Saturday 2 March 2013

இணைய வெளிப் போரில் அமெரிக்கா தோல்வியடைகிறதா?

பலஸ்த்தீனப் போராளிகள் இஸ்ரேலிய அரச கணனிகளை ஊடுருவி அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர். இஸ்ரேல் பல முனைகளில் இருந்து வரும் இணையவெளித் தாக்குதலகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. இலங்கைப் பாதுகாப்புத் துறையின் இணையத் தளத்துக்குள் சனல் - 4 இன் "சூடற்ற பிரதேசம்" ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைப் புகுத்தினர் இணைய வெளி ஊடுருவிகள். பிரித்தானிய உளவுத் துறை அல் கெய்தாவின் இணையத் தளத்தை ஊடுருவி அங்கு குண்டு செய்வது எப்படி என்ற பக்கத்தை அழித்துவிட்டு கேக் சமைப்பது எப்படி என்னும் பதிவை இட்டது,

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது பல இணையவெளித்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இது பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்: ரான்மீது தாக்குதல்

சீனாவின் செம் படையில் அமெரிக்காவின் இணையத் தளங்களை ஊடுருவல் செய்வதற்கு என ஒரு சிறப்புப் படைப் பிரிவு இருக்கிறது என்பதை அமெரிக்கா அமபலப் படுத்தியது. அமெரிக்காதான் தனது இணையத் தளங்களை ஊடுருவுகிறது என்றது சீனா.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் வெளிவிட்ட அறிக்கை:
  • Chinese actors are the world’s most active and persistent perpetrators of economic espionage. Chinese attempts to collect US technological and economic information will continue at a high level and will represent a growing and persistent threat to US economic security. The nature of the cyber threat will evolve with continuing technological advances in the global information environment.
 இணைய வெளிப்போரில் நாடுகள் ஒன்றின் மீது ஒன்று உளவு பார்க்கவும் படைத்துறை இரகசியங்களைத் திருடவும், மக்களுக்கான வழங்குதல்களைச் சிதைக்கவும் பயன்படுத்துகின்றன. போராளி அமைப்புக்கள் தமக்குப் பிடிக்காத நாடுகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தப் பயன்படுத்துகின்றன. வர்த்தக நிறுவனங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களின் தொழில்நுட்பத் தகவல்களை திருடப் பயன்படுத்துகின்றன. தனிப்பட்டவர்கள் தகவல்களை அழிக்கும் நிலையை ஏற்படுத்தி மற்றவர்கள் அல்லது மற்ற நிறுவனங்களிடம் இருந்து மிரட்டிப் பணம் பெறப் பயன்படுத்துகின்றனர். கொக்க கோலா நிறுவனத்தின் கணனிகள் மீது பல நூறுதடவைகள் சீனாவில் இருந்து ஊடுருவல் நடாத்தப்பட்டதாக அது தெரிவிக்கிறது.

ஈரானில் இருந்து அமெரிக்க நிதிநிறுவங்களின் இணையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. 

2012இல் முன்னாள் சீனப் பிரதமர் பதவியில் இருக்கும் போது பல மில்லியன்களைச் சுருட்டியதாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக சீனாவில் இருந்து அப்பத்திரிகையின் கணனிகள் ஊடுருவப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன.

இணையவெளிப் போரில் சீனாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது என இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்தது:


தனது இணையவெளிப் படைத்துறையின் பலத்தை பெருக்குவதற்கு அமெரிக்கா சீனாவின் இணையவெளித்தாக்குதல்களை மிகைப்படுத்திச் சொல்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிடம் மிக வளர்ச்சியடைந்த இணையவெளிப்படைத்துறை இருக்கிறது எனப்படுகிறது. அதுமட்டுமல்ல இணையவெளிப்படைத்துறையை முதலில் உருவாக்கியது அமெரிக்காவே என்றும் சொல்லப்படுகிறது. வட கொரியா தனது நாட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இணைய வெளி ஊடுருவல்களைப் பற்றிய தனது அறிவை வளர்த்தது.

அமெரிக்காவின் இணையவெளிகளை ஊடுருவும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கான இராசதந்திரப்பாதுகாப்பை (diplomatic immunity) நீக்கும் சட்டத்தை நிறைவேற்ற எண்ணியுள்ளது. அமெரிக்காவின் தனிநபர் ஒருவரது கணனியில் தாக்குதல் செய்யும் வெளிநாட்டவர் ஒருவரது அல்லது அரசுக்கு எதிராக அந்த அமெரிக்காவின் தனிநபர் பதிலடித் தாக்குதல் செய்ய அனுமதிக்கும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனச் சில சட்ட அறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...