சீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு. சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது. இரசியாவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரம் அமெரிக்காவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரத்திலும் பார்க்க இருமடங்கானது. அமெரிக்கர்களிலும் பார்க்க இரசியர்கள் இருமடங்கு மது அருந்துகிறார்கள். உலகின் மிக மோசமான அணுக்கதிர் வீச்சு இரசியாவின் கரச்சே ஏரியில் இருக்கின்றது. இரசியர்கள் அமெரிக்கர்களுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிக தேநீர் அருந்துகிறார்கள்.
உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொன்ட இரசியாவின் மேற்பரப்பு புளூட்டோ கிரகத்தின் நிலப்பரப்பை ஒத்தது.
சீனர்கள் உணவருந்தும் சுள்ளிகள் (chopsticks) எட்டுக் கோடி சோடிகள் ஆண்டு தோறும் செய்யப்படுகின்றன. உலக நன்னீர் வளத்தின் ஐந்தில் ஒரு பங்கு இரசியாவின் பாய்க்கால் ஏரியில் இருக்கின்றது.
இரசியா அலெஸ்கா பிராந்தியத்தை 1867-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு 7.2 மில்லியன் டொலர்களுக்கு விற்றது. சீனா ஹொங்ஹொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்குக் கொடுத்து பின்னர் மீளப்பெற்றது.
இரசியாவின் எரிவாயு, நீர் போன்றவை விநியோகிக்கும் குழாய்களின் நீளம் (260,000 கிமீ) பூமியின் சுற்றளவிலும் பார்க்க ஆறு மடங்கு நீளமானது. பூமியின் சுற்றளவிலும் பார்க்க சீனாவின் தொடரூந்துப் பாதைகள் இருமடங்கிலும் மேலானது. பூமியின் சுற்றளவு 40,075கிமீ, சீனத் தொடரூந்துப் பாதை 93,000கிமீ.
உலகின் அதிகமாகப் பதப்படுத்தப் பட்ட யூரேனிய இருப்பில் அரைவாசி இரசியாவினுடையது. இரசியாவின் இருக்கு 694 தொன்கள். அமெரிக்காவின் இருப்பு 604 தொன்கள்.
சீன மக்கள் தொகை 133 கோடிக்கு மேல். இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகின்றது. 2010- ஆண்டு 14.2கோடியாக இருந்த இரசிய மக்கள் தொகை 2050இல் 12.6 ஆக வீழ்ச்சியடையும் என எதிர்பாக்கப்படுகின்றது.
உலக நிலக்கரி உற்பத்தியில் 46 விழுக்காடு சீனாவினுடையது. உலக நிலக்கரிக் கொள்வனவில் சீனாவின் பங்கு 49 விழுக்காடு.
இருபதாம் நூற்றான்டு முழுக்க அமெரிக்கா உற்பத்தி செய்த சீமெந்திலும் பார்க்க அதிக அளவு சீமேந்தை சீனா இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செய்கின்றது.
சீனாவின் ஆண்டு ஒற்றிற்கு பத்து இலட்சம் பேர் புகைப்பிடித்தலால் இறக்கின்றனர்.
சீனாவின் இயற்கை எரிவாயு இருப்பு 109.3 ட்ரில்லியன் சதுர அடிகள். இரசியாவின் இயற்கை எரிவாயு இருப்பு 1,163ட்ரில்லியன்கள். இரசியாவிடம் 87 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் உண்டு. இரசியாவின் 75 ஆண்டுகள் கொள்வனவை அது நிறைவேற்றக் கூடியது.
மொஸ்கோ நகரத் தொடரூந்தில் நாளொன்றிற்குப் பயணிக்கும் மக்கள் தொகை இலண்டனினதும் நியூயோர்க்கினதும் இணைந்த மொத்தத் தொகையிலும் பார்க்க அதிகமானதாகும்.
சீனர்கள் ஆண்டுக்கு 42.5 பில்லியன் பைகள் திடீர் நூடில்ஸ் உண்கிறார்கள்.
சீனர்கள் ஆண்டு ஒன்றிற்கு உண்ணும் பன்றி இறைச்சியை அடுக்கினால் அது 5,200 ஈஃபில் கோபுரம் அளவு உயரத்திற்குப் போகும். உலகப் பன்றிகளில் அரைப்பங்கு சீனாவில் இருக்கின்றன. சீனாவில் பன்றி இறைச்சி விலை அதிகரிக்காமல் பாதுகாக்க அரசு பன்றி இறைச்சிக் கையிருப்பை வைத்துள்ளது.
திருமணமாகாமல் இறக்கும் ஆண்களின் உடலத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு சீனாவில் உண்டு. இறந்து போன பெண்களின் உடலிற்கும் ஆணின் உடலிற்கும் திருமணம் செய்யப்படும். இதற்காக பெண்களின் இறந்த உடலைத் திருடி விற்பனை செய்வதும் உண்டு.
அப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை முழுக்க முழுக்கப் போலியாக உருவாக்கி முழுக்க்க முழுக்கப் போலியான அப்பிள் உற்பத்திப் பொருட்களை சீனாவில் விற்பார்கள்.
சீனாவில் உல்லாச பயணிகளுக்கு என ஒரு சட்டம் உண்டு.
சீனாவின் இருபது முன்னணிச் செல்வந்தர்களின் சொத்து ஹங்கேரி நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இணையானது. இரசியர்களின் முன்னணி செல்வந்தர்களின் மொத்தச் சொத்து பாக்கிஸ்த்தானின் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.
சவுதி அரேபியாவின் மக்கள் தொகையிலும் பார்க்க அதிக அளவு அதாவது மூன்று கோடி மக்கள் சீனாவில் குகைகளில் வாழ்கின்றார்கள்.
சீனாவின் டரங் மாவாட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு எட்டு பில்லியன் சோடி காலுறைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சீனச் செல்வந்தர்கள் தம்மைப் போல் உருவம் கொண்டவர்களை தமக்காக சிறைத் தண்டனை அனுபவிக்கச் செய்வார்கள்.
சீன உலக மக்கள் தொகையின் காற்பங்கினருக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கின்றது.
சீன மக்களின் மொத்தக் கொள்வனவு 2010ம் ஆன்டு 2.03 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது இது 2010இல் மூன்று மடங்காக அதிகரித்து 6.18 ட்ரில்லியன்க்களாகும்.
சீனா முழுவதும் ஒரே நேரப் பிராந்தியமாகும். இரசியாவில் ஒன்பது நேரப்பிராந்தியங்கள் இருக்கின்றன.
