Thursday, 27 May 2010

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து தலை தெறிக்க ஓடிய சிங்கள அமைச்சர்.


இலங்கையின் தத்துக்கிளி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு தத்தித்தாவி விடுவார். இலங்கைக்கு வெளிநாட்டில் நன்மதிப்பைப் பெற்றுக் கொடுக்க என்று அவர் ராஜபக்சகளால் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அவர் மீது கொடுக்கப் பட்ட சுமை மிகப் பெரியது.
  • இலங்கை ஆட்சியாளர்கள் மீது சுமத்தப் படும் போர்குற்றத்தை சமாளிக்க வேண்டும்.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி என்னும் வரிச்சலுகையை இரத்துச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சர்வதேச நாணய சபையின் கடனுதவியை தாமதிக்காமல் பெற வேண்டும்.
  • இந்தியாவுடன் நட்புறவு போல் பாசாங்கு செய்து சீன நட்பை வளர்க்கவேண்டும்.
அவரது முதற் பணியாக அவர் அமெரிக்க சென்றார். அங்கு ஹிலரி கிளிண்டன் உட்பட பல அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்தார்.

வறுத்தெடுக்க வளம் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னர் சிற்றி பிரஸ்.
ஐநாவில் முதலில் ஒரு தெரிந்தெடுக்கப் பட்ட பத்திரிகையாளர்களைச் சிறப்பு அழைப்பு விடுத்துச் சந்தித்தார். அதில் இன்னர் சிற்றி பிரஸ் அனுமதிக்கப் படவில்லை. இலங்கை பற்றி நன்கு தெரிந்திருக்காத நிரூபர்களை அமைத்து விருந்து கொடுத்தனர். ஐநா வரும் வெளிநாட்டமைச்சர்கள் பொதுவாக ஒரு பகிரங்க பத்திரிகையாளர் சந்திப்பை மேற் கொள்வது வழக்கம். இன்னர் சிற்றி பிரஸ் இப்போது இலங்கை அரசைச் சேர்ந்த ஒருவரையாவது வறுத்தெடுக்க வளம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ் நிரூபர்களை சந்திப்பதை இலங்கையின் ஐநாவிற்கான பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தவிர்த்து வருகின்றனர். இன்னர் சிற்றி பிரஸ் பல மின்னஞ்சல் மூலம் ஐநாவின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் பல கேள்விகளை அனுப்பியது. அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும். உதவி நிரந்தரப் பிரதிநிதியிடம் இருந்து மிரட்டல் பாணிக் பதில்கள் மட்டுமே வந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவிக்கிறது.

இன்று 27-05-2010 வியழக்கிழமை அமெரிக்க பத்திரிகைச் சபையில்(National Press Club) ஜீ எல் பீரிஸ் அவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அமெரிக்க தேசிய பத்திரிகைச் சபை(National Press Club) நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுவரும் ஒரு அமைப்பு. பலநாட்டு அரசத் தலைவர்கள் அமெரிக்க குடியரசுத் தலைவர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் போன்ற பல பிரபல்யங்கள் அமெரிக்க தேசிய பத்திரிகைச் சபையின்(National Press Club) நிகழ்வுகளில் பங்கேற்பதுண்டு. அமெரிக்க தேசிய பத்திரிகைச் சபையின்(National Press Club) இன்றைய நிகழ்வு புது யுகத்தில் இலங்கை என்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கு சென்ற ஜீ எல் பீரிஸ் அங்கு இருந்து விட்டு அங்கு உரையாற்றாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தான் வெளியேறப் போகிறேன் என்று யாருக்கும் சொல்லாமல் ஒரே தாவாக தாவி வெளியே பாய்ந்துவிட்டார் தத்துக்கிளி அமைச்சர். இதை இன்னர் சிற்றி பிரஸ் இப்படிக் கேலி செய்தது:
Sri Lanka Minister of External Affairs Gamini Lakshman Peiris has turned tail and run out of the National Press Club without speaking or offering any explanation, the world can see what Inner City Press has diagnosed since the Peiris visit began over last weekend: he is not ready for prime time.

தேசிய பத்திரிகைச் சபையின்(National Press Club) வாசிங்கடனில் உள்ள கட்டிடத்தின் ஜுங்கர் அறையில்(Zenger Room) சிங்கள அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் இலங்கயின் சமாதானும் இணக்கப் பாடும் நிறைந்த புது யுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக ஏற்பாடாகி இருந்தது. இங்கு நடத்தும் உரை பொதுவாக அமெரிக்க அரசினதும் மகக்ளினது அபிப்பிராயங்களில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அங்கு ஏதாவது தத்துப் பித்தென்று உளறி பத்திரிகையாளர்களிடம் வாங்கிக் கட்டி உள்ள மானத்தையும் கெடுப்பான் ஏன் என்று பீரிஸ் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் பாய்ந்திருக்கலாம்.

