Thursday 28 February 2013

இந்தியச் சதியை அம்பலப் படுத்துகிறது Times of India

இலங்கை இன அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு இதுவரை சரியாக அம்பலப்படுத்தப்படவில்லை. ஆனால் அவ்வப்போது இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 27-02-2012 Times of Indiaஇல் இப்படி ஒரு செய்தி:

India has more problems with the report of the UN High Commissioner for Human Rights Navi Pillay. Her report, which the US has said it will support, calls for an "independent, international inquiry" into the Lankan actions during the concluding phase of the war against the LTTE. The report also calls for investigations of "violations" of international law. In addition, India is uncomfortable with the idea of special rapporteurs being appointed to visit Sri Lanka, fearing that at some stage it could come back to bite New Delhi. 

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையின் படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது." என்கிறது  Times of India.

"இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வந்தால் அது இந்தியாவையும் குற்றவாளியாகக் காணுமா?" இதற்கான பதில்:

இலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்தியா இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர். இதை கிரிக்கெட் பாணியில் கோத்தபாயாவின் master stroke என்று வர்ணித்தார் அவர்.

2009 மே மாதத்திற்கு முன் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர மேனனும் வெளியுறவுத் துறைச் செயலர் நாராயணன் ஆகிய இருவரும் அடிக்கடி இலங்கை வந்து போனதுண்டு. வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாம் முகர்ஜியும் இலங்கை வந்து போனதுண்டு. போர் முடிந்தபின் இந்தியா இலங்கையின் போரக்குற்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கையின் மிரட்டலுக்குப் பயந்த இந்தியா 2009-ம் ஆண்டு ஐநா சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை சீனாவிடன் இணைந்து இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றித் தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொண்டுவந்தது.

இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டமைக்கு இந்தியாதான் காரணமென்றும் அதிலும் சோனியா காந்திக்கு தமிழர்கள் மேல் உள்ள ஆத்திரத்திலும் பார்க்க மேனன் - நாராயணனுக்கு அதிக ஆத்திரம் இருந்தது என்று எழுதினார் வீ. எஸ். சுப்பிரமணியம். ஆனால் எந்த உரையாடலை வைத்து கோத்தபாய இந்தியாவை மிரட்டினார் என்று வீ. எஸ். சுப்பிரமணியம் எழுதவில்லை. வேறு ஆய்வாளர்கள் இலங்கை போரை ஆகஸ்ட் 2009இல் முடிக்க எண்ணியிருந்ததாகவும் ஆனால் இந்தியாதான் மே- 2009இல் முடிக்க வலியுறுத்தியதாகவும் எழுதியிருந்தனர்.

நேற்று ஒரு வலயக் தொலைக்காட்சியில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒரு தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி பல பொய்களை அங்கு அடுக்கினார்:

பொய் - 1: இலங்கையில் மாகாண சபைகளுக்கு ஆட்சி அதிகாரம் உண்டு.

பொய் - 2 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது பிள்ளையான் என்பவர் தலைமையில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்கிறார்கள.

 இலங்கையில் மாகாண சபைகளுக்கு ஆட்சி அதிகாரம் இல்லை என 1987இலேயே பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா சொல்லிவிட்டார். 2012-ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த  ஒரு மாநாட்டிலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டு இப்போது கிழக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் ஆள்கிறார்கள்.

அது மட்டுமல்ல தமிழர்கள் உரிமை என்று கோரிக்கொண்டிருந்தால் மீண்டும் அழிவுதான் ஏற்படும் என்றார் அந்தக் காங்கிரசுக்காரி. இந்தியாவின் மிரட்டல்  இனிப் போராட்டம் என்று தொடங்கினால் இன்னும் அழிவைத் தருவோம் என்பதை அந்தக் காங்கிரசுக்காரி வலியுறுத்துகிறார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...