Saturday 21 August 2021

எஸ்-400 இருந்தால் F-35 தேவையில்லையா?

  


சிலர் இந்தியாவின் படைத்துறை வலிமையை மிகைப்படுத்தி காட்டும் காணொலிப் பதிவுகளைத் தொடர்ச்சியாக யூடியுப்பில் பதிவேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். தங்கள் பார்வையாளர்களை அதிகரித்து தம் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பாவம் அவர்களது பார்வையாளர்கள். கர்ணனிடம் அவன அழிக்க முடியாத கவச குண்டலங்கள் இருந்தன. அதனால் அவர் வில்வித்தை கற்கத் தவறவில்லை, பரசுராமரிடம் வில்வித்தை கற்று சாபம் வாங்கினாலும் அவர் கொடுத்த விஜய தனுசு என்ற வில் அவனிடம் இருந்தது அதனால் அவன் 17-ம் நாட்போரில் எதிரிகள் பலரைக் கொன்றான். சிவபெருமானுக்காக விஸ்வகர்மா வடிவமைத்த விஜய தனுசு என்ற வில்லை சிவன் முப்புரம் எரித்த பின்னர் இந்திரனிடம் கொடுத்தார். அதை இந்திரன் பரசுராமரிடம் கொடுத்தான். இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை கவச குண்டலம் என்றால் F-35 விஜய தனுசைப் போன்றது.

ரஃபேல் F-35இலும் சிறந்ததா?

ஜெய் ஹிந்த் என்னும் வாசகத்துடன் தம் பதிவுகளை முடிக்கும் ஆரிய ஆதிக்கத்தின் வால்பிடிகள் F-35 இலும் பார்க்க ரஃபேல் சிறந்த விமானம் எனவும் காட்ட முயல்கின்றனர். படைத்துறையில் முன்னணியில் இருக்கும் எல்லாம் நாடுகளும் ஐந்தாம் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தையும் ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தையும் பெற தொடர்ச்சியாக முயன்று கொண்டிருக்கின்றன. ரஃபேல் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் ஒரு மேம்படுத்தப்பட்ட வகையைச் சார்ந்த விமானம். நான்காம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை பழைய விரல் வைத்து சுழற்றும் தொலைபேசிகளுக்கும் தற்போது உள்ள ஐ-போன்களுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு ஈடானது. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தில் உள்ள இலத்திரனியல் செயற்பாடுகள் அப்படிப்பட்டவை. முன்னணி போர்விமான உற்பத்தி நாடுகள் பல இணைந்து உருவாக்கப்பட்டது F-35. எந்த ஒரு நாட்டிலும் தங்கியிருக்காமல் தனக்குத் தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்யவேண்டும் என்ற கொள்கையுடைய பிரான்ஸ் உருவாக்கிய விமானம் ரஃபேல். F-35 போர் விமானங்களில் விரைவில் லேசர் படைக்கலன்களும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளும் இணைக்கப்படும். அதற்கான வாய்ப்பு ரஃபேலில் உள்ளனவா என்பது கேள்விக் குறி. F-35ஐ வடிவமைக்கும் போது எதிர்காலத்தில் உற்பத்தி செய்யக் கூடிய ஏவுகணைகளையும் பொருத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. F-22இல் கிடைத்த அனுபவத்தை வைத்தே அமெரிக்கா இந்த அம்சத்தை F-35இல் உள்ளடக்கியது. செய்மதிகளுடன் தொடர்பாடல்கள் வைத்துச் செயற்படக்கூடிய தன்மையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. F-35 விமானத்தைச் செலுத்த விமானியின் பங்களிப்பு மிகவும் குறைந்த அளவே தேவைப்படும் அளவிற்கு அதன் தானியங்கித் தன்மை உள்ளது. இதனால் அதை ஓட்டும் விமானி எதிரியின் நகர்வு, இலக்கு, தாக்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும். பார்க்க ரஃபேல் அதிக வேகமாகப் பறக்கக் கூடியது என்பது உண்மை. பொதுவாக F-35இலும் புலப்படாத்தன்மை (Stealth) கொண்ட விமானங்கள் மிக அதிக வேகமாகச் செல்வதில்லை. அதன் இயந்திரங்கள் அதற்கு ஏற்ப வடிவமைக்கப்படும். இயந்திர வேகம் அதிகரிக்கும் போது புலப்படாத்தன்மை இழக்கப்படும். உலகிலேயே ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றான சுவிற்சலாந்து போர் விமானங்கள் வாங்கும் முடிவை எடுக்கும் போது ரஃபேலா F-35ஆ என்ற கணிப்பில் F-35ஐயே தெரிவு செய்தது. இந்தியா ரஃபேல் விமானம் வாங்குவதாக எடுத்த முடிவில் ஊழல் இல்லை என ஆரிய வாற்பிடிகளால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