Wednesday, 26 May 2010

உன் கண்கள் அனுப்பும் குறுந்தகவல்கள்.


உன் கண்கள் அனுப்பும்
குறுந்தகவல்களால்
நிரம்பி வழியுது
என் இதயம் என்னும்
உள்பெட்டகம்.

உன் விழிதரும் உணவு
என் இதயத்தின் அமுது

நீயே வாழ்வின் தொடக்கம்
நீயே வாழ்வின் நடப்பு
நீயே வாழிவின் முடிவு

நீ அருகிருந்தால்
விண்ணை என்ன
பிரபஞ்சத்தையே
தாண்டுவேன் நான்

நீ என் முன் நின்றாலும் சுவை
நீ என்னைப் பிரிந்தாலும் சுவை
நின் நினைப்பே பெரும் சுவை

கைது செய்வது நீயானால்
மரணதண்டனைக் கைதியாவேன்.

Tuesday, 25 May 2010

i-Padஇற்கு போட்டியாகக் களமிறங்கும் Dell Streak


தொடுதிரை தொழில் நுட்பத்தின் உச்சப் பாவனையை உள்ளடக்கிய i-Pad பல பாதகமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரு வெற்றியை ஈட்டித் தருகிறது. ஆப்பிளின் மற்றக் கணனிகளின் விற்பனையை இப்போது i-Pad விற்பனை விஞ்சிவிட்டது. i-Padஇன் விற்பனை மிக இலகுவாக ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. i-phone ஒரு மில்லியன் விற்பனையை அடந்த வேகத்திலும் இருமடங்கு வேகத்தில் i-Pad விற்கப்பட்டது. i-Pad வெற்றி மற்ற நிறுவனங்களை அதற்குப் போட்டியாக களமிறங்க வைத்துள்ளது.Google, HP, ஆகிய நிறுவனங்கள் i-Padஇற்கு போட்டியாக தமது உற்பத்திப் பொருட்களுடன் களமிறங்குகின்றன. அதில் Dell தனது Dell Streak என்னும் கைத்தொலைபேசியை i-Padஇற்கும் i-Phoneஇற்கும் போட்டியாகக் களமிறக்குகிறது. i-Padஐ சட்டைப் பைக்குள் வைக்கமுடியாது. ஆனால் Dell Streakஐ இலகுவாக சட்டைப்பைக்குள் வைக்கலாம். Dell Streak கூகிளின் அன்ரோய்ட் மென்பொருளில் இயங்குகிறது. நாமாகமாற்றிக் கொள்ளக் கூடிய மின்கலங்களைக்(battery) கொண்டது. அது மட்டுமல்ல Dell Streakஇல் சிறப்பு அம்சம் அதன் திரை i-Phone இலும் பெரியது. அத்துடன் இருமடங்கு பெரிதான i-Pad திரையிலும் பார்க்கச் சிறந்த காணொளிகளை வழங்கக்கூடியது. விமர்சகர்கள் Dell Streakஇன் திரையை இப்படி வியக்கின்றனர்:

The big surprise is the screen of Dell Streak. At only five inches, it’s around half the size of that of an iPad, and 1.5 inches bigger than an iPhone screen, yet the difference in watchability is remarkable, perhaps because of the screen’s 16:9 ratio. TV programmes and even feature films feel like less of a compromise than on a smartphone.


Dell Streakஇன் அடுத்த சிறப்பு அம்சம் அதன் ஒளிப்பதிவுக்கருவி. 5MP ஒளிப்பதிவு வசதியை அது உள்ளடக்கியதாக இருக்கிறது.

Dell Streakஇன் சிறப்பு அம்சங்கள்
Hardware-wise, the Dell Streak features the following:
  • A sharp 5-inch capacitive multi-touch WVGA (800x480) display for a great full-screen experience watching video or browsing the web
  • Fast 1GHz Snapdragon ARM-based mobile processor from Qualcomm
  • 5 MP autofocus camera with dual LED flash that offers easy point & shoot capability and quick uploads to YouTube, Flickr, Facebook and more
  • VGA front-facing camera enables video chat functionality down the road
  • A user-removable (and replaceable) battery
  • A 3.5mm headphone jack means many of you can use the Dell Streak as the music source (and more) in your car
  • Integrated 3G + Wi-Fi (802.11b/g) + Bluetooth 2.1 (think headsets, external keyboards, stereo headsets, etc.)
  • UMTS / GPRS / EDGE class 12 GSM radio with link speeds of HSDPA 7.2 Mbps / HSUPA
  • A user-accessible Micro SD slot expandable up to 32GB. That means you can store lots of movies, music, photos or other kinds of files.
On the software side, here's what you can expect:
  • A customized multi-touch version of the Google Android operating system that features Dell user interface enhancements
  • Access to over 38,000 apps (and growing) via the Android Marketplace
  • Microsoft Exchange connectivity and integration through TouchDown
  • Google Voice support
  • Integrated Google Maps with voice-activated search, turn-by-turn navigation, street and satellite views
  • Quick access to activity streams via integrated social network app widgets like Twitter, Facebook, YouTube