Wednesday, 4 June 2014
Tuesday, 3 June 2014
உலகெங்கும் உள்ள மக்களின் படங்களைத் திருடும் அமெரிக்க உளவுத் துறை
ஐக்கிய அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் உலகெங்கும் உள்ள மக்களின் கோடானு கோடிக்கணக்கான படங்களைத் திருடுவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றால் அனுப்பப்படும் படங்களையும் சமூகவலயத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களையும், காணொளி கூட்டங்கள், காணொளி மாநாடுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் படங்களையும் உலகெங்கும் உள்ள அமெரிக்க உளவாளிகள் திருடுவதாக நியூயோர்க் ரைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது..
உருவப் படங்களை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) கடந்த சில ஆண்டுகளாக பெரு வளர்ச்சியடைந்து வருகின்றது. இதைப் பயன் படுத்தி அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் தனக்குத் தேவையானவர்களின் தகவல்களைச் சேகரிக்கின்றது. இதற்காகக நாளொன்றிற்கு பல இலட்சக் கணக்கான படங்கள் திருடப்படுகின்றன.படங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க அரசும் தனியார் நிறுவனங்களும் பெரும் செலவு செய்து வருகின்றன. தற்போது உள்ள தொழில்நுட்பம் low-resolution images எனப்படும் குறைந்த தரப் படங்களை இனம் காண்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. அத்துடன் வேறு பட்ட கோணங்களில் இருந்து எடுக்கப்படும் படங்களிலும் தற்போது இனம் காணுதலில் சிரமம் உள்ளது. 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லாடனின் படத்தை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) இல் பரீட்சித்த போது அது தாடிவைத்த பில் லாடன் போல் தோற்ற முள்ளவர்களைக் காட்டியதாம். இதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் பெரு வளார்ச்சி கண்டுள்ளது
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் கூகிள், மைக்குறோஸோப்ற், அப்பிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல இணையவெளித் திருட்டுக்களையும் ஊடுருவல்களையும் மேற்கொள்வதாக அதன் முகவராகப் பணியாற்றிய எட்வேர்ட் J ஸ்நோடன் 2011-ம் ஆண்டு அம்பலப்படுத்தி இருந்தார்.
அமெரிக்காவின் சட்டப்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகம் அமெரிக்க அரசின் வண்டிச் செலுத்துனர் அனுமதிப் பத்திரம், கடவுட்சீட்டு போன்றவற்றிற்காக மற்ற அமெரிக்க அரச நிறுவனங்கள் வைத்திருக்கும் ஒளிப்படங்களை தனது தேவைக்காகப் பெறமுடியாது
அமெரிக்க உள்துறை பெரிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் செய்மதிகளூடாக எடுக்கப்படும் படங்களை வைத்து அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை பிடிக்கலாம். இலங்கையின் இறுதிப் போரின் போது இழைக்கப் பட்ட போர்க்குற்றங்களின் ஆதாரங்கள் போர் முனையில் இருந்து படப்பதிவுகளாகவும் காணொளிப்பதிவுகளாகவும் கொழும்பிற்கு அனுப்பட்டபோது அதை அமெரிக்க உளவுத்துறையும் பெற்றிருக்க வாய்ப்புண்டு. சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட தொலைபேசி உத்தரவுகள் கூட அமெரிக்காவிடம் இருக்கிறது. நியூ யோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரயன் குட்மன் அமெரிக்க உளவுத் துறை இவற்றைப் பகிரங்கப்படுத்தி போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உருவப் படங்களை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) கடந்த சில ஆண்டுகளாக பெரு வளர்ச்சியடைந்து வருகின்றது. இதைப் பயன் படுத்தி அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் தனக்குத் தேவையானவர்களின் தகவல்களைச் சேகரிக்கின்றது. இதற்காகக நாளொன்றிற்கு பல இலட்சக் கணக்கான படங்கள் திருடப்படுகின்றன.படங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க அரசும் தனியார் நிறுவனங்களும் பெரும் செலவு செய்து வருகின்றன. தற்போது உள்ள தொழில்நுட்பம் low-resolution images எனப்படும் குறைந்த தரப் படங்களை இனம் காண்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. அத்துடன் வேறு பட்ட கோணங்களில் இருந்து எடுக்கப்படும் படங்களிலும் தற்போது இனம் காணுதலில் சிரமம் உள்ளது. 2011-ம் ஆண்டு ஒசாமா பின் லாடனின் படத்தை வைத்து ஆட்களை கணனி மூலம் இனம் காணும் தொழில் நுட்பம் (facial recognition technology) இல் பரீட்சித்த போது அது தாடிவைத்த பில் லாடன் போல் தோற்ற முள்ளவர்களைக் காட்டியதாம். இதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் பெரு வளார்ச்சி கண்டுள்ளது
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் கூகிள், மைக்குறோஸோப்ற், அப்பிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல இணையவெளித் திருட்டுக்களையும் ஊடுருவல்களையும் மேற்கொள்வதாக அதன் முகவராகப் பணியாற்றிய எட்வேர்ட் J ஸ்நோடன் 2011-ம் ஆண்டு அம்பலப்படுத்தி இருந்தார்.
அமெரிக்காவின் சட்டப்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகம் அமெரிக்க அரசின் வண்டிச் செலுத்துனர் அனுமதிப் பத்திரம், கடவுட்சீட்டு போன்றவற்றிற்காக மற்ற அமெரிக்க அரச நிறுவனங்கள் வைத்திருக்கும் ஒளிப்படங்களை தனது தேவைக்காகப் பெறமுடியாது
அமெரிக்க உள்துறை பெரிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் செய்மதிகளூடாக எடுக்கப்படும் படங்களை வைத்து அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை பிடிக்கலாம். இலங்கையின் இறுதிப் போரின் போது இழைக்கப் பட்ட போர்க்குற்றங்களின் ஆதாரங்கள் போர் முனையில் இருந்து படப்பதிவுகளாகவும் காணொளிப்பதிவுகளாகவும் கொழும்பிற்கு அனுப்பட்டபோது அதை அமெரிக்க உளவுத்துறையும் பெற்றிருக்க வாய்ப்புண்டு. சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட தொலைபேசி உத்தரவுகள் கூட அமெரிக்காவிடம் இருக்கிறது. நியூ யோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரயன் குட்மன் அமெரிக்க உளவுத் துறை இவற்றைப் பகிரங்கப்படுத்தி போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Monday, 2 June 2014
புதுத் தேர்தல், புது அதிபர் கலங்குது உக்ரேன்
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த பின்னர் அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன் தனி நாடாகியது. அப்போது சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது. இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு நாடாக உருவெடுத்தது. தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை. அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம் அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம் அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk) தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட நிபந்தனை பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன.
உக்ரேன் தன்னிடம் இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது. உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை இரசியா விரிவாக்கவே விரும்பியது. அதன் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின. பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.
ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும் விரிவாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடுகளையும் இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க இரசியாவிற்கு தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது. அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும் இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்பமானது. உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும் என இரசியா உக்ரேனை நிர்ப்பந்தித்தது.