நாய்ச்சண்டையைச் செல்லுபடியற்றதாக்கிய F-35

F-35 நாய்ச் சண்டையை செல்லுபடியற்றதாக உருவாக்கப்பட்ட வானாதிக்க விமானம் ஆகும். போர் விமானங்களிடையே நடக்கும் Dog fight எனப்படும் நாய்ச்சண்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிரி விமானங்கள் குறுகிய தூரத்தில் நின்று ஒன்றை ஒன்று தாக்குவதாகும். F-35 வானாதிக்கம் (Air Dominance) மற்றும் வான்மேன்மை (Air superiority) போன்றவைக்கு உகந்தவையாக வடிவமைக்கப்பட்டவை. ஒரு விமானம் ஒரு குறித்த வான்பரப்பில் பறக்கும்போது அது மற்ற விமானங்களை அவ்வான்பரப்பில் பறக்க அனுமதிக்காது என்றால் அவ்விமானம் வானாதிக்க விமானமாகும். ஒரு குறித்த விமானம் எதிரியின் விமானங்களிலும் பார்க்க மேன்மயானதாக இருந்தால் அது வான்மேன்மை விமானமாகும். அதனால் F-35 விமானத்தை எதிரி விமானம் கண்டறிய முன்னரி F-35 எதிரி விமானங்களை கண்டறிந்துவிடும். அதனால் எதிரி விமானம் F-35ஐ அண்மிக்க முன்னர் அதை F-35ஐ அழித்துவிடும். அதனால் நாய்ச்சண்டைக்கு வாய்ப்பில்லை. குளவித் தாக்குதல் முறைமையில் F-35 விமானத்தை அணுகினால் அதன் பரிவாரங்களாக வரும் பல ஆளில்லா போர்விமானங்களால் குளவித் தாக்குதலுக்கு வரும் விமானங்கள் அழிக்கப்பட்டுவிடும். நிலைமை இப்படியிருக்க ஆரிய ஆதிக்க வாற்பிடிகள் நாய்ச்சண்டையில் ரஃபேல் F-35ஐ சுட்டு விழுத்திவிடும் எனத் தம்பட்டமடிக்கின்றனர்.

The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt attacks.

Sensor Suite

The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt attacks. The F-35 serves as an information and communications gateway, sharing its operational picture with the ground, sea and air assets.

Sensor Fusion

The F-35's advanced sensor fusion enables pilots to draw on information from all of their on-board sensors to create a single integrated picture of the battlefield that greatly enhances awareness and survivability.

 

F-35 செலவு மிக்கதா?

F-35 செலவு மிக்க விமானம் என்கின்றனர் சிலர். ஆனால் எதிரியைத் தோற்கடிக்க செலவுக்கான பயன்பாடு உடைய விமானம் என்கின்றனர் அதன் உற்பத்தியாளர்கள்.  As the most cost-effective solution for defeating our increasingly sophisticated adversaries, the F-35 will accomplish what would otherwise require a far greater number of less capable aircraft to achieve. F-35 ஐ உருவாக்கியவர்கள் தொடர்ச்சியாக அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் மூலம் அதன் வானாதிக்கத்தையும் வான்மேன்மையையும் பேண முடியும்.


ரஃபேலைக் குறைத்து மதிப்பிடக்கூடாது

பறப்பு நேரம், பறப்பு தூரம் போன்றவற்றில் F-35இலும் பார்க்க ரஃபேல் சிறந்தது. கடல் மட்டதில் இருந்து உயரமான தளங்களில் இருந்து பறப்பை மேற்கொள்ளக் கூடிய ரஃபேல் சீன எல்லையில் மிகவும் பயனுள்ளதாகும்

SPECTRA (Self-Protection Equipment to Counter Threats for RAFALE Aircraft) has been jointly developed by MBDA and Thales to provide an integrated self-protection system for the new Rafale combat aircraft now in service with the French Air Force and Navy. The SPECTRA integrated electronic warfare suite provides long-range detection, identification and accurate localisation of infrared, electromagnetic and laser threats. The system incorporates, radar warning, laser warning and missile warning receivers for threat detection plus a phased array radar jammer and a decoy dispenser for threat countering. ரஃபேலை உருவாக்க 46பில்லியன் யூரோ செலவிடப்பட்டது. F-35ஐ உருவாக்க 400பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. சிலர் F-35ஐ உருவாக்க 1.6ரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது என்கின்றனர்.

இந்தியாவிற்கு ரஃபேல் போதாது.

இந்தியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தல் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளே. அதிலும் பெரிய அச்சுறுத்தலாக வரவிருப்பது. சீனா அந்த ஏவுகணைகளை அல்லது அதன் தொழில்நுட்பத்தை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்வதாகும். அதனால் F-35இலும் பார்க்க மேம்பட்ட புலப்படாத் (Stealth) தன்மை கொண்ட விமானங்களும் லேசர் படைக்கலன்களும் இந்தியாவிற்கு அவசியமாகும். ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியாவிடமிருக்கும் எஸ்-400 விமான எதிப்பு ஏவுகணைகளால் அழிக்க முடியாது. பாக்கிஸ்த்தான் அல்லது இரசியாவுடன் ஒரு போர் என்றுவரும் போது இந்தியாவிடம் புலப்படாத் தன்மை கொண்ட விமானங்கள் மூலம் எதிரியின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிரி நாட்டுக்குள் வைத்தே அழிக்க முடியும்.

பல ஊடகங்களில் படைக்கலன்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் படைக்கல விற்பனையாளர்களினதும் அவர்களது முகவர்களதும் தாக்கம் இருக்கும். அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான தொழில்நுட்ப அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். “Rafale Jets won’t save Indian Air Force” என்னும் தலைப்பில் Foreign Policy என்ற அமெரிக்க சஞ்சிகையில் ஒரு கட்டுரை வந்தது. அதை ரஃபேலுக்கு போட்டியாக இந்தியாவிற்கு தமது விமானங்களை விற்பனை செய்ய முயன்று தோல்வியடைந்தவர்களின் குரலாகவே நான் பார்க்கின்றேன்.

மூன்றாம் தர Youtube Channelகள் பற்றி கவனமாயிருங்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...