

அவள் ஒரு 20வயதுக் கட்டழகி. பர்மின்ஹாம் பல்கலைக்கழகத்தில் சரித்திரம் படிக்கும் மாணவி. அவளைக் காதலன் கைவிட்டான். அதுவும் காதலர் தினத்திற்கு முதல் நாள். அந்தப் பெண் தற்கொலை செய்ய முயற்ச்சிக்கவில்லை. தேம்பி அழவில்லை. எனது காதலர் தினத்தவனாய் இரு(be my valentine) என்ற அட்டையை கழுத்தில் தொங்கவிட்டபடி பிரித்தானியாவின் பர்மின்ஹாம் தெருவில் நின்றாள்.
காதலன் தேவை என்ற அட்டையை கழுத்தில் தொங்கவிட்டபடி நின்ற ஜெமி பிரவுனுக்கு கை மேல் பலன். ஒரு நல்ல காதலன் கிடைத்தான். கிடைத்தது சாதாரணமானவன் அல்ல. 21வயதுக் கட்டழகன். பிரித்தானியாவில் பொறியியல் படிக்கும் இத்தாலிய மாணவன் டேவ் பெர்கோமி.
தனது புதுக்காதலன் ஒரு மெமையான குணங்கள் நிறைந்த கனவான் என்கிறார் ஜெமி பிரவுன்.
புதுக்காதலர்கள் இருவரும் காதலர் தினத்தை நல்ல உணவகத்தில் மெழுகுதிரியொளில் சுவையான உணவு உண்டு கொண்டாடினர். முதல் தினத்தில் முதல் முத்தம் பரிமாறப்பட்டதா என்ற கேள்விக்கு அவர்கள் இருவரும் தங்கள் வாய்களை மூடி வைத்துக் கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
3 comments:
அடப் பாவமே...! இப்படியெல்லாம்கூட நடக்குதா?
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....
imagine a girl standing at Ranganathan Street like this
Post a Comment