தோடம்¬பழப் புரட்சி - Orange Revolution
இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இழுபறியில் உக்ரேன் அகப்பட்டுக் கொண்டதன் விளைவாக உக்ரேனில் ஒரு உள்நாட்டு மோதல் உருவானது. இரசியா ஆதரவு அரசியல்வாதிகளும் ஐரோப்பிய ஒன்றியவாதிகளும் போட்டி போட்டனர். அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு வெளியில் இருந்து தூபமிடப்பட்டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் தொடர்ச்¬சி¬யாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்¬பழப் புரட்சி என அழைக்¬கப்¬பட்¬டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் மக்¬க¬ளாட்சி முறைப்¬படி தேர்தல் நடந்¬தது. அதில் விக்டர் யுவோ¬னோவிச் வென்¬ற¬தாக அறி¬விக்¬கப்¬பட்¬டது. தேர்¬தலில் முறைகேடு நடந்¬த¬தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்¬டின. எதிர்க் கட்சிகள் மக்¬களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்¬பாட்டம் செய்¬தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்¬லு¬ப¬டி¬யற்¬றது என்¬றது. மறு தேர்¬தலில் யூலியா ரைமொ¬ஷென்கோ வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா சார்பானவராக இருந்தார். 2005ஆம் ஆண்டு செப்¬டெம்பர் மாதம் அவ¬ரது ஆட்¬சியை குடி¬ய¬ரசுத் தலை¬வ¬ராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்¬ரேனில் பல அர¬சியல் இழு¬ப¬றிகள், கூட்¬ட¬ணிகள் அரங்¬கே¬றின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யூலியா ரைமொ¬ஷென்கோ சிறையில் அடைக்¬கப்¬பட்டார். இரசியாவிற்கு பலவகையில் உக்ரேன் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளிற்கு சார்பான நாடாக மாறினால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்தாகும். இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் அரைப்பங்கு உக்ரேனூடாகச் செல்லும் குழாய்களூடாக நடை பெறுகின்றன. அப்போது உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவில் இருக்கும் இரசியக் கடற்படைத் தளம் மத்திய தரைக் கடலிலும் மத்திய கிழக்கிலும் இரசியா ஆதிக்கம் செலுத்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைத் தளமாகும். கிறிமியாவை ஒட்டிய கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதும் இரசியாவை கிறிமியாவைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்தது.
கட்சி மாறிய விக்டர்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்¬தையைத் திறந்து விடுவது, உக்ரேனியர்கள் விசா நடை¬முறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடு¬க¬ளுக்கு செல்ல அனுமதிப்பது, வரிகள் குறைந்த ஏற்றுமதி இப்படிப் பல சலு¬கை¬களை வழங்க முன்¬வந்¬தது. இதனால் விக்டர் யுவோனோவிச் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திட் ஒப்புக்கொண்டார். இந்த உடன் படிக்கை உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிற்கு அதன் எரிவாயுப் பாவானையில் அரைப்பங்கை விநியோகிக்கும் இரசியா விக்டர் யுவோனோவிச்சை கட்சி மாற்ற தனது எரிவாயுவைப் பாவித்தது. உக்ரேனிற்கு முப்பது விழுக்காடு விலைக்கழிவில் தான் எரிவாயு விநியோக்கிப்பதாக இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் யுவோனோவிச்சிடம் தெரிவித்தார். அவர் வழங்க முன்வந்த மொத்த பொருளாதார உதவி இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.
இரசியா பக்கம் சாய்ந்த உக்ரேனை மீட்க வேண்டும் என முன்னணியில் இருந்து செயற்பட்ட நாடு போலந்து ஆகும். போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இரசியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தின. உக்ரேனியப் பாராளமன்றம் இரசியாவிற்கு எதிராகத் திரும்பியது.
இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளை புட்டீன் கொண்டாடுகையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை தற்காலிக அதிபராக்கியது. விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன.
தனக்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது. தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன. இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது. அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது.
உக்ரேனில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் அங்கு பெரும் குழப்பத்தை இரசியா ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் சுமூகமாக நடந்து இருபது ஆண்டுகளாக சொக்லட் உற்பத்தி செய்துவரும் பெரும் செல்வந்தரான பெட்றே பொரோஷெங்கோ (Petro Poroshenko) உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் எனற கொள்கை உடையவர். அதே நேரம் இரசியாவுடன் நல்ல உறவு வேண்டும் எனவும் நினைப்பவர். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் அங்கு உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றித் தமதாக்கினர். அவர்களில் பலர் உக்ரேனிய அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொக்லட் கிங் எனப்படும் பெட்றே பொரோஷெங்கோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைதல், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுதல், கிறிமியாவை மீளிணைத்தல் என்ற முன்றையும் தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளார். அதாவது இரசியாவிடமிருந்து வில்லங்கத்தை விலைக்கு வாங்குவேன் என்கின்றார்.
உக்ரேனின் புதிய அரசியும் அதன் அதிபரையும் இரசியா அங்கீகரிக்கவில்லை. விக்டர் யுனோவோவிச் தான் சட்டபூர்வமான உக்ரேனிய அதிபர் என்ற நிலைப்பாட்டில் இரசியா இப்போதும் இருக்கின்றது. அத்துடன் தனக்குச் சார்பான நாடுகள் உக்ரேனின் புதிய அரசை அங்கீகரிக்க வேண்டாம் எனப் பரப்புரை செய்து வருகின்றது.
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் மூன்று திட்டங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. முதலாவது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்தல். இரண்டாவது மாற்றுத் திட்டமாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தனி நாடாக்குதல். இவை நடந்தால் எஞ்சிய உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோப் படைக் கூட்டமைப்புடனும் இலகுவாக இணைந்து விடும். அத்துடன் சிறிய உக்ரேன் தனது எரிவாயுத் தேவையை இரசியாவிடமிருந்து பெறாமல் வேறு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் உக்ரேன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்தால் அதனால் இரசியர்கள் உந்தப்பட்டு இரசியாவிலும் பொருளாதாரச் சீர் திருத்தம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தலாம். இதனால் புட்டீன் இப்போது தனது மூன்றாம் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உக்ரேனில் தொடர்ச்சியாக அங்கு வாழும் இரசியர்களை வைத்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி உக்ரேனைப் பொருளாதார ரீதியில் தலை எடுக்காமல் செய்வது. இதனால் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு தேவையற்ற சுமையாக மாற்ற புட்டீன் முனைகின்றதாகத் தெரிகின்றது. புட்டீனின் திட்டத்திற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பல வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தப் பாராளமன்ற உறுப்பினர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை விரும்பாதவர்கள். புதிய நாடுகளிற்காக செய்யப்படும் பணவிரயத்தை எதிர்ப்பவர்கள். உக்ரேனில் கிளர்ச்சி தொடர்ந்தால் அது உலகச் சந்தையில் எரிவாயுவிலையைச் சரியாமல் இருக்க உதவும். இதனால் இரசியா தொடர்ந்து எரிவாயு ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கான காப்பீடாக சீனாவிற்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்த்த்தை இரசியா செய்துள்ளது. இந்தியாவிற்கும் இரசியா எரிவாயு விற்பனை செய்யலாம்.
