
வாழாத இனமொன்றின்
ஆளாத மொழியொன்று
செம்மையானால் என்ன
உயிரிலும் மேலான தமிழ்
என முழங்கியதற்கு
அர்த்தம் புரிந்தது இன்று
தமிழரின் உயிரிலும்
உமக்குத் தமிழ் மேலானது
அதற்கு ஒரு மாநாடு
கலைஞர் தொலைக்காட்சியில்
கணிகையர் பேசும் "ரமிளை"
முதலில் செம்மையாக்குவீர்
தனிப்பட்டோர் துதி பாடி
அவர்தம் விரோதிகளில்
வசை பாடும் கவியரங்கு
No comments:
Post a Comment