Tuesday 29 June 2010

திடீர் நூடில்ஸ் அல்ல இடியப்பச் சிக்கலிது


சூளக வம்சத்தை சுடுகாடனுப்பி
மகா வமசத்தை வழிகாட்டியாக்கி
தமிழனைப் பகையாளியாக்கினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

வேதியனையும் குழந்தையையும்
கொதிதாரில் போட்டு கொன்று
பௌத்தம் வாழ்க என உரக்கக் கத்தினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

சோல்பரி என்றொரு பேமானி
போட்டுவைத்த சிக்கலிது
என்றோ தீர்திருக்க வேண்டியது
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

ஆட்சி மொழி உம் மொழியென்றீர்
கேட்க வந்தோரை பாராளமன்று முன்
காடையரால் உதைத்துத் தள்ளினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

இந்திரா காந்தியின் பேராதிக்க கொள்கை
போட்டு மூட்டிய தீ சோறு சமைக்கு முன்னே
சல்லடையாகப் பிணமாய்ச் சரிந்தார்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

ராஜீவ் காந்தியின் முட்டாள்த்தனம்
பிசைந்து தப்பும் சப்பாத்தியென
எண்ணி ஏமாந்த கதையறிவீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

தமிழன் கறி விற்று மகிழ்ந்த
கதை தன்னை மறந்திட்டீரோ
முள்ளிவாய்க்கால் கொள்ளியும் மறந்தீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

டட்லி-செல்வா அரசை இட்லி என்றீரே
மசால வடை அரசென இகழ்ந்தீரே
டட்லியில் நல்லெண்ணை மணந்தது அறியீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

புளித்துப் போன அப்பம் இது
கருகிப் போன "கவும் பணியாரம்" இது
நாறிப்போன கருவாடிது
தீர்க்க முடியா இடியப்பச் சிக்கலிது

அன்று இந்தியாவை எதிரியென்றீர்
இந்தியா உமக்கிருக்கின்றது என்கிறீர்
இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை
தமிழன் தலை நிமிர முடியாதென என நாமறிவோம்

4 comments:

Anonymous said...

இவர்கள் ஒரு நாளும் தமிழர் பிரச்சனையத் தீர்க்க மாட்டார்கள்

Unknown said...

enakku onrume puriyavillai yaar intha
vel tharma? ivanin kavithakal anaitthum indai vai ethirpathu polullathu ivanin pakal kanavu palikkaathu,ivankal enathu baratha pirathamarai kondathuthaan ivankal seitha perum thavaru ivvalavu periya thavarai seithuvittu utthaman pola pesukinraankal ivankalai enrume indiavum tamilakamum mannikkaathu.ivankalukkaaka varinthukondu kondu pesum anaivarum thesa thurokikal.ivankalin azhivikaalam veku viraivil.

Anonymous said...

ஐயா பைசல் அவர்களே அரசியல் மூடன் ராஜீவை யார் கொன்றார்கள் என்பதை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ராஜீவின் பேய்ப்படைகள் தமிழர்களுக்கு செய்த அட்டூழியங்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

Anonymous said...

AAM...THAMILANIN PURATCHI PORATATHTHAI PATRI UMAKKU ENNA AYYA THERYUM....RAJIVIN PADAIGAL PANNIYA ATTAGASANGAL UMATHU KUDUMBATHIL NADANTHU IRUNTHAL INDRU NEER IPPADI PESAMAATEERGAL....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...