கலங்கப் போகும் உக்ரேன்
செஸ்னியாவில் இரசியாவிற்கு எதிராகப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகள் உக்ரேன் சென்று இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லப்படுகின்றது. உக்ரேனில் 83 இலட்சம் இரசியர்கள் வாழுகின்றனர். பல கிழக்குப் பிராந்திய மாகாணங்களில் அவர்களே பெரும்பான்மையினர். இரசியாவால் தனது படையினரை உக்ரேன் நாட்டு வாசிகள் போலச் செயற்பட இரகசியமாக உக்ரேனிற்குள் அனுப்ப முடியும். கிளர்ச்சிக்கரர்களின் கைகளில் புதிய தரப் படைக்கலன்களைக் கொடுக்க முடியும். கிறிமியாவில் அப்படிச் செய்தே ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிறிமியாவைத் தன்னுடன் இரசியா இணைத்தது. புதிய தேர்தலும் புதிய அதிபரும் இரசியாவை கடுமையாக அதிருப்திப் படுத்தி இருப்பதால் இரசியா உக்ரேனைக் கலங்கடிக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.
உக்ரேன் தன்னிடம் இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது. உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை இரசியா விரிவாக்கவே விரும்பியது. அதன் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின. பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.
ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும் விரிவாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடுகளையும் இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க இரசியாவிற்கு தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது. அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும் இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்பமானது. உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும் என இரசியா உக்ரேனை நிர்ப்பந்தித்தது.
தோடம்¬பழப் புரட்சி - Orange Revolution
இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இழுபறியில் உக்ரேன் அகப்பட்டுக் கொண்டதன் விளைவாக உக்ரேனில் ஒரு உள்நாட்டு மோதல் உருவானது. இரசியா ஆதரவு அரசியல்வாதிகளும் ஐரோப்பிய ஒன்றியவாதிகளும் போட்டி போட்டனர். அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு வெளியில் இருந்து தூபமிடப்பட்டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் தொடர்ச்¬சி¬யாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்¬பழப் புரட்சி என அழைக்¬கப்¬பட்¬டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் மக்¬க¬ளாட்சி முறைப்¬படி தேர்தல் நடந்¬தது. அதில் விக்டர் யுவோ¬னோவிச் வென்¬ற¬தாக அறி¬விக்¬கப்¬பட்¬டது. தேர்¬தலில் முறைகேடு நடந்¬த¬தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்¬டின. எதிர்க் கட்சிகள் மக்¬களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்¬பாட்டம் செய்¬தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்¬லு¬ப¬டி¬யற்¬றது என்¬றது. மறு தேர்¬தலில் யூலியா ரைமொ¬ஷென்கோ வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா சார்பானவராக இருந்தார். 2005ஆம் ஆண்டு செப்¬டெம்பர் மாதம் அவ¬ரது ஆட்¬சியை குடி¬ய¬ரசுத் தலை¬வ¬ராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்¬ரேனில் பல அர¬சியல் இழு¬ப¬றிகள், கூட்¬ட¬ணிகள் அரங்¬கே¬றின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யூலியா ரைமொ¬ஷென்கோ சிறையில் அடைக்¬கப்¬பட்டார். இரசியாவிற்கு பலவகையில் உக்ரேன் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளிற்கு சார்பான நாடாக மாறினால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்தாகும். இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் அரைப்பங்கு உக்ரேனூடாகச் செல்லும் குழாய்களூடாக நடை பெறுகின்றன. அப்போது உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவில் இருக்கும் இரசியக் கடற்படைத் தளம் மத்திய தரைக் கடலிலும் மத்திய கிழக்கிலும் இரசியா ஆதிக்கம் செலுத்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைத் தளமாகும். கிறிமியாவை ஒட்டிய கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதும் இரசியாவை கிறிமியாவைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்தது.
கட்சி மாறிய விக்டர்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்¬தையைத் திறந்து விடுவது, உக்ரேனியர்கள் விசா நடை¬முறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடு¬க¬ளுக்கு செல்ல அனுமதிப்பது, வரிகள் குறைந்த ஏற்றுமதி இப்படிப் பல சலு¬கை¬களை வழங்க முன்¬வந்¬தது. இதனால் விக்டர் யுவோனோவிச் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திட் ஒப்புக்கொண்டார். இந்த உடன் படிக்கை உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிற்கு அதன் எரிவாயுப் பாவானையில் அரைப்பங்கை விநியோகிக்கும் இரசியா விக்டர் யுவோனோவிச்சை கட்சி மாற்ற தனது எரிவாயுவைப் பாவித்தது. உக்ரேனிற்கு முப்பது விழுக்காடு விலைக்கழிவில் தான் எரிவாயு விநியோக்கிப்பதாக இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் யுவோனோவிச்சிடம் தெரிவித்தார். அவர் வழங்க முன்வந்த மொத்த பொருளாதார உதவி இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.
இரசியா பக்கம் சாய்ந்த உக்ரேனை மீட்க வேண்டும் என முன்னணியில் இருந்து செயற்பட்ட நாடு போலந்து ஆகும். போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இரசியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தின. உக்ரேனியப் பாராளமன்றம் இரசியாவிற்கு எதிராகத் திரும்பியது.
இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளை புட்டீன் கொண்டாடுகையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை தற்காலிக அதிபராக்கியது. விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன.
தனக்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது. தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன. இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது. அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது.
உக்ரேனில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் அங்கு பெரும் குழப்பத்தை இரசியா ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் சுமூகமாக நடந்து இருபது ஆண்டுகளாக சொக்லட் உற்பத்தி செய்துவரும் பெரும் செல்வந்தரான பெட்றே பொரோஷெங்கோ (Petro Poroshenko) உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் எனற கொள்கை உடையவர். அதே நேரம் இரசியாவுடன் நல்ல உறவு வேண்டும் எனவும் நினைப்பவர். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் அங்கு உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றித் தமதாக்கினர். அவர்களில் பலர் உக்ரேனிய அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொக்லட் கிங் எனப்படும் பெட்றே பொரோஷெங்கோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைதல், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுதல், கிறிமியாவை மீளிணைத்தல் என்ற முன்றையும் தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளார். அதாவது இரசியாவிடமிருந்து வில்லங்கத்தை விலைக்கு வாங்குவேன் என்கின்றார்.
