கள்ளத்தனமாகப் பார்த்த
பல நாட்கள்
விழியால் பேசிய
பல நாட்கள்
உடல்கள் உரசிய
பல நாட்கள்
உணர்வுகள் இணைந்த
பல நாட்கள்
எல்லாம் ஈடாகுமா
உண்மை அன்பு காட்டிய
ஒரு கணத்திற்கு
================
வென்றேன் எனத்
திமிரடையவும் வேண்டாம்
தோற்றேன் எனத்
துவளவும் வேண்டாம்
உழைத்தேனா என்பதை மட்டும்
எண்ணிப்பார்.
ஓர விழிப் பார்வை
என்னை ஒளிப்பதிவு செய்யும்
கமராவானது
நேர் விழிப்பார்வை
மலரம்பு வீசும்
எறிகணையானது
பார்க்காமல் நீ இருப்பது
உன்கண்களை
வதை முகாமாக்கியது
கனிவான இருவர் பார்வைகளின்
இனிய மோதலில்
இணைந்தன இரு இதயங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...


1 comment:
அழகான புகைப்படமும் அசத்தலான கவிதையும் சூப்பர் . உங்களின் கவிதைகளுக்கு சினிமா புகைப்படங்களை பயன்படுத்தவுதை தவிர்க்கலாமே !? புரிதலுக்கு நன்றி
Post a Comment