Wednesday 27 January 2010

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் - ஆணையாளர் வீட்டுக் காவலில்?


இலங்கைத் தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் உறுதிப் படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குக்கள் எண்ணப் படும் இடங்களில் அரச சார்பு ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதிகளை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல எதிர்க் கட்சிப் பிரமுகர்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லமல் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

நேற்று வாக்கு எண்ணிக்கை ஆரமபித்ததில் இருந்தே பல மின்ன்ணு ஊடகங்கள் மூடப் பட்டுவிட்டன.

வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தேர்தல் ஆணையாளர் வீட்டுக் காவலில் என்றால் தேர்தல் வாக்கு எண்ணிக்ககைகளை நெறிப்படுத்துவது யார்?

இதே வேளை அஸ்கிரிய மகா நாயக்கர்கள் தேர்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.

டெய்லி மிரர் இணையத்தளம் இப்படித் தெரிவிக்கிறது: The election monitoring body Centre for Monitoring Election Violence (CMEV) reported that some counting officers and agents of the main opposition candidate at counting stations in Anuradhapura, Polonnaruwa, Kurunegala and Matale had been physically assaulted when they were carrying out their duties.

The spokesperson for the Centre for Monitoring Election Violence Dr. Pakiasothy Saravanamuttu raised concerns over the incidents in a letter to the Elections Commissioner.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...