உக்ரேனின் புதிய அரசியும் அதன் அதிபரையும் இரசியா அங்கீகரிக்கவில்லை. விக்டர் யுனோவோவிச் தான் சட்டபூர்வமான உக்ரேனிய அதிபர் என்ற நிலைப்பாட்டில் இரசியா இப்போதும் இருக்கின்றது. அத்துடன் தனக்குச் சார்பான நாடுகள் உக்ரேனின் புதிய அரசை அங்கீகரிக்க வேண்டாம் எனப் பரப்புரை செய்து வருகின்றது.
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் மூன்று திட்டங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. முதலாவது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்தல். இரண்டாவது மாற்றுத் திட்டமாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தனி நாடாக்குதல். இவை நடந்தால் எஞ்சிய உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோப் படைக் கூட்டமைப்புடனும் இலகுவாக இணைந்து விடும். அத்துடன் சிறிய உக்ரேன் தனது எரிவாயுத் தேவையை இரசியாவிடமிருந்து பெறாமல் வேறு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் உக்ரேன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்தால் அதனால் இரசியர்கள் உந்தப்பட்டு இரசியாவிலும் பொருளாதாரச் சீர் திருத்தம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தலாம். இதனால் புட்டீன் இப்போது தனது மூன்றாம் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உக்ரேனில் தொடர்ச்சியாக அங்கு வாழும் இரசியர்களை வைத்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி உக்ரேனைப் பொருளாதார ரீதியில் தலை எடுக்காமல் செய்வது. இதனால் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு தேவையற்ற சுமையாக மாற்ற புட்டீன் முனைகின்றதாகத் தெரிகின்றது. புட்டீனின் திட்டத்திற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பல வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தப் பாராளமன்ற உறுப்பினர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை விரும்பாதவர்கள். புதிய நாடுகளிற்காக செய்யப்படும் பணவிரயத்தை எதிர்ப்பவர்கள். உக்ரேனில் கிளர்ச்சி தொடர்ந்தால் அது உலகச் சந்தையில் எரிவாயுவிலையைச் சரியாமல் இருக்க உதவும். இதனால் இரசியா தொடர்ந்து எரிவாயு ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கான காப்பீடாக சீனாவிற்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்த்த்தை இரசியா செய்துள்ளது. இந்தியாவிற்கும் இரசியா எரிவாயு விற்பனை செய்யலாம்.
கலங்கப் போகும் உக்ரேன்
செஸ்னியாவில் இரசியாவிற்கு எதிராகப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகள் உக்ரேன் சென்று இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லப்படுகின்றது. உக்ரேனில் 83 இலட்சம் இரசியர்கள் வாழுகின்றனர். பல கிழக்குப் பிராந்திய மாகாணங்களில் அவர்களே பெரும்பான்மையினர். இரசியாவால் தனது படையினரை உக்ரேன் நாட்டு வாசிகள் போலச் செயற்பட இரகசியமாக உக்ரேனிற்குள் அனுப்ப முடியும். கிளர்ச்சிக்கரர்களின் கைகளில் புதிய தரப் படைக்கலன்களைக் கொடுக்க முடியும். கிறிமியாவில் அப்படிச் செய்தே ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிறிமியாவைத் தன்னுடன் இரசியா இணைத்தது. புதிய தேர்தலும் புதிய அதிபரும் இரசியாவை கடுமையாக அதிருப்திப் படுத்தி இருப்பதால் இரசியா உக்ரேனைக் கலங்கடிக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.
Saturday, 31 May 2014
இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள்
இரசியா போர் விமானங்களில் ஐந்தாம் தலை முறை விமானங்களை உருவாக்கி வருகின்றது. இது வரை ஐக்கிய அமெரிக்க மட்டுமே ஐந்தாம் தலைமுறை விமானங்களை வைத்திருந்தது. ஆனால் இரசியாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் அமெரிக்காவின் ஐந்தாம் தலை முறை விமானமான F-35ஐ விட மேன்மையானது எனப்படுகின்றது.
படைக்கலங்களை ஏந்திச் சென்று வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளைக் கொண்டதுடன் மிகப் புதிய ரகக் கணனிகளைக் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை.
இரசியப் போர் விமானம்
அமெரிக்காவின் அடுத்த தர ஐந்தாம் தலைமுறை விமானமான Lockheed Martin உருவாக்கிவரும் F-22 Raptor போர் விமானங்கள் 2015-ம் ஆண்டு பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியாவின் T-50 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் PAK-FA விமானங்கள் ஐக்கிய் அமெரிக்காவின் F-22 Raptor விமானங்களிலும் பார்க்க சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இரசியாவின் T-50போர் விமானங்களின் இயந்திரங்களிற்கு இடையிலன இடைவெளி அமெரிக்காவின் F-22 Raptor போர் விமாங்களின் இயந்திரங்களிற்கு இடையினான இடைவெளியிலும் பார்க்க நீளமானதாகும். இரசியாவின் T-50 போர் விமானங்கள் ஒலியிலும் வேகமாகப் பறக்கும் போதும் ஒலியிலும் வேகம் குறைந்து பறக்கும் போதும் இலகுவான வகையில் கடினமான வளைவுப் பறப்புக்களைச் செய்யக் கூடியனவாக இருக்கும். ராடர்களுக்கு புலப்படாத்தன்மையான stealth தொழில்நுட்பம் இரசியாவின் T-50யில் மேன்மையானதாக இருக்கின்றது. ராடார்களுக்கு விமானங்கள் புலப்படும் தன்மையை RCS எனப்படும் radar-cross sectionஎன்னும் அளவுகோலால் அளவிடப்படும். இது T-50 விமாங்களில் குறைந்த அளவாக இருக்கின்றது.
அமெரிக்காவின் போர் விமானம்
தற்போது இரசியா T-50 விமாங்களை ஓட்டுவதற்கு விமானிகளுக்கு தீவிர பயிற்ச்சி கொடுத்து வருகின்றது.
பறப்பு வேகம், பறக்கக் கூடிய ஆகக் கூடிய தூரம் ஆகியவை அமெரிக்காவின் F-22இலும் இரசியாவின் T-50 இலும் ஏறக் குறைய சமமாகவே இருக்கின்றன. T-50இன் எடை 37,000கிலோவாகவும் F-22இன் எடை 38,000 கிலோவாகவும் இருக்கின்றன.
