Thursday 28 February 2013

புரட்சியின் தந்தை, போராட்டத்தின் அன்னை.

பணத்தின் வறுமை பத்தையும்
பறக்கச் செய்யும்
அன்பின் வறுமை அனைத்தையும்
இழக்கச் செய்யும்
அறிவின் வறுமை பிறப்பை
பயனற்றதாக்கும்
பண்பின் வறுமை முரண்பாடுகளை
உருவாக்கும்
உரிமையின் வறுமை போராட்டங்களை
வெடிக்க வைக்கும்
பொறுமையின் வறுமை மோதல்களை
வரவைக்கும்

அன்பில்லாதவனிடமிருப்பதே வறுமை
பணமில்லாதவனிடமிருப்பதல்ல வறுமை
அரசுகளை கவிழ்த்தது வறுமை
ஆட்சியாளர்களைக் கலைத்தது வறுமை
புரட்சியின் தந்தை இது
போராட்டத்தின் அன்னை இது
சுரண்டலுக்கு தப்பாகப் பிறந்த குழந்தை இது

நல்லவை கேளான்
குறள் சொல்லும் வறியோன்
இல்லார்க்கு இடாதவன்
ஔவை காட்டும் வறியோன்

உறவில்லாப் பிள்ளைகளயும் உருவாக்கும்
உறவுகளையும் வெறுக்கச் செய்யும்
உணர்வுகளையும் மரக்கச் செய்யும்
கொடியது இந்த வறுமை

சில சமயம் வறுமை
களவிற்கும் வழிவகுக்கும்
நீதியையும் புறந்தள்ளும்
சிவப்பு விளக்கையும் ஏற்றி வைக்கும்

பொருளியலின் பிழையான அத்தியாயம்
அரசியலின் அப்பட்டமான பயங்கரவாதம்
சோம்பலின் குழந்தையுமாகும்
ஆசைகளை வதைக்கும் வறுமை

கனவுகளையும் சிதைக்கும் வறுமை

1 comment:

Jayachar said...

வறுமை பற்றி வெகு ஆழமான அலசல் கவிதை மூலமாக. கவிதை நன்று. வாழ்த்துக்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...