ்கின்றனர். மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களின் கொலைகள் அதிகரித்துள்ளன. அண்மைய காலப்பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இளைஞர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மன்னாரில் கடத்தல்கள் கொலைகள். யாழ்ப்பாணத்தில் தொடர் குண்டு வெடிப்புக்கள் நடக்கின்றன. மக்கள் இதை இன்னொரு ஆக்கிரமிப்பாகவே கருதுகின்றனர்.

Monday 25 January 2010

இலங்கையில் பெரும் பதற்றம். அச்சத்தில் மக்கள்.


இலங்கையில் 26-ம் திகதி நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி பெரும் கலவரங்கள் வரலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கலவரமும் அதை ஒட்டி ஊரடங்குச் சட்டமும் வரலாம் என்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் சீருடைக் காடையர்கள்
கொழும்பு நகருக்குள் கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவ அணிகள் நகர்த்தப் பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை இந்த படைஅணிகள் வீட்டுக்குள் முடக்கிவிடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இலங்கை படைத்துறையில் சில படையணிகள் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவாக செயற்படலாம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் உண்டு. அது ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுகலாம் என்ற வதந்தி மக்களுக்கு அச்சமூட்டுகின்றது.

விமானத் தளம் - தப்பி ஓடவா ஒடுவதைத் தடுக்கவா?
தேர்தல் முடிவுகள் வரும் வேளையில் கட்டுநாயக்கா விமாnத் தளத்தையும் விமானப் படையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திட்டம் ஆளும் தரப்பால் செய்யப் பட்டுள்ளதாக சரத் பொன்சேகா அணியைச் சேர்ந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரச் தொலைக்காட்சி மஹிந்த கையில்?
அரச தொலைக்காட்சி சேவையில் தேர்தலை ஒட்டி சில ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. பலர் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இவை எல்லாம் ஏதோ ஒரு சதிக்கான முன்னேற்பாடு என மக்கள் அஞ்சுகின்றனர்.

பரவும் வதந்திகள்.
தேர்தலை ஒட்டி வந்தந்திகளும் பரவ ஆரம்பித்துள்ளன. தேர்தல் முடிவுகள் தனக்குச் சாதகமாக இல்லாவிடில் மஹிந்த இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப் போகிறார் என்று வதந்திகள் பரவியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள முகத்துவாரம் இராணுவ முகாமில் பயங்கர அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 15 கவச வாகங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்ததுள்ளார்.

Sunday 24 January 2010

தமிழர்கள் பிச்சாண்டிகளா? அரசை உருவாக்குபவர்களா?


சென்ற ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இந்திய விற்பன்னர்கள் தமிழர்கள்மீது அநுதாபம் காட்டுவது போல் தமிழர்களைப் பற்றி கேவலமாக எழுதி வந்தனர். இனித் தமிழர்கள் பிச்சாண்டிகள் என்பது போலும் எழுதினர். It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை மட்டுமே வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள். அந்தளவு பிச்சாண்டிகள் தமிழர்கள். அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.

இன்று தமிழர்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை பலரும் உணர்கின்றனர். நடக்கவிருக்கும் இலங்கைக் குடியரசுத் தேர்தலில் தமிழர்களை அரசை உருவாக்குபவர்கள்(king makers) என்று பிரித்தானியப் பத்திரிகைகளான Guardian, Daily Telegraph, Times ஆகிய பத்திரிகைகள் எழுதின. இந்தியப் பத்திரிகைகள் தமிழர்கள் தேர்தலில் தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்ததில் பொறாமை கொண்டு நிற்கின்றன.

ஒழுங்காக இலங்கை குடியரசுத் தேர்தல் நடை பெற்றால் தமிழர்களின் வாக்குகளே வெற்றியை நிச்சயிக்கும்.

சிங்களவர்களும் சும்மா இருக்கவில்லை. முன்பு தமிழர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன் என்று இந்திய ஊடகம் ஒன்றில் ஒரு சிங்களவர் எழுதினார். இன்று சிங்களப் பத்திரிகைகள் என்ன சொல்கின்றன? The Surprising power of Tamils! என்று சண்டே லீடர் பத்திரிகை இன்று எழுதுகிறது. தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதில் சரத் பொன்சேக்காவும் அவர் பின்னால் உள்ள மேற்குலக சக்திகளும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மஹிந்தவும் தன் அடிவருடிகள் மூலம் தமிழர் வாக்குகளைப் பெறுவதில் ஈடுபட்டுள்ளார்.

சிங்களவர்களின் ஆட்சியாளர்யார் என்பதைத் தீர்மானிப்பதால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. காரணமின்றிச் சிறையில் வைத்திருப்பவர்களை திறந்து விடுதல், தேவையில்லாமல் மூடிய தெருக்களைத் திறந்து விடுதல், சோதனைச் சாவடிகளை அகற்றுதல் போன்றவற்றிற்காக தமிழர்கள் போராடவில்லை. தாயகம் தேசியம் தன்னாட்சி அவை தான் அவர்களது தாரக மந்திரம்.

தமிழர்கள் பிச்சாண்டிகளும் அல்லர். சிங்களவர்களின் அரசை உருவாக்குவதில் அவர்களுக்கு அக்கறை இல்ல. ஆனால் அவர்கள் தம் ஆத்திரத்தை இந்தத் தேர்தலில் காட்டுவார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...