Wednesday, 20 July 2011
நகைச்சுவைக் கதை: சோனியாவின் கடிகாரம்
குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் சிதம்பரம் கொல்லப்பட்டார். அவர் யம லோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். யம லோகத்தில் சித்திர புத்திரனார் அன்று சற்று ஓய்வாகக் காணப்பட்டார். அதனால் அவர் சிதம்பரத்துடன் ஆறுதலாகப் பலவற்றையும் பற்றி உரையாடினார். சிதம்பரம் தான் சித்திரபுத்திரனாரின் பணிமனை முழுவதையும் சுற்றிப்பார்க்க விரும்புவதாகக் கூறினார். சித்திரபுத்திரனாரும் கருணை கூர்ந்து அவரது விருப்பத்திற்கு சம்மதித்தார். சித்திரபுத்திரனாரின் பணிமனைக்குச் சென்ற சிதம்பரத்திற்கு ஒரே ஆச்சரியம் அங்கு கோடானு கோடிக் கணக்கான கடிகாரங்கள் இருந்தன. அவற்றை உற்று நோக்கிய சிதம்பரத்திற்கு மேலும் ஆச்சரியிம். ஒவ்வொரு கடிகாரங்களும் வேறு வேறு கதியில் ஓடிக் கொண்டிருந்தன. பல மிக விரைவாகவும் சில விரைவாகவு ஓடிக்கொண்டிருந்தன. இது என்ன கடிகாரங்கள் இவை ஏன் வேறுபட்ட வேகங்களில் ஓடுகின்றன என்றார் சிதம்பரம். அவை ஒவ்வொன்றும் பூமியில் வாழும் ஒவ்வொரு மானிடர்களினதும் ஆயுளைக் குறிக்கின்றன. அது சரி ஏன் பல வேகமாக ஓடுகின்றன என்று வினவினார் சிதம்பரம். ஒவ்வொரு மானிடனும் பொய் சொல்லும் போது அவை வேகமாக ஓடுகின்றன என்றார் சித்திரபுத்திரனார். அப்போது சிதம்பரத்திற்கு தனது எசமானி அம்மா சோனியாவின் கடிகாரத்தைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. தனது ஆசையை மெல்ல சித்திர புத்திரனாரிடம் தெரிவித்தார் சிதம்பரம். "ஓ அதுவா? அதை நான் எனது ஆசனத்தின் மேல் பூட்டியுள்ளேன். அது மிக வேகமாக கடந்த சில ஆண்டுகளாக ஓடுவதால் அதை கூரை மின் விசிறியாக(Ceiling Fan) நான் பாவிக்கிறேன்" என்றார் சித்திர புத்திரனார்.(யாவும் கற்பனையே)
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...

5 comments:
இதான் நிதர்சனமும்
hm athu sari... athanaal thaan un inathalaivan (pirapagaran)viraivaaga sentruvittaro?
கற்பனை என்றாலும் யதார்த்தமான மிகவும் சுவையான கற்பனை.
Correctly said, Nice imagination but comes close to reality. When will god save India and Tamil Community from this Sonia group
Anonymous said...
இது மாதிரி அனோணிகளிக்கு எம்மின தலைவன் பற்றி கதைக்க அருகதை இல்லை. அது போன்றே பதிலளிக்க வேண்டியதுமில்லை.
Post a Comment