கள்ளத்தனமாகப் பார்த்த
பல நாட்கள்
விழியால் பேசிய
பல நாட்கள்
உடல்கள் உரசிய
பல நாட்கள்
உணர்வுகள் இணைந்த
பல நாட்கள்
எல்லாம் ஈடாகுமா
உண்மை அன்பு காட்டிய
ஒரு கணத்திற்கு
================
வென்றேன் எனத்
திமிரடையவும் வேண்டாம்
தோற்றேன் எனத்
துவளவும் வேண்டாம்
உழைத்தேனா என்பதை மட்டும்
எண்ணிப்பார்.
ஓர விழிப் பார்வை
என்னை ஒளிப்பதிவு செய்யும்
கமராவானது
நேர் விழிப்பார்வை
மலரம்பு வீசும்
எறிகணையானது
பார்க்காமல் நீ இருப்பது
உன்கண்களை
வதை முகாமாக்கியது
கனிவான இருவர் பார்வைகளின்
இனிய மோதலில்
இணைந்தன இரு இதயங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...


1 comment:
அழகான புகைப்படமும் அசத்தலான கவிதையும் சூப்பர் . உங்களின் கவிதைகளுக்கு சினிமா புகைப்படங்களை பயன்படுத்தவுதை தவிர்க்கலாமே !? புரிதலுக்கு நன்றி
Post a Comment