

இலங்கைக்கு 13 உம் 17 உம் ஒத்து வராத இலக்கங்களாகக் காணப்படுகின்றன. இந்தியா தனது அமைதிப் படை என்னும் அட்டூழியப் படையை இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் அரசியல் அமைப்பில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தியது. அது இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப் பட்ட 13வது திருத்தம் ஆகும். இயேசுநாதர் இறுதியாகப் பிரசங்கம் செய்தபோது 13 பேர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் அதில் ஒருவன் அவரை காட்டிக் கொடுத்தான். அதனால் 13 என்பது ஒரு வேண்டப்படாத இலக்கம் என்று பலர் நம்புகின்றனர். இந்தப் 13வது திருத்தத்திற்கு அமையவே பிள்ளையான் கிழக்கு மாகாண முதல் அமைச்சராக்கப் பட்டார். அவருக்கு என்று 13வது திருத்தந்தின் படியான முக்கிய அதிகாரங்கள் எதுவும் இதுவரை வழங்கப் படவில்லை. அரசியல் அறியாத கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி உருவாக்கிய 13வது திருத்தம் எந்த அளவிற்கு ஒரு உதவாக்கரைத் திருத்தம் என்பதற்கு பிள்ளையான் "அரசு" நல்ல எடுத்துக் காட்டு. இப்போது சிங்களப் பேரினவாதிகள் இது தம்மீது திணிக்கப் பட்ட திருத்தம் இது எமக்குச் சரிவராது என்று சொல்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் கௌரமாக வாழ வழி செய்வோம் என்று முழங்கி வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைக்கு தமிழ்த் தேசிய போராட்டத்தை ஒடுக்க சகல உதவிகளையும் சிங்களவர்களுக்கு வழங்கி தமிழர்கள் வன்னி முகாம்களில் கௌரவமாக வாழ வழிசெய்து விட்டனர். இந்த 13வது திருத்தத்தை நீக்கினால் இந்தியாவின் தமிழின அழிப்பு ஆதரவுக் கொள்கைக் குட்டு அம்பலமாகிவிடும் அதனால் அந்தத் திருத்தத்தை நீக்கவும் முடியாமல் முழுமையாக அமூலாக்கவும் முடியாமல் தவிக்கிறது இலங்கை.
இலங்கை அரசியல் அமைப்பில் செய்து கொள்ளப் பட்ட இன்னொரு திருத்தம் 17வது திருத்தம். இலங்கைக் குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரங்கள் பன்னாட்டு நியமங்களுக்கு முரணானவை. இதைச் சரிசெய்யும் முகமாக 17வது திருத்தம் இலங்கை அரசியல் அமைப்பில் செய்யப் பட்டது. இந்தத் திருத்தத்தின் படி இலங்கையில் அரசியல் அமைப்புச் சபை ஒன்று உருவாக்கப் படவேண்டும். அந்தச் சபையின் அனுமதியுடன் மட்டுமே தேர்தல் ஆணையாளர், காவற்துறை மாஅதிபர், பிரதம் நீதி அரசர் மற்றும் பல மேன் முறையீட்டு நிதியரசர்கள், சட்டமா அதிபர் போன்றோரை நியமிக்க முடியும். இந்த திருத்தம் இதுவரை நடைமுறைப் படுத்தப் படவில்லை.
ஜீஎஸ்பி+ உம் 17-ஆம் திருத்தமும்.
இலங்கைக்கு ஜீஎஸ்பி+ எனும் வர்த்தகச் சலுகை வழங்குவது தொடர்பாக விசாரணை நடாத்திய நிபுணர்கள் குழு 17-ம் திருத்தம் நடைமுறைப் படுத்தப் படாதமையால் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரச அமைப்புக்களின் நம்பகத் தன்மை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது என்று அறிவித்ததுடன் அது நடைமுறைப் படுத்தப் படாமல் வர்த்தகச் சலுகை வழங்க முடியாது என்று அறிவித்துவிட்டது. இந்தத் திருத்தத்தி அமூலாக்கினால் இலங்கை மீதான மஹிந்தவின் பிடி பாதிக்க்ப படும். இப்போது இலங்கை அரசின் பிரச்சனை மனித உரிமையா மஹிந்தவின் குடும்ப உரிமையா என்பதுதான்?
No comments:
Post a Comment