Monday, 24 May 2010

இந்தியத் திரைப் படவிழா இலங்கையில்நடந்தால் என்ன! இந்தியாவில் நடந்தால் என்ன!!


இந்தியத் திரைப்படவிழா இலங்கையில் நடக்கக்கூடாது என்று சிலதரப்பில் இருந்து பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பியவண்ணமே இருக்கின்றன. இந்தியத் திரைப்படங்களுக்கு உலகளாவிய வரவேற்பு உண்டு. ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகின்றன.

இலண்டனில் முதல் தடவையாக இந்தியத்திரைப்படவிழா நடந்த பின்பு பிரித்தானியாவில் இந்தியப் படங்களுக்கான வருமானம் 35% அதிகரித்தது.

2008ம் ஆண்டு தாய்லந்து தலைநகர் பாங்கொக்கில் இந்தியத் திரைப்படவிழா நடந்ததைத் தொடர்ந்து அதிக இந்தியப் படங்கள் அங்கு தயாரிக்கப் படுகின்றன. இப்போது இந்தியாவிலும் பார்க்க தாய்லாந்தில் அதிக இந்தியப் படங்கள் தாயாரிக்கப் படுகின்றன.

இம்முறை இந்தியத் திரைப்பட விழாவை தமது நாட்டில் நடாத்தும்படி தென் கொரியா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டின. ஆஸ்கார் விருது விழாவிற்கு அடுத்தபடியான உலகப் பெரும் விழாவாகக் கருதப்படும் இந்தியத் திரைப்படவிழாவை தமது நாட்டில் நடாத்துவதால் தமது நாட்டிற்கான உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்துவதையும், இந்தியாவுடனான வர்த்தகத்தை வளர்ப்பதையும் கருத்தில் கொண்டு இந்த நாடுகள் ஆர்வம் காட்டின. இருந்தும் இலங்கையை இதற்கு தெரிவு செய்ததில் வர்த்தகக் காரணங்கள் மட்டுமல்ல அரசியல் காரணங்களும் உண்டு. சிங்களவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் இந்திய எதிர்ப்பு விரோதத்தை சரிப்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உண்டு. இலங்கைக்கு தனது உல்லாசப் பிரயாணத்துறையை சீர் செய்ய வேண்டும். உலக அரங்கில் நாளுக்கு நாள் வரும் புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் மூலமாக சிதைந்து கொண்டிருக்கும் தனது மதிப்பைக் காப்பாற்றஇலங்கைக்கு ஒரு அவசர முதலுதவி தேவைப்படுகிறது. இந்திய வர்தக சம்மேளனமும் இந்தியத் திரைப்படத்துறையும் இணைந்து இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நாடாத்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. தென் கொரியா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடாத்துவதால் கிடைக்கும் பொருளாதார நலன்களிலும் பார்க்க இலங்கையில் பெரிதாகக் கிடைக்கப் போவதில்லை. இருந்தும் இத்திரைப்பட விழாவை இலங்கையில் நடாத்த அவை அடாவடியாக நிற்பது திரை மறைவில் பல கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது. வாரம் தோறும் இலங்கைப் பிரச்சனையை எழுதிவரும் விகடன் பத்திரிகைக் குழுமங்கள் கூட மௌனமாக இருப்பது அவர்கள் வாய் ஏதோ கொடுக்கல் வாங்கல் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இலங்கையில் ஏன் நடத்தக் கூடாது?
இலங்கையில் ஏன் நடத்தக் கூடாது என்ற கேள்விக்கான விடை இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றது என்பதாகும். இந்தியாவும் சேர்ந்துதான் தமிழர்களைக் கொன்றது. மகாபாரத்தில் கண்ணனே பின்னணியில் இருந்து சகல கொலைகளையும் செய்தது போல் இலங்கையில் நடந்த சகல கொலைகளுக்கும் பின்னணியில் இருந்தது இந்தியாவே. தமிழனைப் பொறுத்தவரை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தியாவின் தமிழ் மீனவர்களைக் இலங்கை அரச படைகள் கொல்வதற்கு எதிராக இந்திய அரசு எதுவும் செய்யாது என்று நீதிமன்றில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எந்த இரு நாடுகளுக்கும் இடையில் எல்லையைத் தாண்டுபவர்கள் கொல்லப்படுவதில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிக்கையில் அப்படி நடக்கலாம். எல்லையைத் தாண்டுபவர்களைக் கொல்வதோ அல்லது நிர்வாணமாக்கித் தாக்குவதோ எந்த நாட்டிலும் நடப்பதில்லை. தமிழ் மீனவர்களைக் கொல்லும் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழனுக்கு இந்தியா எதிரியே. அந்த எதிரியின் திரைப்படவிழா எங்கு நடந்தாலும் தமிழனுக்கு ஒன்று தான். இலங்கையில் நடக்கும் திரைப்படவிழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் இந்தியாவில் நடக்கும் சகல விழாக்களையும் புறக்கணிப்பார்களா?