நவீன போர் விமானங்கள் எதிரி இலக்குகளை இனம் காண்பதற்கு இரு தொழில் நுட்பங்களைப் பாவிக்கின்றன. ஒன்று Electro-optical sensor மற்றது infrared sensor. சீனாவின் J-20 போர் விமானங்கள் இரண்டு தொழில் நுட்பத்தையும் பாவிக்கின்றன. சீனா அமெரிக்காவின் ரடார்களுக்குத் தென்படாத ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இணையவெளிகளில் ஊடுருவி திருடிப் பெற்றுக் கொண்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் F-35 விமானங்களின் இரகசியங்கள்தான் சீனாவின் J-20 விமானமாக உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது.
இந்தியா இரசியாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானங்களை உருவாக்குவதில் இரசியா சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றது.
அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும்.
இரசியாவின் T-50, அமெரிக்காவின் F-22, சீனாவின் J-20 ஆகியவற்றை ஒப்பிடுதல்:
படைக்கலங்களை ஏந்திச் சென்று வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளைக் கொண்டதுடன் மிகப் புதிய ரகக் கணனிகளைக் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை.
இரசியப் போர் விமானம்
அமெரிக்காவின் அடுத்த தர ஐந்தாம் தலைமுறை விமானமான Lockheed Martin உருவாக்கிவரும் F-22 Raptor போர் விமானங்கள் 2015-ம் ஆண்டு பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியாவின் T-50 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் PAK-FA விமானங்கள் ஐக்கிய் அமெரிக்காவின் F-22 Raptor விமானங்களிலும் பார்க்க சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இரசியாவின் T-50போர் விமானங்களின் இயந்திரங்களிற்கு இடையிலன இடைவெளி அமெரிக்காவின் F-22 Raptor போர் விமாங்களின் இயந்திரங்களிற்கு இடையினான இடைவெளியிலும் பார்க்க நீளமானதாகும். இரசியாவின் T-50 போர் விமானங்கள் ஒலியிலும் வேகமாகப் பறக்கும் போதும் ஒலியிலும் வேகம் குறைந்து பறக்கும் போதும் இலகுவான வகையில் கடினமான வளைவுப் பறப்புக்களைச் செய்யக் கூடியனவாக இருக்கும். ராடர்களுக்கு புலப்படாத்தன்மையான stealth தொழில்நுட்பம் இரசியாவின் T-50யில் மேன்மையானதாக இருக்கின்றது. ராடார்களுக்கு விமானங்கள் புலப்படும் தன்மையை RCS எனப்படும் radar-cross sectionஎன்னும் அளவுகோலால் அளவிடப்படும். இது T-50 விமாங்களில் குறைந்த அளவாக இருக்கின்றது.
அமெரிக்காவின் போர் விமானம்
தற்போது இரசியா T-50 விமாங்களை ஓட்டுவதற்கு விமானிகளுக்கு தீவிர பயிற்ச்சி கொடுத்து வருகின்றது.
பறப்பு வேகம், பறக்கக் கூடிய ஆகக் கூடிய தூரம் ஆகியவை அமெரிக்காவின் F-22இலும் இரசியாவின் T-50 இலும் ஏறக் குறைய சமமாகவே இருக்கின்றன. T-50இன் எடை 37,000கிலோவாகவும் F-22இன் எடை 38,000 கிலோவாகவும் இருக்கின்றன.
நவீன போர் விமானங்கள் எதிரி இலக்குகளை இனம் காண்பதற்கு இரு தொழில் நுட்பங்களைப் பாவிக்கின்றன. ஒன்று Electro-optical sensor மற்றது infrared sensor. சீனாவின் J-20 போர் விமானங்கள் இரண்டு தொழில் நுட்பத்தையும் பாவிக்கின்றன. சீனா அமெரிக்காவின் ரடார்களுக்குத் தென்படாத ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இணையவெளிகளில் ஊடுருவி திருடிப் பெற்றுக் கொண்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் F-35 விமானங்களின் இரகசியங்கள்தான் சீனாவின் J-20 விமானமாக உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது.
இந்தியா இரசியாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானங்களை உருவாக்குவதில் இரசியா சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றது.
அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும்.
இரசியாவின் T-50, அமெரிக்காவின் F-22, சீனாவின் J-20 ஆகியவற்றை ஒப்பிடுதல்:
Tuesday, 27 May 2014
மோடியின் அமைச்சரவைத் தேர்வு கூறுவது என்ன?
![]() |
| மோடி ராஜ்நாத், அருண், சுஸ்மா |
கடந்த காங்கிரசு அரசில் 34 அமைச்சர்கள் இருந்தனர்.
சிறிய அமைச்சரவை சிறந்த ஆட்சி என்ற உறுதி மொழியுடன் மோடி தன் அமைச்சர்களைத் தெரிவு செய்தார். பல்வேறு அரச திணைக்களங்களை சிறந்த முறையில் ஒருகிணைப்புச் செய்து செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் என்றார் மோடி. அத்துடன் உயர் நிலை அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்து கீழ்நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கபப்டும் என்றார். இந்திய அரசின் இருநூறு பில்லியன் (இரண்டாயிரம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டங்கள் நிறைவேற்றுப்படாமல் நிலுவையில் உள்ளன. சிவ சேனா அதிக அமைச்சுப் பதவிகளைக் கேட்கிறது. இந்தியாவில் அமைச்சரவையும் சாதிகளிடை சமநிலை பேணப்பட வேண்டிய ஒன்று. உத்தரப் பிரதேசம், மஹராஸ்ட்ரா, பிஹார் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் இந்த மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் புதிய அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றில் அதிக அளவு ஆட்கள் கலந்து கொண்ட தலைமை அமைச்சர் பதவி ஏற்பு வைபவமாக மோடியின் பதவி ஏற்பு அமைந்தது. பதவி ஏற்பு வைபவத்தின் பின்னர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப் பெரும் தள்ளு முல்லு ஏற்பட்டது.
முக்கேஸ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் தமது குடும்பத்தினருடனும் மேலும் அசோக் ஹிந்துஜா, சுனில் மிட்டல், ராஜன் மிட்டல், குமாரமங்கலம் பிர்லா, சசி ருய்யா, கௌதம் அடானி, வி என் தூட் ஆகிய பெரும் பணக்காரர்களும் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியப் பெரு முதலாளிகளின் மொத்தச் சொத்து மதிப்பு பெருமளவில் உயர்ந்து விட்டது. ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் பங்குச் சந்தை விலை அதிகரிப்பு ஆகியவற்றால் இது நடந்தது. ஏழைகளின் சொத்து மதிப்பு????
மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்து தமது வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையில் வழமையாக பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், தலித்துக்கள் பெருமளவில் பாஜகவிற்கு வாக்களித்து இருந்தனர். மோடி பதவிக்கு வந்தால் இந்தியாவில் இலகுவாக முதலீடு செய்யலாம் என உலகெங்கும் வாழும் குஜராத்தியர்கள் மோடிக்கு பெரும் ஆதரவு வழங்கினார்கள்.
