Monday 27 February 2012

ஒளிப்பதிவு செய்யும் ஓர விழிப்பார்வை

கள்ளத்தனமாகப் பார்த்த
பல நாட்கள்
விழியால் பேசிய
பல நாட்கள்
உடல்கள் உரசிய
பல நாட்கள்
உணர்வுகள் இணைந்த
பல நாட்கள்
எல்லாம் ஈடாகுமா
உண்மை அன்பு காட்டிய
ஒரு கணத்திற்கு

 ================

வென்றேன் எனத்
திமிரடையவும் வேண்டாம்
தோற்றேன் எனத்
துவளவும் வேண்டாம்
உழைத்தேனா என்பதை மட்டும்
எண்ணிப்பார்.


ஓர விழிப் பார்வை
என்னை ஒளிப்பதிவு செய்யும்
கமராவானது

நேர் விழிப்பார்வை
மலரம்பு வீசும்
எறிகணையானது

பார்க்காமல் நீ இருப்பது
உன்கண்களை
வதை முகாமாக்கியது

கனிவான இருவர் பார்வைகளின்
இனிய மோதலில்
இணைந்தன இரு இதயங்கள்

1 comment:

பனித்துளி சங்கர் said...

அழகான புகைப்படமும் அசத்தலான கவிதையும் சூப்பர் . உங்களின் கவிதைகளுக்கு சினிமா புகைப்படங்களை பயன்படுத்தவுதை தவிர்க்கலாமே !? புரிதலுக்கு நன்றி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...