Wednesday 9 February 2011

நகைச்சுவைக் கதை: அரசியல்வாதிகளும் கடவுளும்


கடவுள் சகல உலக நாட்டுத் தலைவர்களினதும் கனவில் தோன்றி நான் இன்னும் ஒரு வாரத்தில் இந்த உலகத்தை அழிக்கப் போகிறேன் இதை உங்கள் மக்களிடம் சொல்லி அவர்களை அமைதிப் படுத்துங்கள் என்றனர்.

ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் மக்களுக்குக் கூறியவை:

அமரிக்க அதிபர்: அன்புடைய மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று நாம் இனி சீனாவின் வளர்ச்சியைப் பறிக்கவலைபடத் தேவையில்லை. கடவுள் வெள்ளை மாளிக்கைக்கு வந்து ஒரு வாரத்தில் உலகை அழிக்கப்போகிறேன் என்றார். அதுவரை குடித்துக் கூதாடி அனுபவிப்போமாக.

சீன அதிபர்: உங்களுக்கு இரு துக்கச் செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று கடவுள் இருக்கிறார். மற்றது அவர் உலகை அழிக்கப் போகிறார்.

சோனியா காந்தி: அன்பான மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று எனக்குத் துக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி. அது ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக முடியாது. மற்றது எல்லோருக்கும் கவலையானது. உலகம் அழியப்போகிறது.

பாக்கிஸ்த்தான் பிரதமர்: அன்பான மக்களே நாங்கள் இந்தியாமீது அணுக்குண்டு போடத் தேவையில்லை. கடவுள் முழு உலகையுமே அழிக்கப் போகிறார்.

இஸ்ரேலியப் பிரதமர்: அன்பான மக்களே இந்த உலகம் அழியும்வரை பலஸ்த்தீனம் ஒரு தனிநாடாக அமையாது.

பிரித்தானியப் பிரதமர்: அன்பார்ந்த மக்களே இனி ஒருநாளும் பிரித்தானியாவில் தொழிற் கட்சி ஆட்சிக்கு வராது.

இத்தாலியப் பிரதமர்: என் இனிய இத்தாலி மக்களே எத்தனை சிறுமிகளுடன் நான் எப்படி நடந்தாலும் யாராலும் என்னைத் தண்டிக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ச: எனது அருமை மக்களே! நான் உயிரோடு இருக்கும் வரை, நீங்கள் உயிரோடு இருக்கும் வரை, இந்த உலகம் அழியும் வரை நானே இலங்கையின் ஜனாதிபதி.

2 comments:

Anonymous said...

சோனியா காந்தி: அன்பான மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று எனக்குத் துக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி. அது ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக முடியாது. மற்றது எல்லோருக்கும் கவலையானது. உலகம் அழியப்போகிறது.

super....

YOGA.S said...

கொசுறு:ஐ.நா செயலாளர் பான் கி மூன்; அன்பான உலக மக்களே! இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்த வேண்டிய தேவையே இல்லை!ஒட்டு மொத்தமாக நாம் அழிந்து விடப் போகிறோம்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...