தலைமை அமைச்சர் மோடியின் மாதச் சம்பளம் 50,000 ரூபா. இத்துடன் மேலதிகமாக மாதம் 65,000 ரூபாக்கள் வழங்கப்படும். இன்னும் constituency allowance என மாதம் 45,000 ரூபாக்கள் வழங்கப்படும். அவரது மாதாந்த மொத்த வருமானம் 160,000 ரூபாக்கள்.
| நன்றி தினமணி |
மோடியின் அமைச்சரவையில் முக்கியமானவர்கள்:
ராஜ்நாத் சிங் (உள்துறை ),
சுஸ்மா சுவராஜ் (வெளியுறவுத் துறை)
அருண் ஜெட்லி(நிதி, பாதுகாப்பு),
வெங்கையா நாயுடு(கிராம அபிவிருத்தி, பாராளமன்ற அலுவல்கள்),
நிதின் கட்காரி(தரைப் போக்குவர்த்து, கப்பல் போக்குவரத்து),
உமா பார்தி (நீர்வளம், கங்கை சுத்தீக்ரைப்பு),
மனேக்கா காந்தி(பெண்கள், சிறுவர் அபிவிருத்தி),
ஆனந்த் குமார் (இரசாயனமும் உரமும், மேலதிகமாக பாராளமன்ற அலுவல்)
ரவி சங்கர் பிரசாத் (தொலைத் தொடர்பு, சட்டம், நீதி),
ஸ்மிரிடி இரானி(மனித வள மேம்பாடு),
ஹர்ஸ் வர்தன (சுகாதாரம், குடும்பநலம்)
கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளில் இருந்து அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட முக்கியமானவர்கள்:
ராம் விலாஸ் பஸ்வான்(லோக் ஜன சக்திக் கட்சி- பிஹார் மாநிலம்), ஹர்சிம்ரத் கௌர் பதல்(அகாலித் தளம் கட்சி- பஞ்சாம் மாநிலம்)
ஆனந்த் கீற்( சிவசேனா - மும்பாயைத் தலைநகராகக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலம்)
அசோக் கஜபதி ராஜு (தெலுங்கு தேசம் கட்சி - ஆந்திரா)
மோடியின் அமைச்சரவையில் ஒரே ஒரு முசுலிம் அமைச்சர் இடம்பெற்றுள்ளார். நஜ்மா ஹெப்துல்லா சிறுபானமை விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மோடியின் அமைச்சரவையின் சராசரி வயது 57. மோடி தனது அமைச்சரவையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்களை இணைக்கவில்லை. இதனால் எல் கே அத்வானி, முர்ளி மனோகர் ஜோஸி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். சுப்பிரமணிய சுவாமி தான் தனக்கு உள்ள அதிகாரத்தை(?) பாவித்து நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக சாதி உயர்த்துவதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்து மதப்படி ஒருவரின் சாதியை அவரது பிறப்பு நிர்ணயிக்கும். யாரையாவது மேல் சாதிக்கு உயர்த்துவதாயின் 101 பார்ப்பனர்கள் யாகம் செய்து தங்கத்தால் செய்யப்பட்ட பசுவின் வயிற்றுக்குள் அவரைச் செலுத்தி பின்னர் அவர் மீண்டும் இப்பூமியில் அப்பசுவின் வயிற்றில் இருந்து பிறப்பது போல் செய்து அவர் சாதி உயர்த்தப்படுவார். சு. சுவாமி எப்போதும் கோமாளித்தனமாக ஏதாவது செய்வார். குடும்பத்தை அடிப்படையாக வைத்து வந்த அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவில்லை. பாவம் வருண் காந்தி(இந்திராகாந்தியின் பேரனும், சஞ்சய் காந்தியின் மகனும்). ஆர்.எஸ்.எஸ் உறுதியாகச் சொல்லிவிட்டது 75 வயதிற்குக் கூடிய அத்வானி அவைத் தலைவர் (சபாநாயகர்) பதவி கூட ஏற்கக் கூடாது என்று.
இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் மனேக்கா(இயற்பெயர் மேனஹா) காந்திக்கு சுற்றுச் சூழல் துறை கொடுக்கப்படவில்லை. இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பிரச்சனை கொடுக்காமல் இருக்க அவரிடம் அத்துறை வழங்கப்படவில்லை.
தேர்தலின் போது மோடியின் வலது கரமாகச் செயற்பட்ட அஜித் ஷாவிற்கு அமைச்சுப்பதவி கொடுக்கப்படவில்லை. அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக்கப்படலாம். மோடி தான் கட்சியைக் கைப்பற்ற இப்படிச் செய்திருக்கலாம்.
மலையாளிகள் எவரும் அமைச்சரவையில் இல்லை. மேற்கு வங்கத்தில் இருந்தும் யாரும் இல்லை, இந்த மாநிலங்களில் பாஜக படுதோல்வியடைந்தது. தமிழ்நாடு கன்னியாகுமரியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன் இராதாகிருஷ்ணனுக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமனுக்கு (M Phil in International Studies) வர்த்தக இணை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மலா மக்களவையிலோ(லோக்சபா) மாநிலங்களவையிலோ(ராஜ்ய சபா) உறுப்பினர் அல்ல.
பாஜக எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் மாநிலத்தில் இருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை என்பது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஏழு பெண் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
இராமாயணம் நாடகத் தொடரில் சீதையாக நடித்தவரும் ராகுல் காந்திக்கு எதிராக அமெதியில் போட்டியிட்டுத் தோற்றவருமான ஸ்மிரிடி இரானியும். இவருக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பட்டதாரி கூட இல்லாத ஸ்மிரிடி இரானி எப்படி மனைத வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகலாம் எனக் காங்கிரசுக் கட்சியினர் கேள்வி எழுப்பினர். இமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, மெகாலயா, நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுடன் ஆறு ஒன்றியப் பிரதேசங்களில் (Union Territories) இருந்து எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என காங்கிரசுக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரணாப் முஹர்ஜீ, ப சிதம்பரம், நட்வர் சிங், அர்ஜுண் சிங், சரத் பவார் ஆகியோரின் அனுபவம் கல்வியுடன் ஒப்பிடுகையில் புதிய அமைச்சரவை ஒரு தூசு என்கின்றனர் காங்கிரசுக் கட்சியினர்.
உலகிலேயே மிக நீண்ட கழிப்பிடமான இந்திய தொடரூந்துப் பாதையையும் உலகிலேயே மிக நீண்ட குப்பைத் தொட்டியான கங்கை நதியையும் எப்படி புதிய அமைச்சரவை எப்படிச் சமாளிக்கப் போகிறது?
சுஸ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக இடம் பெற்றது ஈழத் தமிழர்களுக்கு உகந்தது அல்ல. பதவி ஏற்பு வைபத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டது ஒரு நல்ல ஆரம்பமும் அல்ல.
