Sunday 18 August 2013

மெய்மறந்த பொய்

உன்னைப் பார்த்து
மூச்சடைத்துப் போனேன்
தேவை
வாயோடு வாய் வைத்த
முதலுதவி

போதிக்கும் போது தூக்கம்
நிறைவேறாத கனவு
கனவுகள் போதனைகளானால்
வெற்றிகள் விடியல்களாகும்

உதிர்ந்த இலைகளை
மரங்கள் உரங்களாக்கும்
செய்த தவறுகள்
சிறந்த போதனைகளாகும்

நேற்று என்பது போதனைக்கு
இன்று என்பது சாதனைக்கு
நாளை என்பது சந்தர்ப்பம்

நன்னடத்தை என்பது
தானே பரிமாறும்
பெரு விருந்தில்
ஆரோக்கிய உணவை
எடுப்பதைப் போன்றது.

என்னைப் பார்த்ததும்
மெய் மறக்கிறேன் என்றாள்
அதானால் பொய்யாய் பேசினாள்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...