பூவும் சிதைந்தது பிஞ்சும் சிதைந்தது


வேரூன்றியது வளர்ந்தது
அழகிய தோட்டம்
செந்நீர் விட்டு
வளர்த்த தோட்டம்
உயிர்கள் பல பசளைகளாகின
மலர்ந்தது கனியவில்லை
அறுவடையும் செய்யவில்லை
எங்கெங்கு இருந்தோ வந்த
இனம் தெரியாத மிருகங்கள்
களைகள் பிடுங்க என்றன
பூவும் சிதைந்தது பிஞ்சும் சிதைந்தது

காதல் கிறுக்கனின் காமக் கிறுக்கல்கள்


காதல் சிறையில் நான்
உன் முத்தங்களால்
என்னைப் பிணை எடுப்பாயா?

என் கவிதையின்
கருப்பொருள் நீயடி
என் காதலை கவிதையிற்
சொன்னால்
என் ஆயுள் முடிந்துவிடும்

உன் கண்கள் சொல்கின்றன
ஆயிரம் கவிதைகள்

என் நெஞ்சில் உன்னை வைத்தேன்
என் இதயம் துடிக்குது உன்ன வருட

நெஞ்சிலா நீயிருப்பது
ஒவ்வொரு உயிரணுவிலும் நீயடி

Sunday, 23 May 2010

கூகிள்: தொலைக்காட்சிக்குள் இணையம் கொண்டு வரப்போகிறது.


உங்கள் கணனியின் இணையத்தில் நீங்கள் சில தொலைக்காட்சி சேவைகளைக் காணலாம். கூகிள் கொஞசம் மாத்தி யோசிக்கிறது. தொலைக்காட்சிக்குள் இணையத்தைக் கொண்டு வருகிறது.


உங்கள் தொலைக்காட்சிக்குள் முழு உலக இணைய வலையமைப்பையுமே கூகிள் கொண்டு வரப்போகிறது.


தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு இணையங்களில் உலாவுபவர்களுக்கு இது கொண்டாட்டம்தான்.
இந்த GoogleTV யை பல்லாயிரக்கணக்கானோருக்கு கூகிள் நிறுவனம் பரீட்சார்தமாக ஒளிபரப்புச் செய்தது. இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் இந்த GoogleTVவிற்பனைக்கு வரவிருக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப் படவில்லை. கூகிளின் Androidமென்பொருள் முலமாக இயக்கவிருக்கும் இந்த GoogleTVயானது a remote controllerdevice with a full keyboard ஆகியவற்றைக் கொண்டது. இது கூகிளின் குரோம் உலாவியையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனமும் யாகூ நிறுவனமும் இந்தக் கூட்டு முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தன. பேஸ்புக், யூரியூப் ஆகிய சமூக வலையமைப்புகள் இலகுவாக கூகிளின் தொலைக்காட்சியில் பெறக்கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இணையங்களில் உலாவுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதை அடுத்தே இந்த முயற்ச்சியில் கூகிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


கூகிள் நிறுவனம் இன்ரேல் நிறுவனத்துடனும் சோனி நிறுவனத்துடனும் இணைந்து இப்புதிய தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளது. இப்புதிய தொலைக்காட்சியை வாங்குவதன் மூலமாகவோ அல்லது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் தொலைகாட்சிக்கு ஒரு பிரத்தியேகப் பெட்டியை வாங்கி இணைப்பதன் மூலமாகவோ நீங்கள் கூகிள்ரீவீயைப் பார்க்கலாம்.


இந்த தொலைக்காட்சிக்கான தாயாரிப்பில் பங்கு கொள்வதன் மூலம் இன்ரெல் நிறுவனம் தனது வியாபாரத்திற்கு கணனித்துறையில் மட்டும் தங்கியிருக்காமல் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் தனது வியாபாரத்தை விரிவாக்கியுள்ளது.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...