இந்திய வங்கிகளின் கடன் அறவிடும் விழுக்காடு குறைந்து கொண்டே போகின்றது. சென்ற ஆண்டு 3.8 விழுக்காடாக இருந்த அறவிட முடியாக்கடன் இந்த ஆண்டு 4.4விழுக்காடாக உயர்ந்து விட்டது. இது புதிய அமைச்சரவைக்கு பெரும் சவாலாக அமையும். இந்தியா கடன் நெருக்கடியை நோக்கி நகராமல் பார்க்க வேண்டிய பொறுப்பு பெரும் பொறுப்பு. வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் பெரும் பூதாகாரப் பிர்ச்சனை. இந்தியாவில் உறுதியான நிலை ஏற்பட அதன் பொருளாதாரம் குறைந்தது எட்டு விழுக்காடாவது வளர வேண்டும். இப்போது அதன் வளர்ச்சி ஐந்திலும் குறைவு.
புதிய அரசு செய்ய வேண்டியவை:
சிவப்பு நாடாக்களை அறுத்தெறிதல்
சட்டங்களை இலகுவாக்குதல்
உள்கட்டுமான அபிவிருத்தி (Infrastructure development)
நதிநீர்ப்பங்கீடு
வெளிநாட்டு முதலீடுகளைக் கவருதல்
உலகச் சந்தையில் இந்தியாவின் போட்டியிடு திறனை மேம்படுத்தல்
உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியை அபிவிருத்து செய்தல்
விவசாயிகள் தற்கொலைகளை நிறுத்துதல்
கிராமங்களுக்கு வங்கித் துறையை விரிவாக்குதல்.
சவால்கள்
1. இந்தியாவில் குஜராத்தியர்களுக்கு எதிரான இனவாதம் இனித் தூண்டப்படலாம். கேரளத்து ஊடகங்கள் அதை ஆரம்பித்து விட்டன. 2. இந்தியாவின் வரலாற்றில் பார்ப்பனர் அல்லாதவர் தலமை அமைச்சரானால் அவர் இரண்டு ஆண்டுகள் கூட நீடித்ததில்லை.
3. அயல் நாடுகளுடனான உறவு
4. காங்கிரசு ஆதரவாளர்களைக் கொண்ட நிர்வாக சேவை
5. சிவ சேனா மும்பாய் நகரில் செய்யக் கூடிய கலவரங்கள்
6. பார்பர் மசூதியும் இந்துத்துவவாதிகளும்.
7. மாற்றுக் கட்சிகளின் கைகளில் உள்ள மாநில அரசுகள்
8. காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்த குடியரசுத் தலைவர்
9. பாஜகவிலும் பார்க்க அதிக காங்கிரசுக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை.
10. மனவலிமை இழந்த இந்தியப் படையினர்.
11. முன் அனுபவம் அதிகம் இல்லாத பல அமைச்சர்கள்
Sunday, 25 May 2014
சிரியப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க புதியவகை நீதிமன்றம்.
சிரியப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டை பன்னாட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லும் வரைபுத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 15 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 13 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் இரசியாவும் சீனாவு அதை தமது வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரத்தால் இரத்துச் செய்துவிட்டன. ஆனால் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றுடன் சில அரபு நாடுகளும் இணைந்து புதிய ஒரு வகையில் சிரியப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க ஆலோசித்துவருகின்றன. இதை உலகெங்கும் வாழ் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மேற்படி நாடுகள் புதிய வகையான் ஒரு திட்டத்தை உருவாக்கவுள்ளன. அது தமிழர்களுக்குத் தேவையான ஒன்றாக அமையலாம்.
சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் காட்டார் நாட்டின் நிதி உதவியுடன் பெருமளவில் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிரியாவின் காவற்துறையில் பணிபுரிபவர்கள் மூலம் எடுக்கப்பட்ட 55,000 ஒளிப்படங்கள் சிரியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களாக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வழக்குத் தொடுநர்களின் ஆலோசனையுடன் சிரியப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மேற்படி குற்றச் சாட்டுகளை Hybrid Court எனப்படும் கலப்பு நீதி மன்றம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் தீர்மானம் ஒன்றின் மூலம் உருவாக்கி அதில் வைத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருப்பது போல் பொதுச் சபையில் வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரம் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. இரசியா கிறிமியவைத் தன்னுடன் இணைத்ததைச் செல்லாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இரசியாவிற்கு எதிராக 100 வாக்குகளும் ஆதரவாக 11வாக்குகளும் அளிக்கப்பட்டன, 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது இரசியாவிற்கான ஆதரவுத் தளம் பலவீனமானது என்பதை எடுத்துக் காட்டிவிட்டது. இதனால் ஐநா பொதுச்சபையில் சிரிய ஆட்சியாளர்களை விசாரிக்க ஒரு நீதி மன்றம் அமைக்கும் ஒரு தீர்மானத்தை அரபு நாடுகளும் மேற்கு நாடுகளும் இணைந்து கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். இவர்கள் அமைக்கும் கலப்பு நீதி மன்றம் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட கலப்பு நீதி மன்றங்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கம்போடியாவில் கம ரூஜ் அமைப்பின் போர்க்குற்றங்களை அமைக்க ஒரு கலப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. கலப்பு நீதிமன்றம் என்பது ஐநா பொதுச் சபையின் மேற்பார்வையில் பல நாட்டு நீதியாளர்களைக் கொண்டு உருவாக்கப்படும். இது பன்னாட்டுச் சட்டங்களையும் உள்நாட்டுச் சட்டங்களையும் கருத்தில் கொண்டு விசாரித்துத் தீர்ப்பளிக்கும்.
1993-ம் ஆண்டு முன்னாள் செக்கொஸ்லாவியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக் உருவாக்கப்பட்டது.
1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கம ரூஜ்ஜிற்கு எதிரான நீதி மன்றத்திற்கு ஜப்பான், இலங்கை, போலாந்து, கம்போடியா, சாம்பியா, ஆகிய நாட்டு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
2002-ம் ஆண்டு இன்னும் ஒரு கலப்பு நீதிமன்றம் சியாரா லியோனில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நியமிக்கப்பட்டது.
சிரியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் கலப்பு நீதிமன்றம் நான்காவது தலைமுறை நீதிமன்றமாக அமையவிருக்கின்றது இது முந்தைய மூன்றுவகையான நீதிமன்றங்களை விட அதிக நியாயாதிக்கம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்ட அறிஞர்களும் தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.
Friday, 23 May 2014
சீனாவிலும் இசுலாமியத் தீவிரவாதம்
2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக்கூடாது மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.
தீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும் சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.
சீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.
2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான காரணங்கள்:
1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.
2 உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.
3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது
4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள்.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...









